திங்கள், 25 டிசம்பர், 2017

TTV RK நகரில் வென்ற காரணம்

வெறும் பணம்  என்று  ஒற்றை  வரியில்  உதாசீனப்படுத்தினால் உங்கள் கணிப்பு தவறு.
ஒரு உதாரணம் :-

RK  நகர்  தொகுதியில்   TTV  தினகரனுக்காக  களப்பணியில்தஞ்சாவூர்   டெல்டா பகுதியை  சேர்ந்த  இருக்கும் தம்பி  ஒருவரை  தொலைபேசியில்  எதேச்சையாக தொடர்பு  கொள்ள நேர்ந்தது.

சபரி மலைக்கு  மாலை  போட்டு  இருந்த  அவர்  மலைக்கு  செல்வதையும்  சிறிது  தள்ளி  வைத்து  பிரச்சார  பணியில்  தீவிரமாக இருந்தார்.

நான்  " ஏம்ப்பா  பொழப்ப   விட்டுட்டு  , இப்படி  வந்து  சென்னையில்  பிரச்சாரத்தில்  அலைந்து  கொண்டு இருக்கிறாய் ? என்று  கேட்டேன். ஒனக்கு  TTV  என்ன  தர  போறார் ? என்றேன்.

அதற்கு  அவர் ... நான் தஞ்சை  வந்த  போது  சில முறை  TTV யை  கூட்டத்தில்  ஒருவனாக  சந்தித்தது  உண்டு ... நேற்று  RK  நகரில். TTV  வண்டியுடன்  ஓடிவந்தேன் . கவனித்த  TTV , தம்பி  ஒடி வராதே  அடி  பட  போகுது  என்றார். "  பரவா இல்லைனே  என்று  தொடர்ந்தேன் . பின்னர். TTV  " திருக்காட்டுப்பள்ளி  தம்பி " (என்று  எனது  ஊர் பெயரை  குறிப்பிட்டு)  சொன்னா  கேட்க  மாட்டியா  என்று அன்புடன்  கண்டித்தார்..
இது  போன்ற  அன்புதான் எங்களை  போன்ற  இளைஞர்களை    களத்தை  விட்டு  வெளியேறாமல் அவருக்காக பணியாற்ற   தூண்டுகிறது  என்றார்.

இது  ஒருவரின்  அனுபவம் மட்டும்  அல்ல. பல்வேறு  இளைஞர்களின் அனுபவமும்  இதுதான் .

தேர்தல் களம்  வரும்  ,செல்லும் .. ஆனால்  களத்தை தாண்டி  தொண்டர்களின்  அன்பை  சம்பாதிக்கும்  தலைவனை  தேர்தல்  வெற்றி  தோல்விகள்  ஒன்றும்  செய்து  விடாது.




வெள்ளி, 15 டிசம்பர், 2017

கந்தசாமியும், வங்கியும் , காஷ்மீரும்


கந்தசாமி  :-  என்னமோ வங்கியில்  டெபாசிட்  பண்ண  பணத்தை  எடுக்க  முடியாதுன்னு சொல்ராங்களே   உண்மையா ? அரசாங்கம்  சட்டம்  கொண்ட  வர போகுதுனு சொல்ராங்களே?

பக்த் :- அத  பத்தி  எனக்கு  நன்னா  தெரியல , ஆனால்  இந்த  தேசத்துக்காக  நீங்க  ஏன் சின்ன  சிரமத்தை  கூட  பொறுத்துக்க மாட்டேன்ரேல் ... காஷ்மீரில் ..நம்ப  ராணுவ  வீரர்கள்  எல்லாம் ...

கந்தசாமி  :- என்னது மறுபடியும்  காஷ்மீரா . முடியல  ..ஆளை  விடுங்கடா  சாமி....


செவ்வாய், 12 டிசம்பர், 2017

தலைவன் -TTV

தலைவன் 

இடை தேர்தல் ,
ஆட்சி இல்லை ,
கட்சி இல்லை சுயேட்சையாக  போட்டி ,
விரும்புகின்ற  சின்னம் இல்லை ,
மத்திய , மாநில  அரசுகளை  எதிர்த்து பணி,
கடுமையான  கட்டுப்பாடுடன்  தேர்தல்  ஆணையம் ,

இத்தகைய ஒரு  சூழ்நிலையில் , பெரும்பாலான  தலைவர்கள் , தாங்கள்  நேரிடையாக  களத்தில்  இறங்குவது ரிஸ்க்  என்று  பெரும்பாலும்  வேறு  யாரையாவது  இறக்கி  ஆழம்  பார்ப்பார்கள் ..

