திங்கள், 3 டிசம்பர், 2018

டெல்டா மனிதர்களின் வாழக்கையில் கஜா புயலின் பாதிப்பை பற்றிய பதிவு

கற்பனையல்ல ... டெல்டா மனிதர்களின் வாழக்கையில் கஜா புயலின் பாதிப்பை பற்றிய பதிவு.


அன்புள்ள ஆனந்தி ,                                                                             NOV-10 ,2018
            இன்றோடு 14 ஆண்டுகள் ஓடி விட்டது இந்த  அரபு  தேசத்தில்,     26 வயதில் இந்த ஊருக்கு வந்து, இரண்டு  ஆண்டுக்கு ஒரு முறை சில  மாதங்கள் மட்டும் நமது டெல்டா மண்ணில் , நமது  10 ஆண்டு திருமண வாழக்கையில் உன்னோடு  இருந்தது  சில மாதங்களே.
ஆனால் இந்த  14 ஆண்டுகால  உழைப்பில் , வாங்கி  போட்ட நிலத்தில் தென்னை வைத்து காய் காய்க்க ஆரம்பித்து விட்டது.
வாழையும்  ஆண்டு வருமானத்துக்கு ஆகி  விட்டது, இதனுடன் , மனதுக்கு பிடித்த வயலில் இரு போக சாகுபடி நடக்கிறது.  நமக்கும் நமது பிள்ளைக்குமான ஆடம்பரம் இல்லாத  எளிய தேவைகளுக்கு போதுமான வாழ்க்கை நடத்த  வருமானம் வருகிறது.மனம்  நிறைவாக இருக்கிறது. 

  நீ சொன்னது  போல்  40 வயது ஆகும் போது இந்த பாலைவன வாழக்கையை விட்டு விடலாம் , இந்த  முறை விடுமுறை நிரந்தரமானது . இனி பிள்ளைகளை பள்ளிக்கு விடுவது , பாடம்  சொல்லி தருவது, விவசாயம்  என  ஒவ்வரு  நாளும்  இனிமை ,
விட்டு சென்ற வருடங்களை நினைவில் கொள்ளாமல் இனி ஒவ்வரு நாளும் உன்னோடு, 
தீபாவளி, பொங்கல் எல்லாம் நாம் ஒன்றாக கொண்டாடுவோம் .
கேம்ப்  சாப்பாடு இல்லாமல் ,காலை டிபன் முதல்  இரவு உணவு வரைஎல்லாம்  உன் கையில்தான். உறவினர் வீட்டு விசேஷத்திற்கு நீ தனியாக  போக வேண்டியது இல்லை நாம் சேர்ந்து  போகலாம்.

 நாட்களை எண்ணி கொண்டு  இருக்கிறேன் .... விரைவில்  டெல்ட்டாவில் புதிய விடியலை நோக்கி.

 அன்புடன்

மகேந்திரன்.
சோழகன் குடிகாடு , ஒரத்தநாடு .


அன்புள்ள மாமாவுக்கு ,                                                              Nov 17,2018                                       

    நாம்  போடும் கணக்குகள்  ஒன்று என்றால் கடவுள் போடும் கணக்குகள் வேறு மாதிரியாகி   உள்ளது.  முன்தினம் அடித்த கஜா புயல்  நமது கனவுகளை நமது தோட்டத்து தென்னை மரம் போல் வேருடன்  பிடுங்கி  எறிந்து விட்டது.

 வைத்திருந்த 500 தென்னையில் ஏறத்தாழ 450 மரங்களை சாய்த்து விட்டது , பொங்கலுக்கு வெட்ட நினைத்த 2 ஆயிரம் தார்களில்  பெரும்பாலானவை பிடுங்கி எறிந்து விட்டது.
வயற்காடு சம்பா பயிரும் சாய்ந்து விட்டது ...

