செவ்வாய், 11 செப்டம்பர், 2018

200 ரூபீஸ் உடன்பிறப்பு - ஒரு கலாய் சிறுகதை



ஒரு  டீன்  ஏஜ் பையன் காசோட  அருமை தெரியாம  இருந்தான். அவங்க அப்பாட்ட  போய்  எனக்கு  தினமும் பாக்கெட் மணி  200 ரூபாய் குடுங்கனு  கேட்டான் .

அதுக்கு  அவங்க அப்பா , 200 ரூபாய் அவ்ளோ சாதரணமா  போச்சா ,அதோட மதிப்பு  தெரியுமா உனக்கு ?
   ஒரு திமுக  உடன்பிறப்பு  இணைய தளத்தில்  200   ரூபாய்க்காக எவ்ளோ  கஷ்டப்படறான்னு தெரிஞ்சா  நீ  இப்டி  கேட்க  மாட்ட ?

அவன்  200 ரூபாய்க்காக  கலைஞர் முதல்  நான்காம்  கலைஞர் உதயநிதி மகன்  வரை, 2 டஜன்  குடும்ப  உறுப்பினர் அனைவருக்கும்  முட்டு கொடுக்கணும்.

200 ரூபாய்க்காக , மொத  நாள்  Go back Modi /amit  shaw  ன்னு  ட்ரெண்ட் பண்ணிட்டு , மறுநாள்  தலைமை  நினைவஞ்சலிக்கு அவங்களையே  தலைமையா போட்டா , கொஞ்சம்  கூட வெட்க  படாம  அரசியல் நாகரீகம் ன்னு முட்டு குடுக்கணும்.

200 ரூபாய்க்காக, குடும்பம்  ஒத்துமையா இருந்தா  அஞ்சா நெஞ்சர் ன்னு  சொல்லனும் , சண்ட  வந்தா அராஜகம் பண்றவர் னு சொல்லணும் .
 
மொத நாள்  வைகோவை  துரோகின்னு  ஸ்டேட்டஸ் போட்டு,மறுநாள்  போர்வாள் னு சொல்லணும் .

ஒருநாள் ஈழ தமிழர்  சகோதரன்னு  சொல்லணும் , இன்னொரு  நாள் அவனை தீவிரவாதி னும் சொல்லணும் 

கூட்டணி கட்சின்னு உதவாத  பத்து பேர்  இருப்பாங்க , அவங்களுக்கும்  200 ரூபாய்க்காக ஒரு அடிஷனல்  முட்டு ..

இதெல்லாம்  விட கட்சிக்காரன்  கூட்டத்துல பொண்ணுங்க  இடுப்பை  கிள்ளுவான் , பிரியாணிக்கு பாக்ஸிங் பண்ணுவான்  அந்த  கொடுமையை   எல்லாம்  நியாயபடுத்தனும் .

ஒரு  மனுஷன் 200 ரூபாய்க்காக எப்படி  பாடு  படுறான் பாத்தியா ?

மகன்  " அப்பா  எனக்கு  பணத்தோட அருமை  தெரிஞ்சிடுச்சு , இனிமே நான்  கேட்க மாட்டேன்