வெள்ளி, 30 டிசம்பர், 2016

பிஜேபி அரசு -ஒரு அசால்ட் சேதுவா , இருபத்து மூன்றாம் புலிகேசியா ?






ஆவலுடன்  எதிர்பார்த்து இருந்த  டிசம்பர்  31 வந்து விட்டது . கருப்பு  பணம்  எல்லாம்  ஒளிந்து  விட்டதா .  குறைந்த பட்ச  எதிர்பார்ப்பான  ஆறு  சதவித கருப்பு  பணம்  கூட திரும்ப வராமல் இல்லை . 15.5 லட்சம்  ஒழிக்கப்பட்ட  பணத்தில்  ஏறத்தாழ  14 லட்சம்  கோடி  கடந்த  வாரம்  வரை  திரும்ப  வந்து  விட்டது .மீதம் வங்கிகளில் செல்லாது  என்று அறிவித்த அன்று  வங்கிகளின் கையிருப்பாக இருந்து  இருக்கும் . கள்ள  நோட்டுகள்  ஏறத்தாழ 4 கோடி மட்டும்தான் பிடி பட்டது

இப்போது  கருப்பு  பண தியரி  போய்  cashless தியரி வந்து  விட்டது .cashles க்கு demonitisation அவசியமா  என்றால்  தேச  துரோகி என்பார்கள் .

எனக்கு இப்பொது  உள்ள  ஒரே சந்தேகம் , நம்ம  மத்திய  அரசாங்கம்   அம்பு விட தெரியாமல்  சம்பந்தம்  இல்லாதவரை  தாக்கி  கொன்ற  புலிகேசியா இல்லை ,  ஸ்கெட்ச்  கருப்பு  பணம்  வச்சிருக்குற பணக்காரனுக்குன்னு நினைச்சியா  இல்ல ,சேகரு , இந்த  ஸ்கெட்ச்  உன்  பாக்கெட்ல  இருக்குற  பணத்துக்கத்தான்ன்னு  சொல்ற  அசால்ட்  சேதுவா  அதுதான்  புரிய வில்லை 

வியாழன், 29 டிசம்பர், 2016

அழிந்து விடுமா அதிமுக ?



தமிழக அரசியல் இயக்கங்கள் ஒரு  தலைவரை முன்னிறுத்தி  களம் கண்டாலும், அரசியல் இயக்கம் என்பது  ஒரு தலைவர் மட்டும்  அல்ல .
எப்படி  ஒரு அரசு  செயல்படுகிறதோ  அதே போல அரசியல் இயக்கமும்  செயல்படுகிறது . கிளை கழகம் , ஒன்றிய ,நகர கழகம், மாநில  நிர்வாகிகள், அது போல  சார்ந்த அமைப்புகள் ஆன மாணவர் அணி, இளைஞர் அணி,வழக்கறிஞர்  அணி  என்று பல்வேறு  பிரிவுகளை  உள்ளடக்கியது . தலைவர்கள் முன்னிறுத்தபட்டாலும் ஒவ்வரு கிளை கழகம் முதல் அணைத்து  நிர்வாகிகள் முன்னெடுத்து செல்வதன் மூலம் மட்டுமே ஆதரவு நிலை வாக்குகளாக  மாற்றபடுகிறது. தொண்டர்கள் தான்  இயக்கம் .

தமிழகத்தில்  திமுக ,அதிமுக வை  தவிர  எந்த கட்சிக்கும்  தமிழகம் முழுவதும் உள்ள  அனைத்து வாக்கு சாவடியில் முகவர் ஆக  கூட ஆள் கிடையாது. அதனால் தான் தலைவர் தோன்றினாலும்  வாக்கு வாங்க முடிவதில்லை.

அதிமுக ,திமுக வும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது போல்  தோன்றினாலும் 1977 முதல்  சட்ட பேரவை  தேர்தல்களை கணக்கில் எடுத்தால் 7-2 என்ற  நிலையில்  அதிமுக  முன்னணி வகிக்கின்றது.இன்றும்  இந்தியா வின்  மூன்றாவது பெரிய கட்சி.

அம்மா  அவர்கள்  மறைந்து விட்டார்கள்?

  கட்சி உடைய வேண்டும்  என்று எதிர்பார்த்தார்கள், உடையவில்லை ,இப்போது அதிகாரத்திற்காகவும் , பணத்திற்காகவும் ஒன்றாக உள்ளனர் என்று குற்றம் சுமத்துகிறார்கள் .
இவர்களு பயந்து 
குடும்பம்  , இளமை , கனவு , எதிர்காலம் எல்லாவற்றையும்  இரண்டாம் பட்ச்சமாக்கி  இயக்கமே பிரதானம் என்னும் லட்சியத்துடன் வாழும் லட்சக்கணக்கான தொண்டர்கள்           இருக்கிறார்கள் அவர்கள்  கனவை சிதைக்க முடியுமா ? 
இல்லை தங்களுக்கு பிறகு நூறாண்டுகள் இயக்கம் நிலைக்க வேண்டும் என்று நினைத்த அம்மா மற்றும் தலைவரின் கனவைதான் சிதைக்க வேண்டுமா?

அம்மா உடல்நிலையை பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து பெற்று தந்த  ஆட்சியை , அவரது  லட்சியங்களையும் ,வாக்குறுதிகளையும் நிறைவேற்ற பயன்படுத்தாமல் தூக்கி ஏறியத்தான் முடியுமா ? 

ஒற்றுமையுடன்  நின்று,வாழ்க்கையை  அம்மாவிற்காக  தியாகம்  செய்தவரை  கழகத்தின் புதிய   பொது செயலாளர் ஆக  தேர்தெடுத்து விட்டார்கள். கழகத்தின்  கடைசி கட்ட தொண்டன் வரை கட்டுக்கோப்புடன் தான்  இருக்கிறான்.  போன தேர்தலில் கடைசி வரை அதிமுக வை  தோற்கடிக்க நினைத்த ஊடகங்கள் தான் எதிர்ப்பு என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

1 தொண்டர்களுக்கு   கிடைக்க கூடிய உயர்வு. திமுகவில்  நான்  ஆறாம் வகுப்பு படித்த போது  சட்ட மன்ற  உறுப்பினராக இருந்தவரே எனது மகன் ஆறாம் வகுப்பும்  படிக்கும் இப்போதும் சட்ட மன்ற உறுப்பினர் ,மற்றும் மாவட்ட கழக செயலாளர். ஆனால்  அதிமுக வில்  தொண்டனும்  தலைவன்  ஆகும் சாத்தியம் .

2. திமுக வை யும்  இதர  மதவாத , சாதிய  இயக்கங்களையும்  தடுக்கும் சக்தி  அதிமுக விற்கு மட்டும் உள்ளது என்னும் மக்கள்  நம்பிக்கை .

3. எத்தனை வழக்குகள் ,அச்சுறுதல்கள் இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் காவேரி பிரச்சினை ,முல்லை பெரியார் , ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்/மாநில நலனை அதிமுக தலைமை  விட்டு கொடுக்காது   என்ற நம்பிக்கை.

4. அடித்தட்டு மக்களை  சென்றடையும்  மக்கள் நல திட்டங்கள் .

5. அதிமுக  ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் கட்சி உறுப்பினர்கள் தலையிட மாட்டார்கள் , சிறப்பான  சட்ட ஒழுங்கு இருக்கும்  என்னும் நம்பிக்கை 

6,  தவறு செய்தால் பாராபட்சம் இல்லாமல் தண்டிக்கும் தலைமை 

7. மற்றும்  தேர்தல் வாக்குறுதிகள் , விஷன்  2023. 

இவற்றை எல்லாம் முன்னெடுத்து புதிய பொது செயலாளரும் , தமிழக முதல்வரும் செயல்படுவார்கள் .அப்படி செயல்பட்டால்  அதிமுக. என்னும்  இயக்கம்  இன்னும்  நூறாண்டுகள் வாழும் .

தலைவர்கள் மறையலாம் , ஆனால் கொள்கைகள்,செயல்  திட்டங்கள் முன்னெடுக்கபடும் போது புதிய  தலைவர்கள்  தோன்றுவார்கள்.





புதன், 28 டிசம்பர், 2016

விஜய் யின் சினிமா வெற்றியும் ,அதிமுகவின் அரசியல் வெற்றியும்

1992ம் வருடம், அரவிந்த் ஸ்வாமி,பிரசாந்த்,போன்ற ஆணழகர்கள்   தான் தமிழகத்தின் எதிர்கால  ஸ்டார்கள் என்று எதிர்பார்த்து  இருந்த  நேரம் , ஒரு  பிரபல  இயக்குனர்  தனது மகனை  நடிகராக  அறிமுக படுத்துகிறார்.
 மாநிறமான  முகம் ,மக்களிடம்  எந்த  எதிர்பார்ப்பும்  இல்லை .பிரபல வார பத்திரிக்கை இவரை எல்லாம் யார் நடிக்க சொன்னார்கள் என்று எழுதியது. சிலருக்கு  காரணம் இல்லாமல்  அவர் மீது  வெறுப்பு. மனம் தளராத அந்த  இளைஞர் தனது  முயற்சியை தொடர்ந்தார்  ஏறத்தாழ  3 ஆண்டுகள்  அவருக்கான  நேரம் அமைந்தது.இரண்டு  படங்கள்அவரது வாழக்கையை  புரட்டி  போட்டது .20 ஆண்டுகளுக்கு பிறகு  அவர் தமிழ்  சினிமாவின் வசூல்  சாதனையாளராகவும்,லட்சக்கணக்கான ரசிகர்களின் நாயகனாகவும் விளங்குகிறார்.அன்று விமர்சித்தவர்கள் இன்று வாயே திறக்க முடியவில்லை.




அந்த  நாயகன்  தான் திரு  விஜய் அவர்கள், அந்த  இரண்டு  படங்கள் பூவே உனக்காக , காதலுக்கு மரியாதை .எந்த  வித எதிர்பார்ப்பும் இல்லாமல் , தேவையற்ற வெறுப்பையும் பொருட்படுத்தாமல் , முயற்சியில் மனம் தளராதால் அவர் இன்று திரைத்துறையில்   உயரத்தை  அடைந்துள்ளார்.

அதே போல் அண்ணா  திமுகவின் எதிர்கால தலைமை யார் ஏற்றாலும் , கட்சி அழிந்து விட வில்லையே என்ற   எரிச்சலையும்  , வெறுப்பையும் எதிரிகள் காட்டுவார்கள். ஒரு  திரை பிரபலம் இல்லாத ஒருவரிடம் மக்களின்   பெரிய  எதிர்பார்பும்  இல்லை ஆனாலும் 4.5 ஆண்டுகள் ஒரு சிறந்த ஆட்சியை  கொடுப்பதன்  மூலம் மக்கள் சக்தியை  எளிதில் பெற  முடியும்.

பிறப்பால்  ஆன  தலைவர்களை  விட உழைப்பால் ஆன  தலைவர்கள் சாதித்தது  அதிகம்.


திங்கள், 26 டிசம்பர், 2016

2016 A முதல் Z வரை ஒரு பார்வை

2016 முடியப் போகிறது.. A முதல் Z வரை
A- Amma RIP,  Ashwin all-rounder ,Apollo.
B-Banglore Violence, Brathwhite six, BMK Rip.
C-Chinnama Raised , Cyrus mystry ouster, Cho
D- Donald trump win, Demonetisation, Dangal
E- Exit of Britain, Emphalming.
F- Fidel castro died
G-George Michael died, Google pixel phone
H-Hilary lost,  Helicopter scam
I-  Income Tax raids, ISIS,
J-JIO,  Jallikattu ban, Junglebook
K-kalaignar returns,  kabadi worldcup, karunnair. Kabali
L-Lionel messi reentry
M-Mohammed Ali , Martin crowe, Mamta back
N- Note-7 fire, Nayanthara no1.
O-OPS CM Again,  Olympics
P- Pokemon go,  PV sindhu, pathankot
Q-Que in ATM
R- Raghuram rajan exit, Rammohan rao,
S- Surgical strike,Syria unrest, sultan
T- tamilnadu assembly election,  Tata troubles
U- Uri attack,Urjit patel.
V- Vardah cyclone,  Virat kohli sucess
W- Womens glory in Olympics
X- XXX3 Deepika padukone
Y-Yahoo sold
Z- Zsazsa gobar died, Zakir naik      நீங்களும் இதில் விட்டதை பதிவு செய்யலாம்

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

டெல்டா மாவட்டம் - ஒரு ஜிவ மரண போராட்டம்

டெல்டா ஒரு ஜீவ மரணப் போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறது.. மீடியாவில் பெரிய அளவில் செய்தி இல்லை... வரலாற்றில் மிக மோசமான வட கிழக்கு பருவ மழை.. ஏற்கனவே பாதியான சம்பா சாகுபடி , இப்பொழுது நட்ட பயிர்களை காபாற்ற  நிலத்தடி நீரை கொண்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்.. இன்னும் 2 வாரத்துக்குள் ஒரு நல்ல மழை பெய்தால் டெல்டா பயிர்கள் தப்பிக்கும்., இல்லாவிட்டால் கடனை வாங்கி நட்ட சம்பா பயிர்கள் அனைத்தும் கருகும்...                

   அனைத்து விவசாயிகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் தகுந்த உதவிகள்  செய்ய வேண்டும்.. முதல்வர் பிரதமரின் சந்திப்பின் போது வலியுறுத்துவார் என்றும் பிரதமர் தகுந்த உதவிகள் செய்வார் என்றும் நினைக்கிறேன்..                                                                                           . தமிழக ஊடகங்கள் அப்பல்லோ, காவிரி மருத்துவமனையை கவர் செய்வதை போல டெல்டா  நிலமையை கவர் செய்து பிரச்சினையின் திவிரத்தை உணர செய்ய வேண்டும்...

அரிசி விளையாவிட்டால் என்ன. பணம் இருக்கிறது ,வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்று விவசாயி என்னும் உற்பத்தியாளனை கொன்று விடாதிர்கள்...

உற்பத்தியாளனை கொன்று , பெரு நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு வேலை செய்வது தான் சுகம் என்ற மனநிலைமையை  மேலும் மேலும் ஊக்குவிக்க வேண்டாம்..

வியாழன், 15 டிசம்பர், 2016

அதிமுக அடுத்த பொதுச்செயலாளர் யார்?


ஏறக்குறைய  50 ஆண்டுகள்  தமிழ்  சமூகம் சினிமா பிரபலங்களையோ , வாரிசுகளை மட்டுமே  தலைவர்களாகவும் ,முதல்வர்களாகவும்   ஏற்று  கொண்டு உள்ளது ..இந்நிலையில் முதல்  முறையாக  வாரிசு இல்லாத, திரை  பிரபலங்கள்  இல்லாத முதலமைச்சரையும், மிக  பெரிய  கட்சியின்  பொது  செயலாளரையும்  காண  இருக்கின்றது ..இந்த முயற்சி  வெற்றியோ , தோல்வியோ அதை  மக்கள்  4 ஆண்டுகள்  முடிவில் முடிவு  செய்யட்டும் ..ஆனால்  அப்படி  செய்யவே கூடாது  என்பது  முட்டாள்தனம்  இல்லையா ?

