செவ்வாய், 29 மார்ச், 2016

இதயத்தில் இடம் ஒதுக்கும் தலைவரும் , தப்பி ஓடும் தலைவர்களும்


இதயத்தில் இடம் ஒதுக்கும் தலைவரும் , தப்பி ஓடும்  தலைவர்களும் -கற்பனை பேச்சு வார்தை :-

ஸ்டாலின் :- அப்பா , நீ பாட்டுக்கு கொத்தனார் சங்கம், சித்தாள் சங்கம் , கட்சின்னு  பேர் போட்டு லெட்டெர் pad அடிச்சி எடுத்து வர்றவனுக்கு எல்லாம் சீட் கொடுத்து கையெழுத்து போட்டு   குடுக்குற....இப்டியே போனா நாம 30 தொகுதில கூட நிக்க மாட்டோம் போல ...
கருணாநிதி :- கவலை படாத ,எல்லா பயலும்  உதய சூரியன் சின்னத்துல தான் நிப்பாங்க...அது இல்லாம நமக்கு வேனுமுனா உங்க எல்லாத்துக்கும் இதயத்துல இடம் கொடுபதற்கு  தான் கை எழுத்து போட்டோம் , சட்ட மன்ற தேர்தல்க்கு இல்லைன்னு சொல்லிடலாம் ..
தமாகா வை நம்ம  கூட்டணிக்கு  அழைக்க சொன்னனே .என்ன  ஆச்சு ..

ஸ்டாலின்:- வேண்டாம்பா , காங்கிரஸ் நிக்கிற தொகுதில தமாகா காரன் வேலை செய்ய மாட்டான் , தமாகா நிக்கிற தொகுதில காங்கிரஸ் காரன் வேலை செய்ய மாட்டான்.
கருணாநிதி :- அப்ப  திமுகா நிக்கிற தொகுதில
ஸ்டாலின் :- ரெண்டு பேரும் வேலை செய்ய மாட்டான் ...அது  இல்லாம வாசன் எனக்கு இதயத்துல இடம் வேணாம் ,காங்கிரஸ் விட ரெண்டு சீட் கூட வேணும்னு சொல்றார் ..

குலாம் நபி ஆசாத் என்ட்டர் :-
கலைஞர்ஜி , போன தடவை மாதிரி நம்பள்கி 60 தொகுதி குடுத்துடுங்க ...

கருணாநிதி:-  நான் மேற்கு வங்காளத்தில் ,கேரளாவில் எல்லாம் உங்கள்ட சீட் கேட்டு தொந்தரவு பண்றனா ..நீங்க மட்டும் ஏன் இப்டி பண்றீங்க..போன தடவை  நம்ப கூ ட்டணில  சிபிஐ ( மத்திய புலானாய்வு துறை )  இருந்தது ...அதுக்கு பயந்து நான் அத்தனை சீட் குடுத்தேன் ..இப்போ சிபிஐ பிஜேபி கூட  இருக்கு ...அதனால் 25 சீட்டே  அதிகம் ..

குலாம் நபி :- நான் ராகுல் ட்ட பேசி முடிவ சொல்றேன் ..

பிஜேபி :​-
 பொன்னார் :- என்  அலுவுலக மெயின் கேட் பூட்டி வச்சு இருக்கீங்க .
 தமிழிசை :- கூ ட்டணிக்கு வந்த விஜயகாந்த் மநகூ  க்கு போய்ட்டார் ..சரத் குமார் திரும்ப அதிமுக கிட்ட போய்ட்டார் ..இருக்குற காயத்ரி ரகுராம், விஜயகுமார் ,கங்கை அமரன் ,விசு எல்லாம் ஓடி போகாம இருக்க தான் கதவை சாத்தி இருகேன் ...







