முல்லா கதையும் , விசாரணை ஆணையமும்
அதுபோல் ஜெயலலிதா மறைவிற்கு அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் , போயஸ் தோட்ட வேலையாள் , அப்போலோ ஹாஸ்பிடல் செக்யூரிட்டி என்று பலரையும் கூப்பிட்டு சசிகலாவிற்கு எதிராக வாக்குமூலம் கிடைக்குமா என்று முயற்சிக்கிறது.
ஆனால் அதிகாரங்களை வைத்திருந்த அப்போதைய பொறுப்பு முதல்வர் , மாநில சுகாதார துறை அமைச்சர், AIIMS டாக்டர்கள் , அவர்களை அனுப்பிய மத்திய சுகாதார துறை அமைச்சர் , மருத்துவமனையில் வந்து சந்தித்த அப்போதைய கவர்னர் , அப்போதைய மத்திய அமைச்சர் தற்போதைய துணை குடியரசு தலைவர் இவர்களை விசாரிக்க வேண்டியதுதானே ?
அதை விட்டு வாட்ச்மன் வேலையாள் விசாரிப்பது , வெளிச்சத்தில் தேடிய முல்லாவின் கதை போல் அல்லவா இருக்கிறது.
அது என்ன ஜெயலலிதாவிற்கு ஸ்வீட் கொடுக்கப்பட்டதா ? என்று ஒரு கேள்வி.அவர் என்ன கை குழந்தையா ? ஜெயலலிதா ஸ்வீட் சாப்பிட்டாரா ? என்பது தானே சரியான கேள்வியாக இருக்க முடியும்.
ஒவ்வரு முறையும் ஆணையத்தில் இருந்து ஊடகத்துக்கு கசிய விடப்படும் தகவல் சசிகலா விற்கு எதிராக இருக்கிறது ?
முடிவுரை எழுதி விட்டு , கதையை எழுதுகிறதா ஆணையம்