யார்  அண்ணா  திமுகவின்  பொது  செயலாளர்  ஆக  வர வேண்டும்.. குடும்ப  உறுப்பினர்களையே  தலைவர்களாக  ஏற்று கொள்ள  அதிமுக   ஒன்னும்  திமுகவோ , காங்கிரஸோ ,பாமாகவோ அல்ல .
 வாரிசு அரசியலையே  பார்த்து  பழகி போனவர்கள் ,தகுதியே  இல்லாவிட்டாலும் ரத்த  சொந்தம்  என்ற  ஒரே காரணத்திற்க்காக  தீபா அவர்களை  முன்னிறுத்திகிறார்கள் ..யார் செங்கோட்டையன் , யார்  தம்பிதுரை ? என்று கட்சியின்  இரண்டாம் நிலை தலைவர்களை  அடையாளம் கூட  காண முடியாதவர்...மிக  பெரிய சக்தியான  திமுகவை  எதிர்த்து  அரசியல்  செய்ய முடியுமா?.
மேலும் அம்மா  அவர்கள் தீபா  அவர்களை அரசியலுக்கு கொண்டு வர  நினைத்திருந்தால்  யார்  தடுத்திருக்க  முடியும்?  அவருக்கு  இவரை அரசியலுக்கு அழைத்து  வர  விருப்பமும் இல்லை , நம்பிக்கையும்  இல்லை ..

சசிகலா  மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு இருந்தார் . அவரது  மேல்  உள்ள நம்பிக்கையும் ,பிரியத்தின் பெயரில் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு பல்வேவேறு காலகட்டங்களில் பல்வேறு பதவிகளை  வழங்கினார் .
சசிகலா  அவர்களுக்கு 30 வருடம் கட்சியின் அன்றாட நிகழ்வுகளை நிர்வாகிப்பவராகவும் இருந்தார்  .மேலும்  அந்த  அதிகாரத்தையும் அவருக்கு அம்மா  வழங்கி இருந்தார்.  இதனால்தான் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அவரையே  பொது செயலாளர் ஆக  வேண்டும்  என்று வேண்டுகோள்  விடுகின்றனர்.

சிலர் சசிகலா  அவர்கள் கருத்து வேறுபாடு வந்ததை காரணம் காண்பிக்கிறார்கள் . பெற்றவர்கள் , பிள்ளை கிடையே கருத்து வேறுபாடு வருகிறது ,கணவன் மனைவி டையே பிரிவு  வருகிறது . நண்பர்களுக்கு இடையே  கருத்து வேறுபாடு வருகிறது ..35 ஆண்டுகால நட்பில் அரிதாக சில   இடைவேளை எப்போதாவது வந்தது    ..ஆனாலும்   அதுவும் கூட  வெகு சில நாட்களே நீடித்தது.. அவரை அம்மா  அவர்கள்  அன்புடன் ,நட்புடன் , நம்பிக்கையுடன் தனது கூடவே கடைசி வரை வைத்து  இருந்தார்கள் .

இன்னும் சிலர்  MGR  ஆரம்பித்த கட்சிக்கு சசிகலா  தலைவரா? என்று  கேட்கின்றனர் . அமெரிக்கா வில் தாமஸ் ஜெபர்சன் ஆரம்பித்த டெமாகிரடிக் கட்சியின் அதிபராக  ஒபாமா அதிபராக இருக்கிறார் . அவரு  என்ன  தாமஸ் ஜெபர்சன்  பாத்து  இருக்க முடியுமா ?  காந்தி ,போஸ்  இருந்த கட்சியான காங்கிரஸ்க்கு  சோனியா  தலைவராக இருக்க முடியும் போது MGR கட்சிக்கு சசிகலா  தலைவராக ஆனால் என்ன  தவறு ? MGR , அம்மா வின் கொள்கைகளை முன்னெடுத்து செல்ல தகுதி உடையவராக இருப்பதுதான் முக்கியம்.


தமிழகத்தின் மிக  பெரிய மக்கள் தொகை கொண்ட ஜாதியான வன்னியர் , தேவர் , கவுண்டர் , தாழ்த்தப்பட்டவர் , யாரும் ஆட்சி ,ஆளும் கட்சி  தலைமை பொறுப்பில் இல்லை . சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களே  ஆட்சி  பொறுப்பில் இருந்தனர் .திடிரென ஏதாவது  ஒரு பெரும்பான்மை இனத்தை  சேர்ந்தவர்  வரும் பொழுது மற்றவர் அனைவர்க்கும் ஒரு வித அச்ச உணர்வு வருவது  இயற்கை . ஆனாலும் உயர்ந்த பொறுப்பிற்கு வந்த  பிறகு  அவர்கள்  அனைவருக்கும் பொதுவான வர்கள் , ஒரு  சாதி நிலை எப்போதும் எடுக்க மாட்டார்கள் எடுத்தாலும் அது கொள்ளி கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்வது போல.. எனவே  இந்த ஐயம் தேவையற்றது.

அதிமுக  கழகம்  அம்மாவிற்கு  பிறகு   முதல்வர்  பதவிக்கும்,  பொதுச்  செயலாளர்  பதவிக்கும்  அடித்துக்  கொண்டு  சிதறும்  என்று  எதிர்பாபார்த்தவர்கள் வாயை  அடைக்கும்  விதம்  அனைவரையும்   ஒரணியாக  வைத்து  இருப்பபதே  பெரும்  சாதனை தான்..  இதை  பொறுக்க  முடியாதவர்கள் தான்  எதையாவது  வதந்தியை  கிளப்பி   பொழுது   போக்கி  கொண்டு  உள்ளனர்.

. புரட்சி  தலைவியின்  உழைப்பினாலும், அதிமுக  என்னும்  பேரியக்கத்தை  நம்பி  மக்கள்  வழங்கிய  ஆளும்  பொறுப்பை    அதிமுக  அடித்து  கொண்டு  விட்டு   விடும்  என்று  நினைத்தவர்ககள்  வாயில்  மண்  விழுந்தது..  புரட்சித்  தலைவியின்  கனவுகளை  நிறைவேற்றும்  பணியை  தொடங்கி  விட்டனர். வர்தா  புயல்  துயர்  துடைக்கும்  போர் கால  பணியே  ஒரு  சான்று



" Fittest will  survive " என்ற டார்வின் தியரிக்கு  ஏற்ப , இன்று அதிமுக வில் அனைவரும்  ஏற்பவராக சசிகலா  இருக்கிறார்  அவர்  பொது  செயலாளர் ஆவதில்  என்ன தவறு உள்ளது . இன்று  கட்சி தொண்டர்கள் ஏற்கும்  தலைவராக இருப்பவர் , நாளை தனது மக்கள் பணிகள் மூலம் மாநிலம் ஏற்கும் தலைவர் ஆவார்  என்ற  நம்பிக்கை  இருக்கிறது






சனி, 10 டிசம்பர், 2016

அஇஅதிமுக இனி ?

எத்தனை வதந்திகள் அதிமுகவை முடக்கி போட
எப்படியாவது அதிமுகவிற்கு  ஜாதி வர்ணம் பூசி முடக்கி விட...

இஸ்லாமியர்களிடம் "அதிமுகவை பிரதமர் மோடியிடம் அடகு வைத்து விட்டார்கள் "

பிராமனர்களிடம் "   வீரமணி மீண்டும் அதிமுகவை ஆதரிக்க ஆரம்பித்து விட்டார், இனி பிராமனர்க்கு இடமில்லை"

கவுண்டர்களிடம் " அ தி மு க தேவர் கட்சி, நமக்கு இனி அங்கிகாரம் கிடைக்காது"

தேவர்களிடம் "  பன்னீர்செல்வம் நம்ம ஆள் என்றாலும் அதிமுக கவுண்டர்களுக்கு தான் செய்வார்கள் நமக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள்"

வன்னியர்களிடம் , இதர பிரிவினரிடம்" நமக்கு ஒன்னும் செய்ய மாட்டார்கள்"
'
இதிலிருந்தே தெரிகிறது,  அ இ அ தி மு க  ஜாதிக்கான கட்சியல்ல... அனைவருக்குமான    கட்சி .. அனைத்து சமுதாயத்தை ஒன்றரை கோடி  தொண்டர்கள் கொண்ட  இயக்கம்.. இன்று மட்டுமல்ல, என்றும் இது தொடரும்
இது புரட்சித் தலைவர் கண்ட இயக்கம்,  புரட்சித் தலைவியால் வலுப்பெற்ற இயக்கம் , இதை ஜாதி என்னும் ஜாடியில் அடைக்க செய்யும் முயற்சி பலிக்காது...

வெள்ளி, 9 டிசம்பர், 2016

கௌதமி அவர்களுக்கு ஒரு கடிதம்


வணக்கம் ,

மொதல்ல   நீங்க இத்தனை  நாள் எங்கே  இருந்திர்கள் ? 

 நாட்டு   மக்கள் பிரச்சினை,  பாதுகாப்பு பற்றி  எல்லாம்  திடீரென கவலை  பட  ஆரம்பித்து  விட்டீர்கள் ?   

இதுற்கு முன்  சுவாதி  கொலை  செய்ய  பட்ட போது  எல்லாம்  பெண்கள்  பாதுகாப்பு  பற்றி ஏன்   பேசவில்லை ?  

இந்திய  குடிமகன் கவலை பட்ட  செல்லாத நோட்டு , பதான் கோட் தாக்குதல் பற்றியெல்லாம் நீங்கள்  ஏன் பிரதமரிடம் கேட்கவில்லை ?
'
தமிழக மக்கள் கவலை பட்ட காவேரி  பிரச்சினை , ஈழ தமிழர் , முல்லை பெரியார் இதற்கு எல்லாம் ஏன் கடிதம் எழுத வில்லை? 

உடுங்க  நம்ப ஏன்  உங்க கடந்த  காலத்தை  பற்றி  எல்லாம்  கேட்டு கொண்டு

நீங்கள்  விளக்கம்  கேட்டது  யாரை  இந்திய பிரதமரை 

1. AIMS மருத்துவ குழு  யார்  அனுப்பியது ?

2. AIMS  மருதுவர்கள்  யாருக்கு  கட்டுப்பட்டவர்கள் ?  மாநில  அமைச்சர் விஜய்  பாஸ்கருக்கா  இல்லை  ஜே பி  நட்ட விற்கா ?

3, AIMS  குழு  கடைசி  நாள் வரை  பணியாற்றியது உங்களுக்கு  தெரியாதா ?

3, எப்போதில்  இருந்து  ஜெயலலிதா  உங்களுக்கு  பிடித்த  தலைவியானர் ? சிறை  சென்ற  போது  வருந்தினீர்களா ? இல்லை  முதலமைச்சரான போது  பாராட்டு  தெரிவித்தீர்களா ?

4. நீங்கள் அப்பல்லோ  சென்று  பார்க்க  முயற்சித்தீர்களா ? இல்லை  உங்களை  விட  மறுத்தார்களா ? அதற்காக  உங்களது  எதிர்ப்பை பதிவு செய்திர்களா ?

திரும்ப  மத்திய  அரசிற்கு  வருவோம் .

5. அப்பல்லோ  மருத்துவ  மனைக்கு  சென்ற வர்களில் மத்திய  அரசு  பிரதிநிதியான  கவர்னர் ? கவர்னர்  அவர்களை  தடுக்கும்  அளவுக்கு  சசிகலா  அம்மையாரோ , டாக்டர்  ரெட்டி யோ  வலிமை யானவர்களா இல்லை  அதிகாரம்  படைத்தவர்களா ? இல்லை டாக்டர் பார்க்க  கூடாது   என்று  சொல்வதை  நம்பி  வர கூடியவர்களா ? 

6. இன்னொருவர்  வெங்கையா நாயுடு , முதல்வரை  நண்பர்  என்று  அழைக்க  கூடியவர் . சில  முறை  அப்போலோ வந்த  அவருக்கு நண்பர் சிகிச்சையை  கேட்க அக்கறை மற்றும்  பொறுப்பு  இல்லாதவரா ? 

7. இந்தியா  பிரதமரிடம்  ஐபி,சிபிஐ , போன்ற  வலிமையான  திறமையான  ஏஜென்சிகள்  உள்ளன .. நாட்டில் நடக்கும் சிறு  சிறு  சம்பவங்களுக்கு உளவு  துறை  அறிக்கை  பிரதமரிடம்  அளிக்கும் ..75 நாட்களாக  ஒரு  மாநில முதல்வர் மருத்துவமனையில்  உள்ளார் , அவரது உடல்  நிலை  பற்றி  அறிக்கை கேட்காதவரா  நமது  பிரதமர்? அல்லது   அப்பலோ  கேட் வாசலை  எட்டி கூட பாக்க  முடியாததா நமது  உளவுத்துறை ?\


8)  12 முறை  அப்போலோ  அறிக்கை  அளித்ததே, நீங்கள் அதை படித்தது உண்டா ?   அதை ஒரு முறையாவது பார்த்து  அதிருப்தி  நீங்கள்  தெரிவித்தது உண்டா ?

9)  2014  கர்நாடக  சிறைச்சாலை க்கு  பிறகு , முதல்வர்  உடல்நிலை பற்றி பல  செய்தி தாள்களிலும் , ஊடகங்களிம் செய்திகள் வந்ததே , நீங்கள் படிக்கவில்லையா ?  

10) முதல்வர்  அவர்கள் பொதுவானவர்தான் ,ஆனால்  அவர்  அனுமதி இல்லாமல் அவரது  சிகிச்சை  பெறும் புகை படங்களையும் வெளியிடுவது எப்படி உரிமையாகும்?

11, நீங்கள்  கேட்கும்  அத்தனை  கேள்விகளுக்கும்  இந்திய பிரதமருக்கு விடை  தெரியும் , அத்தனை  சர்வ  வல்லமை  மற்றும்  அதிகாரம்  உடையவர் .  எதுவும்  தெரியாமல்  விமானம்  ஏறி  வந்து தோள் தட்டி ஆறுதல்  சொல்லி செல்லும் அப்பாவியும் அல்ல பிரதமர்?

ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் , கோடம்பாக்கத்தில் இருந்து கிளம்பும் எல்லாரும் ஜெயலலிதா ஆகி விட  முடியாது ?

நட்புடன் 
தமிழன் 

குறிப்பு :- ஊர் பெயரை மறக்காமல் வைத்திருக்கும் உங்களிடம் மாநிலத்தை பற்றியோ ,ஜாதி பற்றியோ நான்  கேட்க மாட்டேன் .





வியாழன், 8 டிசம்பர், 2016

அம்மாவிற்கு பிறகு ? தலைவர்கள் உண்டா அதிமுக வில் ?


அதிமுக  மக்களுக்கான  இயக்கம் , மக்கள்  நலனுக்காக  சிந்திக்கும்  தலைவியை  கொண்ட  இயக்கம் , எனக்கு  பின்னாலும்  இந்த  இயக்கம்  நூறு  ஆண்டுகள்  நிலை  பெற்றிருக்கும் .. புரட்சி  தலைவி  அம்மாவின்  ஜனவரி  2016 சட்டமன்ற  உரை ... உத்தமர்  வாக்கு  வேதம்  ஆகும் , வேதா நிலைய உத்தம  தலைவியின்  வாக்கும்  வேதம் ஆகும் . நாளைய  சரித்திரம்  அதை நிரூபிக்கும் .

 புரட்சி தலைவி , புரட்சி  தலைவர்  போன்றவர்கள்  இயற்கையான  ஆளுமை  திறன்  கொண்டவர்கள். அத்தகைய  தலைவர்களின்  இடத்தை  நிரப்புவது இமய மலையில்  ஏறுவது  போல கடுமையானது அல்ல  அதை விட  கடுமையாக  இமைய மலையை  முதுகில்  வைத்து மலை  ஏறுவது  போன்றது,.

ஆனாலும் , சில  தலைவர்கள்  பிறப்பால்  ஆளுமை  திறன்  இல்லாவிட்டாலும் , தங்களது உழைப்பாலும் , அனுபவத்தாலும்  மற்றும்  நிர்வாக  திறன் மூலமாகவும் மிக சிறந்த  தலைவர்களாகி  உள்ளனர் ...
உதாரணமாக  நமது  அண்டை  மாநிலமான  ஆந்திரா , அதுவும் தமிழகத்தை  போல   சம உணர்வுகளை  பிரதிபலிக்க  கூடியது  .. NTR  என்னும்  மிக பெரிய பிம்பத்தின் அரசாங்கத்தை குறுக்கு  வழியில் கைப்பற்றினாலும் தனது  நிர்வாக திறமையினால் சந்திர பாபு  நாயுடு மிக  பெரிய  தலைவராக  உருவெடுத்தார். காங்கிரஸ், காந்தி குடும்பம்  என்னும்  துணையோடு  முன் வைக்கப்பட்ட ராஜ சேகர ரெட்டி  தனது நிர்வாக திறன் மூலம் மிக பெரிய தலைவராக வாழந்த பிறகும்  நேசிக்கப்படும்  தலைவரானார் .



அது  போல  புரட்சி  தலைவி அம்மாவிடமும் , புரட்சி  தலைவியிடமும்  நிர்வாகம் பயின்றவர்கள்  நமது  கழகத்தில்  உள்ளனர் . இப்போது நமக்கு  தேவை  பொறுமை . ஒரே நாளில்  மிக  பெரிய  தலைவர்கள் உருவெடுத்து  விட  மாட்டார்கள் . சில  குறைகள் இருக்கும் , அனுபவத்தில்  குறை  களைந்து  நிறைவடைவார்கள். நமக்கு  இன்னும்  4 1/2 ஆண்டு  காலம்  இருக்கிறது , மிக  சிறந்த நிர்வாகம் , ஆட்சியை தருவதன் மூலம்  மக்களை  சந்திக்கலாம் அதுற்கும் மேலாக  நமது  புரட்சி  தலைவி மற்றும்  தலைவரின்  ஆசி  இருக்கிறது.

நம்முடைய  எதிரிகள் நம்மை வீழ்த்தும்  அளவுக்கு   விட வலிமையானவர்கள் அல்ல நம்மை நம்மை  நாமே  வீழ்த்தி கொண்டால்  தான்  உண்டு .

  அரசாங்கம்  இல்லாத  போதே , ஆண்டவன்  எங்ககிட்ட  இருக்கான்  என்று  வேலை பார்த்த  இயக்கம் இது  . இன்று  அரசாங்கமும்  இருக்கிறது ,ஆண்டவனும்  இருக்கிறான் .. இப்போதைய  நம்முடைய ஒரே   தேவை  பொறுமை , புதிய  தலைமை  மீது  நம்பிக்கை .

நமது  வெற்றியை  நாளை  சரித்திரம்  சொல்லும் , இப்படை  தோற்கின்  எப்படை  வெல்லும்  என்னும்  புரட்சி தலைவரின் வார்த்தைகளை  உண்மையாக்குவோம்

புதன், 7 டிசம்பர், 2016

அம்மாவிற்கு பின் ? என்ன செய்ய வேண்டும் அதிமுக ?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு , இல்லையனில்   அனைவருக்கும் தாழ்வு.

காட்டில் ஒரு பசு கன்றுகுட்டிகளுடன் வசித்து வந்தது. தாய் பசு பல ஒநாய்கள் , காட்டு மிருகங்களிடம் இருந்து கன்று குட்டிகளை காத்து வளர்த்தது.. கன்று குட்டிகள் அச்சம், கவலையின்றி, எதிர்காலத்தை பற்றி எந்த பயமும் இல்லாமல் விளையாடின... ஒரு நாள் அந்த தாய் பசு  திடிரென இயற்க்கை எய்தியது. இனிமேல் தான் கன்று குட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டி வரும்.. இனி பல்வேறு ஒநாய்கள் வரும்.. கன்று குட்டிகள் ஒன்றாக இருந்தால் வேட்டையாட முடியாது என்று ஒவ்வொன்றாக ஆசை காட்டி , கருத்து வேறுபாடுகளை உருவாக்கி வேட்டையாட முயற்ச்சிக்கும்... ஒன்றாம் வகுப்பு கதை தான்.. ஆனாலும் இன்றைய சூழ்நிலைக்கு தேவையான கதை.....

 வலுவான தமிழிகத்திற்கு வலுவான அதிமுக தேவை... நாளை மதவாத, குடும்ப கட்சி,சாதிய கட்சிகளிடம் இருந்தும், கோடம்பாக்கத்தில் இருந்து நாட்டை ஆள கனவு காணுபவர்களிடம் இருந்தும்  இந்த மண்ணை காபாற்ற வேண்டும்...   அதற்கு இந்த இயக்கம் இன்றி அமையாதது.

அதிமுக தேவர், கவுண்டர், வன்னியர், தாழ்த்தபட்டவர் என எந்த ஒரு ஜாதிக்கான இயக்கம் அல்ல.. சமானியனையும் அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக அழுகு பார்த்த இயக்கம்.... புரட்சி தலைவரால் உருவாக்க பட்டு, புரட்சி தலைவியால் வலு பெற்ற இயக்கம்.
இரட்டை இலை சின்னம் மகத்தான பல வெற்றிகளை கண்ட சின்னம்... வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும் , இன்னும்  ஒரு 1989 நமக்கு தேவையில்லை....
இன்று நீ பெரியவனா? நான் பெரியவனா? என்பதை விட அம்மா  மற்றும் புரட்சித் தலைவர் அவர்களின் லட்சியம் மற்றும் கனவுகள் பெரியவை..
நல்லதே நடக்கும் என நம்புங்கள்.. உங்களை தேடி வாய்ப்புக்கள் வரும்..

அம்மா நம்மிடம் விட்டு சென்றவை
- 4  1/2 ஆண்டு ஆட்சி காலம்
-  136 சட்டமன்ற உறுப்பினர்கள்
- 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
– 1.5 கோடி உறுப்பினர்கள் உள்ள இயக்கம்
- 8 கோடி தமிழர்களுக்கு இயக்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று அவரது கனவுகளையும், லட்சியங்களையும்  நிறைவேற்ற  பாடுபட உறுதி ஏற்போம்.

புதன், 30 நவம்பர், 2016

மகளதிகாரம் & எதிர்பார்ப்பு இல்லாத நட்பு

பார்த்து பார்த்து என்ன தான் மனைவி செய்தாலும் அம்மாவுக்கு மாற்றாக  முடிவதில்லை.... நமக்கு சிறிது உடல் நிலை சரி இல்லை என்றால் சிறிது புருவம் சுருக்கி கவலையுடன்  என்னாச்சுப்பா உஙகளுக்கு?ன்னு கேட்கும் சில நொடிகள் மகள் அம்மாவுக்கு மாற்றாகிறாள்- மகளதிகாரம் - 1

 மனைவி சிறிது  தாமதமானாலும் கோபப்படுவார்கள், அவசரமாக விமானத்தை பிடிக்க கிளம்பினாலும் எனக்கு இந்த பொட்டு, இந்த செருப்பு தான் வேணும் என்று அடம் பிடிக்கும் மகளிடம் செல்லுப்படியாகாது கோபம்-  மகளதிகாரம் -2

திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து பிறந்த வீட்டுக்கு வரும் பொழுது கூட, அப்பா பேத்தியை கொஞ்சும் போது மகளுக்கு வரும் ஒரு சின்ன பொறாமை- மகளதிகாரம் - 3

 இந்த உலகத்தில் கிடைப்பதற்கு அரியது எது?

 எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத நட்பும், உறவுகளும்...
உங்களுக்கு அத்தகைய நட்பும் , உறவுகளும் உங்களுக்கு  இருந்தால் எப்பொழுதும்  இழந்து விடாதிர்கள்....
நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு செலுத்தும் நபராக நீங்கள் இருந்தால்  எப்பொழதும் மாறி விடாதிர்கள்.உங்களை போன்ற சிலரால் தான் கொஞ்ச மழையும் பெய்கிறது.

வியாழன், 24 நவம்பர், 2016

பொருளாதார நெருக்கடி நிலை, முடங்கிய தேசம் - 2

கதை - 1
ஊரில் ஒரு கொலை நடந்து  விடுகிறது...  குற்றவாளியை புலனாய்வு செய்து கண்டு பிடிக்காமல் ஒரு போலிஸ் அதிகாரி ஊரில் உள்ள அனைவரையும் கட்டி வைத்து உதைத்து உண்மையை வரை வைக்க முடிவு செய்கிறார்.. அவரை  நாம் திறமையான அதிகாரி என்று பாராட்டுவோமா?
கதை-2
         நகரில் உள்ள வங்கியில்10 ரூபாய் கட்டாக ஆயிரம் ருபாய் திருட்டு போய் விட்டது. . திருடியவன் வெளியூர் சென்று அந்த ஆயிரம் ருபாயை நூறு ருபாயாக மாற்றி  விட்டான். காவல்துறை வந்தது திருட்டு  போனது 10 ரூபாய் நோட்டுகள் ,,அந்த நகரத்தில் உள்ள 1 லட்சம் பேரும் தங்களிடம் உள்ள 10 ருபாய் நோட்டை கொண்டு வந்து வங்கியில் காண்பித்து தாங்கள் திருடவில்லை என்று நிருபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.... இவரை நாம் பாராட்ட வேண்டுமா?      
இரண்டு  கதைக்கும் நீங்கள் வங்கி வரிசையில் நிற்பதற்குமோ, இரன்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லரை இல்லாமல் அலைவதற்கும்  சம்பந்தம் இருப்பதாக தோன்றினால் நான் பொறுப்பல்ல...

வியாழன், 17 நவம்பர், 2016

தஞ்சாவூர் வாக்காளர்கள் கவனத்திற்கு


தஞ்சாவூர் வாக்காளர்கள்  கவனத்திற்கு

 புரட்சி  தலைவர் MGR  அவர்கள் காலத்தில்தான்  தமிழ்  பல்கலைக்கழகம்  ஆரம்பிக்கப்பட்டது . நகரத்தின்  வளர்ச்சி புற  நகருக்கு தொடங்கியது  அப்பொழுது தான் ,

பிறகு, 1991-1996 ல்  அதிமுக  ஆட்சி  காலத்தில் , மறைந்த முன்னாள்  அமைச்சர்   SDS  அவர்கள்  சட்ட  மன்ற  உறுப்பினராக  இருந்த  காலத்தில் , மாண்புமிகு புரட்சி தலைவி  அம்மா அவர்கள்  முதல்வராக  இருந்த உலக  தமிழ்  மாநாட்டின் பொழுது புதிய பேருந்து நிலையம், புற நகர்  சாலை போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் வந்தது .

1992 உலக  தமிழ்  மாநாடு , திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக  உலக தமிழாய்வு நிறுவன அனுமதி  இல்லாமல் நடத்திய குடும்ப மாநாடாக இல்லாமல் கற்றறிந்த தமிழறிஞர் நெபுரு கோரோஷிமா தலைமையில் தமிழ் வளர்ச்சி  மாநாடாக இருந்தது . தமிழுடன் சேர்ந்து தஞ்சையும் வளர்ந்தது.

1996 க்கு  பிறகு , வெற்றி பெற்ற  திமுக  தஞ்சாவூர் எங்கள்  கோட்டை
என்று  பெருமை  பட்டு கொண்டது , கோட்டை என்று  சொன்னவர்கள்  கோட்டையையை  வளபடுத்தினார்களா இல்லை ,
மத்திய , மற்றும் மாநில  அமைச்சர்கள் ஆக  இருந்தவர்கள் தங்களை சிற்றசர்களாகவும் , பேரரசர்கள் ஆகவும் எண்ணி கொண்டு  தங்களை வளபடுத்தி  கொண்டார்களே தவிர தஞ்சை நகரம் புறக்கணிக்கபட்டது   .

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு  பிறகு , புரட்சி  தலைவியின் ஆசியிடன் தஞ்சை  சட்டமன்ற தொகுதியை கைபற்றிய அதிமுக , பிறகு  தஞ்சை நாடளுமன்ற தொகுதி , நகர சபை அனைத்தையும் கைப்பற்றியது.  பிறகு மீண்டும்  வளர்ச்சி  பாதையில் தஞ்சை நகரம் திரும்பியது .  புரட்சி  தலைவி  அம்மாவின் ஆசியுடன் , சட்ட மன்ற உறுப்பினர்  திரு ரெங்கசாமி  உழைப்பினால் எண்ணற்ற  திட்டங்கள்  தஞ்சை  தொகுதிக்கு வர தொடங்கியது.

 1. தஞ்சை  நகரம் மாநகராட்சி  ஆகியது .
 2. பல் வேறு மேம்பாலங்கள்  கட்ட பட்டன .
  3. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , புதிய காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் , ஒன்றுபட்ட நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டன .
 4.(RING ROAD ) சுற்று  சாலை திட்டம்
 5. அரசு மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை பிரிவு
 6. உயர் தர  மருத்துவமனை  (AIMS  )தஞ்சைக்கு அருகில் அனுமதி
 7. தரமான சாலைகள்
 8. பல்வேறு  கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்

இன்னும் பல நல்ல திட்டங்கள் ...

திமுக :-
முன்னாள் மத்திய மாநில அமைச்சர்கள் போன்ற பழைய முகங்களை கட்டினால் தஞ்சை மக்கள் வெறுப்படைந்து புறக்கணிப்பார்கள் என்று தெரிந்த திமுக விற்கு  கிடைத்த முகமூடிதான் இப்போதைய திமுக வேட்பாளர் .. வெற்றி பெற்றால்  இந்த வேட்பாளர்  திமுக மாவட்ட செயலாளர் , முன்னாள் மத்திய  அமைச்சர் , முன்னாள் மாநில அமைச்சர் போன்ற  திமுக  அதிகார மையங்களுக்கு  எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பாரே ஒழிய தஞ்சை மக்களுக்கு நல்ல சட்ட மன்ற  உறுப்பினராக இருக்க முடியாது.

