செவ்வாய், 25 அக்டோபர், 2016

கடவுளின் FACEBOOK ப்ரொபைல் பிக்ச்சரும் , இளைஞனின் வருத்தமும்

இன்றைய  தலைமுறை இளைஞன்  ஒருவன் கடவுளின்  பெயரால்  நடக்கும்  வன்முறை  மற்றும்  உயிர் பலிகளால்   கடவுள்  மீது  மிகுந்த  வருத்தத்தில்  இருந்தான். கடவுள் உலகத்தை  இன்னும் நனறாக வைத்து  இருக்கலாமே  என்றும்  தோன்றியது.

ஒருநாள் அவனுக்கு  முன்பு  கடவுள் தோன்றினார் . உடனே கடவுளிடம் " என் உங்களது   பெயரால்  இவ்வளவு வன்முறை , உயிர்பலி .   மனிதர்களுக்கு உங்களால் நன்மையை  போதித்து நல்வழிப்படுத்த முடியவில்லையா" என்று  கேட்டான்.

கடவுள்  அதற்கு " மகனே  ." நீ  உனது  FACEBOOK  ப்ரொபைல் பிக்ச்சரை  மாற்றினால் அதற்கு  எத்தனை லைக்ஸ் , கமெண்ட்ஸ்  கிடைக்கிறது  என்று  கேட்டார்  . அதற்கு  இளைஞன்  " பல   நூறு லைக்ஸ்   மற்றும்  கமெண்ட்ஸ் " .
கடவுள் " அதுவே நீ  ஒரு  கருத்து  பதிவு  செய்தால்  எத்தனை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கிடைக்கிறது  என்று  கேட்டார் . அதற்கு  இளைஞன்  " பத்து ,பதினைந்து லைக்ஸ் மற்றும்  கமெண்ட்ஸ் .

கடவுள்  " இதையேதான் உனது முன்னோர்களும்  செய்தனர். நான்  சொன்ன  கருத்துக்களை  எல்லாம்  விட்டு   விட்டு , எனது பெயரையும் , ப்ரொபைல் பிட்ச்சரையும் மட்டும்  வைத்து இருக்கிறார்கள் இதற்கு நான்  எவ்வாறு  பொறுப்பேற்க  முடியும் என்று கேட்டார்.

இளைஞன்  அதற்கு  பிறகு  கடவுள் மீது  வருத்த படுவதை  விட்டு விட்டான் .

கடவுள் நம்மளை  காப்பாற்றுவார் , கடவுளை  நாம்  காப்பற்ற வேண்டாம் . அவருக்காக நாம் வன்முறையில்  ஈடுபட வேண்டுமா?


புதன், 19 அக்டோபர், 2016

திரைப்படங்களை எதிர்க்கும் போராட்டங்கள் -நகைச்சுவை பதிவு


நீண்ட  காலமாக நீங்கள்  அரசியலில்  இருக்கிறீர்கள் , சிறு  இயக்கமோ ,  சிறு சாதி  சங்கமோ   நடத்தி  வருகிறீர்கள் ஆனாலும்  உங்களை உங்கள்  வட்டாரத்தை  தாண்டி  வெளியே தெரிய வில்லையா ?
உங்களுக்கு   திரைப்பட  எதிர்ப்பு  போராட்டங்கள்  கை  கொடுக்கும். 

1 . முதலில்  மீடியா , நீங்கள்  உங்கள்  ஊரின்  குடிநீருக்கோ , சாலை  வசதிக்கோ  போராடினால் , நான்காம்  பக்கத்தில்  2 பத்தியில்  செய்தி வெளி வரும்  திரைப்படத்திற்கு  எதிராக  போராடினால்  4 தொலைக்காட்சி  கேமரா  நேரடி  ஒளிபரப்பு.4 தொலைக்காட்சி  விவாதங்களில்   பங்கேற்க அழைப்பு , முதல்  பக்கத்தில்  செய்தி. இதை  விட வேற  என்ன  வேண்டும்?  சும்மா  காவேரி  போராட்டத்துக்கு  நீங்க  கூப்பிட்டால்   கூட  வராதவன்  எல்லாம்  சினிமா  போராட்டத்துக்கு  வந்து  விடுவான் .