திங்கள், 28 மார்ச், 2016

யார் ஆக சிறந்தவர் ?? விராடா - சச்சினா


சச்சின் அவர்களுடன் விராத் கோஹ்லி யை ஒப்பிடு செய்வது ஆப்பிள் உடன் ஆரஞ்சு பழத்தை ஓப்பிடு செய்வது போல் ஆகும். இரு வேறு தலைமுறை சாதனை யாளர்களை ஓப்பிடக் கூடாது என்றாலும் MGR கூட ரஜினி யையும் , ரஜினியுடன் விஜய் யையும் ஓப்பிடும் தமிழர்கள் நாம் என்பதால் ...

சச்சின் :-
மிக  சிறந்த பந்து  வேக விச்சாளர்களான  இம்ரான் கான் ,வாசிம் அக்ரம் ,அமப்ரோஸ் ,வால்ஷ் ,ரிச்சர்ட் ஹட்லி போன்றவர்களையும் , ஷேன் வார்னே ,முத்தையா முரளிதரன் போன்ற சுழற் பந்து விச்சாளர் களையும் எதிர்த்து ரன் குவித்தவர் .

விராட் :-
இந்த  தலைமுறையில்   ஸ்டெய்ன் ,ஆமிர்  போன்ற வெகு  சில குறிப்பிட்ட வேக பந்து விச்சாளர் களே உள்ளனர் ..சுழற்பந்து இன்னும் குறைந்த சிலரே உள்ளனர் .

சச்சின் :-
பந்து விச்சு ஆட்சி செய்த காலத்தில் ஆரம்பித்து , மட்டை மற்றும்  பந்து சம நிலை காலம் வரை தொடர்ந்தவர்

விராட் :-
மட்டை  ஆட்சி செய்யும் காலத்தில் வந்தவ ர்  ...ஆனாலும்  அவ்வபொது பந்து வீச்சு ஆட்சி செய்யும் சில ஆட்டங்களில் தனது முத்திரையை பதிக்கிறார்

சச்சின் :-
தனது  முதல் 10 ஆண்டுகளில் ,ராகுல் டிராவிட் ,கங்குலி வரும் வரை பெரும் பாலும் அவரது  மட்டை  போராட்டம்  அணியின் தோல்வியில்  தான் முடியம் .. பிற்காலத்தில் தான் அணியின் வெற்றி யாக மாற்ற முடிந்தது ..
2000தின் பாதி  வரை , பெரும் பாலும் batting அவரை நம்பி இருந்தால் பெரும் சுமை அவரை துரத்தியது.
அன்றைய  ஆஸ்திரேலியா ,பாகிஸ்தான் அணிகளின் வலிமையுடன் இன்றைய அணிகளை ஒப்பிடவும்  முடியாது.

விராத்:-
ஒரு சில ஆட்டங்களை தவிர அனைத்து ஆட்டங்களிலும் ரோஹித் ,தோனி , ரைனா போன்ற நல்ல ஆட்ட காரர்களின்  துணை  இருக்கிறது ..

சச்சின் :-
டெஸ்ட் போட்டிகளில்  சச்சின் கையே ஓங்கி இருக்கிறது ..அனைத்து நாடுகளிளும்  மிக  சிறந்த சராசரியை வைத்துள்ளார்.

விராத்;
நன்றாக விளையா டினாலும் சச்சின் னை விட சராசரி குறைவு..இங்கிலாந்து மண்ணில் இன்னும் சாதிக்க வில்லை.


சச்சின் :-
அணியின்  நலனை  விட தனது சாதனைக்களுக்காக விளையாடுகிறார் என்ற குற்ற சாட்டு எப்போதும் உண்டு
விராட் :-
இன்று வரை அத்தகைய குற்றச்சாட்டு இல்லை.

சச்சின் :-
உடற் தகுதி  சராசரி ... பிற் பகுதியில் காயம் அதிகம் அடைந்தார்

விராத்:-
மிக  சிறந்த உடற் தகுதியை தொடர்கிறார் ,நீண்ட காலம் தொடர்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது .

விஞ்ஞான வளர்ச்சியும், நவீனமாகும்  மட்டைகளும் , மட்டையாளர்களுக்கு உதவும் விதிகளும் விராத் கொஹ்லி க்கு  சச்சினை காட்டிலும் சிறந்தவராக தொற்றம் அளிக்க   உதவி செய்கிறது

ஆனாலும் ஒருநாள்  மற்றும் 20 ஓவர் போட்டியில்  chase செய்யும் பொழுது விராட் கொஹ்லி சச்சினை விட சிறந்த வராக தோன்றுகிறார் .
ரன்களை துரத்தும் பொழுது சச்சின் பெரும் பாலும் வெற்றி கோட்டை எட்டும் முன் சொதப்புவார் ..

நிங்களே முடிவு  செய்து கொள்ளுங்கள் ...


வெள்ளி, 25 மார்ச், 2016

நமக்கு நாமே திமுகா வும் , உடைக்கப்படும் பிம்பங்களும்


PK திரைபடத்தில் வேற்று கிரகத்திலிருந்து வரும் ஆமிர் கானுக்கு பூமியில் காணும் எல்லா விஷயங்களும் ஆச்சர்யமாக இருக்கும் ..
அது போல 2 முறை மேயர் , துணை முதல்வர்,மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஆக இருந்த ஸ்டாலின் நமக்கு நாமே என்று பயணம் செய்தார்..
அவருக்கு ஆட்டோவில் செல்வது , ரோட்டு கடையில் டீ குடிப்பது , tractor ஓட்டுவது என்று PK  அமீர் கானை விட சிறந்த நடிப்பை வெளிபடுத்தினார் ..
அதிகாரத்தில் இருந்த பொழுது மிக சிலரால் மட்டும்  அணுக முடிந்த ஸ்டாலின் இன்று எல்லா வித்தைகளையும் செய்து பார்த்தார்..

மிக பெரிய எழுச்சியை அது உருவாகியதாக திமுக ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது ...அந்த பொய்யை அனைத்து கட்சிக்காரர் களும் நம்ப ஆரம்பித்தனர்.
ஆனால் கலைஞர் மட்டும் நம்ப வில்லை ..அவருக்கு தெரியும் இதை விட பெரிய வித்தைகளை தான் செய்த போதும் நம்பாத  மக்கள் இதை நம்ப போறார்களா  என்ற சந்தேகம் வந்தது..
அவரும்  கூட்டணி கணக்கு தான் உதவும் என்ற நம்பிக்கையில் விஜயகாந்த் எண்ணும் பிம்பத்தை நம்பினார்..அதையும் திமுக ஊடகங்களின் உதவியில் விஜயகாந்த்,காங்கிரஸ் ,தி மு கா  சேர்ந்தால் வெற்றி  பெறும் எண்ணும் பிம்பத்தை கட்டமைத்தனர்..
அதுவும் இப்போது விஜயகாந்த்தால் உடைக்கப்பட்டு விட்டது.

இபொழுது சோர்ந்து கிடக்கும் கட்சியினருக்கு நம்பிக்கை உட்ட பாமக வை இழுக்க முயற்சி செய்கின்றனர் ..அதுவும் முடியாவிட்டால்  என்ன செய்வது ..
அழகிரி மீண்டும் வந்தால் கட்சி எழுட்சி பெறும் எனும் பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்..







புதன், 23 மார்ச், 2016

92 ஆண்டு கால உழைப்பும் , இளிச்ச வாய் தமிழனும்


நேத்துலேந்து திமுகா காரர் கள் புரா உணர்ச்சி வசப்பட்டு திரிகிறார்கள் ..
தலைவர் 92 ஆண்டு கால உழைப்பின் பலனை அடைய இந்த தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டுமாம் ..
அட  அப்ரசண்டிகளா ..
5 முறை முதல்வர், 1 முறை அமைச்சர்,10 முறை MLA , மகன் மேயர் மற்றும் துணை முதல்வர், மகள்  MP , மற்றொரு மகன்  மதிய அமைச்சர், அக்காள் மகன் மற்றும் அவரது குடும்பத்தார் மத்திய அமைச்சர்..
1 லட்சத்து 76 ஆயிரம் கோடி முறை கலைஞர் மற்றும் குடும்பத்தினர் பயன் அடைந்து விட்டனர் .. இன்னும்  என்ன  வேணுமாம் ..
நீங்க எம்பா உணர்ச்சி வச படறிங்க.