தஞ்சை மக்களின்  வாழ்வாதாரம் காவிரி நதி .. 1970களில் சர்காரியா கமிஷன் க்கு  பயந்து காவிரியின் தமிழக  உரிமையை கை விட்டார். மீத்தேன்  திட்டத்திற்கு அனுமதி  அளித்து  டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக முயற்சித்தார் . அதிகாரம்  கையில் இருந்த  பொழுது , மகன் ,மருமகனுக்கு பதவி வாங்கினார்களே ஒழிய காவிரி  நடுவர் மன்ற  தீர்ப்பை அரசிதழில் வெளியிட முயற்சி செய்ய வில்லை.

திமுக  வேட்பாளருக்கு  வாக்களித்தால்  தஞ்சை மக்களுக்கு பாம்பே ஸ்வீட்ஸ்  மைசூர் பாக்கு வேண்டுமானால் கிடைக்கும் , மைசூரில்  இருந்து காவிரி  தண்ணீர்  கிடைக்காது.

புரட்சி  தலைவி  அம்மாவின் சட்ட  போராட்டத்தினால் காவிரி  நடுவர்மன்ற  இறுதி  தீர்ப்பு   அரசிதழில் வெளியிட பட்டது.  மேலும் பூரண நலம் பெற்று  வரும் புரட்சி  தலைவியின்  அம்மாவின் முயற்சியினால் காவேரி மேலாண்மை வாரியம்  அமையும் .



சிந்திப்பீர் , வாக்களிப்பீர்





செவ்வாய், 15 நவம்பர், 2016

மூட்டை பூச்சிக்காக வீட்டை கொழுத்திய மத்திய அரசு



ஹிட்லர் அவர்கள்  எதை செய்தாலும் நாட்டுபற்று  என்ற பெயரால் மக்களிடம்  திணித்து  விடுவார் . அது தான்  இன்று  இந்த  நாட்டிலும்  நடந்து  கொண்டு இருக்கிறது .

பெரும்பாலோர்  நினைப்பது  போல்  பெரும்  கோடீஸ்வரர்கள்  யாரும்  கருப்பு பணத்தை  பணமாக  வைத்து  கொண்டு அலைவதில்லை  பெரும்பாலும்  ரியல்  எஸ்டேட் முதலீடுகளும், போலி நிறுவனங்கள் , பினாமி , தங்கம் ,வெளி நாட்டு  வங்கி , இது போக  10% பணமாக  வேண்டுமானால்  வைத்து  இருக்கலாம் . 

கோடி கணக்கில்  வராத கடனை   வைத்து  இருக்கும்  நிறுவனங்களிடம்  வசூலிக்க  வக்கில்லாத  அரசு , சிறு  வணிகர்கள் , அன்றாடம்  காய்ச்சிகள் , விவசாயிகள் , கூலி  தொழிலாளிகளை வேலையை  விட்டு  வாங்கி  வாசலில்  காத்து  இருக்க  வைத்துள்ளது.

 தண்ணீரில்  தத்தளிப்பவனை  பார்த்து  கரையில்  இருப்பவன்  எனக்கும்  தான்  நீச்சல்  தெரியாது  நான்  கவலை படுகிறேனா என்று  கேட்பதை  போல்  உள்ளது  பெரு  நகரங்களில் எலக்டீரானிக் பணத்தை உபோயோகிக்கும் மக்கள் சமூக  வலைத்தளங்களில்   தினசரி 1000,500 பண பரிமாற்றம் செய்வபர்கள் ,வங்கி  வாசலில் வரிசையில்  நிற்பதை பார்த்து  கேட்பது .
 நாட்களில்  சரியாகி  வீடும்  என்றார்கள் , இன்றும் வரிசைகள் அதிகரித்து கொண்டு தான்  உள்ளது, வரிசையில் நின்று கடைசியில் 2000 ரூபாய்  நோட்டை  தருவதை  போன்ற  முட்டாள் தனம்  எதுவும்  இருப்பதாக  தெரியவில்லை . 2000 நோட்டை வைத்து கொண்டு  100 200 கு பொருள்  வாங்க வழியில்லை . 500 ,1000 நோட்டுகள்  இல்லாத  நிலையில்  2000 நோட்டுகள் இருந்தும்  இல்லாதது  போன்றுதான்.

 வாரம்  20 ஆயிரம்  ரூபாய் மட்டுமே  எடுக்க  முடியும்  ,4 ஆயிரம்  வரை மட்டுமே மாற்ற  முடியும் என்கிற  போது திரும்ப திரும்ப கூட்டம்  இருந்து  கொண்டுதான் இருக்கிறது 

பெரும் பணக்காரர்கள்  யாரும் மாட்டியதாக தகவல் இல்லை , தாங்கள  5000 கோடி  சூரத் தில் சிக்கியது , 500 கோடி  மதுரையில்  சிக்கியது என்று தான் வதந்தி  கிளப்பி கொண்டு இருக்கிறார்கள் .


இதன்  மூலம்  சில  லட்சங்கள்முதல்  1 முதல் 2 கோடி கருப்பு பணம்   வைத்து  இருக்கும் சில சின்ன  மீன்கள்  அகப்படும் , பெரிய திமிங்கிலங்கள் எதுவும்  அகப்படாது.


முட்டை  பூச்சிக்காக  வீட்டை  கொழுத்தியதை போல் , ஒரு தேசத்தை வார கணக்கில் முடக்கி போட்டு , கோடி களில் உற்பத்தியை தடுத்து , சில  கோடி , கருப்பு பணத்தையும் கள்ள நோட்டுகளையும் கைப்பற்றி பெருமை பட்டு கொள்ள வேண்டியது  தான்.

சிபிஐ ,ரா , போலீஸ் , இன்டெலிஜென்ஸ் என்று பல அரசாங்க நிறுவனங்களை வைத்து  கொண்டு  கள்ள  நோட்டை  தடுக்க முடியவில்லை என்று தாங்கள்  அடித்த  பணத்தை  தாங்களே செல்லாது என்று  அறிவிப்பதை பெருமையாக அரசாங்கம் கருதுவது  ஒரு  வெட்க கேடு. 

நாமும்  பாரத் மாதா கி ஜே  என்று  சொல்லி   தினமும் வங்கி வாசலில் வரிசையில்  நிற்பதை  அன்றாட வழக்கமாகி கொள்ளவோம்.


செவ்வாய், 25 அக்டோபர், 2016

கடவுளின் FACEBOOK ப்ரொபைல் பிக்ச்சரும் , இளைஞனின் வருத்தமும்

இன்றைய  தலைமுறை இளைஞன்  ஒருவன் கடவுளின்  பெயரால்  நடக்கும்  வன்முறை  மற்றும்  உயிர் பலிகளால்   கடவுள்  மீது  மிகுந்த  வருத்தத்தில்  இருந்தான். கடவுள் உலகத்தை  இன்னும் நனறாக வைத்து  இருக்கலாமே  என்றும்  தோன்றியது.

ஒருநாள் அவனுக்கு  முன்பு  கடவுள் தோன்றினார் . உடனே கடவுளிடம் " என் உங்களது   பெயரால்  இவ்வளவு வன்முறை , உயிர்பலி .   மனிதர்களுக்கு உங்களால் நன்மையை  போதித்து நல்வழிப்படுத்த முடியவில்லையா" என்று  கேட்டான்.

கடவுள்  அதற்கு " மகனே  ." நீ  உனது  FACEBOOK  ப்ரொபைல் பிக்ச்சரை  மாற்றினால் அதற்கு  எத்தனை லைக்ஸ் , கமெண்ட்ஸ்  கிடைக்கிறது  என்று  கேட்டார்  . அதற்கு  இளைஞன்  " பல   நூறு லைக்ஸ்   மற்றும்  கமெண்ட்ஸ் " .
கடவுள் " அதுவே நீ  ஒரு  கருத்து  பதிவு  செய்தால்  எத்தனை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கிடைக்கிறது  என்று  கேட்டார் . அதற்கு  இளைஞன்  " பத்து ,பதினைந்து லைக்ஸ் மற்றும்  கமெண்ட்ஸ் .

கடவுள்  " இதையேதான் உனது முன்னோர்களும்  செய்தனர். நான்  சொன்ன  கருத்துக்களை  எல்லாம்  விட்டு   விட்டு , எனது பெயரையும் , ப்ரொபைல் பிட்ச்சரையும் மட்டும்  வைத்து இருக்கிறார்கள் இதற்கு நான்  எவ்வாறு  பொறுப்பேற்க  முடியும் என்று கேட்டார்.

இளைஞன்  அதற்கு  பிறகு  கடவுள் மீது  வருத்த படுவதை  விட்டு விட்டான் .

கடவுள் நம்மளை  காப்பாற்றுவார் , கடவுளை  நாம்  காப்பற்ற வேண்டாம் . அவருக்காக நாம் வன்முறையில்  ஈடுபட வேண்டுமா?


புதன், 19 அக்டோபர், 2016

திரைப்படங்களை எதிர்க்கும் போராட்டங்கள் -நகைச்சுவை பதிவு


நீண்ட  காலமாக நீங்கள்  அரசியலில்  இருக்கிறீர்கள் , சிறு  இயக்கமோ ,  சிறு சாதி  சங்கமோ   நடத்தி  வருகிறீர்கள் ஆனாலும்  உங்களை உங்கள்  வட்டாரத்தை  தாண்டி  வெளியே தெரிய வில்லையா ?
உங்களுக்கு   திரைப்பட  எதிர்ப்பு  போராட்டங்கள்  கை  கொடுக்கும். 

1 . முதலில்  மீடியா , நீங்கள்  உங்கள்  ஊரின்  குடிநீருக்கோ , சாலை  வசதிக்கோ  போராடினால் , நான்காம்  பக்கத்தில்  2 பத்தியில்  செய்தி வெளி வரும்  திரைப்படத்திற்கு  எதிராக  போராடினால்  4 தொலைக்காட்சி  கேமரா  நேரடி  ஒளிபரப்பு.4 தொலைக்காட்சி  விவாதங்களில்   பங்கேற்க அழைப்பு , முதல்  பக்கத்தில்  செய்தி. இதை  விட வேற  என்ன  வேண்டும்?  சும்மா  காவேரி  போராட்டத்துக்கு  நீங்க  கூப்பிட்டால்   கூட  வராதவன்  எல்லாம்  சினிமா  போராட்டத்துக்கு  வந்து  விடுவான் .

2.. எப்படி  எல்லாம்  சினிமாவை  வம்புக்கு   இழுக்கலாம் .
    1.  இந்த  நாட்டுகாரன் நடித்து  உள்ளான் .அந்த  மாநில  நடிகன், நடிகை  நடித்து  உள்ளார்கள். 
    2. இந்த  மாநில  மொழி படம் , அந்த  மாநிலத்தோட  நமக்கு  வாய்க்கால் தகராறு 
    3.  எனது ஜாதிக்கு எதிரான படம் , எனது  சாமி யை  தவறாக  காண்பிக்கிறார்கள் 
   4. பெண்களுக்கு  எதிரான  படம். 
   5. அந்த நடிகர்  போன மாதம் தப்பா  பேசினார் . அவருக்காக  படத்தை எதிர்ப்போம் .
சென்சார்  என்று  ஒன்று  இருப்பதை  மறந்து  விட்டு  நாம  கத்திரி கோலை எடுத்து கொண்டு கிளம்ப  வேண்டும்.

3, எங்களுக்கு  காட்டி  விட்டுத்தான்  படத்தை  வெளியிட  வேண்டும் என்று சொல்லுங்கள் . எதுவம்  கிடைக்காட்டி அடலீஸ்ட்  பத்து  ஓசி  டிக்கெட்  படம்  வெளி வரும் முன்  கிடைக்கிறது என்று  சந்தோச பட்டு  கொள்ளலாமே.

4. பூஜை  ஆரம்பிக்கும்  போதோ , பட பிடிப்பு நடக்கும் போதோ  போராட்டம்  நடத்தி  விடாதீர்கள் . அப்போது  ஒரு  அறிக்கை மட்டும்  வெளியிட்டு அமைதியாய்  இருங்கள்.

5. இப்போ  எல்லாம்  ட்ரெயின் , பஸ் நிறுத்தி  போராடறது  அவுட் ஒப்பி பேஷன்  , சினிமா  தியேட்டர் முன்னாடயோ   அல்லது  flexboard , கட் அவுட் டையோ  கிழித்தால்  அதிகம்   விளம்பரம் பெறலாம் .

6. ஓரளவு  பிரபலமான  நடிகர்  படத்தையே  எதிர்க்க  வேண்டும் , சும்மா அறிமுக  நடிகர்  படத்தை  எதிர்த்தால் ஒருத்தனும்  சீண்ட மாட்டான்.

6. டிவி விவாதத்துக்கு  கூப்பிட்டால்  உணர்ச்சி  வசப்பட்டு  கெட்ட  வார்த்தையில்  திட்டி  விடுங்கள்  அப்றம் மன்னிப்பு கேட்டுக்கலாம்.

7. முடிந்தால்  திரைப்பட  தயாரிப்பாளர்களோட விளம்பரத்திற்காக  மறைமுக  ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். ஆனால்  இதில்  படம்  வெளியிடுவதற்கு  முன்  சமாதானம்  அடைந்து  விடுங்கள்.

8.  ரொம்ப  முக்கியமானது , யாரு  படத்துடைய  தயாரிப்பாளர் , விநியோக  உரிமை , ஒளிபரப்பு  உரிமை எல்லாம்  யாரு  வாங்கி  உள்ளார்கள் என்று  பார்த்து  போராடுங்கள் இல்லாவிட்டால் டின் கட்டி  விடுவார்கள் .








செவ்வாய், 18 அக்டோபர், 2016

நகைச்சுவை:- மனைவியை சமாளிக்க முயன்றவரின் கதை?

பழங்காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த, புகழ் பெற்ற  முனிவர் ஒருவர் இருந்தார். அவரிடம் மிகப் பெரிய மன்னர்களும் அறிவுரை கேட்டு செல்வார்கள். அப்பேர்பட்ட முனிவருக்கு ஒரு சிறிய கவலை இருந்தது. என்ன தான் செயற்கரிய செயலை செய்தாலும் அவரது மனைவி சிறு சிறு குறைகளை கண்டு பிடித்து விடுவார். சின்ன சின்ன சண்டைகளும் அதனால் வந்து கொண்டு இருந்தது. அவரது சக்திகள் அனைத்தும் மனைவி 2 சொட்டு கண்ணீர் முன்பு செயல் இழந்து விடும்.
ஒரு நாள் சரி கடவுளிடமே கேட்டு விடலாம் என்று முடிவெடுத்து கடவுளிடம் சென்று அவரிடம் ஆலோசனை கேட்பதற்கு வந்ததாக கூறினார்.  கடவுளும் இவரை வரவேற்று வரவேற்பரையில் அமர செய்து விட்டு அடுப்படி சென்று மனைவியிடம் உணவுக்கு ஏற்பாடு செய்ய சொல்ல சென்றார்.
முனிவருக்கு கடவுளும், கடவுளின் மனைவியும் என்ன தான் பேசுகிறார்கள் என்று ஆர்வம் கொண்டு தன் சக்தியை பயன் படுத்தி கேட்க ஆரம்பித்தார்
கடவுளின் மனைவி " நீங்க இப்ப என்ன சாதிச்சுடிங்கன்னு உங்கள் ட இந்த முனிவர் ஆலோசனை கேட்க வந்து இருக்கிறார்"
இதை கேட்ட முனிவர் கடவுளுக்கே இப்படின்னா நாம எம்மாத்திரம்?  என்று முற்றும் தெளிந்தவராக நடையை கட்டினார்.

