வியாழன், 20 ஜூலை, 2017

மீண்டு வாருங்கள் உலக நாயகரே

ஒரு காலத்தில்  கமலஹாசனின்  திரைப்படங்களின்  ரசிகன்  நான். அவரது  சிப்பிக்குள் முத்து , தேவர்  மகன் , புன்னகை  மன்னன்  போன்ற  படங்களுக்கு மிக நீண்ட  வரிசையில்  நின்று  டிக்கெட் வாங்கியவர்களில் நானும் ஒருவன் ..
ஆனால் , கடந்த  பத்து  ஆண்டுகளாக அவரது  இமேஜ் அவரது  சுமையாகி  விட்டதோ  என்று  தோன்றுகிறது .. கலைஞனாக  கமல் அமீர்  கானை  விட மிக பெரிய திறமைசாலியாக  இருக்கலாம்  . ஆனால்  கடந்த சில ஆண்டுகளாக லகான்,டங்கள் ,PK ,த்ரீ  இடியட்ஸ் , போன்ற  மக்கள்  மனதிற்க்கு நெருக்கமான  அதே  நேரத்தில்  கருத்தையும்  சொல்லும்  வெற்றி படங்களை  கொடுக்கிறார் அமீர் கான் . ஆனால்  கமல ஹாசன் தன்னுடைய  புத்திசாலி  தனம்  காட்சிக்கு காட்சி  தெரிய  வேண்டும்  என்றே படம்  எடுப்பது  போல்  தோன்றுகிறது . உத்தம  வில்லன் , மன்மதன்  அம்பு, விஸ்வருபம் எல்லாம்  அந்த  கேஸ்  தான் .மக்களின்  மனதுக்கு  நெருக்கமான படங்களை கொடுத்து  வருடங்கள்  ஆகி  விட்டது.

என்னுடைய 150 ரூபாயை   கொடுத்து கமல்ஹாசன் ஒரு   அறிவாளி  என்பதை நான்  அறிய  வேண்டும் என்ற அவசியம் இல்லை ..
இதில்  பிக் பாஸ் , அரசியல்  மோதல்  என்று  தனது retirement  நோக்கி  வேகமாக போய் கொண்டிருக்கிறார் .
மீண்டு  வாருங்கள் உலக  நாயகரே 


உங்களுக்கு ஹீரோக்கள் தேவை இல்லை

 தமிழ் சினிமாவுக்கு மற்றும்  தமிழ்,  ஊடகங்களுக்கு   தான் ஹீரோ கள்  தேவை  , உங்கள்  வாழ்க்கைக்கு அல்ல ...
 வாழ்க்கை ஒன்றும்  தமிழ்  சினிமா  அல்ல , ஒற்றை  தலைவன்  வருவான்  ஒட்டு  மொத்தமாக  மாற்றுவான் என்று  இருந்தால்  ஒவ்வரு  முறையும்  ஏமாற்றமே  மிஞ்சும் ..

போன  மாதம்  முழுவதும் ரஜினி யை  வைத்து  ஜல்லியடித்த  ஊடகங்கள்  இந்த  மாதம்  கமலை  வைத்து  ஜல்லியடிக்கின்றனர் .
.
50 வருடம்  தாங்கள்  சார்ந்து  இருந்து  துறையில் .
10 கோடி  ரூபாய் ,  படத்தில்  5 கோடி  ரூபாய்  தனி  மனிதரின்  சம்பளம் என்று வாங்கியவர்கள் , முதல் நாள் திரைபட வெளியீட்டில்  60 ரூபாய் டிக்கட்டை 300 ரூபாய்க்கு  விற்று சம்பளம்  ஈட்டியவர்கள் ,  தன்னுடைய  படத்தை ஆர்வமாக   பார்க்க வரும்  ரசிகனின் தலையில்   10 ரூபாய்  பாப் கானை  150 ரூபாய்க்கு திரையரங்கம்  கட்டுவதை  கண்டுகொள்ளாமல் இருந்த  நல்லவர்கள் உங்களை ஊழலின்  பிடியில் இருந்து  காப்பாற்றுவார்கள் என்று  நம்பினால் உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் .