திங்கள், 21 மார்ச், 2016

தொகுதி பங்கீடும் ,கூட்டணி கூத்துகளும் -கற்பனை


மக்கள் நல கூட்டணி  தொகுதி பங்கீடு :-
(கம்யூனிஸ்ட் :-   தமிழகத்தின் வருங்கலாமே, திமுக மற்றும் அதிமுக வின் மாற்று அரசியல் தலைவனே, மதிமுக  சார்பில் நீங்கள் 130 தொகுதிகளில் போட்டி இடுங்கள் , நாங்கள் மீதம் உள்ள தொகுதியில் போட்டி இடுகிறோம் ..

வைகோ :- (அதிர்ச்சியை வெளியில் காட்டாமல் )..அட என் தலைல இத்தனை தொகுதியை  கட்ட பாகுரிங்களா (மனதுக்குள் நினைத்தவாறு ).. சீனாவிலும் ரஷ்யாவிலும் ஏகாதிபத்தியத்தை தகர்த்த கம்யூனிஸ்ட் தோழர்கள் 130 தொகுதிளில் போட்டி இடுங்கள் ..புலம் பெயர்ந்த தமிழர் நலன்களை பார்க்க வேண்டி உள்ளதால் மதிமுக 30 தொகுதிகளில்  மட்டும் போட்டி இடும் ..

கம்யூனிஸ்ட் :- ஆஹா இந்த ஆளு  எஸ்கேப் ஆகிறான் .. திருமா வை புடிச்சு குருமா வைப்போம். 
தாழ்த்தப்பட்ட மக்களின் கையில் அதிகாரம் வர வேண்டும் , நீங்கள் தான் நமது முதலமைச்சர் வேட்பாளர் ..விடுதலை சிறுத்தைகள் 130 தொகுதியில் போட்டி இட வேண்டும் 

திருமா:- ( அதிர்ச்சியை சமாளித்து கொண்டு )...இப்ப எப்டி எஸ்கேப் ஆகுரேன் பாரு ....(மனதுக்குள் நினைத்தவாறு ) சிறுத்தைகள் களத்துக்கு அஞ்ச மாட்டார்கள் , அதுல  ஓரு நம்பரை மட்டும் குறைத்து கொள்ளுங்கள் 

கம்யூனிஸ்ட் :- ஆஹா , அடிமை சிக்கிட்டான் டா ..அப்ப 129 தொகுதி 
திருமா:- நான் சொன்னது முன்னாடி உள்ள ஒன்ன, எனக்கு 30 தொகுதி போதும் ..
கம்யூனிஸ்ட் :- அப்ப நாம விஜயகாந்த்ட மறுபடி பேச்சு வார்த்தைய தொடங்க வேண்டியதுதான்.

திமுக கூட்டணி:-
துரை முருகன்:- அதிமுக தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியை யையும் கூட்டணிக்கு குப்டு பாத்து டேன் .. காங்கிரஸ் மட்டும் தான் சிக்குனிச்சு .மத்தவன் எல்லாம் எஸ்கேப் ஆயிட்டான் ..

EVKS  இளங்கோவன் :- குஷ்பூ ,நக்மா, வருகைக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் எழுட்சி அடைந்துள்ளது ...60 தொகுதிகள் குடுங்கள் ...அப்பத்தான் எல்லா கோஷ்டிக்கும் நான் பிறுச்சு தர முடியும்.

கலைஞர்:-  தம்பி , நாம் தமிழ்நாடுக்கு மட்டும்தான் தொகுதி பிரிகிறோம் ..கேரளா ,கர்நாடகாவுக்கும் சேர்த்து அல்ல ...தம்பிக்கு ஓரு 30 தொகுதி குடுத்து கூட்டணில வச்சி போம்.