  வரும் நாட்கள் கடினமாக தான்  இருக்கும் போல் தெரிகிறது .கையிலிருக்கும்  சேமிப்பை வைத்து 4 முதல் 5 மாதம் சமாளித்து விடலாம், நாம் முழுவதும் மீண்டு  எழ சில வருடங்கள் ஆகும் ,
 மாமா வருத்தமாக தான் இருக்கிறது ,  இன்னும் 2 முதல் 5 ஆண்டுகள் நீங்கள் பாலைவன வாழ்க்கையை தொடர்ந்தால் மட்டுமே நாம்  கவுரவமான வாழ்க்கை இங்கு வாழ முடியும்,

 இத்தனை  வருடம் காத்திருந்த நானும் என் பிள்ளைகளும் இன்னும் சில வருடம் காத்து இருக்கிறோம் .

  நமது விடியலுக்கான நாள் தள்ளி போய் இருக்கிறதே தவிர தொலைந்து விடவில்லை .

நம்பிக்கையுடன்

ஆனந்தி
குமார் - இரண்டாம் வகுப்பு
 பூஜா - LKG

by வேலு மருதையன் -

 

வியாழன், 25 அக்டோபர், 2018

TTV- தலைவர்கள் உருவாக்கப் படுவதில்லை

தலைவர்கள்  உருவாக்கப் படுவதில்லை , யார்  கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு , வெற்றி பெறுகிறார்களோ  அவரே தலைவர்.
தமிழக அரசியலில்  ஜெயலலிதாவோ , கருணாநிதியோ , MGR  தமிழக அரசியலில்  உச்சத்தை  அடைந்தவர்கள்  அனைவரும்  நெருப்பாற்றை நீந்தியே   அடைந்துள்ளனர்.  அதனால்  தான்  25 முதல்  50 ஆண்டுகள்  வரை அந்த உச்சத்தை  தக்க வைக்கவும் முடிந்தது .அதிர்ஷ்டத்தால் அடைந்தால் தக்க  வைப்பது  கடினம் .

 கடந்த  ஒன்றரை  ஆண்டுகளாக  TTV  தினகரன்     பல்வேறு  இன்னல்களையும் , பலமுனை  தாக்குதல்களையும்     தன்னம்பிக்கையுடன் கூடிய ஒரு  புன்னகையுடன்  சந்தித்து தனக்கென  ஒரு  இயக்கத்தையும் , ஒரு  இளைஞர்  கூட்டத்தையும் உருவாக்கி  வைத்து உள்ளார் .

இன்றைய தீர்ப்பும் அவரது (Test for the personality /character) தன்னம்பிக்கைக்கு  ஒரு பலபரிட்ச்சையாகவே  பார்க்கபட்டது  . ஆனாலும் இன்று  அதை  தான்  பின்னடைவாக  பார்க்கவில்லை  என்று நம்பிக்கையுடன்  எதிர்கொண்டார் .
இது அவர் மேலும் தமிழக அரசியலில் உச்சத்தை அடைவார் என்ற  நம்பிக்கை அளிக்கிறது \.


திங்கள், 15 அக்டோபர், 2018

TTV தினகரன் என்னும் டிரம்ப் கார்டு

பாஜக 2ஜி  விடுதலைக்காக  திமுகாவிற்கு கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் காங்கிரசை கழட்டி  விட்டு  பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும்  என்பது  மட்டுமே .
தேர்தலில்  குறிப்பிட  தக்க வெற்றி  பெற்றால் , வட மாநிலங்களில் குறையும்  எண்ணிக்கைக்கு திமுக வின் நாடாளு மன்ற  உறுப்பினர்களை உபோயோகித்து கொள்ளலாம் .  2ஜி  அப்பீல் ஒன்றும்  இல்லாமல் போய்   மாவட்டங்களில்
கூட்டணி  பேச்சு  வார்த்தையில் 5 க்கும் குறைவான தொகுதிகளை காங்கிரஸ்க்கு  அளித்தால் காங்கிரஸ்  தானாகவே கூட்டணியை விட்டு வெளியேறும்  இது தான்  பிளான் .

 இங்குதான் TTV தினகரன் என்னும் டிரம்ப் கார்டு என்ட்ரி..பாஜக , திமுகா வின் கள்ளத்தனத்தை உணர்ந்த  ராகுல் , TTV யின்  அ ம மு க வுக்கும் கதவுகளை திறந்தே வைத்து இருக்கிறார் .
பாஜகவிற்காக காங்கிரசை பகைத்து  கொண்டால் ,தனித்து நிற்கும் திமுக  டெல்டா  மற்றும்  தென் மாவட்டங்களில் ஊதி தள்ளப்படும் .
அதே நேரத்தில் இந்தியா முழுதும் பாஜக வெற்றி பெற்றால் 2ஜி யில் திமுக கதி அதோ கதி தான். இருதலை கொல்லி எறும்பாக தவித்து இருக்கிறார் ஸ்டாலின்.

வரும் வட  மாநில சட்டசபை காங்கிரஸ் பெறும் வெற்றியை வைத்து தான் திமுகவின் பயணம் அமையும்.

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

200 ரூபீஸ் உடன்பிறப்பு - ஒரு கலாய் சிறுகதை



ஒரு  டீன்  ஏஜ் பையன் காசோட  அருமை தெரியாம  இருந்தான். அவங்க அப்பாட்ட  போய்  எனக்கு  தினமும் பாக்கெட் மணி  200 ரூபாய் குடுங்கனு  கேட்டான் .

அதுக்கு  அவங்க அப்பா , 200 ரூபாய் அவ்ளோ சாதரணமா  போச்சா ,அதோட மதிப்பு  தெரியுமா உனக்கு ?
   ஒரு திமுக  உடன்பிறப்பு  இணைய தளத்தில்  200   ரூபாய்க்காக எவ்ளோ  கஷ்டப்படறான்னு தெரிஞ்சா  நீ  இப்டி  கேட்க  மாட்ட ?

அவன்  200 ரூபாய்க்காக  கலைஞர் முதல்  நான்காம்  கலைஞர் உதயநிதி மகன்  வரை, 2 டஜன்  குடும்ப  உறுப்பினர் அனைவருக்கும்  முட்டு கொடுக்கணும்.

200 ரூபாய்க்காக , மொத  நாள்  Go back Modi /amit  shaw  ன்னு  ட்ரெண்ட் பண்ணிட்டு , மறுநாள்  தலைமை  நினைவஞ்சலிக்கு அவங்களையே  தலைமையா போட்டா , கொஞ்சம்  கூட வெட்க  படாம  அரசியல் நாகரீகம் ன்னு முட்டு குடுக்கணும்.

200 ரூபாய்க்காக, குடும்பம்  ஒத்துமையா இருந்தா  அஞ்சா நெஞ்சர் ன்னு  சொல்லனும் , சண்ட  வந்தா அராஜகம் பண்றவர் னு சொல்லணும் .
 
மொத நாள்  வைகோவை  துரோகின்னு  ஸ்டேட்டஸ் போட்டு,மறுநாள்  போர்வாள் னு சொல்லணும் .

ஒருநாள் ஈழ தமிழர்  சகோதரன்னு  சொல்லணும் , இன்னொரு  நாள் அவனை தீவிரவாதி னும் சொல்லணும் 

கூட்டணி கட்சின்னு உதவாத  பத்து பேர்  இருப்பாங்க , அவங்களுக்கும்  200 ரூபாய்க்காக ஒரு அடிஷனல்  முட்டு ..

இதெல்லாம்  விட கட்சிக்காரன்  கூட்டத்துல பொண்ணுங்க  இடுப்பை  கிள்ளுவான் , பிரியாணிக்கு பாக்ஸிங் பண்ணுவான்  அந்த  கொடுமையை   எல்லாம்  நியாயபடுத்தனும் .

ஒரு  மனுஷன் 200 ரூபாய்க்காக எப்படி  பாடு  படுறான் பாத்தியா ?

மகன்  " அப்பா  எனக்கு  பணத்தோட அருமை  தெரிஞ்சிடுச்சு , இனிமே நான்  கேட்க மாட்டேன் 


புதன், 1 ஆகஸ்ட், 2018

முல்லா கதையும் , விசாரணை ஆணையமும்

முல்லா கதையும்  ,  விசாரணை ஆணையமும் 

ஒருநாள்  முல்லா  தெரு  விளக்கு  வெளிச்சத்தில்  எதையோ  தேடி  கொண்டு  இருந்தார் . அப்போது  வந்த முல்லாவின்  நண்பர்  "என்ன  தேடுகிறீர்கள்  முல்லா  என்று   கேட்டார். எனது  மோதிரம்  தொலைந்து  விட்டது , அதை  தான்  தேடுகிறேன்  என்றார் . மோதிரம்  இங்குதான்  தொலைந்ததா  என்று   நண்பர் கேட்டதற்கு முல்லா  பக்கத்தில்  உள்ள  இருளில்  தொலைந்தது  ஆனால்  இருளில்  தேட  முடியாது  என்பதால்  பக்கத்தில்  உள்ள  வெளிச்சத்தில்  தேடுகிறேன்  என்றார்.

அதுபோல்  ஜெயலலிதா  மறைவிற்கு  அமைக்கப்பட்ட  விசாரணை  ஆணையம் , போயஸ்  தோட்ட  வேலையாள் , அப்போலோ  ஹாஸ்பிடல் செக்யூரிட்டி என்று  பலரையும் கூப்பிட்டு சசிகலாவிற்கு  எதிராக  வாக்குமூலம்  கிடைக்குமா  என்று முயற்சிக்கிறது.
ஆனால்  அதிகாரங்களை வைத்திருந்த   அப்போதைய  பொறுப்பு  முதல்வர் , மாநில  சுகாதார   துறை  அமைச்சர், AIIMS டாக்டர்கள் , அவர்களை  அனுப்பிய மத்திய  சுகாதார துறை அமைச்சர் , மருத்துவமனையில் வந்து சந்தித்த  அப்போதைய  கவர்னர் , அப்போதைய மத்திய அமைச்சர் தற்போதைய  துணை  குடியரசு  தலைவர்  இவர்களை  விசாரிக்க  வேண்டியதுதானே ?

அதை  விட்டு  வாட்ச்மன்  வேலையாள்  விசாரிப்பது , வெளிச்சத்தில்  தேடிய  முல்லாவின்  கதை போல்  அல்லவா  இருக்கிறது.

அது  என்ன ஜெயலலிதாவிற்கு  ஸ்வீட்  கொடுக்கப்பட்டதா ? என்று ஒரு  கேள்வி.அவர் என்ன  கை  குழந்தையா ? ஜெயலலிதா  ஸ்வீட்  சாப்பிட்டாரா ? என்பது தானே  சரியான   கேள்வியாக இருக்க முடியும்.

ஒவ்வரு  முறையும் ஆணையத்தில்  இருந்து ஊடகத்துக்கு  கசிய  விடப்படும் தகவல் சசிகலா விற்கு  எதிராக  இருக்கிறது ?

முடிவுரை  எழுதி விட்டு  , கதையை  எழுதுகிறதா  ஆணையம் 

வியாழன், 21 ஜூன், 2018

அரசியல் பற்றிய ஒரு புரிதல் (தொடக்க நிலை )


அரசியல்  பற்றிய  ஒரு  புரிதல் (தொடக்க நிலை  )

தற்போதைய  நிலையில் ஒரு அரசியல்  இயக்கம்  வெற்றி  பெற  முதன்மையானவைகள்  .

   முதல் வகை (idealogist  ) :- கொள்கை /.சித்தாந்தம்  விளக்க  கூடியவர்கள், புள்ளி  விவரங்களை  விரல் நுனியில் வைத்து  இருப்பவர்கள் , கொள்கை  விமர்சனக்களுக்கு பதிலடி கொடுப்பவர்கள் ,தேர்தல் அறிக்கை  தயாரிக்க  உதவுவார்கள். தொலைக்காட்சி  விவாதங்களில்  தாக்கத்தை ஏற்படுத்த  கூடியவர்கள் .  மக்கள்  என்னதான்  காசு  குடுத்தாலும் , வாக்களிக்க  ஒரு லாஜிக் எதிர்பார்ப்பார்கள்  அந்த லாஜிக்கை தர  கூடியவர்கள்

 இரண்டாம்  வகை  (Muscle Man ) :- எனப்படும்  பலம் வாய்ந்தவர்கள் ,  ஜாதி  ரீதியாகவோ , பிராந்திய ரீதியாகவோ தொண்டர்   பலம்  உடையவர்கள். கட்சி கூட்டங்கள் , மாநாடுகள், போராட்டம்   போன்றவற்றிக்கு  தொண்டர்களை  திரட்ட  கூடியவர்கள். அமைப்பு  ரீதியாக ஒன்றியம்,முதல்  கிளை கழகம் வரை  தொடர்பு வைத்து  இருப்பவர்கள். ஆட்சிக்கு  வரும்  போது  அவர்களது பிராந்தியத்தில்  கிளை கழகம் வரை  பயனடைவதை  உறுதி  செய்ப்பவர்கள் . இயக்க  கட்டமைப்பை  உறுதி  செய்பவர்கள்.


மூன்றாம் வகை (Pockets ):-  ,கட்சி அதரவு  நிலையில் இருக்கும் மிக  பெரும்  தொழில்  அதிபர்கள் , ஆட்சி  நடக்கும்  போது  பொருளீட்டி  கொண்டு தேவைகளின்  போது  நிதி  தருபவர்கள். அதரவு  ஊடகங்களையும்  நடத்த  கூடியவர்கள்

இதில்  ஒருவரே  இரண்டு அல்லது  மூன்று  வகையில்  இருந்தால்  இன்னும்  சிறப்பு.

தலைவர் :-  மக்களை  ஈர்க்க  கூடியவர் , மேல சொன்ன 3 வகையிலும்  பலம்/அறிவு   வாய்ந்து இருக்க  வேண்டும்  , 3  வகையினரையும் கட்டுப்பாட்டில்  வைத்து  இருக்க  வேண்டும் . இவர்களுக்கான  balance maintain செய்ய வேண்டும் , எந்த  நிலையிலும் மனம்  தளராதவராகவும் ,நம்பி வந்தவர்களை  காப்பாற்ற கூடியவராகவும் இருக்க வேண்டும் ,இதையும்  தாண்டி மக்கள்/தொண்டர்   நலத்தில் இயற்கையாகவே கொஞ்சம்    அக்கறை உள்ளவராகவும்  இருக்க  வேண்டும்.

கள  பணியாளர்கள் :- இயக்கத்தின்  கடைசி  நிலை தொண்டர்கள், தலைவர் மற்றும்  பிராந்திய  தலைவர்கள்  மீது அதீத அன்பு  உடையவர்கள்.  தனது  வாக்கு  மட்டும் இல்லாமல் தன்  பகுதி வாக்காளரை  அழைத்து  வந்து தனது கட்சிக்கு வாக்களிக்க வைக்க கூடியவர்கள்

இன்றைய நிலையில்  இது    எல்லாம்  balanced இருந்தா  இயக்கம்  மக்களை  சென்றடையும் .

மத்தபடி  தகவல்  தொழில்  நுட்ப  பிரிவு  எல்லாம்  தேவைதான் , ஆனா களப் பணியில் இல்லாமல் வெறும்  ஸ்டேட்டஸ் போட்டு  கட்சி  வளரும்னு  நினைச்சா டேட்டா  வேணா  தீரும் , கட்சியெல்லாம்  வளராது.

இது  என்னுடைய  அரசியல்  பற்றிய புரிதல். சரியா? தவறா ? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்





புதன், 16 மே, 2018

பாஜக ஆட்டம் முடியும் நாள் அதிக தொலைவில் இல்லை

பாஜக ஆட்டம் முடியும் நாள் அதிக தொலைவில் இல்லை.
வீழ்த்த படவே முடியாதவர் எவரும் இல்லை..
ஒரு மாநில வாரியான அலசல்
உபியில் மாயாவதி, அகிலேஸ், காங் இணைந்து சந்தித்தால் பாஜக 2014 ஆண்டை விட 50 தொகுதிகள் குறையும்...
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் , பீகார் , ஜார்கண்ட், குஜராத்தில் கடந்த முறை வென்றதில் குறைந்தது 30% இழுந்தால் இன்னும் 60 தொகுதிகள் குறையும்
மராத்தியத்தில் சிவசேனா தனித்து போட்டியிட்டால் 10 தொகுதி கூட பாஜகவுக்கு தேறாது.
ஆந்திராவில் நாயுடு டாட்டா காட்டி விட்டார், தெலுங்கானா ராவும் நெருங்க விடவில்லை.
கர்நாடகாவில் கவுடாவும் , காங்கிரசும் சேர்ந்தால் பாஜகவுக்கு 10 தொகுதி கூட தேறாது.
தமிழ்நாட்டில் நோட்டாவுடன் போட்டி, யார் கூட்டணி வைத்தாலும் அவர்களுக்கு அரசியல் தற்கொலை தான்
2014 ஆண்டை விட கிட்டதட்ட 200 தொகுதிகள் குறையும்..
வடகிழுக்கு, வங்காளம், ஒரிசா சிறிது அதிகரித்தாலும் 160 தொகுதிகள் குறையும்.
..
இப்போதைக்கு தேவை எதிர்கட்சிகளின் ஒற்றுமை.. அதை ஜனநாயக படுகொலைகள் மூலம் பாஜக செய்து விடும்
உங்களை அர்னப ் போன்ற பொறுக்கி தின்னும் ஊடகங்களால் காபாற்ற முடியாது..
ஆட்டம் போடுங்கள் , வீழும் நாள் வெகுத் தொலைவில் இல்லை.

வியாழன், 26 ஏப்ரல், 2018

உறவுகளில் சில அரசியல் தலைவர்கள்

அரசியவாதிகள்  எல்லா  இடங்களிலும்  இருக்கின்றனர் .
உங்கள் உறவுகளின்  திருமணங்களில்   சில  அரசியல்வாதிகள்  இருப்பார்கள் நீங்கள் கண்டுபிடித்து கொள்ளுங்கள்  யார் அவர்கள் என்பதை  ?

வைகோ :- திருமண வீட்டிற்கு  முதலில்  வருவார் , உரிமையோடு  எடுத்து  போட்டு  எல்லா  வேலையும்  செய்வார், ஆனால்  திருமணத்துக்கு  முன் னாடி  யாரிடமாவது  கோவித்து  கொண்டு  .
கோபமாக  கிளம்பி  விடுவார்.

டுமிலிசை :- எல்லா  கல்யாண  வீட்டிலும் டம்மி பீசா  ஒரு பொண்ணு  இருக்கும்  ,  ஆனால் திருமணமே  தன்னால்தான்  தான்  நடை பெறுவது   போல்  சீன்  போடும் அங்கும்  இங்கும்  வீடியோ  காமெரா  முன்னாடியே   சுத்தும்   ..

கருணாநிதி :- கல்யாண  வீட்டில்  நடக்கும்  பெரும் பிரச்சனைகளுக்கு  மூல காரணம்  அவராகத்தான்  இருப்பார்  .ஆனாலும்  அவரே  பிரச்சினையை  தீர்க்க  உதவுவது  போல்  நடிப்பார். எல்லாரது கவனமும் தன்  மேல்  இருக்க  வேண்டும்  என்பதை மட்டும்  உறுதி  செய்வார் .

ஜெயலலிதா :-  வெட்டு  ஒன்னு ,துண்டு ரெண்டாக  பேசும்  ஒரு பெண்மணி இருப்பார்    , சிறிது  முன் கோபக்காரர் . ஆனாலும் அவரது நியாயம்  இருப்பதால்    நிறைய    அவரை பிடிக்கும் .

தினகரன்  :- மனிதருக்கு   சொந்தக்காரன் , வழக்குனு  தலை போற ஆயிரம்  பிரச்சனை  இருக்கும் , ஆனால்  திருமண வீட்டில்   சந்தோசமா   முன்னாடி நின்னு   எல்லோரிடமும்  சிரித்து  சிரித்து  பேசி கொண்டு இருப்பார்.

எடப்பாடி :- உறவினர் வட்டாரத்தில் திடீரென  அதிர்ஷ்டம்  அடிச்சு  பணக்காரர் ஆகி  இருப்பார், தன்னுடைய  பெருமையை  தானே பேசி கொண்டு திரிவார்.

ராகுல்/ ஸ்டாலின் -  பெரிய  குடும்பத்து  பிள்ளைகள் , தான் பெரிசா  சாதிக்காட்டியும் குடும்ப  பெருமையை  வைத்து  கொண்டு  கல்யாண  வீட்டில்  மரியாதையை  பெறுவார்கள் ..











ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

சசிகலா செய்த தவறு?

சசிகலா
33 ஆண்டு முன்பு,
காலம் அவருக்கு இரு வாய்ப்புக்களை தந்தது.
1, அரசு அதிகாரியான கணவருடன் நிம்மதியான உயர் நடுத்தர குடும்ப வாழ்க்கை.
2, உயிர் தோழியின் அரசியல் களத்திற்கு துணையாக போராட்ட வாழ்க்கை
அவர் தேர்ந்தேடுத்தது 2வது வாய்ப்பை.

திமுக ஆட்சி காலத்தில் " ஒரே ஒரு வாக்குமூலம், உங்களுக்கு விடுதலை, ஜெயலலிதாவிற்கு தண்டனை " என்ற பேரத்திற்கு அவர் சம்மதித்து இருந்தால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வேறு மாதிரி முடிந்து இருக்கும்,

யாருக்காக வாழ்ந்தாரோ , யாரை மருத்துவமனையில் இமையாக காத்து நின்றாரோ அவரது கொலைப்பழியையும் தாங்கி ஒரு புகைப்படம் வெளியிட்டால் அக்காவின் புகழூக்கு இழுக்கு தயங்கியவர்.

காலில் விழுந்து வாழ்வில் வளம் பெற்ற அத்தனை பெறும் துரோகியாகி நின்றனர்.
கணவரின் இறுதி மூச்சின் போது கூட அருகில் நிற்க  அனுமதி வேண்டிய போது, இவரால் வாழ்வு பெற்றவர்களாலே முட்டு கட்டைகள் போடப்பட்டது.

தஞ்சையின் தலை மகளால் வாழ்வு அடைந்தனர் பலர்.
ஆனால் இவர் முதலாவது வாய்ப்பை தேர்ந்து எடுத்து இருந்தால் கணவருடன் நிம்மதியான குடும்ப தலைவியாக சென்னையிலோ , தஞ்சையிலோ வாழ்ந்து இருப்பாரோ என்னவோ?

வெள்ளி, 2 மார்ச், 2018

TTV யின் ராஜபாட்டை

தந்தி TV பான்டே நேர்காணல் TTV யின் Aggresive முகத்தை வெளிப்படுத்தியது என்றால்,
 தந்தி TV ராஜபாட்டை TTV யின் அமைதி. யதார்த்தமான முகத்தை வெளிப்படுத்தியது.
கருணாநிதி போன்று மிமிக்ரி செய்ய கேட்ட பொழுது " கூச்சமாக இருக்கு" என்று சிரித்தபடி கூறியது nice.
GK மூப்பனார், வாஜ்பாய் பற்றிய நினைவு கூறலும் ,
அம்மா விலக்கி வைத்த தருணத்தை பற்றி மழுப்பல் இல்லாமல் விளக்கியதும் அருமை.
நிகழ்ச்சியின் எந்த ஒரு நொடியிலும் தற்பெருமை வெளிபடவில்லை.
நிகழ்ச்சியை பார்த்த பிறகு அண்ணன் TTV யின் மீதான மரியாதை இன்னொரு படி உயர்ந்துள்ளது..

ஸ்ரீதேவி மரணமும், சசிகலா மீதான பழியும்

ஸ்ரீதேவி துபாயில் இறந்ததால் போனி கபூர் பழி சொல்லில் இருந்து தப்பித்தார்.. 3 நாளில் துபாய் போலிஸ் தீர ஆராய்ந்து விடுவித்து விட்டது..
இந்தியாவில் இறந்து இருந்தால், மீடியா டிரையல் நடந்து இருக்கும், அவரது இழப்பை பொருட் படுத்தாமல் அவருக்கு கொலைக்கார பட்டம் கிடைத்து இருக்கும். கொலை செய்ததை நேரில் பார்த்தது போல் யூடியுப் வீடியோக்கள்.
அப்புறம் ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன்.அவரும் வாட்ச்மேன், பால்காரன்  விசாரணை ஆரம்பிச்சு டைம்பாஸ் பண்ணுவார்
டிவி விவாதம் சம்பந்தமே இல்லாத ஆட்கள் வந்து கருத்து சொல்வார், நக்கீரன், விகடன் 6 மாதம் புலனாய்வு கட்டுரை ன்னு உடான்ஸ்.
தமிழச்சி ஸ்ரீதேவி, வடக்கிந்தியர் கபூர் தேசிய பிரிவினை குருப் கிளம்பிருக்கும்.
20 வருடம் மனைவியை நேசித்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்த மனிதருக்கு பிரிவு எப்படியான வலியை தரும் என்பதை  பழி சொல்பவர்கள் உணர வேண்டும்.

பிகு = அம்மாவிற்கு 33 ஆண்டு காலம் தோழியாய் , சகோதரியாய் வாழ்ந்து , 75 நாட்கள் மருத்துவமனையில் வைத்து பார்த்து கொண்டு, அவரின் மறைவின் வலியை தாங்கி கொண்டு, கொலை பழியையும் தாங்கி, இறந்தஅம்மாவின் இமேஜை காபாற்ற மருத்துவமனை புகைபடத்தை வெளியிடவும் மறுத்த எங்கள்  தாய் சின்னம்மாவின் தியாகமும் நினைவுக்கு வருகிறது...

புதன், 21 பிப்ரவரி, 2018

கண்ணடித்த நடிகையும், நீதிமன்ற வழக்குகளும்

முழு கற்பனை உரையாடல்

நீதிபதி:- இன்னிக்கு என்ன  கேஸ் ?
உதவியாளர் - காவிரி நீர் பிரச்சினை
நீதிபதி - அது பல வருச கேஸ், கர்நாடக வாய்தா கேட்கும், குடுத்துடலாம்.
உதவி - அடுத்து, MLA தகுதி நீக்கம் செய்து ஆட்சி செய்றாங்க அய்யா, அந்த கேஸ்
நீதிபதி - அதுல சபாநாயகருக்கு ஒரு 3 மாதம் டைம் குடுத்து பதில் சொல்ல சொல்லி நோட்டிஸ் அனுப்பலாம்..
உதவி - அடுத்து, விவசாய நிலத்துல எரிவாயு எடுக்க கூடாதுன்னு மனு அய்யா
நீதிபதி - அதுக்கு ஆய்வு கமிட்டி அமைச்சு 6 மாசத்துல அறிக்கை தாக்கல் செய்ய சொல்லலாம்
உதவி - நடிகர் குடிபோதையில் கார் ஏத்தி கொன்னுட்டார்.. கீழ் கோர்ட் தண்டனை தந்துருச்சு. கைது செய்யாம இருக்க ஜாமீன் மனு அய்யா,
நீதிபதி - அருமையான நடிகர் ப்பா அவர், இதுக்கு எல்லாம ஜெயில்ல போடறது, முதல் கேஸா எடுத்து  ஜாமீன் குடுத்துறலாம்.
உதவி -  கண்ணடிச்ச பாட்டு  நடிகை மீது எதோ ஒரு சங்கம் கேஸ் போட்ருக்கு, அதுக்கு அவங்க அப்பீல்,
 அப்புறம் ஒரு நடிகை ராணியா நடிச்ச படத்த தடைய நீக்க சொல்லி கேஸ்.
நீதிபதி - இது தனி மனித சுதந்திரம், கலை மீதான தாக்குதல்.. இன்னைக் கே விசாரிச்சு தீர்ப்பு கொடுப்போம்.
வாழ்க ஜனநாயக தூன்கள்..
|