வியாழன், 29 ஜூன், 2017

பாகுபலி கட்டப்பாவும் O பன்னீர்செல்வமும் ...


         ஜெயலலிதாவுக்கு சசிகலாவுடன்  சில  சமயம் கருத்து  வேறுபாடு  வந்தது , பன்னீர்செல்வதுடன்   ஜெயலலிதாவுக்கு  கருத்து  வேறுபாடு  வந்தது  இல்லை  என்று  கூறுபவர்களுக்கு,      ஜெயலலிதா சசிகலாவின்  கருத்தை  கேட்பவராக  இருந்தார்  அதனால்  அவரோடு  கருத்து  வேறுபாடு  வந்தது.  பன்னீர்செல்வம்  கருத்து  சொல்லும்  நிலையில்  எங்கு  இருந்தார்?
   
அமரேந்திர பாகுபலி சிவகாமியுடன்  கருத்து வேறுபாடு வந்தது , ஆனால்  கடைசி  வரை  சிவகாமி தேவிகாக  உயிரை  விடுபவராகத்தான்  இருந்தார் அது போன்றுதான்   சசிகலா.

     கடடப்பா   தனது  விசுவாசத்தை  மாற்றமால்  கடைசி  வரை  இருந்தார்.. ஆனால்  இந்த  கட்டப்பா  தனது  பதவிக்கு  ஆபத்து  வந்தவுடன்  தனது  விசுவாசத்தை  டெல்லி  சுல்தானுக்கு  மாற்றி விட்டார்.விசுவாசம்  என்றால் உண்மையில் தனது  எஜமானரின்  உயிருக்கு  ஆபத்து  என்றவுடன்  தனது பதவியை  தூக்கி  எறிந்து  விட்டு  கேள்விகேட்டு  இருக்க  வேண்டும்  ஆனால்  தனது  பதவிக்கு  ஆபத்து  வரும்  வரை  அமைதி  காத்தவர்தான்  நமது  கட்டப்பா..

  டெல்லி  சுல்தான்  ஏன்  சசிகலாவை  விரும்பவில்லை, சசிகலா  எந்த  கணத்திலும்    தனது  புத்தி  கூர்மையால்,  பிடியில்  இருந்து  விலகி  தன்னை  நிறுவி கொண்டு விடுவார்  என்ற  பயம்  இருந்தது,ஆனால் கேள்வி  கேட்க  முடியாத , பதவியை  காப்பாற்றி  கொள்ள துடிக்கும்  அடிமை  தான்  சிறந்தவர்  என தான்  டெல்லி   நினைத்து விரும்புகிறது ..


செவ்வாய், 20 ஜூன், 2017

தமிழ் சினிமா பிரிந்தவர் இணையும் பாடல்கள் -ஒரு துளி

பிரிந்தவர் கூடினால் கண்ணீர்  தான்  அங்கு மொழி  என்று சொல்வது உண்டு ..

தமிழ்  சினிமா  ஆரம்ப காலத்தில்  இருந்தே பிரிந்தவர் சேரும்  காட்சிகள்  நிறைய  உண்டு . அதுவும்  பாடலால்  இணையும்  காட்சி கள்  பல,  இது  போன்ற   காட்சிகளில் நடிப்பை  விட , பாடல்வரிகள் மற்றும்  பாடலின் பின்னணி இசைதான் காண்பவருக்கு  ஆனந்த கண்ணீரை  வரவழைக்கும் சக்தி  உடையது .


எனக்கு  மிகவும்  பிடித்த   அத்தகைய பாடல்களில்   ஒன்று ,
நாளை  நமதே  படத்தில்  வரும்  அன்பு  மலர்களே, நாளை  நமதே தாய்  வழி  வந்த  தங்கங்கள்  எல்லாம் ஓர் வழி  நின்று  நேர் வழி  சென்றால்  நாளை  நமதே பாடல் ,
தம்பி  பிரிந்து போன  சகோதரர்களை  பாடலை  பாடி  கண்டுபிடிப்பார், SPB  தம்பி  வேடத்தில்  நடித்தவருக்கும் , TMS  புரட்சி  தலைவருக்கும்  பின்னணி கொடுத்து  இருப்பார்கள்.