போர்க்களத்தில்  எதிரியை சந்திக்க வீரர்களை   முன்னே  விட்டு பின்னால்  இருந்து  பார்க்கும்  தளபதிகளை  போல்  இல்லாமல் , ஆபத்து  எது   வந்தாலும் அதை  தானே  பயமின்றி  முன்னின்று சந்திக்கின்ற துணிவு தினகரனிடம்  இருக்கிறது.

போகும்  பாதை  பூப்பாதையாக  இருந்தால்  தொண்டனை  அனுப்பி  இருப்பார் , ஆனால்  அபாயகரமான பாதை என்பதால் தானே  சந்திக்கிறார்.

நாளை  வெற்றி  அடைந்தால்  ,  முன்னின்ற தன்னை  விட  தன்  வெற்றிக்கு  பின்னால் நின்று உழைத்த தொண்டர்களுக்கு   உரித்தாக்குவார் , சூழ்ச்சியால் முடிவு  வேறுவிதமாக இருந்தாலும்   அதை தன்னுடையதாக ஏற்கும்  மனப்பக்குவமும்  உள்ள  தலைவர்  TTV தினகரன்  மட்டுமே.

பிறந்த  நாள் வாழ்த்துக்கள்  TTV  தினகரன் 


80, 90 களில் வளர்ந்தவர்களின் நினைவுகளில் மட்டும்


நீண்ட இடைவேளைக்கு  பிறகு  ஒரு அரசியல் இல்லாத பதிவு..

இன்று கிட்டத்தட்ட  30 % மேற்பட்ட  திரைப்படங்கள்  திரைஅரங்கிலோ , தொலைக்காட்சியிலோ  பார்க்காமல் , மொபைல்  போன்  திரையில்  பார்க்கப்படுகிறது ...

YOU TUBE ,Hot star, Sun next, Amzon prime, Netflix..Tamilrockers ...ஏகப்பட்ட  வழிகள்  திரைப்படங்களை  பார்க்க...

80, 90 களில் திரை அரங்கின் நெரிசல்  இல்லாமல் வீட்டில்  அமர்ந்து  பார்க்க VCR ,VCP  வந்த  தருணங்களை  நினைத்து  பார்த்தால் ..

VCR  பெரும்பாலும்  வெளிநாட்டில்  இருந்து  இறக்குமதி  செய்யப்பட்டது.நடுத்தர  வர்க்கம் வாங்கும்  விலையும் அல்ல ..
கிட்டத்தட்ட  3 முதல்  4 மாத  சம்பளம்  அல்லது 40 முதல்  50 முட்டை  நெல்  விலை . எனவே  வாடகை  தான்  பெரும்பாலானவருக்கு ..

ஒரு  வார  இறுதியில் 12 மணி  நேர  வாடகை 200 வரை , கேசட்  வாடகை  தனி ,  வாடகைக்கு  வாங்கி வந்தால்  முரட்டுத்தனமாக 4 படங்களை  விடிய  விடிய தூங்காமல்  கடுமையாக பார்த்த  தருணங்களும்  உண்டு. டெக் (VCR  ) வாடகைக்கு  விடுதல்  ஒரு  தொழில் ..அதை  தூக்கி  கொண்டு  வந்து  போட்டு  காண்பித்து  செல்வதற்கு  ஒரு  ஆபரேட்டர்.அவருக்கு  போற  இடத்தில சாப்பாட்டு , ராஜ உபச்சாரம் தான் .. இவ்ளோ  கஷ்டப்பட்டு  எடுத்து  வந்து  பார்க்கும் படத்தின்  காஸெட்  சிக்கி கொண்டு  சிவராத்திரியான கதையும்  உண்டு.
  நல்லது , கெட்டது  நடக்கும்  வீடுகளில் , உறவினர்கள்   கூடி  பார்க்க  வாடகை  வீடியோ  என்பது  கலாச்சாரமாகவே  இருந்தது ..

