வெள்ளி, 9 டிசம்பர், 2016

கௌதமி அவர்களுக்கு ஒரு கடிதம்


வணக்கம் ,

மொதல்ல   நீங்க இத்தனை  நாள் எங்கே  இருந்திர்கள் ? 

 நாட்டு   மக்கள் பிரச்சினை,  பாதுகாப்பு பற்றி  எல்லாம்  திடீரென கவலை  பட  ஆரம்பித்து  விட்டீர்கள் ?   

இதுற்கு முன்  சுவாதி  கொலை  செய்ய  பட்ட போது  எல்லாம்  பெண்கள்  பாதுகாப்பு  பற்றி ஏன்   பேசவில்லை ?  

இந்திய  குடிமகன் கவலை பட்ட  செல்லாத நோட்டு , பதான் கோட் தாக்குதல் பற்றியெல்லாம் நீங்கள்  ஏன் பிரதமரிடம் கேட்கவில்லை ?
'
தமிழக மக்கள் கவலை பட்ட காவேரி  பிரச்சினை , ஈழ தமிழர் , முல்லை பெரியார் இதற்கு எல்லாம் ஏன் கடிதம் எழுத வில்லை? 

உடுங்க  நம்ப ஏன்  உங்க கடந்த  காலத்தை  பற்றி  எல்லாம்  கேட்டு கொண்டு

நீங்கள்  விளக்கம்  கேட்டது  யாரை  இந்திய பிரதமரை 

1. AIMS மருத்துவ குழு  யார்  அனுப்பியது ?

2. AIMS  மருதுவர்கள்  யாருக்கு  கட்டுப்பட்டவர்கள் ?  மாநில  அமைச்சர் விஜய்  பாஸ்கருக்கா  இல்லை  ஜே பி  நட்ட விற்கா ?

3, AIMS  குழு  கடைசி  நாள் வரை  பணியாற்றியது உங்களுக்கு  தெரியாதா ?

3, எப்போதில்  இருந்து  ஜெயலலிதா  உங்களுக்கு  பிடித்த  தலைவியானர் ? சிறை  சென்ற  போது  வருந்தினீர்களா ? இல்லை  முதலமைச்சரான போது  பாராட்டு  தெரிவித்தீர்களா ?

4. நீங்கள் அப்பல்லோ  சென்று  பார்க்க  முயற்சித்தீர்களா ? இல்லை  உங்களை  விட  மறுத்தார்களா ? அதற்காக  உங்களது  எதிர்ப்பை பதிவு செய்திர்களா ?

திரும்ப  மத்திய  அரசிற்கு  வருவோம் .

5. அப்பல்லோ  மருத்துவ  மனைக்கு  சென்ற வர்களில் மத்திய  அரசு  பிரதிநிதியான  கவர்னர் ? கவர்னர்  அவர்களை  தடுக்கும்  அளவுக்கு  சசிகலா  அம்மையாரோ , டாக்டர்  ரெட்டி யோ  வலிமை யானவர்களா இல்லை  அதிகாரம்  படைத்தவர்களா ? இல்லை டாக்டர் பார்க்க  கூடாது   என்று  சொல்வதை  நம்பி  வர கூடியவர்களா ? 

6. இன்னொருவர்  வெங்கையா நாயுடு , முதல்வரை  நண்பர்  என்று  அழைக்க  கூடியவர் . சில  முறை  அப்போலோ வந்த  அவருக்கு நண்பர் சிகிச்சையை  கேட்க அக்கறை மற்றும்  பொறுப்பு  இல்லாதவரா ? 