பின் குறிப்பு:-
இந்த கதை முழுவதும் கற்பனையே.. இது என்னுடைய, மற்றும் நமது நண்பர்கள் யாருடைய  வாழ்க்கை சம்பவங்களுக்கும் தொடர்பு கிடையாது.அப்படி எதுவும் உங்களுக்கு தோன்றினால் அதுக்கு யாரும் பொறுப்பல்ல.

செவ்வாய், 4 அக்டோபர், 2016

காவிரி நீரும், கையாலாகாத மத்திய அரசும்

...

 கிராமத்தில் பரம்பரை சொத்தை  பங்கு பிரிக்கும் பொழுது வீம்பு பிடித்த  போக்கிரி சகோதரன் "உரிமைன்னு கேட்டின்னா ஒன்னும் தர முடியாது, வேனும்னா  என்னுட்ட வந்து கெஞ்சி கேளு நானா பாத்து போனா போகுதுன்னு எதாவது தருவேன்ன்னு " சொல்றான் .. பஞ்சாயத்துக்கு ஊர் பெரிய மனிதர்களிடம் சாதுவான மற்றொரு சகோதரன் போனா, ஊர் பெரியவர்கள் போக்கிரி சகோதரனுக்கு பயந்து " அவன் தான் நீ கெஞ்சி கேட்டா பரிதாபபட்டு எதாவது தருகிறேன்னு  சொல்றான்ல பேசாம நீ அவனிடமே போய் கெஞ்சு என்று அறிவுரை வழங்கினார்கள்... அதுதான் காவிரி பிரச்சனையில் தற்பொழது நடத்து கொண்டு இருக்கிறது கர்நாடக அரசியல்வாதிகளின் போக்கிரி தனத்திற்கு கையாலாகாத மத்திய அரசும் துணை போய் மீண்டும் தமிழகத்தை பேச்சு வார்த்தை பிச்சை எடுக்க சொல்கிறது  . . பேச்சுவார்த்தைக்கு  திரும்ப போனா மைசூர் பாக்கும்,மைசூர் போண்டாவும் வேணா கிடைக்கும் காவிரி நீர் கிடைக்காது...

புதன், 28 செப்டம்பர், 2016

டிவியும்,நானும் - 30 ஆண்டு கால பயணம்


இப்போது  ஜியோ மொபைல் 4ஜியில் 200க்கும் மேற்பட்ட  சேனல் களை பார்க்கும் பொழுது, 30 ஆண்டுகளுக்கு முன்பு டிவி நமக்கு  எவ்வளவு  ஒரு பெரிய விஷயமாக இருந்தது என்று யோசித்தபோது,


                                        Image result for 80s tv
                                                     


இந்தியாவில் டிவி  65களில் தொடங்கியதாக  சொல்லப்பட்டாலும், எங்கள் ஊருக்கு எல்லாம்  டிவி வர ஆரம்பித்தது 80களின்                            முற்பகுதியில் தான். முதன்  முதலாக நான் டிவியை  பார்த்தது  இந்திரா  காந்தி  சுட்டு  கொல்லபட்ட போது,  அவரது  இறுதி  சடங்கு  நிகழ்ச்சியை ஒளிபரப்பிய போது , ஊரில் உள்ள டாக்டர் ஒருவர் வீட்டில்  கண்ணீரும்  கம்பலையுமாக பார்த்தேன்.
 அப்போது  பெரும்பாலும்  கருப்பு  வெள்ளை  டிவிகள்தான்  இன்று  ஐ  போன்7 வைத்து  இருப்பது  போல  கலர் டிவி வைத்து  இருப்பவர்கள்  கருதபட்டனர். பள்ளிகளில்  டிவி  உள்ள வீட்டு  பிள்ளைகள்  பணக்கார வீட்டுபிள்ளைகள் ,டிவி இல்லாத வீட்டு பிள்ளைகள்  ஏழை இதுதான் 80களின் இறுதி வரை. டிவி ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல்  .

டிவி கள் மின்சாரத்தை மிகஅதிகமாக இழுக்கும்  என்று கிராமத்து  வீடுகளில்இருந்தவர்கள் நம்பினார்கள்.  அதற்காகவே வெள்ளி  ஒளியும்,ஒலியும் நிகழ்ச்சிக்கு 50 காசும் , ஞாயிறு திரை படத்துக்கு  ஒரு  ரூபாயும்  பக்கத்து  வீட்டு குழந்தைகளிடம் வாங்கும் பழக்கமும்  ஒரு  சிலர் வீட்டில்  இருந்தது.அதே போல்  தொடர்ந்து  டிவி ஓடினால் ரிப்பேர் ஆகி விடும்  இன்று  2 மணி நேரத்துக்கு ஒரு முறை  நிறுத்தி  விசிறி  விட்டவர்களும்  இருந்தனர்.

அப்பறம்  அந்த  டிவி யை  பூட்ட  ஒரு  பெட்டி , இருந்தது ஒரு சேனல் , அதிலும்  முக்கால் வாசி  நேரம் ஹிந்தி  தான் . ஆனாலும் புள்ளைங்க டிவி நெறைய பாக்குது என்று  சொல்லி  பூட்டி  வைத்தனர் .  உண்மையில் அந்த பெட்டியும்   ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் போல.


BCCI இன்று  உலகின்பணக்கார விளையாட்டு அமைப்பாக  இருக்க  காரணம்  இந்த  டிவி பெட்டிதான் ..தூர்தர்ஷன்ல் நேரடி  ஒளிபரப்பு  பார்க்க  மன தைரியமும், கடவுள் அருளும்   வேண்டும் கடைசி ஓவர்  இருக்கும் போது தடங்கலுக்கு வருந்துவார்கள், அதுவும் இல்லாட்டி ,  இவர்கள்  செய்தி  வாசிக்காவிட்டால்  உலகம்  அழிந்து  விடுவது  மாதிரி போட்டியை ஒளிபரப்பாமல் வரதராஜனும், பாத்திமா பாபுவும் வந்து உயிரை  எடுப்பார்கள்.

டிவி பார்பதற்க்காகவே ஹிந்தி  கற்று  கொண்ட பெண்கள்  எங்கள்  உறவுகளில்  இருந்தனர். அவர்கள்தான்  சனி கிழமை  ஹிந்தி படங்களுக்கும் ,ராமாயணம் ,மஹாபாரதம் தொடருக்கும்  எங்களது மொழி  பெயர்ப்பாளர்கள். எனக்கு  அமிதாப்பச்சனை  தவிர  ராஜேஷ்  கண்ணா ,சசி கபூர்,ஷம்மி  போன்ற   ஹிந்தி  ஹீரோக்களும் ஒரே  மாதிரிதான்  தெரிந்தார்கள்.  ஞாயிறு மதியம்  விருது பெற்ற மாநில  மொழி  திரைப்படங்களில் தமிழ் மொழி வருவது ஜாக்பாட்  அடித்த  சந்தோஷம் .

Solidaire ,Dynora ,Onida போன்றவைதான்  மிக சிறந்த  டிவி பிராண்ட் . அதிலும்  மைக்ரோசாப்ட் மாதிரி solidaire   தான் .  ஒனிடா  மொட்டை  தலையன் கொஞ்சம்   ரொம்ப  பிரபலம்  ஆனான் . அப்றம்  கலர்  டிவி நிறைய  வர ஆரம்பித்த போது BPL,Videocon போன்றவையும்  பிரபலம்  ஆனது .

வாங்குனா கலர்  டிவி தான் வாங்கணும்  சொன்ன எங்க அப்பாவும் கடைசியில் 92இல்  ஒரு  கலர்  டிவி வாங்கி தந்தார்.  அன்றைக்கு  நாங்கள் அடைந்த  சந்தோசத்தின் அளவு, இன்றைக்கு எனக்கு  ஒரு கோடி  ரூபாயை  கையில் குடுத்தால் வருமா என்று  தெரியவில்லை. அந்த  டிவியும்  சச்சின்  டெண்டுல்கர் போல்  20 ஆண்டுகள் வேலை செய்து 2012ல்  தான் ரிட்டையர் ஆனது ஆனா போன வருஷம் வாங்குன ஸ்மார்ட் டிவி  இப்போ டிஸ்பிலே சரியா தெரிய மாட்டேங்குது.

அப்றம்  கேபிள் டிவி , சன் டிவி என பல  ஆச்சரியங்கள்  அப்றம்  ஆச்சர்யங்கள்  எல்லாம்   பழகி விட்டது  .

ஆனாலும் சின்ன  வயதில்  ஆச்சர்யத்தை  தந்ததாலோ என்னவோ இப்போதும் சில சமயம்  டிவி  நம்மை  மெய் மறந்து   பார்க்க வைத்து  மனைவியிடம் திட்டு  வாங்க  வைத்து விடுகிறது.










வெள்ளி, 23 செப்டம்பர், 2016

இந்தி எதிர்ப்பு மொழிப் போர் .. சில நினைவுகள்

இந்திய அரசியலமைப்பு மன்றம் திசம்பர் 9, 1946ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. மொழிகளைக் குறித்த விவாதம் இம்மன்றத்தில் தீவிரமாக நடைபெற்றது. அரசியலமைப்பை எந்த மொழியில் எழுதுவது, மன்றத்தின் நடவடிக்கைகள் நடத்தப்படவேண்டிய மொழி, புதிய குடியரசுக்கான “தேசியமொழி” போன்ற விஷயங்கள் மிகவும் சூடாக விவாதிக்கப்பட்டன. ஒரு பக்கம் இந்தி பேசும் மாநிலங்களின் உறுப்பினர்களான அல்கு ராய் சாஸ்திரி, ஆர்.வி. துலேகர், பாலகிருஷ்ண சர்மா, புருசோத்தம் தாஸ் டாண்டன் (ஐக்கிய மாகாணம்), பாபுநாத் குகா (பீகார்), அரி வினாயக் படஸ்கர் (மும்பை), சேத் கோவிந்த் தாஸ் (மத்திய மாகாணம்) ஆகியோர் பல இந்தி ஆதரவு மசோதாக்களைக் கொண்டுவந்து இந்தியை மட்டுமே தேசிய மொழியாகத் தேர்வு செய்ய வாதாடினர்.[30][31] 10 திசம்பர் 1946 அன்று துலேகர் "இந்துஸ்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள். இந்தியாவின் அரசியலமைப்பை முடிவு செய்கின்ற இந்த மன்றத்தில் இருந்துகொண்டு இந்துஸ்தானி அறியாதவர்கள் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளலாம்" என்று முழங்கினார்.

நாம் வேண்டுகின்ற பலமான மைய அரசு, மிகத் தேவையான பலமிக்க மைய அரசு, அவ்வரசு பேசும் மொழி அறியாத மக்களை அடிமைப்படுத்துவதாகவும் மாறுமோ என்று எங்களை அச்சமடையச் செய்கிறது. ஐயா அவர்களே, தென்னிந்தியாவில் ஏற்கெனவே பிரிவினை நாடும் சில சக்திகள் உள்ளன, அவர்களை எதிர்கொள்ள எனது மதிப்பிற்குரிய உத்திரப் பிரதேச நண்பர்கள் தங்களது கூடுதலான "இந்தி ஏகாதிபத்திய" நடவடிக்கைகளால் எந்த உதவியும் ஆற்றவில்லை என்பதை நான், தெற்கு வாழ் மக்களின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன். ஆகவே எனது உத்திரப் பிரதேச நண்பர்கள் ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா, இந்தி-இந்தியா வேண்டுமா என தீர்மானித்துக் கொள்ளட்டும்; தேர்வு அவர்களுடையது என்று பதிலுரைத்தார் TT கிருஷ்ணமாச்சாரி

நன்றி வீக்கிபிடியா தமிழ்

திங்கள், 12 செப்டம்பர், 2016

காவிரியின் பெயரில் வன்முறை... யார் காரணம்?

காவிரி போராட்ட வன்முறையில் ஈடுபடும் யாரையும் பார்த்தால்  விவசாயி மாதிரி தெரியவில்லை.. ஊருக்கு சோறு போடும் விவசாயியின் கை  அடுத்தவர் உடமைகைளை சூறையாடாது,  இந்திய விவசாயி விவசாயம்  பொய்த்ததால் தற்கொலை செய்து கொண்டு உள்ளான் ஆனால் கொள்ளையடித்ததில்லை.. அப்படி செய்து இருந்தால் இந்த தேசமே வன்முறை காடாகி இருக்கும்.  

பேச்சுவார்த்தை மூலம் தண்ணீர் பெற்று இருந்தால் வன்முறை இருந்து இருக்காது என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். பேச்சு வார்த்தை தோற்று தானே தமிழகம் நீதிமன்றத்தை நாட வேண்டி வந்தது.
தமிழ்நாடு அணை கட்டவில்லை என்ற குற்றசாட்டும் தவறானது. தமிழகத்தின் புவியியல் அமைப்பின் படி பெரும் அணைகள்   கட்ட முடியாது ஒரளவு தடுப்பணைகள் தான் கட்ட முடியும் அதுவும்  இரண்டு கழக ஆட்சியிலும் கட்டுப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையே நிரம்பாத போது மேலும் பெரிய அணை கட்டி என்ன பயண்?
மணல் அள்ளுகிறான், சாய பட்டறை கழிவு குற்றசாட்டு , தவறு தான், ஆனால்  இது எதுவும் நீரை பகிர்ந்து கொள்ள மறுப்பதற்கு காரணம் ஆகாது.,

இன்று டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இளைஞர்கள் வெளியேறி விட்டனர் , பெங்களுர், சென்னை, கோயம்பத்தூர், திருப்பூர் முதல் வளைகுடா நாடு வரை வேலை செய்வது எனது டெல்டா மாவட்ட தம்பிகள் தானே. ஏக்கருக்கு 3 லட்சம் வருமானம் வரும் என்ற நிலை  இருந்தால் இவர்கள் யாரும் இந்த ஊரை விட்டு போக போகிறார்கள்,  முன்னேறிய நாடுகளை மிக குறைந்த தண்ணீரை பயன் படுத்தி விவசாயம் , நிலத்தடி நீர் மேம்பாடு, நெல் இல்லாமல் பிற பயிர்கள் இவையே நமக்கு உள்ள வாய்ப்புகள் .  இதற்கான அரசு நிதி ஒதுக்கீடு, விவசாய துறை அதிகாரிகளின் பெரும் முயற்சி இரண்டும் தேவை.
 நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற முயற்சிக்கும் அதே வேளையில் இதையும் நாம் செய்ய வேண்டும் .