அதே  போல் , இன்று  ஆயிரம்  ஆடியோ  பாடல்கள்  ஒரு  மொபைலில் .அன்று  ஒரு  காஸெட்  அதிக  பச்சம் 12 பாடல்கள் .. கம்பெனி காஸெட்  ரொம்ப  சிலரிடம் , பெரும்பாலும் பல  படத்தின் பாடல்களை ஒரு  காஸெட்டில்  பதிவு  செய்ய  ரெகார்டிங்  சென்டரே துணை. 
என்னென்ன பாடல்   என்பதை செலக்ட்  செய்ய  குடும்பத்தில்  விவாதம்  எல்லாம்  நடக்கும். இன்று  I Phone -8   என்ன  அன்று நல்ல  டேப்  ரெக்கார்டர்  ஸ்பீக்கர்  சிஸ்டம் +100 காஸெட்  வைத்து  இருக்கும்  நன்பர்கள்  எல்லாம்  செம்ம  கெத்து.

 வீடியோ  வாடகை , ஆடியோ ரெகார்டிங்  சென்டர் ,STD  பூத் ,வாடகை  சைக்கிள்   கடை , பொங்கல்  வாழ்த்து  கடை ,  போன்ற பல  தொழில்கள் இன்று காணவில்லை.ஆனாலும்  80, 90 களில்  வளர்ந்தவர்களின்   நினைவுகளில்  மட்டும் ...

தொழில்நூட்பத்தின் காரணமாக  வாழ்க்கை  இன்று  எளிதாகி  விட்டது ஆனாலும்  எதையோ  தொலைத்த  பீலிங் .....



புதன், 6 டிசம்பர், 2017

MGR நூற்றாண்டு விழாவும் , தொடரும் தர்ம யுத்தமும்

தமிழக  ஆட்சியாளர்களின்  3 தலையாய  பணிகள்

1. MGR  நூற்றாண்டு விழா  கொண்டாடுவது
2. குட்டி  கதை  சொல்லி  கூட்டத்தை கலைப்பது
3. திரும்ப  MGR  நூற்றாண்டு  விழா கொண்டாட்டம் .


இந்த  ஒரு  வருஷம்  ஒவ்வரு  மாவட்டமா MGR நூற்றாண்டு  விழா கொண்டாடி  ஒட்டியாச்சு .
அடுத்த  வருஷம்  என்ன  செய்வது ?
பேசாம  ஒவ்வரு  மாநிலமா போய்  கொண்டாடலாமா ? பி டீம்  பாய்ஸ்  யோசனை ..


Flight  ticket  offer போட்டா  தர்ம  யுத்தம்  குரூப்  மொத்தமா அடுத்த வருஷம் எல்லா மாசத்துலயும் டெல்லிக்கு  டிக்கெட் புக்  பண்ணி வைப்பது நல்லது ....உங்களை  கட்சியில்  வச்சு  செய்வார்கள் ...        மிஸ் இவன்  என்ன கிள்ளிட்டான்னு  கம்பளைண்ட்  பண்ணணும்ல ?

MGR நூற்றாண்டு விழாவும் , தொடரும் தர்ம யுத்தமும்


வியாழன், 23 நவம்பர், 2017

அதிமுகவின் பி டீம் -பாஜக புலம்பல்

நமது  பாஜக  நண்பர்  ஒருவரை  நீண்ட  இடைவேளைக்கு  பிறகு  சந்தித்தோம் ..
என்னங்க  தமிழக ஆட்சி  உங்கள்  தயவில்தான் நடக்கிறது  என்கிறார்கள் , சந்தோஷம்தானே என்றதற்கு ..

மனிதர் பொங்கி தீர்த்து  விட்டார் ..

2014 தேர்தலில் திமுக , அதிமுக  இல்லாத  கூட்டணி  18 % சதவீத  வாக்குகள்  பெற்றது .. இது  ஒரு பெரிய  விஷயம் .. பாஜக  மட்டும்  5 முதல்  7% வாக்குகளை  பெரும்  கட்சியாக  உருவெடுத்தது. நடுத்தர மற்றும்   உயர்நடுத்தர  குடும்பத்தினர்  நன்மதிப்பை  பாஜக  பெற்றிருந்தது .

ஜெயலலிதா  மறைவுக்கு  பின்  அதிமுக  உள்கட்சி  விவகாரங்களில்  தலையிடாமல்  இருந்தால் , அதிருப்தி உருவாகி பலர்  பாஜக விற்கு  வந்து  இருப்பார்கள்  + திமுக  எதிர்ப்பு  வாக்குகள்  பாஜகவை  நோக்கி  வந்து  இருக்கும் , படிப்படியாக  15 முதல்  20 சதவீதம்  பெற்று  பெரிய  இயக்கமாக  வலுபெறுவதற்கான  வாய்ப்பும்  இருந்தது ..