7. இந்தியா  பிரதமரிடம்  ஐபி,சிபிஐ , போன்ற  வலிமையான  திறமையான  ஏஜென்சிகள்  உள்ளன .. நாட்டில் நடக்கும் சிறு  சிறு  சம்பவங்களுக்கு உளவு  துறை  அறிக்கை  பிரதமரிடம்  அளிக்கும் ..75 நாட்களாக  ஒரு  மாநில முதல்வர் மருத்துவமனையில்  உள்ளார் , அவரது உடல்  நிலை  பற்றி  அறிக்கை கேட்காதவரா  நமது  பிரதமர்? அல்லது   அப்பலோ  கேட் வாசலை  எட்டி கூட பாக்க  முடியாததா நமது  உளவுத்துறை ?\


8)  12 முறை  அப்போலோ  அறிக்கை  அளித்ததே, நீங்கள் அதை படித்தது உண்டா ?   அதை ஒரு முறையாவது பார்த்து  அதிருப்தி  நீங்கள்  தெரிவித்தது உண்டா ?

9)  2014  கர்நாடக  சிறைச்சாலை க்கு  பிறகு , முதல்வர்  உடல்நிலை பற்றி பல  செய்தி தாள்களிலும் , ஊடகங்களிம் செய்திகள் வந்ததே , நீங்கள் படிக்கவில்லையா ?  

10) முதல்வர்  அவர்கள் பொதுவானவர்தான் ,ஆனால்  அவர்  அனுமதி இல்லாமல் அவரது  சிகிச்சை  பெறும் புகை படங்களையும் வெளியிடுவது எப்படி உரிமையாகும்?

11, நீங்கள்  கேட்கும்  அத்தனை  கேள்விகளுக்கும்  இந்திய பிரதமருக்கு விடை  தெரியும் , அத்தனை  சர்வ  வல்லமை  மற்றும்  அதிகாரம்  உடையவர் .  எதுவும்  தெரியாமல்  விமானம்  ஏறி  வந்து தோள் தட்டி ஆறுதல்  சொல்லி செல்லும் அப்பாவியும் அல்ல பிரதமர்?

ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் , கோடம்பாக்கத்தில் இருந்து கிளம்பும் எல்லாரும் ஜெயலலிதா ஆகி விட  முடியாது ?

நட்புடன் 
தமிழன் 

குறிப்பு :- ஊர் பெயரை மறக்காமல் வைத்திருக்கும் உங்களிடம் மாநிலத்தை பற்றியோ ,ஜாதி பற்றியோ நான்  கேட்க மாட்டேன் .





வியாழன், 8 டிசம்பர், 2016

அம்மாவிற்கு பிறகு ? தலைவர்கள் உண்டா அதிமுக வில் ?


அதிமுக  மக்களுக்கான  இயக்கம் , மக்கள்  நலனுக்காக  சிந்திக்கும்  தலைவியை  கொண்ட  இயக்கம் , எனக்கு  பின்னாலும்  இந்த  இயக்கம்  நூறு  ஆண்டுகள்  நிலை  பெற்றிருக்கும் .. புரட்சி  தலைவி  அம்மாவின்  ஜனவரி  2016 சட்டமன்ற  உரை ... உத்தமர்  வாக்கு  வேதம்  ஆகும் , வேதா நிலைய உத்தம  தலைவியின்  வாக்கும்  வேதம் ஆகும் . நாளைய  சரித்திரம்  அதை நிரூபிக்கும் .

 புரட்சி தலைவி , புரட்சி  தலைவர்  போன்றவர்கள்  இயற்கையான  ஆளுமை  திறன்  கொண்டவர்கள். அத்தகைய  தலைவர்களின்  இடத்தை  நிரப்புவது இமய மலையில்  ஏறுவது  போல கடுமையானது அல்ல  அதை விட  கடுமையாக  இமைய மலையை  முதுகில்  வைத்து மலை  ஏறுவது  போன்றது,.

ஆனாலும் , சில  தலைவர்கள்  பிறப்பால்  ஆளுமை  திறன்  இல்லாவிட்டாலும் , தங்களது உழைப்பாலும் , அனுபவத்தாலும்  மற்றும்  நிர்வாக  திறன் மூலமாகவும் மிக சிறந்த  தலைவர்களாகி  உள்ளனர் ...
உதாரணமாக  நமது  அண்டை  மாநிலமான  ஆந்திரா , அதுவும் தமிழகத்தை  போல   சம உணர்வுகளை  பிரதிபலிக்க  கூடியது  .. NTR  என்னும்  மிக பெரிய பிம்பத்தின் அரசாங்கத்தை குறுக்கு  வழியில் கைப்பற்றினாலும் தனது  நிர்வாக திறமையினால் சந்திர பாபு  நாயுடு மிக  பெரிய  தலைவராக  உருவெடுத்தார். காங்கிரஸ், காந்தி குடும்பம்  என்னும்  துணையோடு  முன் வைக்கப்பட்ட ராஜ சேகர ரெட்டி  தனது நிர்வாக திறன் மூலம் மிக பெரிய தலைவராக வாழந்த பிறகும்  நேசிக்கப்படும்  தலைவரானார் .