துரை முருகன்:​ சைதாபேட்டை தந்திரி ஆட்டோ டிரைவர்கள் சங்கம்,கன்னியாகுமரி பழ வியாபாரிகள் சங்கம் ன்னு , எல்லா சங்க தலைவர்களையும் குப்டு போட்டோ எடுத்தாச்சு,...அவனகலும் சன் டிவி ல காட்டுவாங்க னு  ஆதரவு  க்கு ஓகே  சொல்லிடாங்க ..இன்னும் அறிவாலய வாட்ச்man ட மட்டும்தான் கூட்டணி போட்டோ எடுக்கலை தலைவா .

கலைஞர் :- அபாரம் , நீ ஒரு ராஜ தந்திரி என்பதை நிருபித்து விட்டாய் 

பிஜேபி :​ 

தமிழிசை :- பிரச்சாரத்துக்கு பிரதமர் வருவாரா ?
அமித் ஷா :- அவரு இன்னும் உலகத்துல சுத்தி பாக்காத நாடு எதுவும் இருக்கா ன்னு தேடி கிட்டு இருகார்..  எப்டியும் ரஷ்யா போற வழில சென்னை இருக்குன்னு பொய்  சொல்லி ஏமாத்தி கூட்டி கிட்டு பிரச்சாரத்துக்கு வந்திடுறேன் ..
வேற யார் கூட்டணிக்கு வந்து இருக்காங்களா ..

தமிழிசை :- கூட்டணிக்கு அலைஞ்சு ஜவேடேகர் 2 செருப்பு தேய்ஞ்சு போச்சு..அதான் நான் , இல கணேசன் , பொன்னார் எல்லாம் 3 னா பிறுஞ்சு எங்களுக்குளே யே  தொகுதி பங்கீடு பண்ணிக்கிட்டு இருக்கோம் ...


கூத்து களும் 



வெள்ளி, 18 மார்ச், 2016

அரசியல் ராஜதந்திரம்,உறவுகள் -mixture of the day

அரசியல் ராஜதந்திரம் :-

மகன்:- அப்பா , நம்ம இந்த முறை ஆட்சிக்கு வந்தால் நன்மை செய்வோமா...
அப்பா :- மகனே ,ஒரு பொய்யை பல முறை சொன்னால் உண்மையாகி விடும்...ஆனாலும் நாம சொல்றது பொய்தான் என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் .அதை நாம உண்மை என்று நம்பி விட கூடாது..

உறவுகள் :-
என் பையனையோ / பொண்ணையோ  தான் நீ  கட்டணும்  சொல்லும்  மாமன்களையும், அத்தை களையும் ,
உன்னதான் கட்டுவேன்  என்று சொல்லும்  மாமன் /அத்தை  மகள் /மகன் களையும்  இப்போது  எலலாம் பார்க்க முடிவதில்லை ..
 என்னத்தான் சயின்ஸ் , மனித உரிமை   இதமுட்டாள்  தனம் ன்னு சொன்னாலும் ..
இத்தகைய   உரிமை கொன்டாடும்  உறவுகளை பார்க்கும் போது  வரும் மகிழ்ச்சி  சொல்லி புரியாது

விஜயகாந்த்  கூட்டனி  இல்லைன்னு  சொன்னதுக்கு கலைஞரும் திமுகாவும் வருத்தப்பட்டதை விட அதிகமா விகடன் தான் வருத்தபடுது 

திங்கள், 14 மார்ச், 2016

அன்பே சிவமா?? நானே சிவமா??

நமக்கு எல்லாம் குழந்தைகளிடம் சாமி இருப்பதாக நம்ப வைப்பதே பெரும் பாடாக இருக்கிறது ..தொனுர
இதுல சாமியாருங்க பெரியவங்களிடம் நான் தான் சாமின்னு நம்ப வைக்கிறார் கள் ன்னு தெரியல ...

அன்பே சிவம் னா  எவனும்  கேட்க மாட்டேங்குரான்,  ஆனா நானே சிவம் னா   நம்பி கேட்கறான்.

நூறு ரூபாய   சாமி  கோவில்  உண்டியல்ல போட்டா கம்மியா போட்டோமேனு தொனுர மனசுக்கு 10 ரூபாய் பிச்சைகாரனுக்கு போட்டா அதிகமா போட்டோமோன்னு தோணுது



காதலும் கடந்து போகும் ..