உண்மையான  ஹீரோ  நீங்களோ  அல்லது  உங்களுக்காக  உள்ளூரில்  உழைக்கவும் /போராடவும்  தயாராக  இருப்பவர் தான் , AC  அறையில்  அமர்ந்து twitter பதிவு  ஈடுபவர்கள்  அல்ல .


புதன், 19 ஜூலை, 2017

உங்கள் வீட்டை சுத்த படுத்துங்கள் உலக நாயகரே

ஜனநாயாக  நாட்டில்  அனைவருக்கும்  அரசியலுக்கு வர  உரிமை  உள்ளது . அதே போல்  விமர்சிக்கும்  உரிமை  அனைவருக்கும்  உள்ளது, அதே நேரத்தில்  ஒரு  குற்றம் சுமத்தினால்  அதை  நிரூபிக்கும்  கடமையும்  உள்ளது ..

 இன்று  உலக  நாயகன் எனப்படும்  கமலஹாசன்  குற்றம்  சுமத்தியுள்ளார் .. அதை  நிரூபிக்க  கவர்னரிடமோ  அல்லது  மத்திய  அரசிடமோ  லஞ்ச  ஊழல்  துறையிடமோ  தகுந்த  ஆதாரங்களை  வழங்க வேண்டும் ..

இன்று  உங்களை  ஆளாக்கிய  திரைத்துறை குற்றுயிரும்  குலையுருமாக உள்ளது ..GST வரி  விதிப்பு மட்டும்  காரணம் அல்ல , மிக  அதிகமான  நடிகர்  சம்பளம் , அதிகரிக்கும் தியேட்டர்  கட்டணம் , பார்க்கிங் , தின்பண்டங்கள்  விலை , வெளி  வர முடியாத  திரைப்படங்கள்  என பல ..உங்களை வளர்த்து  ஆளாக்கிய வீடு  குப்பை  மேடாக  உள்ளது ..ஊரை  சுத்த படுத்த  கிளம்பிய  நீங்கள் உங்கள்  வீட்டை  சுத்த படுத்தி வீட்டீர்களா .
இன்னும்  சொல்ல  போனால்  உங்களின் BIG boss நிகழ்ச்சியால் கூட சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை காட்சிகள் வசூல் குறைகிறது  என்ற  குற்றச்சாட்டு உள்ளது ..அதை நிறுத்த  முடியுமா என்று  பாருங்கள்
8 கோடி தமிழர்களை  சந்திக்கும் முன் 8 நடிகர்களின் சம்பளத்தை குறைத்து தமிழ்  சினிமாவை வாழ வைக்க முடியுமா  என்று பாருங்கள் ..

அரசியல்  எல்லாருக்குமானது ..உழைப்பும் ,தகுதியிம் இருந்தால்  நீங்களும்  ஜெயிக்கலாம் ..ஆனால்  வீடு  தேடி  வந்து முடி சூடுவார்கள் என்று நினைக்காதீர்கள் ..தமிழக மக்கள் வெள்ளி  திரையில் தலைவர்கள் தேடலை நிறுத்தி விட்டார்கள்

உங்கள் வீட்டை  சுத்த படுத்துங்கள் உலக நாயகரே

புதன், 5 ஜூலை, 2017

ஆரம்ப கல்வி அட்ராசிட்டிஸ் ...ஒரு நகைச்சுவை பார்வை

நான்  படிக்கும்  காலத்தில்  பெற்றோர்கள்  பள்ளிக்கு  வந்து  ஆசிரியர்களை  சந்திப்பது  ஒரு  அரிதான  நிகழ்வு. யாருடைய  பெற்றோராவது  வந்து  ஆசிரியரை  சந்தித்தால்  அந்த  மாணவன் , சரியாக  படிக்காத  காரணத்திற்காகவும், ஒழுக்க சீர்கேடுகள் தான் காரணமாக  இருக்கும். பெற்றோரை   பள்ளிக்கு வரவழைப்பதை  ஒவ்வரு  மாணவரும்  பெரிய  அவமானமாக  கருதினோம். பெற்றோருக்கு  வருடம்  ஒரு  முறை  சீருடை , புத்தகங்கள்  வாங்கி தருவதை  தவிர  கல்வி   சம்பந்தமான  வேலைகள்  கிடையாது. ரேங்க்  சீட் மட்டும்  தான்  ஆசிரியருக்கும், பெற்றோருக்கும்  உள்ள  ஒரே தகவல் தொடர்பு  மற்றும்  மாணவரின்  கல்வி முன்னேற்றத்தை  கண்காணிக்கும்  வழி.

