2 பெண் குழந்தைகள் , எத்தனை ஆசையாய் பெற்று , வளர்த்து , எத்தனை கனவுகளோடு இருந்து இருப்பார்கள் பெற்றோர்கள் , என்னதான் சுய விருப்பம் என்று கூறினாலும் ,மொட்டையடித்து சன்னியாசம் பெற்று விட்டதாய் நிற்கும் பிள்ளைகளை பார்த்து பெற்றவர்கள் எத்தகைய ஒரு வலியை அடைவார்கள் .
இந்த சாமியார்கள் மிகவும் வறுமையில் வாடும் சோற்றுக்கு வழியில்லாத வீட்டு பிள்ளைகளையோ , மிக பெரும் கோடீஸ்வர வீட்டு பிள்ளைகளையோ சாமியாராக்காமல் பெரும்பாலும் உயர் நடுத்தர வீட்டு பிள்ளைகளையே கவர்கின்றனர் . ஏழைன்னா பைசா போறாது , பெரும் பணக்காரர்கள் என்றால் எதிர்ப்பு பலமாக இருக்கும் என்பதால் தானோ ?.
மிக பிரபலங்கள் தொலைக்காட்சியில் சாமியாரிடம் கேள்வி கேட்கும் போதும், சில பிரபலங்கள் like நடிகைகள் , ஆசிரமத்தில் தியானம் செய்து புத்துணர்வு பெற்றதாக கூறும் போது ஆச்சரியமாக இருந்தது . அப்புறம் தான் தெரிந்தது இதுவும் காசுக்காக செய்யும் ஒரு நடிப்பு என்று. அத்தகைய பிரபலங்கள் யாரும் மொட்டையடித் தாக வோ அவர்களது பிள்ளைகளை ஆசிரமத்தில் சேர்த்ததாகவோ தெரியவில்லை.
பெரும்பாலும் எல்லா சாமியார்களிடமும் ஒரு சிறிய சித்து வேலை /சக்தி இருக்கும் , எங்கேயாவது ஒரு சாமியாரிடம் இருந்து கற்று இருப்பார்கள் . அதை வைத்து பெரிய அளவில் பணம் சம்பாதித்து விடுகின்றனர் .
கதவை சாத்தாமல் விட்ட சாமியாரிலிருந்து , இவர் வரை எல்லாத்தையும் பிரபல படுத்திய மீடியா கள் ,பொறுப்போடு நடந்து கொள்ளாமல் , சர்ச்சை வரும் பொழுது சிகரெட் பெட்டியில் உள்ள warning போல் , எங்களுக்கு தெரியாது அது அவர் கருத்து என்று கூறி வெளியேறி விடுகிறது.
சாமி , நீங்கள் அத்தனைக்கும் ஆசைப்படுங்கள் , ஆனால் பாவம் நடுத்தர குடும்பத்து மக்கள் அவர்கள் கனவுகளை பலி யக்காதீர்கள்