காதலும் கடந்து போகும் ..

பலம்:- சடுதியில் கடக்கும்  ஒற்றை வரி  வசனங்கள்  , விஜய்  சேதுபதி காகவே உருவாகப்பட்ட ஒரு பாத்திரம் , அழகான நடிக்க தெரிந்த ப்ரேமம் மடோனா செபஸ்டியன் , , சில நல்ல பாடல்கள் ..அழகான ஒளிபதிவு ..
பலவிணம் :-
ஒரே  இடத்தை சுற்றி  வருகிற , வேகம் இல்லாத  மாதிரியான திரைக்கதை, சுமாரான கிளைமாக்ஸ் 

மாஸ் படமும் இல்ல , கிளாஸ் படமும் இல்ல ...ஆனாலும் பாக்கலாம் 

நாங்க எல்லாம் கடைசி  சீன் ல  ஹீரோ  கதாநாயகிக்கு தாலி  கட்னாதன் படம் முடிஞ்சதா ஒத்துக்குவோம் .., இந்த பட  கிளைமாக்ஸ் எல்லாம் புரிய மாட்டேங்குது  .

extra :-
2 படம்  நடிச்ச  மடோனா செபஸ்டியன் எல்லாம் நல்லா நடிக்கிறாங்க ..எப்ப நம்ம ஹன்சிகா நடிக்க கத்துக்குவாங்கன்னு  தெரியல  

வெள்ளி, 11 மார்ச், 2016

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட அதிர்ச்சி நிபந்தனைகள்

கிரிக்கெட் விளையாட இந்தியா வர பாகிஸ்தான் சில நிபந்தனைகளை விதிதுள்ளது ..அவற்றுக்கு இந்திய அரசாங்கமும் கிரிக்கெட் வாரியமும் எழுத்து பூர்வமாக ஒப்பு கொண்டால் மட்டுமே வர முடியும்..
அவை
1. இந்த முறை இந்திய அணி முதலில் பந்து விசினால் குறைந்தது 100 ரன்கள் ஆவது தர வேண்டும்.
2.  இந்திய அணி அந்த ஸ்கோரை  குறைந்தது 15 ஓவருக்கு பிறகே எட்ட வேண்டும் ..
3. முதலில் பேட் செய்தால் 200 ரன்களுக்கு மேல் அடிக்க கூடாது
4. எந்த காரணத்தை கொண்டும் விராத் கோலியை முதல் 5 நிலையில் களம் இறக்க கூடாது..
5. எந்த காரணத்தை கொண்டும் பாக் வீரர்களை ரன் அவுட் செய்வது கூடாது..
கடைசியாக
6. தோற்ற பிறகு பரிசளிப்பு விழாவில் பாக் காப்டனிடம் இங்கிலீஷில் கேள்வி கேட்க கூடாது

இவற்றுக்கு ஒப்பு கொண்டால் மட்டுமே பாக் அணியை இந்திய அனுப்ப முடியும்..

வியாழன், 10 மார்ச், 2016

யுவராஜ் சிங் கிற்கு சச்சின் தந்த அறிவுரை .

.
யுவராஜ் சிங் பயிற்சியின் போது ஆட்டம் இழந்தால்  தனது  பேட் டை கோபமாக தூக்கி எறியும் பழக்கம் உடைய வராக இருந்தார்..
இதை கவனித்த சச்சின் " பேட்டை வீசி எறியாதே இதன் மூலமாக தான் உனது வீட்டிற்கு உணவு வந்து கொண்டு இருக்கிறது " என்று கூறினார் ...
அன்று முதல் யுவராஜ் அந்த பழக்கத்தை கை விட்டு விட்டார்...
(நன்றி:- டைம்ஸ் ஓப் இந்தியா )


சில சிந்தனைகள்

நாம் நமது தேவைக்கு சம்பாதிக்கிறோமா அல்லது அடுத்தவனுடன் கம்பேர் செய்றதுக்கு சம்பாதிக்கிறோமோ என்ற குழப்பம் வந்து விடுகிறது

எல்லா காதலியும் தேவதை தான்,என்ன ஜெயிக்கின்ற காதலில் மனைவியாகி விடுகிறாள்.. தோற்பவனுக்கு தேவதையாகவே தொடர்கிறாள்.