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

அடுத்த தலைமுறைக்கு புரட்சி தலைவர் பாடல்களை அறிமுகபடுத்துவோம்



70 களின் கடைசியில்  பிறந்த மற்றும் 80களில்  பிறந்தவர்களுக்கு  MGR  படங்கள் மற்றும் பாடல்கள், பெரும்பாலும்  அன்றைய  தொலைக்காட்சி , வானொலி  மற்றும்  பழைய  திரைப்படங்களை திரையிடும் திரை  அரங்குகள்  மூலம்   சேர்ந்து  விட்டது 

90 களின் பிற்பகுதியில்  பிறந்தவர்களுக்கு அந்த அளவு  சேர்ந்ததா  என்று  தெரிய வில்லை . 

நம்முடைய அடுத்த  தலைமுறைக்கு உட்க்கார்ந்து நல்ல  ஒழுக்கம்  நாம்  சொல்லி தர  முடியோமோ  இல்லையோ,.ஆனால்  புரட்சி  தலைவர் அவர்களின் நல்லொழுக்க, தன்னம்பிக்கை  பாடல்களை  அறிமுக  படுத்துங்கள் .

அவரது  அரசியலில்  கருத்து  வேறுபாடு உள்ளவர்கள்  கூட  அவரது  பாடல்களில் கருத்து வேறுபட  மாட்டார்கள் .

என்ன மாதிரியான பாடல்கள்  அவரால்( கவிஞர்கள், பாடகர்கள் , இசை அமைப்பாளர்கள்  பங்களிப்புடன் )  தர  முடிந்துள்ளது .

1, உன்னை  அறிந்தால் , நீ  உன்னை  அறிந்தால் ,உலகத்தில்  போராடலாம்..
2, என்ன  வளம் இல்லை  இந்த  திரு நாட்டில் , என் கையை ஏந்த வேண்டும்  அயல்  நாட்டில் .
3. அச்சம்  என்பது  மடமையடா , அஞ்சாமை  திராவிடர் உடமையடா 
4. பாவம்  என்னும்  கல்லறைக்கு  பல  வழி , என்றும்  தர்ம  தேவன் கோவிலுக்கு  ஒரு வழி  .
5. கண்ணை  நம்பாதே உன்னை  ஏமாற்றும் . அறிவை  நீ நம்பு.
உண்மை  எப்போதும்  தூங்குவதும்  இல்லை , பொய்மை  எப்போதும் 
ஓங்குவதும்  இல்லை .
6.நெஞ்சம்  உண்டு  , நேர்மை உண்டு  ஓடு  ராஜா , ஒரு நேரம் வரை  காத்து  இருந்து  பாரு ராஜா .
7.திருடாதே  பாப்பா  திருடாதே , திருடனாய்  பார்த்து  திருந்தா விட்டால்  திருட்டை  ஒழிக்க  முடியாது 
8.தூங்காதே  தம்பி  தூங்காதே ,, நல்ல  பொழுதை  எல்லாம்  தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன்   தானும் கெட்டார் .
9. நாளை  நமதே , இந்த  நாளும்  நமதே .
10.. நல்ல நல்ல  பிள்ளைகளை  நம்பி ..

இது  மாதிரி  பல  முத்தான பாடல்கள்.என்னால் முடிந்தவரை காரில்  செல்லும்பொழுதோ ,
 சில  சமயம்  வீட்டில் தொலைக்காட்சியில் பழைய பாடல்கள்  ஒலிக்க செய்து  எனது  மகனுக்கு  இந்த  பாடல்களையும் , படங்களையும் அறிமுகம்  செய்கின்றேன் ..

அடுத்த  தலைமுறைக்கு  புரட்சி  தலைவர்  பாடல்களை  அறிமுக படுத்துவோம் ... ஒரு  நல்ல  தலை முறையை உருவாக்குவோம் 

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

வாழ்வின் வெற்றிக்கு கல்வி மட்டும் போதுமா ?

ஏறத்தாழ 20 ஆண்டுகள்  தொடர்ப்பு  இல்லாமல்  இருந்த  பள்ளி  நண்பர்களை  மீண்டும்  சந்திக்க  நேர்ந்த  போது உணர்ந்த   சில விஷயங்கள் .

1. நல்ல கல்வி நிறைய  நண்பர்களின்  வாழ்வை  மேன்மையடைய  செய்துள்ளது .கல்விக்கான  மதிப்பு  என்றும்  உள்ளது .
(Education is  Important )
2. அதே  நேரத்தில்  மிகவும்  சிறப்பாக படித்த நண்பர்களை விட , ஓரளவு  நன்றாக  படித்து , நல்ல அணுகுமுறை (attitude ) மற்றும்  நல்ல  தகவல் தொடர்பு  திறன்   (communication skills ) உடையவர்கள்  வெற்றி  அடைகிறார்கள் .
( Attitude with communication skills are as important as education )

3. சமூக  பொருளாதார  மாற்றத்தை விரும்பிய பலர் , நாட்டை   மாற்றும்  முயற்சியை  கை  விட்டு  விட்டு நாட்டையே மாற்றி வெளி நாட்டில் குடியேறி  விடுகின்றனர் .
(people want to change the country in childhood, mostly change the country of living only)

4. பள்ளியில்   மிக  தைரியம்  ஆக  இருந்த பெண்கள்  பல பேர் இல்லத்தரசிகள் ஆகவும் ,  இருக்கும்  இடமே  தெரியாமல்  இருந்த பெண்கள் பலர் வேலைக்கும்  சென்று  கொண்டு உள்ளனர்.
(Exposure after school or Mens are behind the women career path )

5. யாருமே விளையாட்டையோ , அரசியலையோ தேர்வு  செய்ய  வில்லை . அப்பறம்  எங்க  ஒலிம்பிக்  பதக்கம் , அரசியல்  மாற்றம் எல்லாம் ?

6  விவசாயதின்  வீழ்ச்சி கிராம புற  பொருளாதாரத்தை  சீர்குலைத்து   விட்டது  , வேலை  வாய்ப்பு ,பொருளாதார  மேம்பாடு வேண்டுமானால்  நரகத்திற்கு சாரி நகரத்திற்கு  சென்றால் தான்  முடியும்  என்றாகி  விட்டது  வெகு  சில  நண்பர்களே  கிராமத்தில்  இருக்கின்றனர்

6. என்னை  பொருத்த வரை  எங்கோ சென்று  லட்சம் , கோடியில்  சம்பாதிக்கும் பொருளாதார  வெற்றியை  விட  சொந்த  ஊரில்  பெற்றோர்,உறவினர் , நண்பர்கள்   கூட இருந்து ஓரளவு சம்பாதிக்கும் ஒருவனே  வாழ்வில் வெற்றி  பெற்றவன்.



Lighter side

7. 16 ல்  அழுகாக  இருக்கும் பெண்கள் நிறைய  பேர் 36ல் அழுகாக  இருப்பதில்லை மற்றும் 16 ல்  சுமாராக இருந்தவர்கள்  36 ல் அழகாக  இருக்கின்றனர்.


8. பெரும் பாலான ஆண்  நண்பர்களுக்கு  முடி  கொட்டி விட்டது.. அதான்  டீவில  எர்வாமேட்டின், Rich Feel  விளம்பரம்  அவ்ளோ  வருதோ ....


கவிஞர் முத்துக்குமார் மறைவு சொல்லும் பாடங்கள்


கவிஞர்  முத்துக்குமார் மறைவு தமிழுக்கு  பேரிழப்பு ,கமலஹாசன்  ஸ்ரீ ராமுனுஜரை  பற்றி  சொல்லும் பொது மிக  நீண்ட  காலம் (120 ஆண்டுகள்)  வாழ்ந்ததன்  முலமாகவே  எதிரிகளை  வென்றவர்  என்று  குறிப்பிடுவார் ..

பல  ஆண்டுகள் தொடர்ந்து  தமிழில்  மிக அதிகமான பாடல்கள்  எழுதிய  சாதனைக்கு  சொந்தக்காரர் முத்து குமார். 1500 க்கும் மேற்பட்ட  பாடல்கள் , பல  புத்தகங்கள் ,இரண்டு  தேசிய  விருதுகள் . அவர்  60 ஆண்டுகள்  வாழ்ந்திருந்தால் கூட  இன்னும்  எத்தனை விருதுகள் , எத்தனை சாதனைகள்  செய்திருப்பார் ..பெரும்  காப்பியமாக  வாழ வேண்டிய வாழ்க்கையை சிறு  ஹைக்கூ கவிதையாக முடித்து  கொண்டார் .

நண்பர்களே , பணம்  சம்பாதிப்பதற்கோ , சாதனை  செய்வதற்கோ , உழையுங்கள் , ஆனல்  உங்கள்  உடல்  நலத்தில்  கவனம்  வையுங்கள் ..மரணம் இயற்கைதான் , ஆனால்  நீங்கள்  உங்கள்  உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல் செய்யும்  உழைப்பு  உங்கள் உடலுக்கு  செய்யும்  துரோகம் மட்டும்  அல்ல , உங்கள்  திறமைக்கு  செய்யும் துரோகம்  கூட ..

இறந்தாலும்  உ ங்கள்  சாதனைகளை  உலகம்  பேசி  கொண்டு தான்   இருக்கும் , ஆனால் உங்கள் குடும்பத்திக்கான  இழப்பு  உங்கள்  சாதனையை  விட  மிக  பெரியது .






வியாழன், 11 ஆகஸ்ட், 2016

20 வருடம் பின்னோக்கி ஒரு பயணம்

இந்த  20 வருடங்களில்  மாறிய  பல  விஷயங்கள்  பார்த்தால்  மலைப்பாக  இருக்கிறது.
 20 ஆண்டுகளுக்கு  முன்:-
 இந்தியா :- இந்தியா பொரு ளாதாரத்தில் நோஞ்சான், தேவ  கவுடா  இந்திய பிரதமராக  இருந்தார். பெரும்பாலான  இந்தியர்களுக்கு  அரசுதுறை  வேலைவாய்ப்புகளே  பிரதானம்,

தமிழகம் :-
 இன்ஜினியரிங்  படித்தவர்கள் கள்  என்றால் பெரும்  மரியாதை  இருந்தது. கல்வி , மருத்துவம் பெரும்பாலும்  அரசாங்கம் வசமே  இருந்தது.  கிராமங்களில்  மாடி  வீடும், அம்பாஸடர்  காரும், கலர்டிவியும்   வைத்து  இருப்பவர்கள் பணக்காரர்கள் ஆக  கருதபட்டனர்.மால் கிடையாது  ,Multiplex கிடையாது

பொருளாதாரம் :-
சென்செஸ்  3000 புள்ளிகளில்  இருந்தது.  ரிலையன்ஸ் ,TCS ,இன்போசிஸ் , ICICI , HDFC பேங்க்  போன்ற  பெருநிறுவனங்கள்  அப்போது முன்னணியில்  இல்லை, சில  இல்லவே  இல்லை.அரசு  நிறுவன ங்களே  பிரதானம்,

தொழில்நுட்பம் :-
ஆப்பிள்  என்பது  அப்போது  சாப்பிடும்  ஒரு  உணவு பொருள் மட்டுமே. இன்று GOOGLE லில்  தேடுகிறோம் ,அன்று  கூகுளை யே  தேட முடிந்திருக்காது.
 கம்ப்யூட்டர் என்றால்  AC  ரூமில்  இருந்து   ப்ரோக்ராம்  செய்ய  பயன்படும்   ஒரு   எந்திரம் எங்களுக்கு . டெலிபோன்  ஊருக்கு  சிலரிடம் இருந்த  பொருள்.  தந்தி  இருந்தது. இணையம் புழக்கத்தில்  இல்லை . ஸ்மார்ட் போன் , Facebook ,whatsapp கனவில்  கூட இல்லை . CRT  கலர்  டிவி , நான்கைந்து கேபிள்  சேனல் கள் மட்டும் .தூர்தர்ஷன்  எல்லாம் பார்க்கும்  சேனலாக  இருந்தது. சக்திமான்  சூப்பர் ஹீரோ .
VCR ,டேப் ரெக்கார்டர்  எல்லாம்  இருந்தது . கேமரா  என்றால்  36 பிலிம்  தான் ரொம்ப கவனமாக எடுக்க  வேண்டி இருந்தது.


தமிழ் சினிமா :-
கார்த்திக் ,பிரபு ,விஜயகாந்த்  ,சத்யராஜ்  பாப்புலர் ஹீரோவாக இருந்தனர் ,அஜித்  விஜய்  அறிமுக  நடிகர்கள்.
அரவிந்த்  ஸ்வாமி, பிரபு தேவா , பிரசாந்த்   கனவு கண்ணன்கள்  , ரோஜா,மீனா,ரம்பா,குஸ்பு,நக்மா  கனவு  கன்னிகள்.

உலகம் :-
கிளின்டன்  அமெரிக்க  ஜனாதிபதி. சதாம் ஹுசைன் னை  பார்த்து உலகம்  பயந்து  கிடந்தது . மைக்கேல் ஜாக்சன்  பாடல்கள்,நடனம் பார்த்து  உலகம்  வியந்து  கொண்டு  இருந்தது .

கிரிக்கெட் :-
கபில்தேவ் காலம்  முடிந்து  டெண்டுல்கர்  காலம்  ஆரம்பித்து  இருந்தது.அசாருதீன்  இந்தியா வின் கேப்டன். கங்குலி ,டிராவிட் ,கும்ப்ளே  எல்லாரும்  அப்போதுதான் வந்து  இருந்தார்கள் .அஜய் ஜடேஜா ஒரு  போஸ்டர் பாய்.


மாறியவை  பல,மாறாதவை  சில

ரஜினியே  அன்றும்  சூப்பர்  ஸ்டார் , இன்றும்  அவரே . அன்று  பாஷா  ,முத்து ..இன்று  கபாலி.

கலைஞர்  , ஜெயலலிதா  தமிழக  அரசிலியலின்  ஆளுமைகள் இன்றும் , அன்றும்.

ஒரு  ஒலிம்பிக்  பதக்கமாவது  இந்தியா வெல்லுமா  என்னும்  எதிர்பார்ப்பு.
பில் கேட்ஸ்  அப்போதும்  உலக  முதல்  பணக்காரர்.

 என்றும்  மாறாதது , எங்கு  இருந்தாலும் , எப்படி  இருந்தாலும்  ,எத்தனை  வருடம்  ஆனாலும் ,  பேரை  கேட்டவுடன் ஞாபகம்  வரும் நண்பர்களின் முகம்  மற்றும்  உடனே  வரும்  பள்ளி  நினைவுகள் .காலத்தில் அழியாமல்  நிலைத்து  நிற்கும் நட்பு.


