மொதல்ல நீங்க இத்தனை நாள் எங்கே இருந்திர்கள் ?
நாட்டு மக்கள் பிரச்சினை, பாதுகாப்பு பற்றி எல்லாம் திடீரென கவலை பட ஆரம்பித்து விட்டீர்கள் ?
இதுற்கு முன் சுவாதி கொலை செய்ய பட்ட போது எல்லாம் பெண்கள் பாதுகாப்பு பற்றி ஏன் பேசவில்லை ?
இந்திய குடிமகன் கவலை பட்ட செல்லாத நோட்டு , பதான் கோட் தாக்குதல் பற்றியெல்லாம் நீங்கள் ஏன் பிரதமரிடம் கேட்கவில்லை ?
'
தமிழக மக்கள் கவலை பட்ட காவேரி பிரச்சினை , ஈழ தமிழர் , முல்லை பெரியார் இதற்கு எல்லாம் ஏன் கடிதம் எழுத வில்லை?
உடுங்க நம்ப ஏன் உங்க கடந்த காலத்தை பற்றி எல்லாம் கேட்டு கொண்டு
நீங்கள் விளக்கம் கேட்டது யாரை இந்திய பிரதமரை
1. AIMS மருத்துவ குழு யார் அனுப்பியது ?
2. AIMS மருதுவர்கள் யாருக்கு கட்டுப்பட்டவர்கள் ? மாநில அமைச்சர் விஜய் பாஸ்கருக்கா இல்லை ஜே பி நட்ட விற்கா ?
3, AIMS குழு கடைசி நாள் வரை பணியாற்றியது உங்களுக்கு தெரியாதா ?
3, எப்போதில் இருந்து ஜெயலலிதா உங்களுக்கு பிடித்த தலைவியானர் ? சிறை சென்ற போது வருந்தினீர்களா ? இல்லை முதலமைச்சரான போது பாராட்டு தெரிவித்தீர்களா ?
4. நீங்கள் அப்பல்லோ சென்று பார்க்க முயற்சித்தீர்களா ? இல்லை உங்களை விட மறுத்தார்களா ? அதற்காக உங்களது எதிர்ப்பை பதிவு செய்திர்களா ?
திரும்ப மத்திய அரசிற்கு வருவோம் .
5. அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்ற வர்களில் மத்திய அரசு பிரதிநிதியான கவர்னர் ? கவர்னர் அவர்களை தடுக்கும் அளவுக்கு சசிகலா அம்மையாரோ , டாக்டர் ரெட்டி யோ வலிமை யானவர்களா இல்லை அதிகாரம் படைத்தவர்களா ? இல்லை டாக்டர் பார்க்க கூடாது என்று சொல்வதை நம்பி வர கூடியவர்களா ?
6. இன்னொருவர் வெங்கையா நாயுடு , முதல்வரை நண்பர் என்று அழைக்க கூடியவர் . சில முறை அப்போலோ வந்த அவருக்கு நண்பர் சிகிச்சையை கேட்க அக்கறை மற்றும் பொறுப்பு இல்லாதவரா ?
7. இந்தியா பிரதமரிடம் ஐபி,சிபிஐ , போன்ற வலிமையான திறமையான ஏஜென்சிகள் உள்ளன .. நாட்டில் நடக்கும் சிறு சிறு சம்பவங்களுக்கு உளவு துறை அறிக்கை பிரதமரிடம் அளிக்கும் ..75 நாட்களாக ஒரு மாநில முதல்வர் மருத்துவமனையில் உள்ளார் , அவரது உடல் நிலை பற்றி அறிக்கை கேட்காதவரா நமது பிரதமர்? அல்லது அப்பலோ கேட் வாசலை எட்டி கூட பாக்க முடியாததா நமது உளவுத்துறை ?\
8) 12 முறை அப்போலோ அறிக்கை அளித்ததே, நீங்கள் அதை படித்தது உண்டா ? அதை ஒரு முறையாவது பார்த்து அதிருப்தி நீங்கள் தெரிவித்தது உண்டா ?
9) 2014 கர்நாடக சிறைச்சாலை க்கு பிறகு , முதல்வர் உடல்நிலை பற்றி பல செய்தி தாள்களிலும் , ஊடகங்களிம் செய்திகள் வந்ததே , நீங்கள் படிக்கவில்லையா ?
10) முதல்வர் அவர்கள் பொதுவானவர்தான் ,ஆனால் அவர் அனுமதி இல்லாமல் அவரது சிகிச்சை பெறும் புகை படங்களையும் வெளியிடுவது எப்படி உரிமையாகும்?
11, நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் இந்திய பிரதமருக்கு விடை தெரியும் , அத்தனை சர்வ வல்லமை மற்றும் அதிகாரம் உடையவர் . எதுவும் தெரியாமல் விமானம் ஏறி வந்து தோள் தட்டி ஆறுதல் சொல்லி செல்லும் அப்பாவியும் அல்ல பிரதமர்?
ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் , கோடம்பாக்கத்தில் இருந்து கிளம்பும் எல்லாரும் ஜெயலலிதா ஆகி விட முடியாது ?
நட்புடன்
தமிழன்
குறிப்பு :- ஊர் பெயரை மறக்காமல் வைத்திருக்கும் உங்களிடம் மாநிலத்தை பற்றியோ ,ஜாதி பற்றியோ நான் கேட்க மாட்டேன் .