   ஆனால்  இப்போது அதுவும்  ஆரம்ப  பள்ளிகள் (ஐந்தாம் வகுப்பு வரை) அடிக்கிற  லூட்டி  தாங்க  முடியவில்லை.

    எந்த அளவு  பள்ளி  மாணவர்களது  பெற்றோர்களை  பிஸியாக வைத்து கொண்டு  உள்ளதோ  அந்த  அளவு  நல்ல  பள்ளியாக  கருத  படுகிறது.  நமது அரசு  பள்ளிகள்  வழுக்கி  விழும்  ஏரியாவும்  அதுதான் .

  Induction  Day , Fathers  Day,Mothers Day , Grand  Parents  Day ,  Cousins   Day ,Graduation  day , SPORTS  day  , school  annual  day  ன்னு  பல   தடவை , அது  இல்லாமல்   டேர்ம் சீட்  (Rank சீட்) தருகிறோம் னு நாலு   தடவை  பள்ளிக்கு கூப்பிட்டு  விடுகிறார்கள். அது  இல்லாமல்  சில  சமயம்  சிறப்பு  விருந்தினர்  கல்வி  பத்தி  lecture  தற்றார்னு  கூப்பிடுகிறார்கள்.

எனது அப்பா   வாழ்நாள்முழுவதும்  எனக்காக   பள்ளிக்கு  வந்ததை  நான்  புள்ளைங்க  play  ஸ்கூல் படிக்கும்போதே  தாண்டி விட்டேன் . இப்போது  சனிக்கிழமை பொழுது  போக்கே ஸ்கூலுக்கு  போறது  என்றாகி  விடுகிறது.

 அதை  விட  அதிகமாக activities , Project  work , cultural participation  னு சொல்லி  வாரம்  மூணு  நாள்  ஸ்டேஷனரி  கடை  கடையா  அலைய  விட்டு  விடுகிறார்கள் .சில பெற்றோர்  சம்பளம்  வாங்கற  நிறுவனத்தை  விட  அதிகமா புள்ளைங்க ஸ்கூலுக்குத்தான்  வேலை  பாக்ராங்க

ஸ்கூள் டைரி , ஸ்கூல்  app , ஸ்கூல்  வாட்ஸப்  குரூப் , Tuition வாட்சப் , ஸ்கூல்  பஸ்  டிரெக்கிங்,னு  சொல்லி  நம்பள அலெர்ட்  ஆறுமுகமாவே   வச்சிருக்காங்க .

ஒழுங்கா  இது  எல்லாத்திலும்  ஆக்ட்டிவா  இருந்தா  நல்ல  பெற்றோர் இல்லாவிட்டால்  நீங்க  புள்ளைங்க  மேல  அக்கறை   இல்லாதவர் ன்னு  சொல்லி  விடுவார்கள் .

ஒரு  புள்ளைக்கே  அலைய  முடியவில்லைனு  ரெண்டாவது  வேணுமான்னு   யோசிக்க வைத்து மக்கள்  தொகை  பெருக்கத்தை  கன்ட்ரோல் செய்ததில்  இந்த  பள்ளிகளுக்கு  பெரும்  பங்கு  உள்ளது


ரொம்ப  எழுதி  விட்டேன் .அதுக்குள்ள  எதாவது  புள்ளைக்கு   ஆக்ட்டிவிட்டி  ஏதாவுது குடுத்து  இருக்காங்களா ன்னு செக்  பண்ணனும்  பை ....


வியாழன், 29 ஜூன், 2017

பாகுபலி கட்டப்பாவும் O பன்னீர்செல்வமும் ...