20 வருடம்  பின்னோக்கி ஒரு பயணம் .
பள்ளி நண்பர்களுக்காக   எழுதியது





புதன், 10 ஆகஸ்ட், 2016

ஒலிம்பிக் பதக்கமும் , ஓட்டை வாய் மக்களும்




பருத்தி  வீரன்  படத்தில்  சரவணன்  ,கார்த்தியை பார்த்து  கூறுவார் , டேய்   பாத்து  பண்ணுடா  ,   இப்ப  கண்ட  நாய் எல்லாம்  அட்வைஸ்  பண்ணுது  பாரு என்பார் , அது போல   ஒலிம்பிக்  வீரர்களே, எப்படியாவது  ஒண்ணு  ரெண்டு  பதக்கம்  வாங்கிடுங்க  இல்லன்னா , கண்ட  பசங்களும் கருத்து சொல்ல  ஆரம்பிச்சிடுவாங்க ..(என்னையும்  சேர்த்து தான் ).



எதுக்கு  எடுத்தாலும்  120 கோடி  பேர்  உள்ள  நாட்ல ஒரு ஒலிம்பிக்  பதக்கம் வாங்க  முடில ன்னு  சொல்றோம்   ..

உண்மை  என்ன என்றால் , இந்த  120 கோடில,ஒரு  40 கோடி பேரு தான் 15 முதல்   35 வயது  வரை  உள்ளவர்கள்,
இந்த  40 கோடில  10 கோடி பொண்ணுங்க,பசங்க  குடும்ப வாழ்க்கைல  இருக்காங்க ,பொண்ணு, பிள்ளைக்கு  கேஜி  சீட் கிடைக்குமா ?  இந்த  மாச  பட்ஜெட்  துண்டு  விழுவாம இருக்குமா? புற நகர்  ரியல்  எஸ்டேட்ல  வீடு  எப்போ வாங்கறதுன்னு யோசிச்சிட்டு  இருக்காங்க. 

ஒரு  10 கோடி  பேர் IT  கம்பெனிலேந்து , பீடி   கம்பெனி  வரைக்கும்  வேலை  செய்ஞ்சுகிட்டு  இருகாங்க.

ஒரு 7 கோடி  கல்லூரி களிலும் , பள்ளிகளிலும்  சீரியசா   படிச்சு  எப்படியாவது  ஒரு  கார்பொரேட் கம்பெனில ப்ளஸ்மெண்ட்   ஆயிடுனும் ன்னு  முயற்சில இருக்காங்க  ,

மீதி  உள்ளதுல பல  லட்சம் பேர் வேலை  தேடி  அலைஞ்சிகிட்டும்  சில  லட்சம்  பேர்  ஜெயிலையும், சில லட்சம்  பேர்  சினிமா  சான்ஸ் தேடியும் ,சில  லட்சம்  பேர் ஏதாவது  பொண்ணு  பின்னாடி  நேரம்  காலம்  பாக்காம   அலைஞ்சிகிட்டு   இருக்காங்க.
இன்னும்  என்ன போல, உங்கள  போல  சில  லட்சம்  பேர் FACEBOOK ளையும் ,Whatsapp ளையும்    புரட்சி  பண்ண  முடியுமா ன்னு  யோசிச்சிட்டு  இருக்கோம் ..

ஆக , விளையாட்டை  சீரியஸ்  கேரியரா   நினைக்கிறவங்க  சில  லட்சம்  பேர்  இருப்பாங்க அதிலும் 70 சதவீதம்  பேர்  கிரிக்கெட்  பின்னாடி  போய்டா மிஞ்சி  உள்ளது சில  ஆயிரம்  பேர் . இந்த  நம்பர்  கண்டிப்பாக  ஆஸ்திரேலியாவை விட , சீனாவை  விட,அமெரிக்கா  வை  விட  மிக  குறைவாக  இருக்கும்.  இதிலிருந்து 100 பேர் தான்  ஒலிம்பிக்  போறாங்க , அங்க  போய் சிறந்த  முயற்சி செய்கிறார்கள் ..
அடுத்த  தடவ  120 கோடி  பேர்  டயலாக்  வேண்டாம் ..

இந்தியாவில  கிரிக்கெட்  தவிர  அடுத்த ஸ்போர்ட்ஸ  கேரியரா  எடுக்குற  புள்ளைங்க மற்றும்  அவங்க பெற்றோர் எல்லாம் உண்மையிலே  தியாகி  மாதிரி ,
அடிப்படை  சரியில்லாம , ஒலிம்பிக் போனவண்ட    தங்கம் வாங்கல ,வெள்ளி வாங்கல, வெண்கலம்   வாங்கல ன்னு  கல்யாண  ஜூவெலேரி விளம்பர  பிரபு  மாதிரி நை நை னுட்டு இருக்காதிங்க,.


இந்த  புள்ளி விவர  நம்பர் எல்லாம்  சும்மானாச்சுக்கும் ...சீரியஸா  எடுத்துக்க  கூடாது  

புதன், 3 ஆகஸ்ட், 2016

அத்தனைக்கும் ஆசைப்படு, அடுத்தவனுக்கு மொட்டையடி



2 பெண்  குழந்தைகள் , எத்தனை ஆசையாய் பெற்று , வளர்த்து , எத்தனை  கனவுகளோடு  இருந்து  இருப்பார்கள்  பெற்றோர்கள் ,  என்னதான்  சுய  விருப்பம்  என்று கூறினாலும் ,மொட்டையடித்து  சன்னியாசம்  பெற்று  விட்டதாய்  நிற்கும் பிள்ளைகளை பார்த்து   பெற்றவர்கள்  எத்தகைய  ஒரு  வலியை   அடைவார்கள் .

 இந்த  சாமியார்கள்  மிகவும் வறுமையில் வாடும்  சோற்றுக்கு  வழியில்லாத  வீட்டு   பிள்ளைகளையோ , மிக பெரும்  கோடீஸ்வர  வீட்டு   பிள்ளைகளையோ  சாமியாராக்காமல்  பெரும்பாலும்   உயர் நடுத்தர  வீட்டு பிள்ளைகளையே  கவர்கின்றனர் . ஏழைன்னா  பைசா  போறாது , பெரும்  பணக்காரர்கள் என்றால்  எதிர்ப்பு  பலமாக  இருக்கும்  என்பதால்  தானோ ?.

மிக  பிரபலங்கள் தொலைக்காட்சியில்   சாமியாரிடம்  கேள்வி  கேட்கும்  போதும், சில  பிரபலங்கள் like  நடிகைகள் , ஆசிரமத்தில்  தியானம்  செய்து புத்துணர்வு பெற்றதாக கூறும்  போது ஆச்சரியமாக இருந்தது . அப்புறம்  தான்  தெரிந்தது  இதுவும்  காசுக்காக  செய்யும்  ஒரு  நடிப்பு  என்று. அத்தகைய  பிரபலங்கள்  யாரும்  மொட்டையடித்  தாக வோ  அவர்களது  பிள்ளைகளை  ஆசிரமத்தில்  சேர்த்ததாகவோ  தெரியவில்லை.

பெரும்பாலும்  எல்லா  சாமியார்களிடமும்  ஒரு  சிறிய  சித்து வேலை /சக்தி     இருக்கும் , எங்கேயாவது  ஒரு  சாமியாரிடம்  இருந்து  கற்று  இருப்பார்கள் . அதை  வைத்து  பெரிய அளவில்  பணம்  சம்பாதித்து  விடுகின்றனர் .

கதவை  சாத்தாமல்  விட்ட  சாமியாரிலிருந்து , இவர்   வரை  எல்லாத்தையும் பிரபல  படுத்திய  மீடியா கள்  ,பொறுப்போடு  நடந்து  கொள்ளாமல் ,  சர்ச்சை  வரும்  பொழுது சிகரெட்  பெட்டியில்  உள்ள warning  போல் , எங்களுக்கு தெரியாது அது  அவர் கருத்து என்று  கூறி வெளியேறி  விடுகிறது.

சாமி , நீங்கள்  அத்தனைக்கும்  ஆசைப்படுங்கள் , ஆனால்  பாவம்  நடுத்தர  குடும்பத்து   மக்கள் அவர்கள் கனவுகளை  பலி யக்காதீர்கள்


செவ்வாய், 26 ஜூலை, 2016

மானை கொல்லலாம்? மாட்டை திண்ண கூடாது

நாய், பூனைக்கு எதாவது அநீதி நடந்தால், ஐல்லி கட்டுக்கு எதிராக பொங்கி எழுந்த சினிமா பிரபலங்கள், PETA , இன்று ஒரு மானை கொன்றவரை விடுதலை செய்த பொழுது என் பொங்கவில்லை என்று தெரியவில்லை.
மானை கொன்றது இன்னொரு "மான் "தானே என்று பேசாமல் இருந்து விட்டா'ர்கள் போல.. சினிமாக்காரன் தப்பு செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று எந்த கருத்தும் சொல்ல மாட்டார்கள் போல...

இன்று ஐல்லி கட்டை காட்டுமிராண்டிதனம் என்று விமர்சித்த  நீதிமன்றம் தான் நேற்று மானை சுட்டுக் கொன்ற வழக்கில் சல்மான்கானை விடுவித்தது.
இந்த நாட்டில் மானை கொன்றால் தப்பில்லை. ஆனால் மாட்டை தின்றால் ஆளை கொன்று விடுகிறார்கள்... 

வெள்ளி, 22 ஜூலை, 2016

கபாலி.. ஒரு ரஜினி படமா?

பெரும்பாலான நண்பர்கள் கூறினார்கள் பெரிய எதிர்பார்ப்புகளோடு கபாலி படத்துக்கு போகாதிர்கள் என்று,, ரஜினி படம் என்பது எப்பொழதாவது குடும்பத்துடன் சென்று 5 நட்சத்திர ஒட்டலில் விருந்து சாப்பிடுவது போன்றது, எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்யும்... ஆனால் தாஜ் ஒட்டல் சென்று தயிர் சாதம் சாப்பிட்ட வைத்த மாதிரி இருந்தது நண்பர்கள் பலருக்கு..
எனக்கு படம் ரஜினிக்காக கண்டிப்பாக பார்க்கலாம்... முதல் 15 நிமிடம் எனக்கு போதும், வெகு சில கைத்தட்ட வைக்கும் வசனங்கள், சில திணிக்க பட்ட வசனங்களை தவிர்த்து இருக்கலாம்.. ARR இல்லாத குறை தெரிகிறது.. மெட்ராஸ்ல நடிச்ச எல்லாருக்கும் ஒரு Scene ன்னு வாக்கு குடுத்து இருப்பாரு போல.,..
மனைவியை தேடும் காட்சி நீளும் போது குடும்ப படம் நடிக்க ஆயிரம் நடிகர் இருக்க ரஜினிய போட்டு தாக்கனுமா என்று தோன்றியது
வில்லன்... We still miss Basha Antony Kind
இறுதி காட்சி ..லிங்கா போல் திருஷ்டி... ரஜினிக்காக கொஞ்சம் உழைத்து இருக்கலாம்

ஷங்கராவது " ரஜினி " படம்  எடுப்பார் என்ற நம்பிக்கையுடன்

புதன், 20 ஜூலை, 2016

கபாலி - பொன் முட்டை யிடும் வாத்து

ஆற அமர விமர்சனம் படிச்சுட்டு சவுகரியமா வார இறுதியில ரிசர்வ் பண்ணி, குடும்பத்தோட பாப்கார்ன் சாப்பிடுகிட்டு பாக்க இது மத்த தமிழ் படம் இல்லடா.... #கபாலிடா... FDFS

ஆயிரம் விமர்சனம் செய்தாலும்,ரஜினியின் திரை ஆளுமையும், தலைமுறைகளை கடந்த வீச்சும் ... பிரமிப்பு

If cinema is for entertainment,, then Rajini is ultimate entertainer for generations

கடவுளே..... படத்த புரமோட் பண்றவங்களட்ட இருந்து ரஜினிய காபாற்று...
விமர்சிக்கிறவர்களை கூட அவரே பார்த்துப் பார்..
கபாலி பொன் முட்டை யிடும் வாத்து , ஒவர் பில்டப் விட்டு பாபா பிரியாணி செய்து விடாதிர்கள்..

இப்போது  தமிழ்நாட்டில்  மக்கள்  இரண்டு  வகை  1, கபாலியை  வைத்து  விளம்பரம்  மற்றும்  வியாபாரம்  செய்ப்பவர்கள்                            2. கபாலி  வியாபார தந்திரத்தால்  பணத்தை இழப்பவர்கள்

காபாலிக்கு ஒரு போஸ்ட் போட்டு  viewers  சேர்ப்பதால் நானும்  முதல்  வகையில்  சேர்ந்து  விட்டேன்





செவ்வாய், 19 ஜூலை, 2016

நாம் சிறப்பாக வளர்கிறோமா நமது குழந்தைகளை ?

Big indian family on bike



முந்தைய தலைமுறையை  விட  நாம்  நமது  குழந்தைகளை  சிறப்பாக  வளர்ப்பதாக   நினைக்கிறோம்

முன்பு எல்லாம்  பெரும்பாலும் குடும்பத்தில்  யாராவுது ஒருவர் மட்டும்தான் தான்   படித்து நகரத்தில்  வேலை  செய்து  கொண்டு  இருந்தார்கள் ,  குழந்தைகளும்  அதிகம் . அதனால் நகரம் , மற்றும்  சிறு  நகரங்களில்  வசிக்கும்  பெரியப்பா ,சித்தப்பா , மாமா  குடும்பத்தில்  உறவினர்கள்  வீட்டில்  தங்க வைத்து     பிள்ளைகளை  படிக்க  வைக்கும்  வழக்கம் இருந்தது. இது  கூட்டு குடும்பத்தை  விட  மிகவும்  சிக்கலானது ஆனாலும்  பெரியவர்கள் மிக  திறம்பட நிர்வாகம்  செய்தனர் .
பெரியவர்கள்பெரும்பாலும்  தங்களது குழந்தைகளுக்கும்  உடன்  பிறந்தவர்களது  குழந்தைக்கும்    வேறுபாடு காட்ட  மாட்டார்கள் . அனைவரும்  ஒன்றுதான் . 
குழந்தைகள்  இடையே  விட்டு  கொடுக்கும்  வழக்கமும் , எந்த  பிரச்சனையையும்  தங்களுக்குள்  தீர்த்து  கொள்ளும்   மனப்பான்மையும்  இருந்தது. இன்று  கார்பொரேட்  நிறுவனங்கள்  நடத்தும்  குழு கட்டமைப்பு மற்றும்  மேம்பாடு  (team  Building )  போன்றவற்றை இயற்கையாகாவே  கற்று  கொண்டனர்.

