புதன், 2 ஆகஸ்ட், 2017

வாழ்க்கை மனிதர்களுக்கானது

அந்த  காலம்  தான்  எவ்வளவு  கடினமானது ...

விவசாயம் மட்டும்  தான்  பெரும்பாலானவருக்கு  தெரிந்த  தொழில் .அதுவும் பெரும்பாலும்  ஆட்களையே சார்ந்தது ..காலையில் வயலுக்கு சென்ற அப்பாவால் இரவில் தான் வீட்டுக்கு  வர  முடிந்தது , நடவு ,அறுவடை  என்றால்  மாதகணக்கில் உழைப்பு  தேவை பட்டது .

போக்குவரத்து  என்றால் பெரும்பாலும் பேருந்து  அல்லது  ரயில்தான் , நாளின்  பெரும்  பகுதியை  பேருந்துக்கு  காத்து  இருந்தே கழிந்தது .
 கார், மோட்டார் சைக்கிள் வெகு  சிலரிடம்  இருந்தது  அதுவும்  தினசரி பயன்பாட்டுக்கு அல்ல .. ..நீண்ட  தூரம்  என்றால் இரண்டாம் வகுப்பு ரயில் அல்லது திருவள்ளுவர்  பேருந்துகள்  மட்டும் . சொகுசு ஆம்னி பஸ்கள்  கிடையாது. விமானம்  என்றால்  மத்திய  தர குடும்பத்துக்கு கீழிருந்து பார்பதுக்கானது , பயணத்துக்கானது அல்ல.

புதிய  பாடலுக்காக ஒரு  வாரம் ஒளியும் ,ஒலியும் காத்து இருக்க  வேண்டும்.. ரஜினி , கமல்  பட டிக்கெட்  என்றால்  விடியற்காலை  திரை அரங்குக்கு  சென்றால்  மதிய கட்சிக்கான டிக்கெட் கிடைக்கும்.

தகவல் தொடர்பு  என்றால்  தந்தியும், landline தொலைபேசி யும்தான். வெளியூரில் இருந்தால் நெருங்கிய  உறவினர் இறப்பையும் இன்லேண்ட் லெட்டரில் தான்  தெரிந்து அழுதவர்  இருக்கின்றனர் .

பெரிய  அறுவை  சிகிச்சை  என்றால் அரசு மருத்துவமனையே கதி ..உங்களது  நோயை  விட  அரசு  மருத்துவமனை  அதிகமாக  பயமுறுத்தியது.
 எந்த ஊருக்கு  கிளம்பினாலும்  கட்டி சாதம் கையில்  எடுத்து போய்
கொண்டு  இருந்தோம். வாரம்  ஒருமுறை  ஹோட்டல்  எல்லாம்  கிடையாது .எப்போதாவது  அத்தி பூத்தாற்போல்  நிகழும்   நிகழ்வு .

புதிய  உடைகள்  தீபாவளிக்கு  மட்டுமே எடுக்க  முடிந்தது .
 கோடைகாலத்தில்  A/C கிடையாது . மின்சாரமும்  தொடர்ந்து  இருக்காது .
குடும்பத்தில் யாராவுது  ஒருத்தர் மட்டுமே  வேலை பார்த்ததால்   வருமானம்  குறைவு ...வாழ்க்கையில் எல்லாவற்றையும் பொறுத்து  கொண்டுதான் போய்  கொண்டு  இருந்தோம் ..

மொபைல்  கிடையாது , மால்  கிடையாது , இணையம்  கிடையாது facebook கிடையாது ,,இத்தனை  தொலைக்காட்சி சேனல்கள் கிடையாது

ஏகப்பட்ட  கிடையாதுகள் ..ஏகப்பட்ட வசதி குறைவுகள் , கடுமையான பொருளாதார  நெருக்கடிகள்  இத்தனையும் தாண்டி  என்  இன்றைய  மனிதன்  அந்த  காலம்  அழகானது  என்று சொல்கிறான் ..
ஏனென்றால்

மனிதர்கள் , மனிதர்கள் , மனிதர்கள் ..
அன்றைய உங்கள்  வாழ்க்கை நிறைய மனிதர்களால்  நிரம்பி  இருந்தது  ..நண்பர்களாக , உடன்  பிறந்தவர்களாக , உறவினர்களாக , பக்கத்து வீட்டுகாரர்களாக  நிறைய  மனிதர்கள் உங்களின்வாழ்க்கையில்  இருந்தனர் ,  சுக ,துக்கங்களில் பங்கெடுத்தார்கள் ..உரிமையுடன் உங்களிடம்  கோபித்து கொண்டார்கள்  , சண்டை போட்டார்கள் .. உங்களிடம்  அவர்களுக்கான  நேரமும்  இருந்தது .
நிறைய மனிதர்கள் , நிறைய  மகிழ்ச்சி , நிறைய  கண்ணீர் , நிறைய நிகழ்வுகள் ..நிறைவான  வாழ்க்கை ..

இன்று உங்களுக்கு  நேரமும்  இல்லை , உங்கள்  வாழ்க்கையில்  மனிதர்களும்  இல்லை ...

மனிதர்களை நேசியுங்கள் .வாழ்க்கையை மனிதர்களால் நிரப்புங்கள் .


LIVE IS BEAUTIFUL







செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

சசிகலாவினால் முடிந்தது , காங்கிரஸினால் முடியவில்லை


பிக் பாஸ்  வீட்டில்  100 நாட்கள்  பல கேமெராகள் கண்காணிப்பில் , நடிக்க  முடியாமல் உண்மையான கேரக்டர் வெளிப்படுத்தி விடுகிறார்கள் ...
33 ஆண்டுகள்  ஒரே வீட்டில்   புரட்சி தலைவி  ஜெயலலிதா  போன்ற புத்திகூர்மையான, பல்வேறு  தரப்பு மக்களிடம்  பழகிய ,துரோகத்தை வென்ற,  பெண்மணியின் முன்  தொடர்ந்து  நடிக்க முடியுமா ? அங்கு  உண்மையான  நட்பும்  , அன்பும் , பாசமும் மட்டும்  இருந்ததால் தான்  திருமதி  சசிகலா  அவர்களால் நீடிக்க  முடிந்தது .

 
ஒரு  ராஜ்ய  சபா MP பதவிக்கு, 45 சட்ட  மன்ற  உறுப்பினர்களை  டெல்லியின் வியூகத்தில்  இருந்து  காப்பாற்ற  நூறாண்டு  கண்ட காங்கிரஸ் கட்சிக்கு நாக்கு  தள்ளுகிறது ..பிஹாரில்  இன்னும்  மோசமான  அடி ..... ஆனால்  டெல்லி யின் வியூகத்திற்கு  எதிராக ஒரு  மாநில  ஆட்சியையே  காப்பாற்றி  கொடுத்தவர்  சசிகலா .


இந்த  ஆட்சி  இருக்கட்டும் ,போகட்டும் , என்ன  வேண்டுமானால்  நடக்கட்டும் ..ஆனால்  அன்று டெல்லி வியூகத்தை  உடைத்து , ஜெயித்தவர்  அவர் அது  வரலாறு ..

சசிகலாவினால் முடிந்தது , காங்கிரஸினால் முடியவில்லை .
 

புதன், 26 ஜூலை, 2017

நீட் ..சாதித்து இருக்குமா திமுக ?

