திங்கள், 30 அக்டோபர், 2017

சின்னம் யாருக்கு கிடைக்கும்?

#சின்னம்
நாடு சுதந்திரம் அடைந்த பொழுது 80% மக்கள் எழத்தறிவற்றவர்கள்.
தேர்தலின் போது வேட்பாளர் பெயரையோ, கட்சியின் பெயரையோ படிக்க முடியாதவர்கள்.
அவர்களுக்காக உருவானது தான் சின்னம்,
சுவர்களில் சின்னம் வரைந்து பிரபலமடைய வைத்தனர்.
ஆனால் இன்று 95% மக்கள் கல்வி அறிவு உடையவர்கள். மக்கள் சுவர், செய்திதாள் எல்லாம் தாண்டி Facebook, whatsapp, internet, Satellite Channel வரை அரசியல் பேசுகின்றனர்..
இன்னும் சின்னம் கிடைச்சா ஈஸியா ஜெயிப்போம்ன்னு நினைக்கிறது 90% மக்களையும் முட்டளா நினைக்கிற மாதிரி தான்..
சின்னம் இருக்கிற இடத்தில் தான் இருப்பேன், வாக்களிப்பேன் என்பது அதை விட முட்டாள்தனம்.

#வெற்றியோ , தோல்வியோ உங்களின் நடவடிக்கையே தீர்மானிக்கும்.

ஒரு செய்தி மக்களை சென்றடய நாள் கணக்கில் ஆகி , மக்கள் அதை பற்றி வருடக்கணக்கில் பேசுவார்கள்,
இன்று மக்களை நிமிடத்தில் செய்தி  சென்றடைந்து, மக்கள் 4 நாட்களில் மறந்தும் விடுகின்றனர்...

இன்றும் நான் என்ன தப்பு வேணாலும் செய்வேன், ஆனால் மக்கள் MGR சின்னத்துக்காக எனக்கு வாக்களிப்பார்கள் என்பதும் மூட நம்பிக்கை தான்..

#வெற்றியோ, தோல்வியோ உங்கள் நடவடிக்கையே அதை தீர்மானிக்கும்....

its my opinion........

செவ்வாய், 24 அக்டோபர், 2017

TTV தினகரனும் YSR ஜெகன் மோகன் ரெட்டியும் ...வழிகாட்டும் ஆந்திர வரலாறு.

TTV  தினகரனும்  YSR  ஜெகன் மோகன்  ரெட்டியும் ...வழிகாட்டும் ஆந்திர  வரலாறு.


      2009  YS  ராஜசேகர  ரெட்டி மறைவுக்கு  பிறகு , ஒட்டுமொத்த  ஆந்திர காங்கிரசும்  ஜெகன்  மோகன்  ரெட்டியின்  பின்  அணிவகுக்க  தயாராகிறது. ஆனாலும்  மத்திய  காங்கிரஸ் அரசுக்கு  மாநிலத்தில்  இன்னொரு வலிமையான  தலைவரை  உருவாக்க  மனம்  இல்லை . ஜெகன்  மோகன்  ரெட்டியை ஒதுக்கி  விட்டு , மக்கள்  செல்வாக்கு  இல்லாத ரோசையா , கிரண் குமார்  ரெட்டி  போன்றவர்கள் முதல்வர்  ஆக்கபடுகிறார்கள் .

மத்திய  மாநில  அரசுகளின் அதிகாரத்தை  பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக   YSR ஆதரவாளர்களை  இழுக்க  ஆரம்பித்தனர். 
சுதாரித்து  கொண்ட  ஜெகன்  மோகன் , தன்னுடைய ஆதரவாளர்களான 18 MLA களுடன்  பிரிகிறார். அவரின்   மீது வருமான  வரி துறை , அமலாக்க  பிரிவின் மூலமாக   வழக்கு  போடபடுகிறது . 16 மாதம்   சிறையில்  அடைக்கபடுகிறார்.                                மத்தியில்  மாநிலத்திலும்  காங்கிரஸ் ஆட்சியை  தொடர்கிறது . இரண்டாம்  கட்ட  தலைவர்கள் எல்லோரும் அதிகாரத்தை விட  மனமில்லை காங்கிரஸில் தொடர்கிறார்கள்