2.. எப்படி  எல்லாம்  சினிமாவை  வம்புக்கு   இழுக்கலாம் .
    1.  இந்த  நாட்டுகாரன் நடித்து  உள்ளான் .அந்த  மாநில  நடிகன், நடிகை  நடித்து  உள்ளார்கள். 
    2. இந்த  மாநில  மொழி படம் , அந்த  மாநிலத்தோட  நமக்கு  வாய்க்கால் தகராறு 
    3.  எனது ஜாதிக்கு எதிரான படம் , எனது  சாமி யை  தவறாக  காண்பிக்கிறார்கள் 
   4. பெண்களுக்கு  எதிரான  படம். 
   5. அந்த நடிகர்  போன மாதம் தப்பா  பேசினார் . அவருக்காக  படத்தை எதிர்ப்போம் .
சென்சார்  என்று  ஒன்று  இருப்பதை  மறந்து  விட்டு  நாம  கத்திரி கோலை எடுத்து கொண்டு கிளம்ப  வேண்டும்.

3, எங்களுக்கு  காட்டி  விட்டுத்தான்  படத்தை  வெளியிட  வேண்டும் என்று சொல்லுங்கள் . எதுவம்  கிடைக்காட்டி அடலீஸ்ட்  பத்து  ஓசி  டிக்கெட்  படம்  வெளி வரும் முன்  கிடைக்கிறது என்று  சந்தோச பட்டு  கொள்ளலாமே.

4. பூஜை  ஆரம்பிக்கும்  போதோ , பட பிடிப்பு நடக்கும் போதோ  போராட்டம்  நடத்தி  விடாதீர்கள் . அப்போது  ஒரு  அறிக்கை மட்டும்  வெளியிட்டு அமைதியாய்  இருங்கள்.

5. இப்போ  எல்லாம்  ட்ரெயின் , பஸ் நிறுத்தி  போராடறது  அவுட் ஒப்பி பேஷன்  , சினிமா  தியேட்டர் முன்னாடயோ   அல்லது  flexboard , கட் அவுட் டையோ  கிழித்தால்  அதிகம்   விளம்பரம் பெறலாம் .

6. ஓரளவு  பிரபலமான  நடிகர்  படத்தையே  எதிர்க்க  வேண்டும் , சும்மா அறிமுக  நடிகர்  படத்தை  எதிர்த்தால் ஒருத்தனும்  சீண்ட மாட்டான்.

6. டிவி விவாதத்துக்கு  கூப்பிட்டால்  உணர்ச்சி  வசப்பட்டு  கெட்ட  வார்த்தையில்  திட்டி  விடுங்கள்  அப்றம் மன்னிப்பு கேட்டுக்கலாம்.

7. முடிந்தால்  திரைப்பட  தயாரிப்பாளர்களோட விளம்பரத்திற்காக  மறைமுக  ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். ஆனால்  இதில்  படம்  வெளியிடுவதற்கு  முன்  சமாதானம்  அடைந்து  விடுங்கள்.

8.  ரொம்ப  முக்கியமானது , யாரு  படத்துடைய  தயாரிப்பாளர் , விநியோக  உரிமை , ஒளிபரப்பு  உரிமை எல்லாம்  யாரு  வாங்கி  உள்ளார்கள் என்று  பார்த்து  போராடுங்கள் இல்லாவிட்டால் டின் கட்டி  விடுவார்கள் .








செவ்வாய், 18 அக்டோபர், 2016

நகைச்சுவை:- மனைவியை சமாளிக்க முயன்றவரின் கதை?