நேற்றைய  புதிய  தலை முறை  நிகழ்ச்சியில்  நேர்பட பேசு  நிகழ்ச்சியில்  திமுக  சில  குற்றச்சாட்டுகளை  வைத்தது ..அதற்கான சில  விளக்கங்கள்

குற்றச்சாட்டு 1.  2011 க்கு  பிறகு  தமிழகத்தில்  கல்வி  தரம்  குறைந்து  உள்ளது . ... 2010 திமுக  அரசால்  சமசீர்  பாடதிட்டம்  அறிமுக  படுத்த  பட்டது ..அப்படியானால்  திமுக வால்  கொண்டு  வரப்பட்ட  சமசீர் கல்வி  முறை  தரமற்றது  என்கிறாரா  திமுக  உறுப்பினர் ..எந்த  ஒரு பாட  திட்டத்தையும்  சில  ஆண்டுகள் அமுல் படுத்தி  , அதன்  நன்மை , தீமைகளை  பரிசீலித்து , அதன்  பிறகே  மாற்றம்  கொண்டு  வர  முடியும் ..அதையே  இந்த  அரசு  செய்து  வருகிறது .

குற்றச்சாட்டு 2.  கலைஞர்  முதலமைச்சராக  இருந்தால் நீட்  தேர்வு  போன்ற  மாநில  நலன்  சார்ந்த  விஷயங்களை சாதித்து  இருப்பார் ... திமுகவுக்கு  காங்கிரஸ் கூட்டணி  கட்சி ..அப்போதே  மாநில  நலன் சார்ந்த  காவேரி  நடுவர்  நீதி  மன்ற  தீர்ப்பை  அரசிதழில்  வெளியிட  செய்ய  முடியவில்லை .. பாஜக  அதிமுகவின்  தோழமை  கட்சியோ  , கூட்டணி  கட்சியோ  அல்ல ..இன்று  பாஜக  அதிமுக  MP களின்  ஆதரவை  எதிர்பார்த்தும்  இருக்கவில்லை ..இந்த  நிலையில்  பாஜக வை  அனுசரித்து  நீட் போன்ற விஷயங்களில்  காரியம்  சாதித்து  கொள்வதே  புத்திசாலி  தனமான  அணுகுமுறை  ஆகும் ..


குற்றச்சாட்டு 3.  உச்சநீதிமன்றத்தை   மாநில  உரிமையில்  தலையிடுகிறது  என்று  அணுகவில்லை ..
பள்ளி  கல்வி  மாநிலங்களின்  பட்டியலிலும் , மருத்துவ மற்றும்  உயர்கல்வி பொது பட்டியலிலும்  வருகிறது.. பள்ளி  கல்வியின்  அதிகாரம்  12 ஆம்  வகுப்பு  தேர்ச்சி  முடிவுகளுடன் முடிவடைந்து  விடும் .மருத்துவ மாணவர் சேர்க்கை பொது பட்டியலுக்கான உரிமையில்  வருகிறது ..நாம்  இன்று மருத்துவ கல்விக்கான அனுமதியை  மாநில  பட்டியலில் வரும்  என்று கூறி , அதை  உறுதி  செய்ய  வேண்டும்  என்று  உச்ச  நீதி  மன்றத்தினை  அணுகினால்  எந்த  அளவு பயனளிக்கும் என்பது  கேள்விக்குறியே ..
மத்திய  அரசின் உதவியுடன் ஜல்லிக்கட்டு  போன்று  அவசர  சட்டம்  இயற்றி ஜனாதிபதி அனுமதி பெற்று , உச்ச  நீதி மன்றத்தில் முறையாக  விலக்கு  பெறுவதே  சரியாக  இருக்கும் .

நீட்  நிரந்தர  விலக்கு  பெற   வேண்டும்  என்பதே  புரட்சி  தலைவியின் கோரிக்கை  அதை  நோக்கியே  அதிமுக   அரசு  பயணிக்க வேண்டும் .