அது  போல  புரட்சி  தலைவி அம்மாவிடமும் , புரட்சி  தலைவியிடமும்  நிர்வாகம் பயின்றவர்கள்  நமது  கழகத்தில்  உள்ளனர் . இப்போது நமக்கு  தேவை  பொறுமை . ஒரே நாளில்  மிக  பெரிய  தலைவர்கள் உருவெடுத்து  விட  மாட்டார்கள் . சில  குறைகள் இருக்கும் , அனுபவத்தில்  குறை  களைந்து  நிறைவடைவார்கள். நமக்கு  இன்னும்  4 1/2 ஆண்டு  காலம்  இருக்கிறது , மிக  சிறந்த நிர்வாகம் , ஆட்சியை தருவதன் மூலம்  மக்களை  சந்திக்கலாம் அதுற்கும் மேலாக  நமது  புரட்சி  தலைவி மற்றும்  தலைவரின்  ஆசி  இருக்கிறது.

நம்முடைய  எதிரிகள் நம்மை வீழ்த்தும்  அளவுக்கு   விட வலிமையானவர்கள் அல்ல நம்மை நம்மை  நாமே  வீழ்த்தி கொண்டால்  தான்  உண்டு .

  அரசாங்கம்  இல்லாத  போதே , ஆண்டவன்  எங்ககிட்ட  இருக்கான்  என்று  வேலை பார்த்த  இயக்கம் இது  . இன்று  அரசாங்கமும்  இருக்கிறது ,ஆண்டவனும்  இருக்கிறான் .. இப்போதைய  நம்முடைய ஒரே   தேவை  பொறுமை , புதிய  தலைமை  மீது  நம்பிக்கை .

நமது  வெற்றியை  நாளை  சரித்திரம்  சொல்லும் , இப்படை  தோற்கின்  எப்படை  வெல்லும்  என்னும்  புரட்சி தலைவரின் வார்த்தைகளை  உண்மையாக்குவோம்

புதன், 7 டிசம்பர், 2016

அம்மாவிற்கு பின் ? என்ன செய்ய வேண்டும் அதிமுக ?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு , இல்லையனில்   அனைவருக்கும் தாழ்வு.

காட்டில் ஒரு பசு கன்றுகுட்டிகளுடன் வசித்து வந்தது. தாய் பசு பல ஒநாய்கள் , காட்டு மிருகங்களிடம் இருந்து கன்று குட்டிகளை காத்து வளர்த்தது.. கன்று குட்டிகள் அச்சம், கவலையின்றி, எதிர்காலத்தை பற்றி எந்த பயமும் இல்லாமல் விளையாடின... ஒரு நாள் அந்த தாய் பசு  திடிரென இயற்க்கை எய்தியது. இனிமேல் தான் கன்று குட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டி வரும்.. இனி பல்வேறு ஒநாய்கள் வரும்.. கன்று குட்டிகள் ஒன்றாக இருந்தால் வேட்டையாட முடியாது என்று ஒவ்வொன்றாக ஆசை காட்டி , கருத்து வேறுபாடுகளை உருவாக்கி வேட்டையாட முயற்ச்சிக்கும்... ஒன்றாம் வகுப்பு கதை தான்.. ஆனாலும் இன்றைய சூழ்நிலைக்கு தேவையான கதை.....