பழங்காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த, புகழ் பெற்ற  முனிவர் ஒருவர் இருந்தார். அவரிடம் மிகப் பெரிய மன்னர்களும் அறிவுரை கேட்டு செல்வார்கள். அப்பேர்பட்ட முனிவருக்கு ஒரு சிறிய கவலை இருந்தது. என்ன தான் செயற்கரிய செயலை செய்தாலும் அவரது மனைவி சிறு சிறு குறைகளை கண்டு பிடித்து விடுவார். சின்ன சின்ன சண்டைகளும் அதனால் வந்து கொண்டு இருந்தது. அவரது சக்திகள் அனைத்தும் மனைவி 2 சொட்டு கண்ணீர் முன்பு செயல் இழந்து விடும்.
ஒரு நாள் சரி கடவுளிடமே கேட்டு விடலாம் என்று முடிவெடுத்து கடவுளிடம் சென்று அவரிடம் ஆலோசனை கேட்பதற்கு வந்ததாக கூறினார்.  கடவுளும் இவரை வரவேற்று வரவேற்பரையில் அமர செய்து விட்டு அடுப்படி சென்று மனைவியிடம் உணவுக்கு ஏற்பாடு செய்ய சொல்ல சென்றார்.
முனிவருக்கு கடவுளும், கடவுளின் மனைவியும் என்ன தான் பேசுகிறார்கள் என்று ஆர்வம் கொண்டு தன் சக்தியை பயன் படுத்தி கேட்க ஆரம்பித்தார்
கடவுளின் மனைவி " நீங்க இப்ப என்ன சாதிச்சுடிங்கன்னு உங்கள் ட இந்த முனிவர் ஆலோசனை கேட்க வந்து இருக்கிறார்"
இதை கேட்ட முனிவர் கடவுளுக்கே இப்படின்னா நாம எம்மாத்திரம்?  என்று முற்றும் தெளிந்தவராக நடையை கட்டினார்.

பின் குறிப்பு:-
இந்த கதை முழுவதும் கற்பனையே.. இது என்னுடைய, மற்றும் நமது நண்பர்கள் யாருடைய  வாழ்க்கை சம்பவங்களுக்கும் தொடர்பு கிடையாது.அப்படி எதுவும் உங்களுக்கு தோன்றினால் அதுக்கு யாரும் பொறுப்பல்ல.

செவ்வாய், 4 அக்டோபர், 2016

காவிரி நீரும், கையாலாகாத மத்திய அரசும்

...

 கிராமத்தில் பரம்பரை சொத்தை  பங்கு பிரிக்கும் பொழுது வீம்பு பிடித்த  போக்கிரி சகோதரன் "உரிமைன்னு கேட்டின்னா ஒன்னும் தர முடியாது, வேனும்னா  என்னுட்ட வந்து கெஞ்சி கேளு நானா பாத்து போனா போகுதுன்னு எதாவது தருவேன்ன்னு " சொல்றான் .. பஞ்சாயத்துக்கு ஊர் பெரிய மனிதர்களிடம் சாதுவான மற்றொரு சகோதரன் போனா, ஊர் பெரியவர்கள் போக்கிரி சகோதரனுக்கு பயந்து " அவன் தான் நீ கெஞ்சி கேட்டா பரிதாபபட்டு எதாவது தருகிறேன்னு  சொல்றான்ல பேசாம நீ அவனிடமே போய் கெஞ்சு என்று அறிவுரை வழங்கினார்கள்... அதுதான் காவிரி பிரச்சனையில் தற்பொழது நடத்து கொண்டு இருக்கிறது கர்நாடக அரசியல்வாதிகளின் போக்கிரி தனத்திற்கு கையாலாகாத மத்திய அரசும் துணை போய் மீண்டும் தமிழகத்தை பேச்சு வார்த்தை பிச்சை எடுக்க சொல்கிறது  . . பேச்சுவார்த்தைக்கு  திரும்ப போனா மைசூர் பாக்கும்,மைசூர் போண்டாவும் வேணா கிடைக்கும் காவிரி நீர் கிடைக்காது...