வியாழன், 20 ஜூலை, 2017

மீண்டு வாருங்கள் உலக நாயகரே

ஒரு காலத்தில்  கமலஹாசனின்  திரைப்படங்களின்  ரசிகன்  நான். அவரது  சிப்பிக்குள் முத்து , தேவர்  மகன் , புன்னகை  மன்னன்  போன்ற  படங்களுக்கு மிக நீண்ட  வரிசையில்  நின்று  டிக்கெட் வாங்கியவர்களில் நானும் ஒருவன் ..
ஆனால் , கடந்த  பத்து  ஆண்டுகளாக அவரது  இமேஜ் அவரது  சுமையாகி  விட்டதோ  என்று  தோன்றுகிறது .. கலைஞனாக  கமல் அமீர்  கானை  விட மிக பெரிய திறமைசாலியாக  இருக்கலாம்  . ஆனால்  கடந்த சில ஆண்டுகளாக லகான்,டங்கள் ,PK ,த்ரீ  இடியட்ஸ் , போன்ற  மக்கள்  மனதிற்க்கு நெருக்கமான  அதே  நேரத்தில்  கருத்தையும்  சொல்லும்  வெற்றி படங்களை  கொடுக்கிறார் அமீர் கான் . ஆனால்  கமல ஹாசன் தன்னுடைய  புத்திசாலி  தனம்  காட்சிக்கு காட்சி  தெரிய  வேண்டும்  என்றே படம்  எடுப்பது  போல்  தோன்றுகிறது . உத்தம  வில்லன் , மன்மதன்  அம்பு, விஸ்வருபம் எல்லாம்  அந்த  கேஸ்  தான் .மக்களின்  மனதுக்கு  நெருக்கமான படங்களை கொடுத்து  வருடங்கள்  ஆகி  விட்டது.

என்னுடைய 150 ரூபாயை   கொடுத்து கமல்ஹாசன் ஒரு   அறிவாளி  என்பதை நான்  அறிய  வேண்டும் என்ற அவசியம் இல்லை ..
இதில்  பிக் பாஸ் , அரசியல்  மோதல்  என்று  தனது retirement  நோக்கி  வேகமாக போய் கொண்டிருக்கிறார் .
மீண்டு  வாருங்கள் உலக  நாயகரே 


உங்களுக்கு ஹீரோக்கள் தேவை இல்லை

 தமிழ் சினிமாவுக்கு மற்றும்  தமிழ்,  ஊடகங்களுக்கு   தான் ஹீரோ கள்  தேவை  , உங்கள்  வாழ்க்கைக்கு அல்ல ...
 வாழ்க்கை ஒன்றும்  தமிழ்  சினிமா  அல்ல , ஒற்றை  தலைவன்  வருவான்  ஒட்டு  மொத்தமாக  மாற்றுவான் என்று  இருந்தால்  ஒவ்வரு  முறையும்  ஏமாற்றமே  மிஞ்சும் ..

போன  மாதம்  முழுவதும் ரஜினி யை  வைத்து  ஜல்லியடித்த  ஊடகங்கள்  இந்த  மாதம்  கமலை  வைத்து  ஜல்லியடிக்கின்றனர் .
.
50 வருடம்  தாங்கள்  சார்ந்து  இருந்து  துறையில் .
10 கோடி  ரூபாய் ,  படத்தில்  5 கோடி  ரூபாய்  தனி  மனிதரின்  சம்பளம் என்று வாங்கியவர்கள் , முதல் நாள் திரைபட வெளியீட்டில்  60 ரூபாய் டிக்கட்டை 300 ரூபாய்க்கு  விற்று சம்பளம்  ஈட்டியவர்கள் ,  தன்னுடைய  படத்தை ஆர்வமாக   பார்க்க வரும்  ரசிகனின் தலையில்   10 ரூபாய்  பாப் கானை  150 ரூபாய்க்கு திரையரங்கம்  கட்டுவதை  கண்டுகொள்ளாமல் இருந்த  நல்லவர்கள் உங்களை ஊழலின்  பிடியில் இருந்து  காப்பாற்றுவார்கள் என்று  நம்பினால் உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் .

உண்மையான  ஹீரோ  நீங்களோ  அல்லது  உங்களுக்காக  உள்ளூரில்  உழைக்கவும் /போராடவும்  தயாராக  இருப்பவர் தான் , AC  அறையில்  அமர்ந்து twitter பதிவு  ஈடுபவர்கள்  அல்ல .


