வியாழன், 20 ஏப்ரல், 2017

வலுக்கும் வலது சாரி சிந்தனை .

 பொதுவான  சமுதாயம் , அது வளமோ, செல்வமோ இருப்பதை  பகிர்ந்து  கொள்வது . உலகின்  வளம்  அனைவருக்கும் பொதுவானது இதில்  நீங்கள்  உங்கள்  அறிவாற்றலால்  அல்லது  பலத்தால்  நீங்கள் அதிகம்  பெற்றால்  அதை பலவீனமானவருடன்  பகிர வேண்டும்  இது  இடதுசாரி  சிந்தனை.

வலது  சாரி  சிந்தனை  என்பது  ஒரு  குறிப்பிட வட்டம் அது  மதமோ, தேசமோ , மாநிலமோ ,நான் உயர  வேண்டும்  என்று  எண்ணுவது . அதற்கு  இது  எனக்கு  சொந்தமானது , எனது   அறிவினாலோ , உழைப்பினாலோ , அல்லது  பரம்பரையினாலோ வந்தது  இதை  நான்  ஏன்  மற்றவரிடம் பகிரவேண்டும் என்ற  சிந்தனை

எப்போதும்  சாதாரண  மனிதன்    இடதும்  இல்லை  வலதும்  இல்லை  நடுவில் இருப்பவன் . தனது  மற்றும்  குடும்பத்தின்  தேவைகள்  நிறைவேற  வேண்டும் , அதே நேரத்தில்  பக்கத்து  மனிதன் கஷ்டப்பட்டால்  உதவ  வேண்டும்  என்றும்  நினைப்பவன் .

கடந்த  சில  ஆண்டுகளில்  வலதுசாரி  சிந்தனைகள் உலகம்  எங்கும்  வலுபெறுகிறது .
இடது  சாரி மற்றும்  நடு நிலைமையாளர்கள் உலகெங்கும்  தோற்கடிக்க  படுகிறார்கள்.
ஒரு  சாதாரண  நாடு நிலை மனிதனை  உனது  வேலை  அவர்களால்  பறி போய்  விடும் , உனது நாட்டு  செல்வங்களை  அவர்கள் அனுபவிக்கிறார்கள் . அவனால்  உனது  குடும்பத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கபட்டுள்ளது   என்று  பயமுறுத்தபடும்  நடு நிலைமை  உடையவன்  வலது சாரி  சிந்தனையை நோக்கி  செலுத்த படுகிறான்.

இதை  டொனால்டு  டிரம்ப் அமெரிக்காவில்  செய்தார் . பிரெக்ஸிட் க்கும்  இதுவே  காரணம் .. மோடி, RSS  இதையே இந்து  தேசிய  வாதமாக கட்டமைத்து வெற்றி  பெறுகிறார்கள் . இதையே  சீமான் ,  போன்றோர் தமிழ்  தேசியம்  என்ற  அளவில்  கட்டமைக்க முயலுகின்றனர்.

இந்தியாவில்   இடதுசாரி  இயக்கங்கள் போராட்டம்  செய்து  வேலை  வாய்ப்பு இல்லாமல்  செய்து  விடுவார்கள்  என்று ஒரு  தோற்றம்  உருவாகி  விட்டது , அதனால் இளைஞர்களை  ஈர்க்க  முடியவில்லை  .இந்தியாவில், நடு  நிலைமை  இயக்கமான  காங்கிரஸ் , மாநில  கட்சிகள் சிந்தனை ரீதியாக  எதிர்க்க  முடியாமல்  தங்களின்  மேல்   சுமத்தப்பட்ட   ஊழல்  குற்றச்சாட்டுகளுடன்  போராடி  வருகின்றன.

ஒவொரு  சிந்தனையும்  ஒரு  உச்சத்தை  அடையும் , அதனால்  பயன்  அடையும் என நினைத்து  தலையில்  தூக்கி  வைத்து  ஆடும்  சாதாரணன்  பயன்  இல்லை  என  உணரும்  போது  தூக்கி  எறிந்து  விடுவான்.

