ஞாயிறு, 29 ஜனவரி, 2017

கருணாநிதி வழியில் சசிகலா , ஜெயலலிதா வழியில் ஸ்டாலின்

கடந்த 25 ஆண்டுகளாக தமிழக அரசியலின் 2 ஆளுமைகள் கலைஞர் கருணாநிதி மற்றும்  புரட்சி தலைவி  ஜெயலலிதா ..

கலைஞர் அரசியல் அதிக  ஜனநாயகமானது ,
 குடும்பத்தில்  ஒருவருக்குத்தான்  சட்ட மன்ற  தேர்தலில்  போட்டியிட  வாய்ப்பு  என்று  என்று  கலைஞர்  கூறிய போது  அப்போ   ஸ்டாலினுக்கு   போட்டிஇட  வாய்ப்பு  அளிக்க  மாட்டிர்களா என்று  கேட்க்கும்  இரண்டாம்  நிலை  தலைவர்கள்  இருந்தனர் .
எதிர்த்து  கேள்வி  கேட்பவர் களையும்   அனுசரித்து  செல்லவே  முயற்சி  செய்வார்.  தேர்தலில்  போட்டியிட  வாய்ப்பு  கொடுத்து  போட்டியிட  மறுத்தவர்களையும் கட்சியை  விட்டு  நீக்க  மாட்டார்.

அம்மா அவர்கள்  கட்சி  ராணுவ  கட்டுப்பாட்டில்  இருக்க  வேண்டும் என்பதை  விரும்புபவர்.  கட்சியில்  இருந்து  கொண்டு  எதிர்த்து  பேசுவது என்பதை  நினைத்து  பார்க்க  கூட முடியாது. அம்மா அவர்களை தவிர  இரண்டாம்  நிலை  தலைவர்கள்  யாரும்  முன்னிலை  படுத்த  பட  மாட்டார்கள் .
 கலைஞரிடம்  அரசியல்  பயின்ற ஸ்டாலின்  இப்போது  விரும்புவது  ஜெயலலிதா  பாணி  அரசியலையே , பெரும்பாலும்  அவரே  முன்னிலை  படுத்தபடுகிறார்  , தலைமையின்  முடிவை   யாரும் கேள்வி   கேட்க கூடாது . கட்சி  முழுவதும்  தனது  ராணுவ  கட்டுப்பாட்டில் இயங்க  வேண்டும்  என்று  விரும்புகிறார்.

அம்மாவிடம்  அரசியல்  பயின்ற  சசிகலா  இப்போது  கடைபிடிப்பது  கருணாநிதி  பாணி  அரசியலை . எதிர்த்து அறிக்கை  விட்ட கே பி முனுசாமி  இன்னும்  கட்சியில்  இருக்கிறார் . நாஞ்சில்  சம்பத்  கூட  சமாதான  படுத்தபட்டார் . இரண்டாம்  கட்ட  தலைவர்கள்  முன்னிலை படுத்த  படுகிறார்கள்.

இன்னொரு  விசயம் , கலைஞர்  அடிக்கடி  மாநில  உரிமை , திராவிடம் அப்டின்னு  கத்தி  சுத்துவார்.  ஸ்டாலின்  அது எதுவும் செய்வதில்லை . ஆனால்  நடராஜன்  கலைஞர்  வழியில் மாநில  உரிமை , திராவிடர்  என்று  எல்லாம்  பேசுகிறார் .


ஆக , கலைஞர்  வழியில்  சசிகலாவும் , அம்மா  வழியில்  ஸ்டாலின் நடை  போடுகிறார்கள்  

வியாழன், 12 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு தடையும் , தமிழ் பொருளாதாரமும்

ஜெயம் ரவி தனி  ஒருவன் படத்தில்  கூறுவது போல , 6 ம் பக்கத்து பொருளாதார செய்திகள்  தான்  மற்ற  பக்க செய்திகளை  தீர்மானிக்கிறது . பொருளாதாரத்தில்  சிறந்து  இருக்கும்   ஜப்பான்  போன்ற நாடு அணு  ஆயுதம்  இல்லாமலே  வலிமையான  நாடாக  இருக்கிறது.