புதன், 19 ஜூலை, 2017

உங்கள் வீட்டை சுத்த படுத்துங்கள் உலக நாயகரே

ஜனநாயாக  நாட்டில்  அனைவருக்கும்  அரசியலுக்கு வர  உரிமை  உள்ளது . அதே போல்  விமர்சிக்கும்  உரிமை  அனைவருக்கும்  உள்ளது, அதே நேரத்தில்  ஒரு  குற்றம் சுமத்தினால்  அதை  நிரூபிக்கும்  கடமையும்  உள்ளது ..

 இன்று  உலக  நாயகன் எனப்படும்  கமலஹாசன்  குற்றம்  சுமத்தியுள்ளார் .. அதை  நிரூபிக்க  கவர்னரிடமோ  அல்லது  மத்திய  அரசிடமோ  லஞ்ச  ஊழல்  துறையிடமோ  தகுந்த  ஆதாரங்களை  வழங்க வேண்டும் ..

இன்று  உங்களை  ஆளாக்கிய  திரைத்துறை குற்றுயிரும்  குலையுருமாக உள்ளது ..GST வரி  விதிப்பு மட்டும்  காரணம் அல்ல , மிக  அதிகமான  நடிகர்  சம்பளம் , அதிகரிக்கும் தியேட்டர்  கட்டணம் , பார்க்கிங் , தின்பண்டங்கள்  விலை , வெளி  வர முடியாத  திரைப்படங்கள்  என பல ..உங்களை வளர்த்து  ஆளாக்கிய வீடு  குப்பை  மேடாக  உள்ளது ..ஊரை  சுத்த படுத்த  கிளம்பிய  நீங்கள் உங்கள்  வீட்டை  சுத்த படுத்தி வீட்டீர்களா .
இன்னும்  சொல்ல  போனால்  உங்களின் BIG boss நிகழ்ச்சியால் கூட சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை காட்சிகள் வசூல் குறைகிறது  என்ற  குற்றச்சாட்டு உள்ளது ..அதை நிறுத்த  முடியுமா என்று  பாருங்கள்
8 கோடி தமிழர்களை  சந்திக்கும் முன் 8 நடிகர்களின் சம்பளத்தை குறைத்து தமிழ்  சினிமாவை வாழ வைக்க முடியுமா  என்று பாருங்கள் ..

அரசியல்  எல்லாருக்குமானது ..உழைப்பும் ,தகுதியிம் இருந்தால்  நீங்களும்  ஜெயிக்கலாம் ..ஆனால்  வீடு  தேடி  வந்து முடி சூடுவார்கள் என்று நினைக்காதீர்கள் ..தமிழக மக்கள் வெள்ளி  திரையில் தலைவர்கள் தேடலை நிறுத்தி விட்டார்கள்

உங்கள் வீட்டை  சுத்த படுத்துங்கள் உலக நாயகரே

புதன், 5 ஜூலை, 2017

ஆரம்ப கல்வி அட்ராசிட்டிஸ் ...ஒரு நகைச்சுவை பார்வை

நான்  படிக்கும்  காலத்தில்  பெற்றோர்கள்  பள்ளிக்கு  வந்து  ஆசிரியர்களை  சந்திப்பது  ஒரு  அரிதான  நிகழ்வு. யாருடைய  பெற்றோராவது  வந்து  ஆசிரியரை  சந்தித்தால்  அந்த  மாணவன் , சரியாக  படிக்காத  காரணத்திற்காகவும், ஒழுக்க சீர்கேடுகள் தான் காரணமாக  இருக்கும். பெற்றோரை   பள்ளிக்கு வரவழைப்பதை  ஒவ்வரு  மாணவரும்  பெரிய  அவமானமாக  கருதினோம். பெற்றோருக்கு  வருடம்  ஒரு  முறை  சீருடை , புத்தகங்கள்  வாங்கி தருவதை  தவிர  கல்வி   சம்பந்தமான  வேலைகள்  கிடையாது. ரேங்க்  சீட் மட்டும்  தான்  ஆசிரியருக்கும், பெற்றோருக்கும்  உள்ள  ஒரே தகவல் தொடர்பு  மற்றும்  மாணவரின்  கல்வி முன்னேற்றத்தை  கண்காணிக்கும்  வழி.