 வலுவான தமிழிகத்திற்கு வலுவான அதிமுக தேவை... நாளை மதவாத, குடும்ப கட்சி,சாதிய கட்சிகளிடம் இருந்தும், கோடம்பாக்கத்தில் இருந்து நாட்டை ஆள கனவு காணுபவர்களிடம் இருந்தும்  இந்த மண்ணை காபாற்ற வேண்டும்...   அதற்கு இந்த இயக்கம் இன்றி அமையாதது.

அதிமுக தேவர், கவுண்டர், வன்னியர், தாழ்த்தபட்டவர் என எந்த ஒரு ஜாதிக்கான இயக்கம் அல்ல.. சமானியனையும் அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக அழுகு பார்த்த இயக்கம்.... புரட்சி தலைவரால் உருவாக்க பட்டு, புரட்சி தலைவியால் வலு பெற்ற இயக்கம்.
இரட்டை இலை சின்னம் மகத்தான பல வெற்றிகளை கண்ட சின்னம்... வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும் , இன்னும்  ஒரு 1989 நமக்கு தேவையில்லை....
இன்று நீ பெரியவனா? நான் பெரியவனா? என்பதை விட அம்மா  மற்றும் புரட்சித் தலைவர் அவர்களின் லட்சியம் மற்றும் கனவுகள் பெரியவை..
நல்லதே நடக்கும் என நம்புங்கள்.. உங்களை தேடி வாய்ப்புக்கள் வரும்..

அம்மா நம்மிடம் விட்டு சென்றவை
- 4  1/2 ஆண்டு ஆட்சி காலம்
-  136 சட்டமன்ற உறுப்பினர்கள்
- 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
– 1.5 கோடி உறுப்பினர்கள் உள்ள இயக்கம்
- 8 கோடி தமிழர்களுக்கு இயக்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று அவரது கனவுகளையும், லட்சியங்களையும்  நிறைவேற்ற  பாடுபட உறுதி ஏற்போம்.

புதன், 30 நவம்பர், 2016

மகளதிகாரம் & எதிர்பார்ப்பு இல்லாத நட்பு

பார்த்து பார்த்து என்ன தான் மனைவி செய்தாலும் அம்மாவுக்கு மாற்றாக  முடிவதில்லை.... நமக்கு சிறிது உடல் நிலை சரி இல்லை என்றால் சிறிது புருவம் சுருக்கி கவலையுடன்  என்னாச்சுப்பா உஙகளுக்கு?ன்னு கேட்கும் சில நொடிகள் மகள் அம்மாவுக்கு மாற்றாகிறாள்- மகளதிகாரம் - 1

 மனைவி சிறிது  தாமதமானாலும் கோபப்படுவார்கள், அவசரமாக விமானத்தை பிடிக்க கிளம்பினாலும் எனக்கு இந்த பொட்டு, இந்த செருப்பு தான் வேணும் என்று அடம் பிடிக்கும் மகளிடம் செல்லுப்படியாகாது கோபம்-  மகளதிகாரம் -2

திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து பிறந்த வீட்டுக்கு வரும் பொழுது கூட, அப்பா பேத்தியை கொஞ்சும் போது மகளுக்கு வரும் ஒரு சின்ன பொறாமை- மகளதிகாரம் - 3

 இந்த உலகத்தில் கிடைப்பதற்கு அரியது எது?

 எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத நட்பும், உறவுகளும்...
உங்களுக்கு அத்தகைய நட்பும் , உறவுகளும் உங்களுக்கு  இருந்தால் எப்பொழுதும்  இழந்து விடாதிர்கள்....
நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு செலுத்தும் நபராக நீங்கள் இருந்தால்  எப்பொழதும் மாறி விடாதிர்கள்.உங்களை போன்ற சிலரால் தான் கொஞ்ச மழையும் பெய்கிறது.