இந்திய  நிறுவனங்களை  ஏன்  ஊக்குவிக்க  வேண்டும் ?, வெளிநாட்டு  நிறுவனங்கள்  ஒரு சந்தையாக   மட்டும்  பார்க்கும்  பொழுது , இந்திய  தொழில்  நிறுவனர்கள்  சந்தையாக  மட்டும்  பார்க்காமல்  ஒரு நாடு என்று  ஒரு  உணர்வுடன்  பார்ப்பார்கள்  என்ற  நம்பிக்கை  தான் . மேலும்  வரும்  வருமானத்தை  இந்தியாவிலேயே  முதலீடு  செய்வார்கள்  என்ற  நம்பிக்கையும்தான் . போர், இயற்கை பேரிடர்   போன்ற தருணங்களில்  சந்தை  கண்ணோட்டம்  இல்லாமல்  உதவுவார்கள்  என்ற  நம்பிக்கையும்தான் .

இதே காரணத்திற்காக  நாம்   நமது  மாநிலத்தில்  தமிழ்  நிறுவனங்களையும் , தமிழ் தொழில் அதிபர்களையும்  ஆதரிக்க  வேண்டும். உதாரணமாக  தமிழ்  திரைப்படங்களை  பார்த்து  தமிழ்  திரையுலகத்தை  உயிர்ப்பாக  வைத்து  இருப்பதால் , தமிழ்  திரை உலகம்  உரிமையோடும் , உணர்வோடும்   ஜல்லிக்கட்டு , காவேரி  நீர்  பிரச்சனை  போன்றவற்றிற்க்கு குரல்  கொடுக்கின்றனர்.
இத்தகைய  குரலை  நம் அனைவரும் இந்தி  திரைப்படத்தை மட்டும் பார்த்து  இருந்தால் ஷாருக் கானிடமோ ,சல்மான்கானிடமோ  எதிர் பார்த்து  இருக்க  முடியாது .


 உள்ளூர்  அண்ணாச்சியை அழித்து  விட்டு , பன்னாட்டு  மளிகை கடையில்  வாங்க  ஆரம்பித்தால்  என்ன ஆகும்?, அண்ணாச்சி  கடையில்  நடப்பது வெறும் வியாபாரம்  மட்டும் அல்ல  அங்கு  ஒரு  நட்பு,  உறவு, அன்பு   எல்லாமே நடக்கிறது ,  வார்தா  புயலின்  போது  கார்டு  வேலை  செய்யா  விட்டாலும்  , ATM ல் இருந்து  காசு  எடுக்க முடியாவிட்டாலும் உரிமையுடன் அடுத்த  வாரம்  தருகிறேன் என்று  பொருள்  வாங்கினோம் மற்ற  இடங்களில் முடியுமா ?

இன்னொன்று , போட்டியார்களை  வைத்து  இருக்கும்  பொழுது  மட்டுமே வாடிக்கையாளர்  சந்தையாக  இருக்கும் , போட்டியாளர்களை  ஒழித்து  விட்டு  ஒரே  ஆளிடம்  இருந்தால் சந்தையில்  அவன் சொல்வதே  விலையாக  இருக்கும்?

இதற்க்காக  தர  குறைவான  பொருளையோ /.சேவையோ   வாங்குங்கள்  என்று  சொல்லவில்லை , இரண்டு பேரிடமும்  ஓரே  தரமான சேவையோ / பொருளோ  தரும்  போது , சிறு விலை  குறைப்பை  பொருட்படுத்தாமல் உள்ளூர்  வியாபாரத்தை  ஊக்குவிக்க வேண்டும் .

உதாரணங்கள் :-
   சென்னையில்  பல  ஆண்டுகளாக  ஒரு தமிழ் நிறுவனமான பாஸ்ட் ட்ராக்  வாடகை  கார்  சேவையை வழங்கி  வருகிறது . ஆனால்  சர்வதேச  நிறுவனமான  உபேர் , ஓலா  ( பெரும் சர்வதேச  முதலீடு) போன்றவை  மிக  பெரிய  விளம்பரத்துடன் , பெரும் முதலீட்டுடன்  களம்  இறங்கியுள்ளன.   இவர்களை  போன்றவர்களை  கண்முடித்தனமாக  ஆதரித்தால்  இங்கு  உள்ள  பாஸ்ட்  ட்ராக்  போன்ற  உள்ளூர்  நிறுவனங்களையும் ,  சிறு ட்ராவல்  ஏஜென்சிகளையும்  அழித்து  விடுவார்கள் .  இன்று  இவர்களது   சிறு  இலவசத்திற்கு   ஆசைப்பட்டால்  நாளை  சந்தையில்  அவர்கள்  சொல்வதே  விலையாக  இருக்கும் .
இதே போல் பெப்சி , கோக்  க்கு  போட்டியளிக்கும்  காளி மார்க். சீன  பட்டாசுக்கு  எதிர்த்து  நிற்கும்  சிவகாசி  பட்டாசுகள் , ஆச்சி மசாலா , போன்று  பல   தமிழ் நிறுவனங்கள்

தமிழ்நாடு  தொழில்  அதிபர்களை  ஆதரிப்பதன்  மூலம் நமது  மாநில  பொருளாதாரம்  வலுவடையும் , இங்கு  மேலும்  முதலீடுகள்  நடக்கும் .  மாநில  வாழ்வாதார  பிரச்சனைகள் , இயற்கை  பேரிடர்  போன்றவற்றின்  போது  தமிழராய் ஆதரிப்பார்கள் .

