புதன், 22 மார்ச், 2017

அதிகாரம் அவர்களுடைய கையில்

அதிகாரம் அவர்களுடைய கையில் ...,

 தீர்ப்பு  மாத  கணக்கில் ஒத்தி வைக்க படுகிறது, வேண்டும்  என்றவுடன்  தரப்படுகிறது ... ஏனனில் அவர்களே நீதி மன்றம்.
 
எத்தனை சட்டமன்ற  உறுப்பினர்கள்  இருந்தாலும் , அவர்கள்  தலை அசைத்தபிறகு தான்  ஆளுநர் பதவி  பிரமாணம்  செய்து  வைப்பார். ஏனெனில்  அவர்களே  ஆளுநர்கள் .

முதலைமைச்சர்கள் தோற்கடிக்கப்பட்டாலும் , இரண்டவது  இடத்துக்கு  சென்றாலும் , வெற்றியை பண ,அதிகார பலத்தின்  மூலம் திருடலாம் . (கோவா ,மனிப்பூர் ) ஏனெனில் அவர்களே  அரசியல்  சட்டம் .

கட்சி  பெரும்பாலான  தொண்டர்கள் , நிர்வாகிகள்  ஆதரவு  , இல்லாமல் , வெறும்  காகிததில்  கணக்கு  காட்டினால் , மூன்றாவது  பெரிய  கட்சியின் சின்னம் முடக்கப்படும் . ஏனெனில்  அவர்களே  தேர்தல்  ஆணையம் .

எதிர்ப்பவர்கள் கோமாளிகளாகவும் , தேச துரோகிகளாகவும்                        சித்தரிக்க  படுவார்கள் . ஏனனில்  அவர்களே  ஊடகம் ..

ஆனால்  இந்த  தேசம் அனைத்தையும் கடந்தது வந்து உள்ளது  , ஒற்றை  பெண்மணி  தான்  இந்தியா என்று இருந்த காலத்தையும் பார்த்தது அவரின்  தோல்வியையும்  பார்த்தது .

இது  அவர்களின் காலம் , விளையாடட்டும் ,
வீசும்  காற்று மாறும் .







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக