90 களின் பிற்பகுதியில் பிறந்தவர்களுக்கு அந்த அளவு சேர்ந்ததா என்று தெரிய வில்லை .
நம்முடைய அடுத்த தலைமுறைக்கு உட்க்கார்ந்து நல்ல ஒழுக்கம் நாம் சொல்லி தர முடியோமோ இல்லையோ,.ஆனால் புரட்சி தலைவர் அவர்களின் நல்லொழுக்க, தன்னம்பிக்கை பாடல்களை அறிமுக படுத்துங்கள் .
அவரது அரசியலில் கருத்து வேறுபாடு உள்ளவர்கள் கூட அவரது பாடல்களில் கருத்து வேறுபட மாட்டார்கள் .
என்ன மாதிரியான பாடல்கள் அவரால்( கவிஞர்கள், பாடகர்கள் , இசை அமைப்பாளர்கள் பங்களிப்புடன் ) தர முடிந்துள்ளது .
1, உன்னை அறிந்தால் , நீ உன்னை அறிந்தால் ,உலகத்தில் போராடலாம்..
2, என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் , என் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில் .
3. அச்சம் என்பது மடமையடா , அஞ்சாமை திராவிடர் உடமையடா
4. பாவம் என்னும் கல்லறைக்கு பல வழி , என்றும் தர்ம தேவன் கோவிலுக்கு ஒரு வழி .
5. கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் . அறிவை நீ நம்பு.
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை , பொய்மை எப்போதும்
ஓங்குவதும் இல்லை .
6.நெஞ்சம் உண்டு , நேர்மை உண்டு ஓடு ராஜா , ஒரு நேரம் வரை காத்து இருந்து பாரு ராஜா .
7.திருடாதே பாப்பா திருடாதே , திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
8.தூங்காதே தம்பி தூங்காதே ,, நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் .
9. நாளை நமதே , இந்த நாளும் நமதே .
10.. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி ..
இது மாதிரி பல முத்தான பாடல்கள்.என்னால் முடிந்தவரை காரில் செல்லும்பொழுதோ ,
சில சமயம் வீட்டில் தொலைக்காட்சியில் பழைய பாடல்கள் ஒலிக்க செய்து எனது மகனுக்கு இந்த பாடல்களையும் , படங்களையும் அறிமுகம் செய்கின்றேன் ..
அடுத்த தலைமுறைக்கு புரட்சி தலைவர் பாடல்களை அறிமுக படுத்துவோம் ... ஒரு நல்ல தலை முறையை உருவாக்குவோம்