புதன், 28 செப்டம்பர், 2016

டிவியும்,நானும் - 30 ஆண்டு கால பயணம்


இப்போது  ஜியோ மொபைல் 4ஜியில் 200க்கும் மேற்பட்ட  சேனல் களை பார்க்கும் பொழுது, 30 ஆண்டுகளுக்கு முன்பு டிவி நமக்கு  எவ்வளவு  ஒரு பெரிய விஷயமாக இருந்தது என்று யோசித்தபோது,


                                        Image result for 80s tv
                                                     


இந்தியாவில் டிவி  65களில் தொடங்கியதாக  சொல்லப்பட்டாலும், எங்கள் ஊருக்கு எல்லாம்  டிவி வர ஆரம்பித்தது 80களின்                            முற்பகுதியில் தான். முதன்  முதலாக நான் டிவியை  பார்த்தது  இந்திரா  காந்தி  சுட்டு  கொல்லபட்ட போது,  அவரது  இறுதி  சடங்கு  நிகழ்ச்சியை ஒளிபரப்பிய போது , ஊரில் உள்ள டாக்டர் ஒருவர் வீட்டில்  கண்ணீரும்  கம்பலையுமாக பார்த்தேன்.
 அப்போது  பெரும்பாலும்  கருப்பு  வெள்ளை  டிவிகள்தான்  இன்று  ஐ  போன்7 வைத்து  இருப்பது  போல  கலர் டிவி வைத்து  இருப்பவர்கள்  கருதபட்டனர். பள்ளிகளில்  டிவி  உள்ள வீட்டு  பிள்ளைகள்  பணக்கார வீட்டுபிள்ளைகள் ,டிவி இல்லாத வீட்டு பிள்ளைகள்  ஏழை இதுதான் 80களின் இறுதி வரை. டிவி ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல்  .

டிவி கள் மின்சாரத்தை மிகஅதிகமாக இழுக்கும்  என்று கிராமத்து  வீடுகளில்இருந்தவர்கள் நம்பினார்கள்.  அதற்காகவே வெள்ளி  ஒளியும்,ஒலியும் நிகழ்ச்சிக்கு 50 காசும் , ஞாயிறு திரை படத்துக்கு  ஒரு  ரூபாயும்  பக்கத்து  வீட்டு குழந்தைகளிடம் வாங்கும் பழக்கமும்  ஒரு  சிலர் வீட்டில்  இருந்தது.அதே போல்  தொடர்ந்து  டிவி ஓடினால் ரிப்பேர் ஆகி விடும்  இன்று  2 மணி நேரத்துக்கு ஒரு முறை  நிறுத்தி  விசிறி  விட்டவர்களும்  இருந்தனர்.

அப்பறம்  அந்த  டிவி யை  பூட்ட  ஒரு  பெட்டி , இருந்தது ஒரு சேனல் , அதிலும்  முக்கால் வாசி  நேரம் ஹிந்தி  தான் . ஆனாலும் புள்ளைங்க டிவி நெறைய பாக்குது என்று  சொல்லி  பூட்டி  வைத்தனர் .  உண்மையில் அந்த பெட்டியும்   ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் போல.


BCCI இன்று  உலகின்பணக்கார விளையாட்டு அமைப்பாக  இருக்க  காரணம்  இந்த  டிவி பெட்டிதான் ..தூர்தர்ஷன்ல் நேரடி  ஒளிபரப்பு  பார்க்க  மன தைரியமும், கடவுள் அருளும்   வேண்டும் கடைசி ஓவர்  இருக்கும் போது தடங்கலுக்கு வருந்துவார்கள், அதுவும் இல்லாட்டி ,  இவர்கள்  செய்தி  வாசிக்காவிட்டால்  உலகம்  அழிந்து  விடுவது  மாதிரி போட்டியை ஒளிபரப்பாமல் வரதராஜனும், பாத்திமா பாபுவும் வந்து உயிரை  எடுப்பார்கள்.

டிவி பார்பதற்க்காகவே ஹிந்தி  கற்று  கொண்ட பெண்கள்  எங்கள்  உறவுகளில்  இருந்தனர். அவர்கள்தான்  சனி கிழமை  ஹிந்தி படங்களுக்கும் ,ராமாயணம் ,மஹாபாரதம் தொடருக்கும்  எங்களது மொழி  பெயர்ப்பாளர்கள். எனக்கு  அமிதாப்பச்சனை  தவிர  ராஜேஷ்  கண்ணா ,சசி கபூர்,ஷம்மி  போன்ற   ஹிந்தி  ஹீரோக்களும் ஒரே  மாதிரிதான்  தெரிந்தார்கள்.  ஞாயிறு மதியம்  விருது பெற்ற மாநில  மொழி  திரைப்படங்களில் தமிழ் மொழி வருவது ஜாக்பாட்  அடித்த  சந்தோஷம் .