வியாழன், 24 நவம்பர், 2016

பொருளாதார நெருக்கடி நிலை, முடங்கிய தேசம் - 2

கதை - 1
ஊரில் ஒரு கொலை நடந்து  விடுகிறது...  குற்றவாளியை புலனாய்வு செய்து கண்டு பிடிக்காமல் ஒரு போலிஸ் அதிகாரி ஊரில் உள்ள அனைவரையும் கட்டி வைத்து உதைத்து உண்மையை வரை வைக்க முடிவு செய்கிறார்.. அவரை  நாம் திறமையான அதிகாரி என்று பாராட்டுவோமா?
கதை-2
         நகரில் உள்ள வங்கியில்10 ரூபாய் கட்டாக ஆயிரம் ருபாய் திருட்டு போய் விட்டது. . திருடியவன் வெளியூர் சென்று அந்த ஆயிரம் ருபாயை நூறு ருபாயாக மாற்றி  விட்டான். காவல்துறை வந்தது திருட்டு  போனது 10 ரூபாய் நோட்டுகள் ,,அந்த நகரத்தில் உள்ள 1 லட்சம் பேரும் தங்களிடம் உள்ள 10 ருபாய் நோட்டை கொண்டு வந்து வங்கியில் காண்பித்து தாங்கள் திருடவில்லை என்று நிருபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.... இவரை நாம் பாராட்ட வேண்டுமா?      
இரண்டு  கதைக்கும் நீங்கள் வங்கி வரிசையில் நிற்பதற்குமோ, இரன்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லரை இல்லாமல் அலைவதற்கும்  சம்பந்தம் இருப்பதாக தோன்றினால் நான் பொறுப்பல்ல...

வியாழன், 17 நவம்பர், 2016

தஞ்சாவூர் வாக்காளர்கள் கவனத்திற்கு


தஞ்சாவூர் வாக்காளர்கள்  கவனத்திற்கு

 புரட்சி  தலைவர் MGR  அவர்கள் காலத்தில்தான்  தமிழ்  பல்கலைக்கழகம்  ஆரம்பிக்கப்பட்டது . நகரத்தின்  வளர்ச்சி புற  நகருக்கு தொடங்கியது  அப்பொழுது தான் ,

பிறகு, 1991-1996 ல்  அதிமுக  ஆட்சி  காலத்தில் , மறைந்த முன்னாள்  அமைச்சர்   SDS  அவர்கள்  சட்ட  மன்ற  உறுப்பினராக  இருந்த  காலத்தில் , மாண்புமிகு புரட்சி தலைவி  அம்மா அவர்கள்  முதல்வராக  இருந்த உலக  தமிழ்  மாநாட்டின் பொழுது புதிய பேருந்து நிலையம், புற நகர்  சாலை போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் வந்தது .

1992 உலக  தமிழ்  மாநாடு , திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக  உலக தமிழாய்வு நிறுவன அனுமதி  இல்லாமல் நடத்திய குடும்ப மாநாடாக இல்லாமல் கற்றறிந்த தமிழறிஞர் நெபுரு கோரோஷிமா தலைமையில் தமிழ் வளர்ச்சி  மாநாடாக இருந்தது . தமிழுடன் சேர்ந்து தஞ்சையும் வளர்ந்தது.

1996 க்கு  பிறகு , வெற்றி பெற்ற  திமுக  தஞ்சாவூர் எங்கள்  கோட்டை
என்று  பெருமை  பட்டு கொண்டது , கோட்டை என்று  சொன்னவர்கள்  கோட்டையையை  வளபடுத்தினார்களா இல்லை ,
மத்திய , மற்றும் மாநில  அமைச்சர்கள் ஆக  இருந்தவர்கள் தங்களை சிற்றசர்களாகவும் , பேரரசர்கள் ஆகவும் எண்ணி கொண்டு  தங்களை வளபடுத்தி  கொண்டார்களே தவிர தஞ்சை நகரம் புறக்கணிக்கபட்டது   .

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு  பிறகு , புரட்சி  தலைவியின் ஆசியிடன் தஞ்சை  சட்டமன்ற தொகுதியை கைபற்றிய அதிமுக , பிறகு  தஞ்சை நாடளுமன்ற தொகுதி , நகர சபை அனைத்தையும் கைப்பற்றியது.  பிறகு மீண்டும்  வளர்ச்சி  பாதையில் தஞ்சை நகரம் திரும்பியது .  புரட்சி  தலைவி  அம்மாவின் ஆசியுடன் , சட்ட மன்ற உறுப்பினர்  திரு ரெங்கசாமி  உழைப்பினால் எண்ணற்ற  திட்டங்கள்  தஞ்சை  தொகுதிக்கு வர தொடங்கியது.

