காவிரி போராட்ட வன்முறையில் ஈடுபடும் யாரையும் பார்த்தால் விவசாயி மாதிரி தெரியவில்லை.. ஊருக்கு சோறு போடும் விவசாயியின் கை அடுத்தவர் உடமைகைளை சூறையாடாது, இந்திய விவசாயி விவசாயம் பொய்த்ததால் தற்கொலை செய்து கொண்டு உள்ளான் ஆனால் கொள்ளையடித்ததில்லை.. அப்படி செய்து இருந்தால் இந்த தேசமே வன்முறை காடாகி இருக்கும்.
பேச்சுவார்த்தை மூலம் தண்ணீர் பெற்று இருந்தால் வன்முறை இருந்து இருக்காது என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். பேச்சு வார்த்தை தோற்று தானே தமிழகம் நீதிமன்றத்தை நாட வேண்டி வந்தது.
தமிழ்நாடு அணை கட்டவில்லை என்ற குற்றசாட்டும் தவறானது. தமிழகத்தின் புவியியல் அமைப்பின் படி பெரும் அணைகள் கட்ட முடியாது ஒரளவு தடுப்பணைகள் தான் கட்ட முடியும் அதுவும் இரண்டு கழக ஆட்சியிலும் கட்டுப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையே நிரம்பாத போது மேலும் பெரிய அணை கட்டி என்ன பயண்?
மணல் அள்ளுகிறான், சாய பட்டறை கழிவு குற்றசாட்டு , தவறு தான், ஆனால் இது எதுவும் நீரை பகிர்ந்து கொள்ள மறுப்பதற்கு காரணம் ஆகாது.,
இன்று டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இளைஞர்கள் வெளியேறி விட்டனர் , பெங்களுர், சென்னை, கோயம்பத்தூர், திருப்பூர் முதல் வளைகுடா நாடு வரை வேலை செய்வது எனது டெல்டா மாவட்ட தம்பிகள் தானே. ஏக்கருக்கு 3 லட்சம் வருமானம் வரும் என்ற நிலை இருந்தால் இவர்கள் யாரும் இந்த ஊரை விட்டு போக போகிறார்கள், முன்னேறிய நாடுகளை மிக குறைந்த தண்ணீரை பயன் படுத்தி விவசாயம் , நிலத்தடி நீர் மேம்பாடு, நெல் இல்லாமல் பிற பயிர்கள் இவையே நமக்கு உள்ள வாய்ப்புகள் . இதற்கான அரசு நிதி ஒதுக்கீடு, விவசாய துறை அதிகாரிகளின் பெரும் முயற்சி இரண்டும் தேவை.
நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற முயற்சிக்கும் அதே வேளையில் இதையும் நாம் செய்ய வேண்டும் .
பேச்சுவார்த்தை மூலம் தண்ணீர் பெற்று இருந்தால் வன்முறை இருந்து இருக்காது என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். பேச்சு வார்த்தை தோற்று தானே தமிழகம் நீதிமன்றத்தை நாட வேண்டி வந்தது.
தமிழ்நாடு அணை கட்டவில்லை என்ற குற்றசாட்டும் தவறானது. தமிழகத்தின் புவியியல் அமைப்பின் படி பெரும் அணைகள் கட்ட முடியாது ஒரளவு தடுப்பணைகள் தான் கட்ட முடியும் அதுவும் இரண்டு கழக ஆட்சியிலும் கட்டுப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையே நிரம்பாத போது மேலும் பெரிய அணை கட்டி என்ன பயண்?
மணல் அள்ளுகிறான், சாய பட்டறை கழிவு குற்றசாட்டு , தவறு தான், ஆனால் இது எதுவும் நீரை பகிர்ந்து கொள்ள மறுப்பதற்கு காரணம் ஆகாது.,
இன்று டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இளைஞர்கள் வெளியேறி விட்டனர் , பெங்களுர், சென்னை, கோயம்பத்தூர், திருப்பூர் முதல் வளைகுடா நாடு வரை வேலை செய்வது எனது டெல்டா மாவட்ட தம்பிகள் தானே. ஏக்கருக்கு 3 லட்சம் வருமானம் வரும் என்ற நிலை இருந்தால் இவர்கள் யாரும் இந்த ஊரை விட்டு போக போகிறார்கள், முன்னேறிய நாடுகளை மிக குறைந்த தண்ணீரை பயன் படுத்தி விவசாயம் , நிலத்தடி நீர் மேம்பாடு, நெல் இல்லாமல் பிற பயிர்கள் இவையே நமக்கு உள்ள வாய்ப்புகள் . இதற்கான அரசு நிதி ஒதுக்கீடு, விவசாய துறை அதிகாரிகளின் பெரும் முயற்சி இரண்டும் தேவை.
நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற முயற்சிக்கும் அதே வேளையில் இதையும் நாம் செய்ய வேண்டும் .