         ஜெயலலிதாவுக்கு சசிகலாவுடன்  சில  சமயம் கருத்து  வேறுபாடு  வந்தது , பன்னீர்செல்வதுடன்   ஜெயலலிதாவுக்கு  கருத்து  வேறுபாடு  வந்தது  இல்லை  என்று  கூறுபவர்களுக்கு,      ஜெயலலிதா சசிகலாவின்  கருத்தை  கேட்பவராக  இருந்தார்  அதனால்  அவரோடு  கருத்து  வேறுபாடு  வந்தது.  பன்னீர்செல்வம்  கருத்து  சொல்லும்  நிலையில்  எங்கு  இருந்தார்?
   
அமரேந்திர பாகுபலி சிவகாமியுடன்  கருத்து வேறுபாடு வந்தது , ஆனால்  கடைசி  வரை  சிவகாமி தேவிகாக  உயிரை  விடுபவராகத்தான்  இருந்தார் அது போன்றுதான்   சசிகலா.

     கடடப்பா   தனது  விசுவாசத்தை  மாற்றமால்  கடைசி  வரை  இருந்தார்.. ஆனால்  இந்த  கட்டப்பா  தனது  பதவிக்கு  ஆபத்து  வந்தவுடன்  தனது  விசுவாசத்தை  டெல்லி  சுல்தானுக்கு  மாற்றி விட்டார்.விசுவாசம்  என்றால் உண்மையில் தனது  எஜமானரின்  உயிருக்கு  ஆபத்து  என்றவுடன்  தனது பதவியை  தூக்கி  எறிந்து  விட்டு  கேள்விகேட்டு  இருக்க  வேண்டும்  ஆனால்  தனது  பதவிக்கு  ஆபத்து  வரும்  வரை  அமைதி  காத்தவர்தான்  நமது  கட்டப்பா..

  டெல்லி  சுல்தான்  ஏன்  சசிகலாவை  விரும்பவில்லை, சசிகலா  எந்த  கணத்திலும்    தனது  புத்தி  கூர்மையால்,  பிடியில்  இருந்து  விலகி  தன்னை  நிறுவி கொண்டு விடுவார்  என்ற  பயம்  இருந்தது,ஆனால் கேள்வி  கேட்க  முடியாத , பதவியை  காப்பாற்றி  கொள்ள துடிக்கும்  அடிமை  தான்  சிறந்தவர்  என தான்  டெல்லி   நினைத்து விரும்புகிறது ..


செவ்வாய், 20 ஜூன், 2017

தமிழ் சினிமா பிரிந்தவர் இணையும் பாடல்கள் -ஒரு துளி

பிரிந்தவர் கூடினால் கண்ணீர்  தான்  அங்கு மொழி  என்று சொல்வது உண்டு ..

தமிழ்  சினிமா  ஆரம்ப காலத்தில்  இருந்தே பிரிந்தவர் சேரும்  காட்சிகள்  நிறைய  உண்டு . அதுவும்  பாடலால்  இணையும்  காட்சி கள்  பல,  இது  போன்ற   காட்சிகளில் நடிப்பை  விட , பாடல்வரிகள் மற்றும்  பாடலின் பின்னணி இசைதான் காண்பவருக்கு  ஆனந்த கண்ணீரை  வரவழைக்கும் சக்தி  உடையது .


எனக்கு  மிகவும்  பிடித்த   அத்தகைய பாடல்களில்   ஒன்று ,
நாளை  நமதே  படத்தில்  வரும்  அன்பு  மலர்களே, நாளை  நமதே தாய்  வழி  வந்த  தங்கங்கள்  எல்லாம் ஓர் வழி  நின்று  நேர் வழி  சென்றால்  நாளை  நமதே பாடல் ,
தம்பி  பிரிந்து போன  சகோதரர்களை  பாடலை  பாடி  கண்டுபிடிப்பார், SPB  தம்பி  வேடத்தில்  நடித்தவருக்கும் , TMS  புரட்சி  தலைவருக்கும்  பின்னணி கொடுத்து  இருப்பார்கள்.