( பி.கு) நான்   ஒன்றும்  பெரிய அப்பாடக்கர்   இல்ல , திடீர்ன்னு  படிச்சத  ,நினைச்சத  நம்ம  நண்பர்களிடம்  பகிரநினைத்தேன் .. தவறுகள் இருப்பின்  மன்னிக்கவும்










செவ்வாய், 18 ஏப்ரல், 2017

OPS Vs TTV Vs எடப்பாடி

தமிழகத்தின்  மக்கள் தொகை  பெருக்கத்தின்   (Fertility rate)அளவு ஒரு   பெண்ணிற்கு 1.6 . தென் மாநிலங்கள் அனைத்தும்  ஏறக்குறைய  இதே அளவுதான் .  மத்திய   இந்தி  மாநிலங்களின்  இன பெருக்கத்தின்  அளவு  ஒரு பெண்ணிற்கு  2.8.

 தமிழகத்தின்  கல்வியறிவு அளவு ஏறக்குறைய  85%, இதே  மத்திய இந்தி  பேசும்  மாநிலங்களின்  அளவு  ஏறக்குறைய 65% மட்டுமே.
உயர்கல்வி  அடைபவர்கள்  தமிழகத்தில் கிட்டத்தட்ட  43% , மத்திய  இந்தி  பேசும்  மாநிலங்களில்  இது  கிட்டத்தட்ட  27% சதவீதம்  மட்டுமே.

இதன்  காரணமாகத்தான்  பெரும்பாலும்  தமிழகத்தில்  உடல்  உழைப்பு  தொழிலாளர்கள்  எண்ணிக்கை  குறைகிறது, படித்த  தமிழ் இழைஞர்கள்  மாநிலத்தைவிட்டோ , தேசத்தை  விட்டோ  கடந்து  பணி  புரியும் சூழ்நிலையும்  ஏற்படுகிறது.
மேலும்  படிக்காத  உடல்  உழைப்பு  பிற  மாநில தொழிலாளர்கள் தமிழகம்  நோக்கி  வர காரணம் .


மிக  அதிகமான  உயர்  கல்வியை  தந்த  நாம் , அந்த அளவு  வேலை வாய்ப்பை  உருவாக்க     முடியுமா  தெரிய வில்லை ?.. மேலும்  இந்த  நிலை  நீடித்தால் அடுத்த  சில  ஆண்டுகளில்   80 களில்  இருந்தது போன்று  வேலை வாய்ப்பு இன்மை   ஏற்படும்  வாய்ப்பு   உள்ளது . அடுத்த சில  வருடங்களில்  50 லட்சத்திற்கும்  மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை  இல்லாமலோ/  தகுதிக்கு  ஏற்ற  வேலை  கிடைக்காமல் தமிழகத்தில் மட்டும்  இருப்பார்கள். ஒரு சமுதாயத்தில் நான்கு  அல்லது  மூன்று  இளைஞர்களில்  ஒருவருக்கு  வேலை  வாய்ப்பு  இல்லாமல்  இருப்பது   பற்ற வைக்க  தயாராக  வெடிகுண்டை  கையில்  வைப்பதற்கு  சமம் .   ( ராம்குமார் ,ஸ்வாதி கொலை  எல்லாம் ஒரு சில  துவக்கங்கள் தான் )

இதை  எல்லாம்  யோசித்து   எதிர்காலத்தை  நோக்கி  செயல்பட  இதுவே  தருணம் . வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டு  நாம் ஒபிஸ் vs  TTV  vs  எடப்பாடி  விளையாட்டு  விளையாட  கூடாது.  உதவ  வேண்டிய  மத்திய  அரசோ  பிள்ளையை  கிள்ளி  தொட்டிலை  ஆட்டி  கொண்டு  இருக்கிறது.
 யார்  ஆண்டாளும்  மக்கள்  நலத்தை  நோக்கி  சிந்தியுங்கள் .
  எதிர்காலத்தை  நோக்கி  சிந்தியுங்கள் ?


இந்த  தலைப்பு  வைத்தால் நிறைய  பேர் படிப்பார்கள்  என்பதை  தவிர  வேறு  காரணம்  இல்லை .