 1. தஞ்சை  நகரம் மாநகராட்சி  ஆகியது .
 2. பல் வேறு மேம்பாலங்கள்  கட்ட பட்டன .
  3. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , புதிய காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் , ஒன்றுபட்ட நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டன .
 4.(RING ROAD ) சுற்று  சாலை திட்டம்
 5. அரசு மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை பிரிவு
 6. உயர் தர  மருத்துவமனை  (AIMS  )தஞ்சைக்கு அருகில் அனுமதி
 7. தரமான சாலைகள்
 8. பல்வேறு  கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்

இன்னும் பல நல்ல திட்டங்கள் ...

திமுக :-
முன்னாள் மத்திய மாநில அமைச்சர்கள் போன்ற பழைய முகங்களை கட்டினால் தஞ்சை மக்கள் வெறுப்படைந்து புறக்கணிப்பார்கள் என்று தெரிந்த திமுக விற்கு  கிடைத்த முகமூடிதான் இப்போதைய திமுக வேட்பாளர் .. வெற்றி பெற்றால்  இந்த வேட்பாளர்  திமுக மாவட்ட செயலாளர் , முன்னாள் மத்திய  அமைச்சர் , முன்னாள் மாநில அமைச்சர் போன்ற  திமுக  அதிகார மையங்களுக்கு  எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பாரே ஒழிய தஞ்சை மக்களுக்கு நல்ல சட்ட மன்ற  உறுப்பினராக இருக்க முடியாது.

தஞ்சை மக்களின்  வாழ்வாதாரம் காவிரி நதி .. 1970களில் சர்காரியா கமிஷன் க்கு  பயந்து காவிரியின் தமிழக  உரிமையை கை விட்டார். மீத்தேன்  திட்டத்திற்கு அனுமதி  அளித்து  டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக முயற்சித்தார் . அதிகாரம்  கையில் இருந்த  பொழுது , மகன் ,மருமகனுக்கு பதவி வாங்கினார்களே ஒழிய காவிரி  நடுவர் மன்ற  தீர்ப்பை அரசிதழில் வெளியிட முயற்சி செய்ய வில்லை.

திமுக  வேட்பாளருக்கு  வாக்களித்தால்  தஞ்சை மக்களுக்கு பாம்பே ஸ்வீட்ஸ்  மைசூர் பாக்கு வேண்டுமானால் கிடைக்கும் , மைசூரில்  இருந்து காவிரி  தண்ணீர்  கிடைக்காது.

புரட்சி  தலைவி  அம்மாவின் சட்ட  போராட்டத்தினால் காவிரி  நடுவர்மன்ற  இறுதி  தீர்ப்பு   அரசிதழில் வெளியிட பட்டது.  மேலும் பூரண நலம் பெற்று  வரும் புரட்சி  தலைவியின்  அம்மாவின் முயற்சியினால் காவேரி மேலாண்மை வாரியம்  அமையும் .



சிந்திப்பீர் , வாக்களிப்பீர்





செவ்வாய், 15 நவம்பர், 2016

மூட்டை பூச்சிக்காக வீட்டை கொழுத்திய மத்திய அரசு



ஹிட்லர் அவர்கள்  எதை செய்தாலும் நாட்டுபற்று  என்ற பெயரால் மக்களிடம்  திணித்து  விடுவார் . அது தான்  இன்று  இந்த  நாட்டிலும்  நடந்து  கொண்டு இருக்கிறது .

பெரும்பாலோர்  நினைப்பது  போல்  பெரும்  கோடீஸ்வரர்கள்  யாரும்  கருப்பு பணத்தை  பணமாக  வைத்து  கொண்டு அலைவதில்லை  பெரும்பாலும்  ரியல்  எஸ்டேட் முதலீடுகளும், போலி நிறுவனங்கள் , பினாமி , தங்கம் ,வெளி நாட்டு  வங்கி , இது போக  10% பணமாக  வேண்டுமானால்  வைத்து  இருக்கலாம் . 

