செவ்வாய், 8 மார்ச், 2016

பொதி கழுதையும் , EPF வரி ரத்தும்

EPF வரி  ரத்து ..

ஒரு வியாபாரி தனது பொருளை சுமக்க கழுதை ஒன்றை வளர்த்து வந்தார். தினமும் கழுதை பொதி வைக்கும் முன் அதிகமான எடையை ஏற்றுவார் .பிறகு கழுதை முரண்டு பிடிக்கும். கழுதையை சந்தோஷ படுதுவதர்காக சிறிது சுமையை குறை ப்பார். கழுதையும் தனது எஜமானர் தனது மேல் கொண்ட பிரியத்தின் காரணமாக சுமையை குறைதததாக சந்தோசம் அடையும்.

கருணாநிதி பேருந்து கட்டணத்தை உயர்த்தும் பொது , இரண்டு ரூபாய் உயர்த்தி, ஒரு ரூபாய் குரைப்பார்  அவரிடம் அருண் ஜெட்லி பயற்சி எடுத்து  உள்ளார் போல .

இபொழுது ஒருவரும் வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யாத அரசை குறை கூ ற மாட்டார்கள், மாறாக EPF  வரியை  ரத்து செய்ததற்க்காக பாராட்டுவும் செய்வார்கள்.


திங்கள், 7 மார்ச், 2016

நாம் கற்க வேண்டியது குழந்தைகளிடம்

பெரும்பாலும் வார நாட்களில் எழுந்திருப்பது எனக்கு வேப்பங்காய் தான்.அதுவும் திங்கள் கிழமை கொடுமை யாக இருக்கும் ... பெரும்பாலும் சோர்வு , அயற்சி ....
ஆனால்   குழந்தைகளின் உலகம் மிக சிறியது , அவர்கள் வீடு,அப்பா,அம்மா , பள்ளி, மிக சில மனிதர்கள்,தொலைகாட்சி,அவளவுதான் ..ஆனாலும்  ஓவ்வரு  நாளும், உற்சாகமாக எழுகிறார்கள், ஒவ்வரு நாளையும் மிக உற்சாகமாய் எதிர் கொள்கிறார்கள், ஒவ்வரு நாளும் எதோ ஒரு பரிசை தர போவது போலவும் , புதிய அனுபவத்தை தர தயராக இருப்பது போலவும் உணர்கிறார்கள் .. அது உண்மையும் கூட 
குழந்தைகளிடம் நம்மிடம் கற்பதை விட நாம்  அவர்களிடம் கற்க வேண்டியது அதிகம் உள்ளது போல
 

ஞாயிறு, 6 மார்ச், 2016

கலாபவன் மணி,ஆசியா கோப்பை - இன்றைய நிகழ்வுகள்

இன்றைய  நிகழ்வுகள்

கலாபவன் மணி.. ஒரு திறமையான கலைஞனின் மரணம் ஒரு இழப்பு.. ஆனால் ஒரு கலைஞனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதில் மலையாளிகள் நம்மை விட ஒரு படி மேல்..
ஆசியா  கோப்பை

Why  Pakistan  want  to continue  with  sahid afridi as  a captain in worldt20 even  after  asia cup debacle?
No Pakistan  player  want  to take the  pain of talking in English during  presentation and  explain the  reasons  for the  loss..

நேற்றைய போட்டியில் இந்தியா தோற்று விடுமோ என்ற பயத்தை விட ஜெயித்தால் பங்களாதேஷ் பசங்க பன்ற அலும்ப பார்க்கனுமே ங்கற பயம்தான் ஜாஸ்தியா இருந்தது

வெள்ளி, 4 மார்ச், 2016

வரா கடன் -இந்திய வங்கிகளின் தற்போதைய நிலை

இந்திய வங்கிகளின் தற்போதைய நிலை
தனிமனிதன் வங்கிகளில் நகை கடனோ, வீட்டு கடனோ, வாகன கடனோ வாங்கி திரும்ப செலுத்த முடியாவிட்டால் கடன் மதிப்பை விட சொத்து மதிப்பு கூடுதலாக இருந்தாலும்...கடனை வசூலிப்பதற்காக முதலில் அவனது தன்மானம் குறி வைக்கப்படும் அவனது பெயர் புகைப்படம் வங்கி வாசலில் ஒடடபடும்.அவனது வீட்டில் notice ஓட்டபடும்..பிறகு தண்டொரா நாளிதழ் விளம்பரம்...மற்றும் வங்கியில் கூப்பிட்டு வைத்து மிரட்டல், ஆள் வைத்து மிரட்டல் அனைத்து ம் உண்டு... அதுவே ;500 கோடிக்கு அதிகமாக நிறுவனத்தின் பெயரில் கடன் வாங்கி நல்ல auditors மற்றும் advocAtes களுக்கு லட்சங்களை சம்பளமாக அளித்து அவர்களின் முதலிடுகளை திசை திருப்பி நிறுவனத்தை நஷ்டமடய வைத்து விட்டால் ;வங்கிகள் முதலில் அவர்களிடமம வங்கி கெஞ்சும்...பிறகு வட்டி அனைத்தையும் தள்ளுபடி செய்யும்...பிறகு திரும்பி தரும் காலத்தை அதிகப்படுத்தும்...பிறகு மேலும் கடன் வழங்கி பார்க்கும்..கடைசியில் எல்லாத்தையும் சாப்பிட்டு ஏப்பம் விட்ட பின ...வராக்கடன் என்று அறிவித்து மிச்சம் மீதி உள்ள நிறுவனத்தின் பொருட்களை பேரிச்சம் பழத்திற்கு விற்று சில கோடிகள் பெறும்..