வருட  கணக்கில் பிரிந்த   சகோதரர்கள்  சேர்ந்தால்   முதலில் நலம் விசாரித்து கொள்வார்களா இல்லை  பாடலை  முழுதாக  பாடி முடிப்பார்களா என்ற  கேள்வி  எழாமல்  உங்களை  மயங்க  வைப்பதுதான்   திரைப்படத்தின்  மேஜிக் ...

90 களில்   சூப்பர்  குட்  பிலிம்ஸ்  காலத்தில்  இத்தகைய  காட்சிகளும்  பாடல்களும்  அதிகம்.



உதாரணமாக
நான் பேச  நினைப்பதெல்லாம்  படத்தில் ஆனந்த் பாபு  , மோகினி  இணையும்  ஏலேலம்  கிளியே  பாடல்....
(இதிலும்  ஜேசுதாஸ்   குரலில் முதலில் பாடிய  பாடலை  இறுதி  காட்சியில்  மனோ  பாடி இருப்பார் , யாரும்  அதை  பொருட் படுத்தவில்லை..)

துள்ளாத   மனமும்  துள்ளும்  படத்தில்  விஜய் , சிம்ரன்  இணையும் இன்னிசை பாடி  வரும்  பாடல் .

புது வசந்தம்  படத்தில்  வரும் சித்தாரா  நண்பர்களுடன்  இணையும்  பாட்டு  ஒண்ணு  நான்  பாடட்டுமா பாடல்  இப்படி  பல ...


கடைசியாக ...மாய  நதியிலே  பாடல்  கபாலியில் ...அதுவும் பல  வருடங்கள் பிரிந்து  இணைந்தவர்கள்  சேர்ந்த பிறகு  வரும்  ஒரு  நல்ல பாடல்..

இப்போது  எல்லாம்  செல்போன் , இணையம் ,Facebook, வாட்ஸப்  காலம்  ஆகி  விட்டதால்  இது  போன்ற  பாடலுடன்  இணையும்  காட்சிகள்  குறைந்து  விட்டது  தமிழ்  சினிமாவில் ..

ஆனாலும் பிரிந்தவர்கள்  இணையும் இசையோடு  வரும்  ஆனந்த  கண்ணீர்  பாடல்களை  நாம்  கொஞ்சம்  தொலைத்து  விட்டோம்  என்றே தோன்றுகிறது.


(பிகு ):- இத்தைகைய  பாடல்கள்  சிலவற்றை  நீங்கள்  பின்னுட்டத்தில் (கமெண்ட்ஸ்) பகிர்ந்தால் மகிழ்ச்சி .





வியாழன், 8 ஜூன், 2017

கவிஞர் வாலி ரசித்ததில் ஒரு துளி


தசாவதாரம்  கல்லை  மட்டும்  கண்டால்  பாடல்  எனக்கு  மிகவும்  பிடித்த  பாடல்களில்  ஒன்று..

கமலஹாசனின்  உண்மையான  தாயார்  பெயர்  ராஜலக்ஷ்மி ,தந்தை  பெயர்  ஸ்ரீனிவாசன் ...

சைவ  சோழ அரசனுக்கு எதிராக விஷ்ணு  புகழ்  பாடும்  இந்த  பாடலில்,

 ராஜலக்ஷ்மி  நாதன்  ஸ்ரீனிவாசன் தான் , ஸ்ரீனிவாசன்  சேய் இந்த   விஷ்ணுதாசன் தான்  (கமலின்  கதாபாத்திர  பெயர்)

என்று  வாலி  எழுதியது  பௌண்டரி  என்றால் ,,,


நாட்டிலுண்டு  ஆயிரம்  ராஜ  ராஜர்தான் , ராஜனுக்கு எல்லாம்  ராஜன்  இந்த  ரங்க ராஜன் தான்    (வாலியின்  இயற் பெயர் ரங்கராஜன் )

என்றுஅடுத்த  வரியில்  வாலி  எழுதியது  சிக்ஸர் ...

காட்சிக்கு  பொருத்தமான பாடலில்  , கமல் ,மற்றும்  தன்னையும் பொருந்தியது வாலியின்   அபார கற்பனை..