மற்ற குழுந்தைகள் பெரியப்பா /சித்தப்பா  என்று  கூப்பிடுவதை  பார்த்து  சொந்த  குழந்தையும் அப்படியே  கூப்பிடுவதும்  நிகழும் .பெரும்பாலான  குழுந்தைகளுக்கு  சற்று விவரம்  தெரிந்த  பின் தான்  யார்  சொந்த சகோதரன்/ சகோதரி  , யார்  உடன் பிறவா சகோதரன் /சகோதரி  என்பதையே  தெரிந்து  கொள்வார்கள் .

அப்போது  இந்த அளவு  பொருளாதார  வசதி  இல்லாவிட்டாலும்  பகிர்ந்து  கொள்ளும்  பழக்கம் இருந்தது.  இவளவு அதிகமான  கல்வி கட்டணம் கிடையாது  என்பதும் உண்மை,

இப்போது அத்தகைய  பழக்கம்  முழுக்க  ஒழிந்து  விட்டது , பெரும்பாலும்  ஒன்று  அல்லது  இரண்டு குழந்தைகள் , யாரும்  யாரையும்  நம்பி தங்களது  குழந்தைகளை  விட தயாராக  இல்லை , அப்படியே  விட்டாலும்  யாருக்கும்  அடுத்தவர்  குழுந்தையை  பார்த்து  வளர்க்கும்  அளவுக்கு பொறுமை  இல்லை .
மிக  அதிகமான  கல்வி  கட்டணம் ஒரு காரணம்  கூட , 
குழுந்தைகளும் எந்த  ஒரு  பிரச்சினைக்கும்  பெற்றோர் களிடம் தான்  செல்கிறது . பகிர்ந்து  கொள்ளும்  பழக்கும்  அறவே  குறைந்து  உள்ளது, தோல்வியை  தாங்கும்  மனப்பாண்மை யும் குறைந்து விட்டது.

இத்தகைய  சூழலில்  படித்து    வளர்ந்தவர் கள்  தங்களது  அனுபவங்களை  சொல்லுங்கள் .. அது சிறந்ததா  , இது  சிறந்ததா என்று..




வெள்ளி, 8 ஜூலை, 2016

கடுமையாக உழைக்கிறாரா இந்திய பிரதமர் ?

புது டெல்லியில் ஒரு  பிரெஞ்சு பெண்மணியிடம் ஒரு  பிஜேபி  உறுப்பினர் எங்களது  பாரத பிரதமர் கடுமையாக உழைக்கிறார் ,சிறிது  நேரம்  மட்டுமே  உறங்குகிறார் . உதாரணமாக  நேற்று  கூட பாஸ்ப்போர்ட்டை இழந்து  வெளிநாட்டில் தவித்த ஒருவருக்கு உடனடியாக பாஸ்ப்போர்ட் கிடைக்க உறுதி செய்தார் . தனது ஓய்வூதியம் கிடைக்காமல்  அவதி பட்ட ஒரு ஆசிரியருக்கு உதவி  செய்து உடனடியாக கிடைக்க செய்தார் என்று  விளக்கி கொண்டு இருந்தார் .
இதை  கேட்டு  ஆச்சரியம்  அடைந்த அந்த பெண்மணி " ஏன்  உங்கள்  நாட்டில் கடுமையான ஆட் பற்றாகுறை நிலவும்  போல , பிரதமர் பாஸ்ப்போர்ட் அலுவலக மற்றும்  ஓய்வு ஊதிய  துறை  வேலை  எல்லாம்  செய்தால்  எப்படி  தூங்க  நேரம் கிடைக்கும் , அவர் பிரதமர்  வேலையை  கூட பார்க்க வேண்டுமே  " என்றார் .

அதை  கேட்டு  அதிர்ச்சி  அடைந்த பிரமுகர் " இல்லை  பிரதமர்  அலுவலகத்தில்  பலர்  இந்த வேலைகளையும்  செய்கின்றனர் , பிரதமர் அவர்களை  மேற்பார்வை இடுகிறார் " என்றார் .

இந்த முறை  சிறப்பாக  செயல் படும் என்றால் பாஸ்ப்போர்ட் அலுவலகம்  மற்றும்  ஓய்வு  ஊதிய  துறைகளை  பிரதம  மந்திரி  அலுவலகமே பார்த்து கொள்ளலாமே என்று   அந்த  பெண்மணி கூறினார்.
இதை  கேட்ட  பிஜேபி  பிரமுகர் கோபமாக  வெளியேறினார் .

அந்த பெண்மணி சிறிது குழப்பத்துடன் என்னிடம் நானே எதுவும் தவறாக கேட்டு விட்டேனா என்று  கேட்டார் .. நான் அவரிடம்  நீங்கள்  இந்திய திரை படங்களை  பார்த்தது  உண்டா  என்று கேட்டேன் .அவர் இல்லை  என்றார்  அதுதான் உங்கள் பிரச்சினை என்று கூறினேன் .

பெரும்பாலும்  இந்திய  படங்களில்  எல்லா  பிரச்சினைகளையும் ஒரு சூப்பர்  ஹீரோ  தீர்த்து  வைப்பார் . அதையே  பிடித்து  கொண்ட அரசியல் வாதிகளும் மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் ஒரு  மனிதர்  தீர்த்து  வைப்பார் என்னும் பிம்பத்தை கட்டமைக்கின்றனர் .அதில்  ஒரு பகுதிதான்  இது என்று  விளக்கினேன் .

ஒரு  நாடு  நன்றாக  இருக்க வேண்டுமானால்  ஒரு  தனி மனிதரால் மாற்றத்தை தர  முடியாது மக்கள் மனது  வைத்தால் தான் முடியும் .

(Courtesy :Mumbai Mirror Article)

"Public/System can make change. super hero cant make the change"

Note:- 

நாங்கள் பெரும்பாலும்  அலுவலக பயணமாக BUSSINESS Class இல் வெளிநாடு  சென்றாலே விமானத்தில் 180Deg  படுக்கையில்  நன்றாக உறங்கி மறுநாள் விழித்தவுடன் வெளிநாட்டில் பணிகளை கவனிப்போம் .. இதில்  தனி  விமானத்தில்  செல்லும்  பிரதமர்  விமானத்தில் தூங்கி  அலுவலகம்  வருகிறார் ன்னு பெருமை வேறு . இதுவும் ஒரு  சூப்பர் ஹீரோ  நாடகங்களில் ஒன்று

சொந்த ஊரில் வாழறோமோ இல்லையோ சொந்த ஊர்லதான் சாவணும்

எங்களது  தஞ்சை மாவட்ட கிராமங்களில்  ஒரு  இறப்பு   என்றால் குறைந்தது 500 பேர் கலந்து கொள்வார்கள் சில சமயம்  பல ஆயிர கணக்கிலும்  இருக்கும்..பெரும்பாலும் ஊரே  கூடி விடும்  . பெரும்பாலும் ஓரமுறையார் (மாமா விடு) வீடுகளில் இருந்து  சமைத்து   துக்கம்  விசாரிக்க  வந்தவர்களுக்கு  சாப்பாடு தந்து  விடுவார்கள்.

எனது கிராமத்தில் பொது சுடுகாடு என்ற  பழக்கமே கிடையாது , அவரவர்கள் தங்களுக்கு சொந்தமான காவிரி கரையில் இருக்கும்கொல்லையில்  தான் எரித்து  விடுவார்கள். 

அதுவும்  மிக  வயதானவர்கள் இறப்பு ஒரு திருவிழாதான் . குறவன் ,குறத்தி டான்ஸ் , அருமையான பல்லாக்கு , ஆட்டம் ,பாட்டம் , தட புடல் சாப்பாடு  கூட... 16 நாள் கறி விருந்து , வேட்டி கட்டுதல்னு சும்மா தூள்  பறக்கும் ...பெருமபாலான வயதானவர்களை பேர பிள்ளைகள் இருக்கும் போதே தாத்தா  நீ செத்தா ஊரே அசந்து போற மாதிரி தூக்கி போடுவேன் என்று கிண்டல் செய்வதும்  உண்டு ..

இத்தகைய சாவு நிகழ்ச்சிகளை கண்டு  பழகிய  நான்  ,  வட  நாட்டில் பெரு  நகரில்  வேலை  காரணமாக வசிக்கும் எனக்கு  நேற்று  ஒரு  அலுவலக முத்த அதிகாரி  ஒருவரின்  மரணத்திற்கு செல்ல  நேரிட்டது.  அடுக்கு  மாடி  குடியிருப்பில் அவரது  வீட்டில்  விரல்  விட்டு  எண்ண    கூடிய  அளவு குடும்ப  உறுப்பினர்கள் , 20 முதல்  25 அலுவலக  நண்பர்கள்  அவ்வளவுதான் . அடுக்கு  மாடி  குடியிருப்பிற்கு  மாறி   சில ஆண்டுகள்  ஆணது  நாளோ  என்னோவோ  பெரும்பாலோனோர்  வந்து  எட்டி  பார்க்க கூட  இல்லை ..எப்படியோ  அலுவலக நண்பர்கள்  காரியத்தை  முடித்து  விட்டு வந்தோம் .

 சொந்த  ஊரில்  வாழறோமோ இல்லையோ  சொந்த ஊர்லதான்டா சாவணும் 
செத்ததுக்கு  அப்றம் எந்திரிச்சு பாக்க  போறிங்களா னு கேட்டாலும்.
மரணம்  கூட  நமக்காக  கண்ணீர் விடும் மனிதர்களிடேயே நிகழ்ந்தால் தான் சிறப்பு.

வெள்ளி, 24 ஜூன், 2016

கந்தசாமியும் , ஐரோப்பிய ஒன்றிய பிரிட்டன் பிரிவும்- நிகழ்வுகள்


இன்று  கிராமத்தில் இருந்து மகள்  திருமணத்திற்கு  நகை வாங்க டவுனுக்கு வந்த கந்தசாமிக்கு , ஐரோப்பிய  ஒன்றியத்தில்  இருந்து  பிரிட்டன்  விலகினால் பவுனுக்கு  1000 ரூ.பாய்  அதிகமாகும் என்று தெரிந்திருக்குமா என்று  தெரிய வில்லை ?

இப்பொது  எல்லாம்  உள்ளூர்  பஞ்சாயத்தில்  என்ன  நடக்குது ன்னு  தெரிஞ்சிக்கணுமோ இல்லையோ , உலகத்துல  என்ன  நடக்குதுன்னு  தெரிஞ்சுக்கணும்  போல ...

தனி ஒருவன் ஜெயம்  ரவி சொல்வது  போல , 2 பக்க பொருளாதார செய்திகள் தான் , பேப்பரில்  உள்ள  மற்ற 14 பக்க  செய்திகளையும் தீர்மானிக்கின்றது போல ..

புது யுக  ந(டி)ட்பு 

சில  அலுவலக நண்பர்களுக்கு எனது போனில் எத்தனை GB RAM இருக்கிறது என்று  தெரியும் , ஆனால் எனக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறது என்று  தெரியாது 


அணில் கும்ப்ளே :-
 புதிய  பயிற்சியாளராக  அணில் கும்ப்ளே  நியமனம் :-  மீடியா  மகிழ்ச்சி , இருக்காதா  இன்னும் ஒரு வருசத்துக்கு விராட் கோஹ்லி ,கும்ப்ளே  மோதல் ,மனக்கசப்பு ன்னு போட்டு பொழுதை ஓட்டலாம் இல்ல,.

புதன், 22 ஜூன், 2016

பிரதமரை பார்த்து உலகம் வியக்கிறதா ?

எத்தகைய நாடு இது என்று
 ..
 20 செயற்கை கோள்களுடன் ராக்கெட் விண்ணில் செலுத்தி  வெற்றி  அடைகிறது , மறுபக்கம் இந்தியாவின் பொருளாதார  தலைநகரமான மும்பையில்   2 சென்டி மீட்டர் மழை  பெய்ததால் 300 ரயில்கள் ரத்து  செயப்பட்டு , அன்றாட வாழ்க்கை  ஸ்தம்பிகிறது.
இவ்ளோ  திறைமைசாலிகள் இருந்தும் அடிப்படை வசதிகள்  பெரு நகரங்களிலும் இன்றும் பூர்த்தி  அடைய  வில்லை.

உலக  அரங்கில் இந்தியாவை தலை நிமிர  செய்வேன் என்ற மனிதர் எதாவுது செய்வார் பார்த்தால்  2000 கோடி க்கு அமெரிக்க அதிபரை போல் விமானம் வாங்குகிறார் .10 லட்சம்  ரூபாய்க்கு  சட்டை  போடுகிறார் ..இனிமேல்  இந்தியாவை பார்த்து  உலக  நாடுகள்  வியக்கும்  என்கிறார் .
 நீங்கள் அமெரிக்க  அதிபரை போல் வசதிகளை அனுபவியுங்கள்  ஆனால்  நீங்கள்  இந்திய குடிமகன்களுக்கு அமெரிக்க  குடிமகன் கள் போல் அல்ல  சாதாரண  அடிப்படை  வசதிகளை  பூர்த்தி  செய்து  விட்டு  அனுபவியுங்கள்.

கோடிக்கணக்கில்  செலவு  செய்து  யோகா  தினம்  கொண்டாடுகிறார். யோகா  நல்லது  தான் அதை சொல்ல எல்லா  அரசாங்க  நிகழ்ச்சி  தேவையா ?  பத்தாததுக்கு  சாமியார்க்கு  எல்லாம்  free  புபிளிசிட்டி  வேற ?

முன்னேறிய  நாடுகளின்  பிரதமர்கள்இன்றும்   சைக்கிளில் கூட  அலுவலகம்  செல்கிறார்கள் .  இந்திய  பிரதமரை பார்த்து  உலகம்   30 கோடி  மக்கள்  வறுமை  கோட்டில்  வாழும்  தேசத்தின்  தலைவர் இப்படி  எப்படி வீண்  செலவு  செய்கிறார்  என்றுதான்  வியக்கிறது  .

பிரதமரை  பார்த்து  உலகம்  வியக்கிறதா ?

செவ்வாய், 7 ஜூன், 2016

நாமும் தோனியல்ல .. வாழ்க்கையும் கிரிக்கட் போட்டியுமல்ல.

                               

    திரு கபில்தேவ் 2011 உலக கோப்பை   இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போது தோனியை பற்றி கூறியது
தோனி பல தவறான முடிவுகளை போட்டியின் போது எடுக்கிறார். (யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக களமிறங்கியது, அஸ்வினை இறுதி போட்டியில் நீக்கியது போன்றவை) ஆனால் கடுமையாக போராடி தனது தவறான முடிவுகள் சரியானதுதான்  என நிருபித்து விடுகிறார்

நாமும்  வாழ்வில்  நாம் எடுத்த பெரும்பாலான தவறான முடிவுகளை சரி என நிருபிக்கும் போராட்டத்திலேயே  விணடித்துவிடுகிறோம்...
 நாமும் தோனியல்ல .. வாழ்க்கையும் கிரிக்கட் போட்டியுமல்ல.

..
தவறை ஒப்பு கொண்டு , ஒவ்வொரு தருணங்களையும் ரசிப்பதே  வாழ்க்கை