புதன், 24 பிப்ரவரி, 2016

முகநூலில் கண்டபடி LIKE வாங்குவது எப்படி

40-50 கோடி போட்டு படம் எடுத்த Producer கூட public response பத்தி அவ்ளோ கவலை பட்டிருக மாட்டார் ... FACEBOOK la 4 வரி status போட்டு நம்மாளுங்க public response பத்தி ரொம்ப கவலை பட்டு கொண்டிருகிறார்கள்
அவர்களுக்காக facebookla likes, comments வாங்க சில எளிய யோசனைகள்
For House wifes
1. சமைச்ச சாப்பாட்டை புருசனுக்கு போடறிங்களோ இல்லையோ போட்டோ எடுத்து facebookla போட்டு விடுங்கள்.
2. நாம சமைச்சு பாத்து வாயில் வைக்க முடியா விட்டாலும் , சமையல் குறிப்பை facebookla போட்டு விடுங்கள் ( அடுத்தவருக்கு workout ஆனாலும் ஆகும்.
3. வீட்டு சமையலுக்கு வைத்து இருக்கிற கடலைமாவு, முட்டை,வெள்ளரி பிஞ்சு, எல்லாத்தையும் முஞ்சில அப்புங்கனு அழகு குறிப்பு குடுங்க ...( நம்ப வீடு மளிகை சமாணா வீணாக போகுது).
4. காலைல புருஷனை கண்டபடி சண்டை போட்டு officeku தொரத்தி விட்டு இருந்தாலும் பரவா இல்லை , Facebookla " I miss him " he is my love nu" பீல் பண்ணி status போடுங்க.
For College girls
1. ரோட்ல போற நாய்குட்டி , பூனைக்குட்டி ,அணில் , இவைகளை எல்லாம் போட்டோ எடுத்து " I Love Animals" nu மேனகா காந்திய மிஞ்சிற மாதிரி பீல் பண்ணி upload பண்ணுங்க.
2. platform கடைல பத்து ரூபாக்கு Hair கிளிப் வாங்கிட்டு , ரோடு கடைல பானி பூரி சாப்பிட்டு விட்டு ," shopping at phoenix mall and dinner at pizza hut " ஒரு status போடுங்க.
3. அடிகடி "Feeling Unwell" Feeling sick" nu Status போடுங்க , மூனு மாசமா அம்மா முட்டு வலின்னு சொல்லி கொண்டு இருப்பதை காதில் வாங்காத பசங்க எல்லாம் "Take care""Get well soon" see the doctor" Pray God for recovery" nu கமெண்ட்ஸ் போட்டு தள்ளி விடுவார்கள்.
For Bachelor boys
1. அஜித் போல கோட் , வேஷ்டி,கண்ணாடி, வெள்ளை தாடி வச்சி, இதெல்லாம் அவுருக்கு நல்லாருக்கும் நமக்கு நல்லா இருகுமானு யோசிச்சு பார்காம அதே மாதிரி ஸ்டில் குடுத்து பீதிய கிளப்புங்க.
2. வெள்ளி கிழமை சாயங்காலம், எவ்ளோ மொக்கையான , புரியாத மொழி படமா இருந்தாலும் முழுசா உட்காந்து பாத்து facebookla கண்டபடி விமர்சனம் செய்யுங்க ( நாம காசு போட்டா படம் எடுத்தோம்).
For MENS
1. ரோட்ல பிச்சை எடுப்பவருக்கு 1 ரூபா போடதவரா இருந்தாலும் பரவா இல்லை , Facebookla ஏழைகளுக்கு இரக்க படுவதில் அன்னை தெரசாவை மிஞ்சி விடுங்கள்
2. corporate officela, private bankla உக்காந்து கல்லா கட்டி கொண்டு இருந்தாலும் பரவா இல்லை, Facebookla முதலாளித்துவம் , புரட்சி , போராட்டம்னு கண்டபடி கண்டனம் தெரிவியுங்க
3. சுதந்திர தினத்தன்று Qaurter அடித்து குப்புற படுத்து கிடப்பவராக இருந்தாலும் பரவா இல்லை, Facebookla பாரத தேசத்துக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிற மாதிரி பீல் பண்ணுங்க.
4. Duplicate Rent receipt, Fuel bill குடுத்து tax savings பண்றவரா இருந்தாலும் பரவா இல்லை, Facebookla லஞ்சம்,ஊழல் , கண்டால் அன்னா ஹசாரே வை தாண்டி பொங்கி வழியுங்கள்.
5. டூர் ku சென்று ஹோட்டல் சாப்பாடு ஒதுக்காம வாந்தி எடுத்து இருந்தாலும் , மொக்கை climate la மண்டை காஞ்சு போனாலும் ,Facebookla " Super trip"nu சொல்லி போட்டோ upload பண்ணிடுங்க.
6. சுதந்திர போராட்ட வீரர்கள் , ராணுவ வீரர்கள் , மாற்று திறனாளிகள், படத்தை போட்டு ,நடிகைக்கு லைக் போடுவிங்க இவருக்கு போடமாட்டிர்கள்ன்னு செண்டிமெண்ட் அட்டாக் பண்ணுங்க.
7. வீட்ல புள்ளைக்கு முதல் மொழியாக தமிழுக்கு பதில் சமஸ்க்ரிதம் அல்லது German எடுக்க சொன்னவராக இருந்தாலும் பரவா இல்லை .... Facebookla . தமிழ் என் மூச்சு..தமிழ் எங்கள் வாட்சுன்னு பீல் பண்ணுங்க..
இவற்றை எல்லா வற்றை விட முக்கியமானது..
1. ஊரார் status கு ஓடி போய் லைக் போட்டால் உன் status கு லைக் தேடி வரும்..
2. நம்மை விட வெட்டியாய் இருக்கும் 50 friends facebookla வைத்து கொள்ளுங்கள்
இது முழுவதும் நகைச்சுவை காக ...யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல.
பாதி படிச்சது.. கொஞ்சம் சொந்த சரக்கு..
புடிச்சிருந்தா லைக் போடுங்கள்