தேசிய  கட்சியாதலால் சின்னம்  கேட்க கூட  முடியவில்லை . வேறு சின்னம்  தான் . 55 ஆண்டுகால  ஆந்திர அரசியலில்  கை  சின்னம்  இல்லாமல் நிற்க முடியுமா என்றார்கள். ஆனாலும் ஜெகன் செல்வாக்கு  உயருகிறது . 2014 பிஜேபி  கூட்டணியுடன்  போட்டியிட்டு , மோடி  அலையில் மயிரிழையில்  நாயுடு வெற்றிபெறுகிறார் ..ஜெகன் மோகன்புதிய  சின்னமான  மின்விசிறி  சின்னத்தில் (FAN) போட்டியிட்டு  67 சட்டமன்ற தொகுதிகளிலும் , 9 நாடாளுமன்ற  தொகுதியிலும்  வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சி  தலைவர்  ஆகிறார் .

சிரஞ்சீவி  போன்ற  நடிகர்கள்  வந்து  காங்கிரஸில்  சேர்ந்து  மாநிலத்தை இரண்டாக  பிரித்து குட்டையை  குழப்பினாலும்,   காங்கிரஸ ஒரு நாடாளுமன்ற  தொகுதியிலோ  , ஒரு சட்டமன்ற  தொகுதியிலோ கூட  வெற்றிபெற  முடியாமல்  படுதோல்வியை  சந்திக்கிறது . கை  சின்னத்துடன்  அதிகாரத்தில்  இருந்த  காங்கிரஸ்  மாநில  அரசியலில்  தொலைந்து  போகிறது

கிட்டத்தட்ட  ஜெகன்  மோகன் போன்றுதான்  TTV  அவர்களின்  நிலையும்  , ஆயிரம்  வழக்குகள் இருந்தாலும்  ,  தலைமை  பண்பு , மத்திய  அரசுக்கு  அடிபணியாமை ,  மாநில  நலனில்  அக்கறையும் , மாநில உரிமையை   விட்டு  கொடுக்க மாட்டார்   என்ற  நம்பிக்கையும்  சேர்ந்து  அரசியல்  வெற்றிடத்தை  நிரப்பும்  வலுவான  தலைவராக  உருவாக்கும் என்று   நம்புகிறோம் . .

மேலும்  அதிமுக  இரண்டாம்  கட்ட  தலைவர்களால்  பலம்  அடைந்த  இயக்கம் இல்லை . இது  ஒற்றை  தலைமையையும் , தொண்டர்களையும் பலமாக  கொண்ட  இயக்கம் .   இரண்டாம்  கட்ட தலைவர்கள்  என்று  சொல்லபடும்  பலரும்  மக்களை  சந்தித்து  வந்தவர்கள்  அல்ல . சசிகலா  உறவினர்கள் வீட்டையும் , போயஸ்  தோட்டத்து கேட்டையும்  சுற்றி பதவி  பெற்றவர்கள் .

இப்போது  நிர்வாக  குளறுபடிகளால் ஆள்பவர்கள்  மேலும் வலிமை  இழப்பார்கள் .  தேர்தல்  வரும்போது இன்று  ஆட்சியில்  இருக்கும்  EPS ,OPS  போன்றவர்கள் ரோசையா , கிரண்குமார்  ரெட்டி போன்று  காணாமல்  போய்  விடுவார்கள்.  மாநில  நலன்  சார்ந்த போராட்டங்களால்  TTV  வலுவடைவார். TTV  தினகரன்
 திமுக விற்கு  வலுவான  சவாலாக  விளங்குவார். அவரிடமே   அதிமுக  இயக்கமும் வந்து சேரும் .