புதன், 9 மார்ச், 2016

விஜய்காந்த் கூட்டணி பேச்சு வார்த்தையா, ஓசி சாப்பாட்டு பிளானா

விஜய்காந்த்  கூட்டணி பேச்சு வார்த்தை..ஒரு நகைச்சுவை கற்பனை...............மனதை புண்படுத்துதற்கு அல்ல ...........
ஒரு நாள் காலையில்
சுதீஷ்:- அக்கா , இன்னிக்கு நம்ம வீடல என்ன சமையல் ...
அண்ணியார் :- டேய் , இன்னைக்கு வீட்ல cylinder தீந்து போச்சு, அடுத்த வாரம் தான் தருவானாம் ...
சுதீஷ் :- அதுவரைக்கும் .......
அண்ணியார் :-   நீ ஏன்டா கவலைபடற ....காலைல breakfast ட்டுக்கு மக்கள் நல கூட்டணி யினரை  சரவண பவன் வர  சொல்லிட்டேன் .... காலையில் அவங்க வாக்கிங் முடிஞ்சு   நேர வந்து கூட்டணி  பேசிட்டு பில்ல குடுத்துடுவாங்க ...

மதியானம் பிரகாஷ் ஜவடேகர்  flight புடிச்சு சென்னை வரார் , அவரோட ITC hotels  LUNCH சாப்பிட்டு கிட்டே கூட்டணி பேசறோம் ......

சாயங்காலம் சபரிசனும் , துரை முருகனும்  கிரீன் பார்க் பார்ல   மாமாவோட  கூட்டணி பேசலாம் நு  சொல்லி இருக்காங்க ...
நாளைக்கு order  மாத்தி , பிரேக் பாஸ்ட் அமித் ஷா கூட , லஞ்ச் திமுக கூட , நைட் மக்கள் நல கூட்டணி  கூட ...

இன்னும்  அரவிந்த் கெஜ்ரிவல் , தேசியவாத congress நு  பல கட்சி இருக்கு ..நீ என் கவலை படற ...
சுதீஷ் :- அக்கா , நீ ராஜ தந்திரத்தில் அத்தானை மிஞ்சி விட்டாய் .. கூட்டணி  அமையுதோ இல்லையோ..Election வரைக்கும் வீட்ல சமையல் இல்லை.

கரகாட்டக்காரன் காமெடியும், வாழும் கலை மாநாடும்

கரகாட்டகாரன் திரைபடத்தில் அண்ணன்  கவுண்டமணி  செந்திலை பார்த்து ஒரு dialogue கூறுவார் ...
அந்த  சினிமா நடிகர்கள் தான் பிறந்த நாள் கொண்டாடு கிறேன் னு தனக்கு தானே போஸ்டர் அடிச்சுகிறான் ,உனக்கு என் இந்த விளம்பரம்

அது போல கட்சிகாரன் தான் மாநாடு  நடத்துறேன் , கூட்டம் நடத்துறேன் ன்னு  இருக்குற ஏரி , குளத்தை துத்து, இலட்ச்ச கணக்குல ஆளுங்கள ,பிரியாணியும் ,quaterum குடுத்து கூட்டி வந்து கூத்தடிகிறான் ...

நீ சாமியார், ஏழை,பாழைக்கு உதவி ஏதாவது செய்யாம , 35 இலட்சம் பேர கூப்புடுற, ஆத்து கரைய துக்குர .... பத்தாதுக்கு எல்லைல வேலை செய்ய வேண்டிய ராணுவத்த  மைக் ,செட் பந்தல் போட சொல்ற ..

ஒண்ணும் நல்லா இல்ல  சாமி 

கரகாட்டக்காரன் காமெடியும், வாழும் கலை மாநாடும்  ,
 ART OF PARTYING..........