கோடி கணக்கில்  வராத கடனை   வைத்து  இருக்கும்  நிறுவனங்களிடம்  வசூலிக்க  வக்கில்லாத  அரசு , சிறு  வணிகர்கள் , அன்றாடம்  காய்ச்சிகள் , விவசாயிகள் , கூலி  தொழிலாளிகளை வேலையை  விட்டு  வாங்கி  வாசலில்  காத்து  இருக்க  வைத்துள்ளது.

 தண்ணீரில்  தத்தளிப்பவனை  பார்த்து  கரையில்  இருப்பவன்  எனக்கும்  தான்  நீச்சல்  தெரியாது  நான்  கவலை படுகிறேனா என்று  கேட்பதை  போல்  உள்ளது  பெரு  நகரங்களில் எலக்டீரானிக் பணத்தை உபோயோகிக்கும் மக்கள் சமூக  வலைத்தளங்களில்   தினசரி 1000,500 பண பரிமாற்றம் செய்வபர்கள் ,வங்கி  வாசலில் வரிசையில்  நிற்பதை பார்த்து  கேட்பது .
 நாட்களில்  சரியாகி  வீடும்  என்றார்கள் , இன்றும் வரிசைகள் அதிகரித்து கொண்டு தான்  உள்ளது, வரிசையில் நின்று கடைசியில் 2000 ரூபாய்  நோட்டை  தருவதை  போன்ற  முட்டாள் தனம்  எதுவும்  இருப்பதாக  தெரியவில்லை . 2000 நோட்டை வைத்து கொண்டு  100 200 கு பொருள்  வாங்க வழியில்லை . 500 ,1000 நோட்டுகள்  இல்லாத  நிலையில்  2000 நோட்டுகள் இருந்தும்  இல்லாதது  போன்றுதான்.

 வாரம்  20 ஆயிரம்  ரூபாய் மட்டுமே  எடுக்க  முடியும்  ,4 ஆயிரம்  வரை மட்டுமே மாற்ற  முடியும் என்கிற  போது திரும்ப திரும்ப கூட்டம்  இருந்து  கொண்டுதான் இருக்கிறது 

பெரும் பணக்காரர்கள்  யாரும் மாட்டியதாக தகவல் இல்லை , தாங்கள  5000 கோடி  சூரத் தில் சிக்கியது , 500 கோடி  மதுரையில்  சிக்கியது என்று தான் வதந்தி  கிளப்பி கொண்டு இருக்கிறார்கள் .


இதன்  மூலம்  சில  லட்சங்கள்முதல்  1 முதல் 2 கோடி கருப்பு பணம்   வைத்து  இருக்கும் சில சின்ன  மீன்கள்  அகப்படும் , பெரிய திமிங்கிலங்கள் எதுவும்  அகப்படாது.


முட்டை  பூச்சிக்காக  வீட்டை  கொழுத்தியதை போல் , ஒரு தேசத்தை வார கணக்கில் முடக்கி போட்டு , கோடி களில் உற்பத்தியை தடுத்து , சில  கோடி , கருப்பு பணத்தையும் கள்ள நோட்டுகளையும் கைப்பற்றி பெருமை பட்டு கொள்ள வேண்டியது  தான்.

சிபிஐ ,ரா , போலீஸ் , இன்டெலிஜென்ஸ் என்று பல அரசாங்க நிறுவனங்களை வைத்து  கொண்டு  கள்ள  நோட்டை  தடுக்க முடியவில்லை என்று தாங்கள்  அடித்த  பணத்தை  தாங்களே செல்லாது என்று  அறிவிப்பதை பெருமையாக அரசாங்கம் கருதுவது  ஒரு  வெட்க கேடு. 

நாமும்  பாரத் மாதா கி ஜே  என்று  சொல்லி   தினமும் வங்கி வாசலில் வரிசையில்  நிற்பதை  அன்றாட வழக்கமாகி கொள்ளவோம்.