தமிழ் பிழைக்கு மன்னிக்கவும்

ரொம்ப யோசிச்சா இப்டிதான்

அன்பாக கவனித்து கொள்ளும் குடும்பமும், அக்கறையாக விசாரிக்கும் உறவுகளும், உதவிக்கு தயராக இருக்கும் நட்பும் கொண்ட மனிதனுக்கு, சிறு உடல் நல குறைவும் ஒரு சுகமே ?..

படித்ததில் புடித்தது ...மனைவி மற்றும் வாத்தியார் இருவர் மட்டுமே கேட்கும் கேள்விகள் .. நான் சொன்னது புரிஞ்சிதா?...எங்க நான் இப்போ என்ன சொன்னேன் சொல்லுங்க பார்க்கலாம்?.

மனிதன் பெரும்பாலான நேரங்களில் தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக வருந்துவதை விட அடுத்தவனுக்கு கிடைத்து விட்டதே என்பதற்காக வருந்துகிறான்....


ரொம்ப யோசிச்சா இப்டிதான்

என்னம்மா இப்படி பண்றிகளேமா


முதலில் ,
மொழிப் போரால் உருவாகிய இயக்கம் , இன்று ஆங்கில தினசரியில் தமிங்கிலிஸ் விளம்பரம்,
தாளமுத்து, நடராஜன் ஆவி உங்களை மன்னிக்கட்டும்.. வாழ்க தமிழ்


முதலமைச்சர் மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது எந்த மாதிரியான ஒரு எதிர்பார்ப்பு . ஏழு கோடி மக்களை கொண்ட மாநிலத்தின் முதல்வர் , நாளைக்கு ஆயிரம் பேரை சந்தித்தாலும் ஆட்சி காலம் முழுவதும் சில லட்சம் பேரை மட்டும் சந்திதிதிருக்க முடியும்.
வெற்றி கரமாக மிக பெரிய நிறுவனங்களை நடத்தும் முதலாளிகள் கூட தங்கள் வாழ்நாளில் தங்களது நிறுவன உழியர் அனைவரையும் அனைவரையும் சந்திததில் லை .
ஒரு முதலமைச்சர் ,அமைச்சர்கள் ,அரசு உயர் அதிகாரிகள் அவர்களை சந்தித்து , மக்களை பொது கூட்டதில் , பொது நிகழ்சிகளில் சந்தித்தால் பொது மானது .

நோக்கியா வீழ்ந்த கதை உலகமே அறியும்,, மேலும் நோக்கியாவின் வருமான வரி ஏய்ப்பு வழக்கும் அறிவார்கள், அதற்கும் அதிமுக அரசை குறை கூறி விளம்பரம் ... என்னப்பா இது கூட தெரியலேயப் பா

என்னம்மா இப்படி பண்றிகளேமா