ஆனால்  தேவை இல்லாமல்  அதிமுக உட்கட்சி  பஞ்சாயத்தில் இறங்கி ,   இப்போ  தீர்ப்பு  வர போகுது , தேர்தலை  தள்ளி  வைக்க  போகிறார்கள் , தகுதி நீக்கம்  செய்ய போறார்கள் என்று  எல்லாத்தையும் தமிழக  பாஜக  தலைவர்கள்  சொல்லி, OPS யை   அடிக்கடி  பிரதமரை  சந்திக்க  வைத்து  எல்லாவற்றிற்கும்  பின்னால்  பாஜக  இருக்கிறது  என்பதை  மக்களிடம்  கொண்டு சேர்த்தனர்.

இப்போ  இந்த  அரசு  செய்யும்  தவறுகளுக்கு , அதிமுக  அமைச்சருக்கு  முந்தி  முட்டு  கொடுக்கிறார்கள்  சில தமிழக பாஜக  தலைவர்கள்.  அதுவும்  சிலருக்கு  தமிழகத்தில் பாஜக  ஆட்சியை  விட  இந்த  ஆட்சியே  நீடித்தால்  வசதி  அதிகம்  என்று  நினைக்கிறார்கள். எனக்கு  என்னமோ  அவர்கள்  பிஜேபி -பி டீம்  மாதிரி  தெரியவில்லை , தமிழக பாஜக  தான் ஆள்வோரின் பி டீம்  ஆகி  விட்டது.

ஆள்பவரிடம்  இரட்டை  இலையை   கொடுத்தாலும் , இவர்களை நம்பி  கூட்டணி வைக்க முடியுமா ,பாஜக  சிறிது அதிகாரம் இழந்தால் சசிகலாவையே கை கழுவியவர்கள் , பாஜக வை எளிதில்  தூக்கி  எறிந்து விடுவார்கள்,

சொந்தமாக கட்சிக்கு  என்று   இருந்த  5% வாக்கு வங்கியையும்  நாங்கள்  இழந்து  கொண்டு  இருக்கிறோம்  என்பது  தான்  உண்மை.


அட  இவுரு  சொல்றதும்  சரிதான்  போல ... ..

அதிமுகவின் பி டீம் -பாஜக  புலம்பல்






புதன், 15 நவம்பர், 2017

மாநில உரிமை - மிரட்டி பணிய வைக்க முடியுமா ?

18ம் நூற்றாண்டு,  வெள்ளையர்களின்  ஆட்சிக்கு  எதிராக முதன் முதலாக வாள் உயர்த்திய  இனம்,

19 ம் நூற்றாண்டு,  குற்ற பரம்பரை சட்டத்தை கொண்டு அடக்கிய போது எதிர்த்து போராடிய இனம்,

20 ம் நூற்றாண்டு,  நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்துக்கு அழைத்த போது, "வெற்றி வேல், வீர வேல்  என்று முதலில் களத்தில்  நின்ற இனம்...

அவர்கள் ஒரு சாதிக்காக நிற்கவில்லை , தமிழுருக்காகவும் , ஒட்டு மொத்த இந்தியாவுக்காகவும  நின்றனர்.

அதே இன்றும்
 மாநில உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ,  அந்த  மண்ணில்    தோன்றிய   மாவீரர்கள் தோள் உயர்த்தினால்,  பொய் வழக்கு, வருமான வரித்துறை, சிறைச்சாலையை  காட்டி  பணிய வைக்க முடியுமா என்ன ?


அன்றும் , எட்டப்பர்கள்  அதிகாரத்திற்காகவும் , பணத்திற்காகவும்  காட்டி கொடுத்தனர் , வெள்ளையருக்கு  துணை நின்றனர் .

ஆனால் வரலாறு  அவர்களை  எல்லாம்  மறந்து  விட்டது. போராடியவரையே  நினைவில்  வைத்து  கொண்டது

அதே  போல்  நாளைய  வரலாறும்... எட்டப்பர்களை  புறம் தள்ளி , மாவீரர்களை  நினைவில்  கொள்ளும்.