வருட  கணக்கில் பிரிந்த   சகோதரர்கள்  சேர்ந்தால்   முதலில் நலம் விசாரித்து கொள்வார்களா இல்லை  பாடலை  முழுதாக  பாடி முடிப்பார்களா என்ற  கேள்வி  எழாமல்  உங்களை  மயங்க  வைப்பதுதான்   திரைப்படத்தின்  மேஜிக் ...

90 களில்   சூப்பர்  குட்  பிலிம்ஸ்  காலத்தில்  இத்தகைய  காட்சிகளும்  பாடல்களும்  அதிகம்.



உதாரணமாக
நான் பேச  நினைப்பதெல்லாம்  படத்தில் ஆனந்த் பாபு  , மோகினி  இணையும்  ஏலேலம்  கிளியே  பாடல்....
(இதிலும்  ஜேசுதாஸ்   குரலில் முதலில் பாடிய  பாடலை  இறுதி  காட்சியில்  மனோ  பாடி இருப்பார் , யாரும்  அதை  பொருட் படுத்தவில்லை..)

துள்ளாத   மனமும்  துள்ளும்  படத்தில்  விஜய் , சிம்ரன்  இணையும் இன்னிசை பாடி  வரும்  பாடல் .

புது வசந்தம்  படத்தில்  வரும் சித்தாரா  நண்பர்களுடன்  இணையும்  பாட்டு  ஒண்ணு  நான்  பாடட்டுமா பாடல்  இப்படி  பல ...


கடைசியாக ...மாய  நதியிலே  பாடல்  கபாலியில் ...அதுவும் பல  வருடங்கள் பிரிந்து  இணைந்தவர்கள்  சேர்ந்த பிறகு  வரும்  ஒரு  நல்ல பாடல்..

இப்போது  எல்லாம்  செல்போன் , இணையம் ,Facebook, வாட்ஸப்  காலம்  ஆகி  விட்டதால்  இது  போன்ற  பாடலுடன்  இணையும்  காட்சிகள்  குறைந்து  விட்டது  தமிழ்  சினிமாவில் ..

ஆனாலும் பிரிந்தவர்கள்  இணையும் இசையோடு  வரும்  ஆனந்த  கண்ணீர்  பாடல்களை  நாம்  கொஞ்சம்  தொலைத்து  விட்டோம்  என்றே தோன்றுகிறது.


(பிகு ):- இத்தைகைய  பாடல்கள்  சிலவற்றை  நீங்கள்  பின்னுட்டத்தில் (கமெண்ட்ஸ்) பகிர்ந்தால் மகிழ்ச்சி .





வியாழன், 8 ஜூன், 2017

கவிஞர் வாலி ரசித்ததில் ஒரு துளி


தசாவதாரம்  கல்லை  மட்டும்  கண்டால்  பாடல்  எனக்கு  மிகவும்  பிடித்த  பாடல்களில்  ஒன்று..

கமலஹாசனின்  உண்மையான  தாயார்  பெயர்  ராஜலக்ஷ்மி ,தந்தை  பெயர்  ஸ்ரீனிவாசன் ...

சைவ  சோழ அரசனுக்கு எதிராக விஷ்ணு  புகழ்  பாடும்  இந்த  பாடலில்,

 ராஜலக்ஷ்மி  நாதன்  ஸ்ரீனிவாசன் தான் , ஸ்ரீனிவாசன்  சேய் இந்த   விஷ்ணுதாசன் தான்  (கமலின்  கதாபாத்திர  பெயர்)

என்று  வாலி  எழுதியது  பௌண்டரி  என்றால் ,,,


நாட்டிலுண்டு  ஆயிரம்  ராஜ  ராஜர்தான் , ராஜனுக்கு எல்லாம்  ராஜன்  இந்த  ரங்க ராஜன் தான்    (வாலியின்  இயற் பெயர் ரங்கராஜன் )

என்றுஅடுத்த  வரியில்  வாலி  எழுதியது  சிக்ஸர் ...

காட்சிக்கு  பொருத்தமான பாடலில்  , கமல் ,மற்றும்  தன்னையும் பொருந்தியது வாலியின்   அபார கற்பனை..