Solidaire ,Dynora ,Onida போன்றவைதான்  மிக சிறந்த  டிவி பிராண்ட் . அதிலும்  மைக்ரோசாப்ட் மாதிரி solidaire   தான் .  ஒனிடா  மொட்டை  தலையன் கொஞ்சம்   ரொம்ப  பிரபலம்  ஆனான் . அப்றம்  கலர்  டிவி நிறைய  வர ஆரம்பித்த போது BPL,Videocon போன்றவையும்  பிரபலம்  ஆனது .

வாங்குனா கலர்  டிவி தான் வாங்கணும்  சொன்ன எங்க அப்பாவும் கடைசியில் 92இல்  ஒரு  கலர்  டிவி வாங்கி தந்தார்.  அன்றைக்கு  நாங்கள் அடைந்த  சந்தோசத்தின் அளவு, இன்றைக்கு எனக்கு  ஒரு கோடி  ரூபாயை  கையில் குடுத்தால் வருமா என்று  தெரியவில்லை. அந்த  டிவியும்  சச்சின்  டெண்டுல்கர் போல்  20 ஆண்டுகள் வேலை செய்து 2012ல்  தான் ரிட்டையர் ஆனது ஆனா போன வருஷம் வாங்குன ஸ்மார்ட் டிவி  இப்போ டிஸ்பிலே சரியா தெரிய மாட்டேங்குது.

அப்றம்  கேபிள் டிவி , சன் டிவி என பல  ஆச்சரியங்கள்  அப்றம்  ஆச்சர்யங்கள்  எல்லாம்   பழகி விட்டது  .

ஆனாலும் சின்ன  வயதில்  ஆச்சர்யத்தை  தந்ததாலோ என்னவோ இப்போதும் சில சமயம்  டிவி  நம்மை  மெய் மறந்து   பார்க்க வைத்து  மனைவியிடம் திட்டு  வாங்க  வைத்து விடுகிறது.










வெள்ளி, 23 செப்டம்பர், 2016

இந்தி எதிர்ப்பு மொழிப் போர் .. சில நினைவுகள்

இந்திய அரசியலமைப்பு மன்றம் திசம்பர் 9, 1946ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. மொழிகளைக் குறித்த விவாதம் இம்மன்றத்தில் தீவிரமாக நடைபெற்றது. அரசியலமைப்பை எந்த மொழியில் எழுதுவது, மன்றத்தின் நடவடிக்கைகள் நடத்தப்படவேண்டிய மொழி, புதிய குடியரசுக்கான “தேசியமொழி” போன்ற விஷயங்கள் மிகவும் சூடாக விவாதிக்கப்பட்டன. ஒரு பக்கம் இந்தி பேசும் மாநிலங்களின் உறுப்பினர்களான அல்கு ராய் சாஸ்திரி, ஆர்.வி. துலேகர், பாலகிருஷ்ண சர்மா, புருசோத்தம் தாஸ் டாண்டன் (ஐக்கிய மாகாணம்), பாபுநாத் குகா (பீகார்), அரி வினாயக் படஸ்கர் (மும்பை), சேத் கோவிந்த் தாஸ் (மத்திய மாகாணம்) ஆகியோர் பல இந்தி ஆதரவு மசோதாக்களைக் கொண்டுவந்து இந்தியை மட்டுமே தேசிய மொழியாகத் தேர்வு செய்ய வாதாடினர்.[30][31] 10 திசம்பர் 1946 அன்று துலேகர் "இந்துஸ்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள். இந்தியாவின் அரசியலமைப்பை முடிவு செய்கின்ற இந்த மன்றத்தில் இருந்துகொண்டு இந்துஸ்தானி அறியாதவர்கள் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளலாம்" என்று முழங்கினார்.