ஜல்லிக்கட்டு தடை  , காவிரி  நீர் கேட்டு  போராடுவது மட்டும் போராட்டம்   அல்ல ,  இதே போன்று தமிழ்  நிறுவனங்களை , தமிழர்  தயாரிக்கும் பொருள்களையும் ,சேவைகளையும்  பயன்  படுத்துவதும்  ஒரு  போராட்டம் தான் . வலுவான  தமிழக  பொருளாதாரத்தை  உருவாக்குவோம் . நாம்  வலுவான  பொருளாதார  சக்தியாக  உருவெடுக்கும் போது , இந்த  தேசம் நம்மை  நிமிர்ந்து  பார்க்கும்  ,நாம்  வைத்ததும்  சட்டம் ஆகும் . இது  பிரிவினை  வாதம்  இல்லை  , தேசத்தை  நம்மை  நோக்கி  திருப்ப  ஒரு  முயற்சி .


நாளைய  போராட்டத்திற்கு  வீதிக்கு  வர வேண்டியதில்லை , வாங்கும்  பொருளிலும் /சேவையிலும் ஒரு  கவனம் இருந்தால்  போதும்.


செவ்வாய், 10 ஜனவரி, 2017

பொங்கல் விடுமுறை.. அசால்ட் சேது (Bjp) வின் அடுத்த அட்டாக்

ஜல்லிகட்டு தடை,பொங்கல் விடுமுறை ரத்து... "டெல்லி, பம்பாய் போக வேண்டும் என்றால் தமிழர்களுக்கு பாஸ்போர்ட்  வேண்டும் "மத்திய பிஜேபி அரசின் அடுத்த அறிவிப்பாக இருக்க கூடும்...

இந்தி படித்து கொள்ளுங்கள்,
பொங்கல், ஜல்லிகட்டு எல்லாம் மறந்து சாட் பூஜை செய்யுங்கள்,
இட்லி, தயிர் சாதம் மறந்து சாப்பாத்தி சாப்பிட பழகி விடுங்கள்.
 கறி, கோழி சாப்பிடாம தால் சாப்பிட பழகிங்கள்,
வேட்டி, சட்டைக்கு பதிலா ரெண்டு செட் பைஜாமா, ஜிப்பா தைத்து விடுங்கள்,
கெடா வெட்டி கும்பிடற  கருப்பண்ண சாமி, ஐயனார் எல்லாம் விட்டு ராமர், கிருஷ்னர கும்பிடுங்கள்
தேசிய நீரோட்டத்தில் பழைய தமிழர்  கலாச்சாரத்தை எல்லாம் தலை முழ்கி எந்திரிச்சா நீங்கள் முழுமையான  "இந்தி"யன் ஆகி விடுவிர்.
 கஷ்டம்னு சொன்னா எல்லையில் உள்ள ராணுவ வீரன் பொங்கல் கொண்டாடுறானா? இல்ல  இட்லி தான் சாப்ட்றானா என்று கேட்பார்கள்
சீக்கிரம் தேச பக்தி உடைய இந்தியன் என்பதை நிருபித்து விடுங்கள்.

வியாழன், 5 ஜனவரி, 2017

தகவல் தொழில் நுட்ப துறை - பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மண்ட் வீக்


சாப்ட்வேர், ஐடி ,90 களின் தொடக்கத்தில் இருந்து  கடந்த  25 ஆண்டுகாலமாக  தமிழகத்தின் மத்திய தர வர்க்கத்தின் மந்திர சொல்லாக  மாறி  விட்ட வார்த்தைகள்.பக்கத்து  வீட்டு மாமா   தனது  மகன்கள் சாப்ட்வேர்ல  செட்டில்  ஆகி விட்டார்கள்  என்று  சொல்லும் போதே  அவருக்கு  ஒரு பெருமிதம்.

சென்னையின்  LIC  கட்டிடத்தையே  பெரும்  ஆச்சரியமாக  பார்த்து  வளர்ந்த  தலைமுறைக்கு ,சென்னை  புறநகரங்களில்  திடீரென  ராட்சதனாக  முளைத்த  கண்ணாடி  கட்டிடங்களில்  தனது  மகன்/மகள்  அலுவலகம்  இருக்கிறது  என்பது  ஒரு பெருமிதமாக தானே இருக்கும்.

 ஊருக்கு  ஒரு  ஜாவா  சுந்தரசேன்கள் உருவானார்கள் .  வேலைக்கு  சேந்த  வருஷம்  பைக், 3 வது  வருஷம்  கார்  , 4 வது வருஷம்  புறநகரில் பிளாட் ,கல்யாணம் என்று  முன்னேற்றம் , ரிட்டையர் மென்ட்  ஆக  4 வருஷம்  முன்னாடி  வீடு  வாங்கிய அப்பாக்கள்  ,வேலைக்கு  சேர்ந்த  4 வருஷத்தில்  வீடு  வாங்கிய மகனை  பார்த்து  மிரண்டார்கள்.

ஜாவா  சுந்தரேசனை பார்த்து, வீட்டுக்கு  ஒரு மரம்  வளர்கிறோமோ  இல்லையோ  வீட்டுக்கு  ஒரு  சாப்ட்வேர்  என்ஜினீயர் வளர்ப்போம் ன்னு  தமிழரகள்  கிளம்பினர் .   நீங்க  வீட்டுக்கு  ஒரு  என்ஜினீயர்னா நாங்க  தெருவுக்கு  ஒரு  இன்ஜினியரிங்  காலேஜ்   திறப்போம் ன்னு  கல்வி  வள்ளல்களும்  தயாராகினர்.

பையனுக்கு  எந்த  எந்த  கெட்ட பழக்கமும்   கிடையாது ,  மெக்கானிக்கல்  படிச்சிருக்கான் ,நல்ல சம்பாதிக்கிறான்னு
பொண்ணு  கேட்டு போனா , பொண்ணோட  அப்பா  " இல்லைங்க பொண்ணு  CS புடிச்சிருக்கு ,  IT க்கும் IT  க்கும் தான்  செட்டாகும்னு சொல்லி  , IOS போன்ல ல  anderiod  இன்ஸ்டால்  பண்ண  சொன்ன  மாதிரி   பார்த்து ஆச்சரியபட்டார் .  பிறதுறை  பட்டதாரிகள்  பொண்ணு  கிடைக்கவே  கஷ்டப்பட ஆரம்பித்தார்கள்

மேட்டூர்  நீர்மட்டத்த  பத்தி  கவலைபடும்  நம்ம  ஊர்  பண்னையார்  திடிர்னு ஒருநாள்  அரிக்கன்ன்னு  கவலைப்பட  ஆரம்பித்தார்.   அரிக்கன்  இல்லாட்டி  என்ன  டார்ச்  லைட்  இருக்கு பண்னைன்னு  சொன்னவனை  பார்த்து ,  அமெரிக்கால  தம்பி வேலை செய்ற ஊரில் புயலாம்  அப்டினு  சொல்றார்.

IT  நண்பர்களை  தெருவில்  பார்த்தால், நாம  ஒரத்தநாடுலருந்து  தஞ்சாவூர்  போனத  சொல்ற மாதிரி  போன மாசம்தான் நியூ யார்க்  on site  போய்ட்டு வந்தேன்  சொல்லி  நமக்கு  ஒரு  US  மேட் ஜவ்வு  மிட்டாய்  கொடுத்து ஆச்சரியபடுத்தினர்.

டெல்ட்டாவில்  இருந்து  பெங்களூரு  ல்  IT  வேலையில்   செட்டில்  ஆகிய  நண்பன் ,  சென்ற  ஆண்டு காவிரி பிரச்சசனையின் போது   யாரு ஊர்ல  விவசாயம்  பாக்குறாங்கன்னு நம்ப  ஊர்ல பிரச்சனை  பன்றாங்கனு கேட்டு  அதிர வைத்தான் .அவர்களின்  உலகம்  மொபைல்  /லேப்டாப்  ஸ்க்ரீன்   அளவு  சுருங்கி  விட்டது .

நம்ப  தஞ்சாவூர்  பெரிய  கோவில், மணி மண்டபம் , கல்லணை ன்னு  பொண்டாட்டி  புள்ளைகளை   கூட்டிகிட்டு போனா , நம்ப  ஆளுங்க  ஈபில்  டவர், சுதந்திர  தேவி  சிலை  முன்னாடி  குடும்ப போட்டோ  எடுத்து  சமூக  வலைதளத்தில்  போட்டு நம்ம   பேமிலி   நம்மள  டம்மி  பீஸா  பார்க்க   வைத்தனர்.