   ஆனால்  இப்போது அதுவும்  ஆரம்ப  பள்ளிகள் (ஐந்தாம் வகுப்பு வரை) அடிக்கிற  லூட்டி  தாங்க  முடியவில்லை.

    எந்த அளவு  பள்ளி  மாணவர்களது  பெற்றோர்களை  பிஸியாக வைத்து கொண்டு  உள்ளதோ  அந்த  அளவு  நல்ல  பள்ளியாக  கருத  படுகிறது.  நமது அரசு  பள்ளிகள்  வழுக்கி  விழும்  ஏரியாவும்  அதுதான் .

  Induction  Day , Fathers  Day,Mothers Day , Grand  Parents  Day ,  Cousins   Day ,Graduation  day , SPORTS  day  , school  annual  day  ன்னு  பல   தடவை , அது  இல்லாமல்   டேர்ம் சீட்  (Rank சீட்) தருகிறோம் னு நாலு   தடவை  பள்ளிக்கு கூப்பிட்டு  விடுகிறார்கள். அது  இல்லாமல்  சில  சமயம்  சிறப்பு  விருந்தினர்  கல்வி  பத்தி  lecture  தற்றார்னு  கூப்பிடுகிறார்கள்.

எனது அப்பா   வாழ்நாள்முழுவதும்  எனக்காக   பள்ளிக்கு  வந்ததை  நான்  புள்ளைங்க  play  ஸ்கூல் படிக்கும்போதே  தாண்டி விட்டேன் . இப்போது  சனிக்கிழமை பொழுது  போக்கே ஸ்கூலுக்கு  போறது  என்றாகி  விடுகிறது.

 அதை  விட  அதிகமாக activities , Project  work , cultural participation  னு சொல்லி  வாரம்  மூணு  நாள்  ஸ்டேஷனரி  கடை  கடையா  அலைய  விட்டு  விடுகிறார்கள் .சில பெற்றோர்  சம்பளம்  வாங்கற  நிறுவனத்தை  விட  அதிகமா புள்ளைங்க ஸ்கூலுக்குத்தான்  வேலை  பாக்ராங்க

ஸ்கூள் டைரி , ஸ்கூல்  app , ஸ்கூல்  வாட்ஸப்  குரூப் , Tuition வாட்சப் , ஸ்கூல்  பஸ்  டிரெக்கிங்,னு  சொல்லி  நம்பள அலெர்ட்  ஆறுமுகமாவே   வச்சிருக்காங்க .

ஒழுங்கா  இது  எல்லாத்திலும்  ஆக்ட்டிவா  இருந்தா  நல்ல  பெற்றோர் இல்லாவிட்டால்  நீங்க  புள்ளைங்க  மேல  அக்கறை   இல்லாதவர் ன்னு  சொல்லி  விடுவார்கள் .

ஒரு  புள்ளைக்கே  அலைய  முடியவில்லைனு  ரெண்டாவது  வேணுமான்னு   யோசிக்க வைத்து மக்கள்  தொகை  பெருக்கத்தை  கன்ட்ரோல் செய்ததில்  இந்த  பள்ளிகளுக்கு  பெரும்  பங்கு  உள்ளது


ரொம்ப  எழுதி  விட்டேன் .அதுக்குள்ள  எதாவது  புள்ளைக்கு   ஆக்ட்டிவிட்டி  ஏதாவுது குடுத்து  இருக்காங்களா ன்னு செக்  பண்ணனும்  பை ....