நாம் வேண்டுகின்ற பலமான மைய அரசு, மிகத் தேவையான பலமிக்க மைய அரசு, அவ்வரசு பேசும் மொழி அறியாத மக்களை அடிமைப்படுத்துவதாகவும் மாறுமோ என்று எங்களை அச்சமடையச் செய்கிறது. ஐயா அவர்களே, தென்னிந்தியாவில் ஏற்கெனவே பிரிவினை நாடும் சில சக்திகள் உள்ளன, அவர்களை எதிர்கொள்ள எனது மதிப்பிற்குரிய உத்திரப் பிரதேச நண்பர்கள் தங்களது கூடுதலான "இந்தி ஏகாதிபத்திய" நடவடிக்கைகளால் எந்த உதவியும் ஆற்றவில்லை என்பதை நான், தெற்கு வாழ் மக்களின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன். ஆகவே எனது உத்திரப் பிரதேச நண்பர்கள் ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா, இந்தி-இந்தியா வேண்டுமா என தீர்மானித்துக் கொள்ளட்டும்; தேர்வு அவர்களுடையது என்று பதிலுரைத்தார் TT கிருஷ்ணமாச்சாரி

நன்றி வீக்கிபிடியா தமிழ்

திங்கள், 12 செப்டம்பர், 2016

காவிரியின் பெயரில் வன்முறை... யார் காரணம்?

காவிரி போராட்ட வன்முறையில் ஈடுபடும் யாரையும் பார்த்தால்  விவசாயி மாதிரி தெரியவில்லை.. ஊருக்கு சோறு போடும் விவசாயியின் கை  அடுத்தவர் உடமைகைளை சூறையாடாது,  இந்திய விவசாயி விவசாயம்  பொய்த்ததால் தற்கொலை செய்து கொண்டு உள்ளான் ஆனால் கொள்ளையடித்ததில்லை.. அப்படி செய்து இருந்தால் இந்த தேசமே வன்முறை காடாகி இருக்கும்.  

பேச்சுவார்த்தை மூலம் தண்ணீர் பெற்று இருந்தால் வன்முறை இருந்து இருக்காது என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். பேச்சு வார்த்தை தோற்று தானே தமிழகம் நீதிமன்றத்தை நாட வேண்டி வந்தது.
தமிழ்நாடு அணை கட்டவில்லை என்ற குற்றசாட்டும் தவறானது. தமிழகத்தின் புவியியல் அமைப்பின் படி பெரும் அணைகள்   கட்ட முடியாது ஒரளவு தடுப்பணைகள் தான் கட்ட முடியும் அதுவும்  இரண்டு கழக ஆட்சியிலும் கட்டுப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையே நிரம்பாத போது மேலும் பெரிய அணை கட்டி என்ன பயண்?
மணல் அள்ளுகிறான், சாய பட்டறை கழிவு குற்றசாட்டு , தவறு தான், ஆனால்  இது எதுவும் நீரை பகிர்ந்து கொள்ள மறுப்பதற்கு காரணம் ஆகாது.,

இன்று டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இளைஞர்கள் வெளியேறி விட்டனர் , பெங்களுர், சென்னை, கோயம்பத்தூர், திருப்பூர் முதல் வளைகுடா நாடு வரை வேலை செய்வது எனது டெல்டா மாவட்ட தம்பிகள் தானே. ஏக்கருக்கு 3 லட்சம் வருமானம் வரும் என்ற நிலை  இருந்தால் இவர்கள் யாரும் இந்த ஊரை விட்டு போக போகிறார்கள்,  முன்னேறிய நாடுகளை மிக குறைந்த தண்ணீரை பயன் படுத்தி விவசாயம் , நிலத்தடி நீர் மேம்பாடு, நெல் இல்லாமல் பிற பயிர்கள் இவையே நமக்கு உள்ள வாய்ப்புகள் .  இதற்கான அரசு நிதி ஒதுக்கீடு, விவசாய துறை அதிகாரிகளின் பெரும் முயற்சி இரண்டும் தேவை.
 நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற முயற்சிக்கும் அதே வேளையில் இதையும் நாம் செய்ய வேண்டும் .