 நண்பர்  வீட்டுக்கு  போனா, நண்பர் மற்றும் மனைவி  தங்கள் குழந்தைகளிடம்  ஆங்கிலத்தில்  தான் உரையாடினார்கள் . என்னடா  தமிழுக்கு  வந்த  சோதனைன்னு  கேட்டப்போ , இவருக்கு onsite கிடைச்சா USல  பிள்ளைகளுக்கு  எளிதாக  இருக்கும்னு  இங்கேயே ஒரு   USA   உருவாக்கி  கொண்டு  இருந்தார்கள் .  நல்ல  வேலை  நம்ப  ஜனாதிபதி   டொனால்ட்  டிரம்ப்ன்னு  சொல்லி கொடுக்காமல் விட்டு வைத்துள்ளனர். இவர்களுக்காகதான்   தெரு  முனையில்  MCDONALDS ,KFC  திறந்து  வைத்து  இருக்கிறான் போல.

கூட்டுறவு  வங்கி கடனுக்கு  நாலு  ஜாமின் காரர்களுடன்  நாலு முறை  நடந்த  குப்புசாமி மகன் இன்று  நாலு கிரெடிட் கார்டு வைத்து  கொண்டு  அலைகிறான்.இது  உண்மையான வளர்ச்சியா ன்னு  தெரியவில்லை

விலை வாசி  ஏறிடுச்சு , ரியல் எஸ்டேட்  ஏறிடுச்சு , கலாச்சாரம்  சீரழியுது ன்னு  ஆயிரம் குற்றம்  சொன்னாலும் .

இன்று  வறட்சியில் 100 கணக்கில் நடக்கும் தற்கொலைகள்  ஆயிர கணக்கில்   இருந்து  இருக்கும் தொழில் நுட்ப துறையின்  வளர்ச்சி இல்லாமல்,  புதிய  தலைமுறை  சம்பாதித்து  தந்தையின்  விவசாயத்தையும் ,பொருளாதாரத்தையும்  காப்பாற்றுகிறார்கள் . குடும்பத்தை வறுமையில்  இருந்து  வளர்ச்சிக்கு  மாற்றி  காட்டிய  ஆயிரம்  இளைஞர்கள்/  பெண்கள்  உள்ளனர்.

 நமது  மாநிலம்  மற்ற  மாநிலத்தை வளர்ச்சியில்  பின்  தங்காமல்  பார்த்து  கொண்டதிலும்  பங்கு  உள்ளது .

அரசு  அலுவலகங்களிலும், பள்ளிகளிலும்  கூட  ஒழிக்க  முடியாத  சாதி  ஓரளவு  இங்கு ஒழிந்துள்ளது.

ஆயிரம்  மேடைகளில்  பேசினாலும் வாங்கி  தர  முடியாத பெண்  சுதந்திரத்தை வாங்கி  தந்து உள்ளது .  சம  வேலைவாய்ப்பு , சம ஊதியம் , சம  பணி  உயர்வு  இங்கு  பெண்களுக்கு  சாத்திய பட்டுள்ளது.

கல்யாணம்   ஆகாத  பொண்ணும் , பையனும்  பேசினால்  காதல்  தவிர  வேற  இல்லை  என்கிற  தமிழ் சினிமா  பார்த்து  வளர்ந்த  தலைமுறைக்கு  ஆண் பெண்  தோழமை   சாதாரனம்   என்னும்  உண்மையை   உணர்த்தியது.

 எனினும் வெளிநாட்டை  விட  ஊதியம்  குறைவு  என  இந்தியா  வரும்  நிறுவனங்கள் நம்மை  விட  குறைவான  ஊதியத்திற்கு  ஆள்  கிடைத்தால்   அடுத்த  நாட்டுக்கு செல்லும்  வாய்ப்புகள்  உள்ளது . அரசுகள் ,மற்றும்  கல்லூரிகள்  கூலி  ஆட்களை  தயாரிக்கும்  நிறுவனமாக  இருக்காமல்  இந்திய தொழில்  முனைவர்களையும் , ஆராய்ச்சி  மற்றும்  மேம்பாடு முலமாக  இந்திய  தொழில் நுட்பங்களை  உருவாக்குவதன்  மூலம்  தான்  இந்த  வளர்ச்சியை  தக்க  வைக்க  முடியும்.

இல்லா விட்டால் தொழில் நுட்ப துறை - பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மண்ட் வீக் கதை யாகி விடும்

(நான்  ஒரு  தகவல் தொழில் நுட்ப  துறையை சேராத   ஆள்  என்பதால்  எனது புரிதலில்  குறைபாடு  இருந்தால்  வருந்துகிறேன் )