வியாழன், 26 ஏப்ரல், 2018

உறவுகளில் சில அரசியல் தலைவர்கள்

அரசியவாதிகள்  எல்லா  இடங்களிலும்  இருக்கின்றனர் .
உங்கள் உறவுகளின்  திருமணங்களில்   சில  அரசியல்வாதிகள்  இருப்பார்கள் நீங்கள் கண்டுபிடித்து கொள்ளுங்கள்  யார் அவர்கள் என்பதை  ?

வைகோ :- திருமண வீட்டிற்கு  முதலில்  வருவார் , உரிமையோடு  எடுத்து  போட்டு  எல்லா  வேலையும்  செய்வார், ஆனால்  திருமணத்துக்கு  முன் னாடி  யாரிடமாவது  கோவித்து  கொண்டு  .
கோபமாக  கிளம்பி  விடுவார்.

டுமிலிசை :- எல்லா  கல்யாண  வீட்டிலும் டம்மி பீசா  ஒரு பொண்ணு  இருக்கும்  ,  ஆனால் திருமணமே  தன்னால்தான்  தான்  நடை பெறுவது   போல்  சீன்  போடும் அங்கும்  இங்கும்  வீடியோ  காமெரா  முன்னாடியே   சுத்தும்   ..

கருணாநிதி :- கல்யாண  வீட்டில்  நடக்கும்  பெரும் பிரச்சனைகளுக்கு  மூல காரணம்  அவராகத்தான்  இருப்பார்  .ஆனாலும்  அவரே  பிரச்சினையை  தீர்க்க  உதவுவது  போல்  நடிப்பார். எல்லாரது கவனமும் தன்  மேல்  இருக்க  வேண்டும்  என்பதை மட்டும்  உறுதி  செய்வார் .

ஜெயலலிதா :-  வெட்டு  ஒன்னு ,துண்டு ரெண்டாக  பேசும்  ஒரு பெண்மணி இருப்பார்    , சிறிது  முன் கோபக்காரர் . ஆனாலும் அவரது நியாயம்  இருப்பதால்    நிறைய    அவரை பிடிக்கும் .

தினகரன்  :- மனிதருக்கு   சொந்தக்காரன் , வழக்குனு  தலை போற ஆயிரம்  பிரச்சனை  இருக்கும் , ஆனால்  திருமண வீட்டில்   சந்தோசமா   முன்னாடி நின்னு   எல்லோரிடமும்  சிரித்து  சிரித்து  பேசி கொண்டு இருப்பார்.

எடப்பாடி :- உறவினர் வட்டாரத்தில் திடீரென  அதிர்ஷ்டம்  அடிச்சு  பணக்காரர் ஆகி  இருப்பார், தன்னுடைய  பெருமையை  தானே பேசி கொண்டு திரிவார்.

ராகுல்/ ஸ்டாலின் -  பெரிய  குடும்பத்து  பிள்ளைகள் , தான் பெரிசா  சாதிக்காட்டியும் குடும்ப  பெருமையை  வைத்து  கொண்டு  கல்யாண  வீட்டில்  மரியாதையை  பெறுவார்கள் ..











ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

சசிகலா செய்த தவறு?

சசிகலா
33 ஆண்டு முன்பு,
காலம் அவருக்கு இரு வாய்ப்புக்களை தந்தது.
1, அரசு அதிகாரியான கணவருடன் நிம்மதியான உயர் நடுத்தர குடும்ப வாழ்க்கை.
2, உயிர் தோழியின் அரசியல் களத்திற்கு துணையாக போராட்ட வாழ்க்கை
அவர் தேர்ந்தேடுத்தது 2வது வாய்ப்பை.

திமுக ஆட்சி காலத்தில் " ஒரே ஒரு வாக்குமூலம், உங்களுக்கு விடுதலை, ஜெயலலிதாவிற்கு தண்டனை " என்ற பேரத்திற்கு அவர் சம்மதித்து இருந்தால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வேறு மாதிரி முடிந்து இருக்கும்,

யாருக்காக வாழ்ந்தாரோ , யாரை மருத்துவமனையில் இமையாக காத்து நின்றாரோ அவரது கொலைப்பழியையும் தாங்கி ஒரு புகைப்படம் வெளியிட்டால் அக்காவின் புகழூக்கு இழுக்கு தயங்கியவர்.

காலில் விழுந்து வாழ்வில் வளம் பெற்ற அத்தனை பெறும் துரோகியாகி நின்றனர்.
கணவரின் இறுதி மூச்சின் போது கூட அருகில் நிற்க  அனுமதி வேண்டிய போது, இவரால் வாழ்வு பெற்றவர்களாலே முட்டு கட்டைகள் போடப்பட்டது.

தஞ்சையின் தலை மகளால் வாழ்வு அடைந்தனர் பலர்.
ஆனால் இவர் முதலாவது வாய்ப்பை தேர்ந்து எடுத்து இருந்தால் கணவருடன் நிம்மதியான குடும்ப தலைவியாக சென்னையிலோ , தஞ்சையிலோ வாழ்ந்து இருப்பாரோ என்னவோ?