  

செவ்வாய், 8 மார்ச், 2016

பொதி கழுதையும் , EPF வரி ரத்தும்

EPF வரி  ரத்து ..

ஒரு வியாபாரி தனது பொருளை சுமக்க கழுதை ஒன்றை வளர்த்து வந்தார். தினமும் கழுதை பொதி வைக்கும் முன் அதிகமான எடையை ஏற்றுவார் .பிறகு கழுதை முரண்டு பிடிக்கும். கழுதையை சந்தோஷ படுதுவதர்காக சிறிது சுமையை குறை ப்பார். கழுதையும் தனது எஜமானர் தனது மேல் கொண்ட பிரியத்தின் காரணமாக சுமையை குறைதததாக சந்தோசம் அடையும்.

கருணாநிதி பேருந்து கட்டணத்தை உயர்த்தும் பொது , இரண்டு ரூபாய் உயர்த்தி, ஒரு ரூபாய் குரைப்பார்  அவரிடம் அருண் ஜெட்லி பயற்சி எடுத்து  உள்ளார் போல .

இபொழுது ஒருவரும் வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யாத அரசை குறை கூ ற மாட்டார்கள், மாறாக EPF  வரியை  ரத்து செய்ததற்க்காக பாராட்டுவும் செய்வார்கள்.


திங்கள், 7 மார்ச், 2016

நாம் கற்க வேண்டியது குழந்தைகளிடம்

பெரும்பாலும் வார நாட்களில் எழுந்திருப்பது எனக்கு வேப்பங்காய் தான்.அதுவும் திங்கள் கிழமை கொடுமை யாக இருக்கும் ... பெரும்பாலும் சோர்வு , அயற்சி ....
ஆனால்   குழந்தைகளின் உலகம் மிக சிறியது , அவர்கள் வீடு,அப்பா,அம்மா , பள்ளி, மிக சில மனிதர்கள்,தொலைகாட்சி,அவளவுதான் ..ஆனாலும்  ஓவ்வரு  நாளும், உற்சாகமாக எழுகிறார்கள், ஒவ்வரு நாளையும் மிக உற்சாகமாய் எதிர் கொள்கிறார்கள், ஒவ்வரு நாளும் எதோ ஒரு பரிசை தர போவது போலவும் , புதிய அனுபவத்தை தர தயராக இருப்பது போலவும் உணர்கிறார்கள் .. அது உண்மையும் கூட 
குழந்தைகளிடம் நம்மிடம் கற்பதை விட நாம்  அவர்களிடம் கற்க வேண்டியது அதிகம் உள்ளது போல
 

ஞாயிறு, 6 மார்ச், 2016

கலாபவன் மணி,ஆசியா கோப்பை - இன்றைய நிகழ்வுகள்

இன்றைய  நிகழ்வுகள்

கலாபவன் மணி.. ஒரு திறமையான கலைஞனின் மரணம் ஒரு இழப்பு.. ஆனால் ஒரு கலைஞனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதில் மலையாளிகள் நம்மை விட ஒரு படி மேல்..
ஆசியா  கோப்பை

Why  Pakistan  want  to continue  with  sahid afridi as  a captain in worldt20 even  after  asia cup debacle?
No Pakistan  player  want  to take the  pain of talking in English during  presentation and  explain the  reasons  for the  loss..

நேற்றைய போட்டியில் இந்தியா தோற்று விடுமோ என்ற பயத்தை விட ஜெயித்தால் பங்களாதேஷ் பசங்க பன்ற அலும்ப பார்க்கனுமே ங்கற பயம்தான் ஜாஸ்தியா இருந்தது

வெள்ளி, 4 மார்ச், 2016

வரா கடன் -இந்திய வங்கிகளின் தற்போதைய நிலை

இந்திய வங்கிகளின் தற்போதைய நிலை
தனிமனிதன் வங்கிகளில் நகை கடனோ, வீட்டு கடனோ, வாகன கடனோ வாங்கி திரும்ப செலுத்த முடியாவிட்டால் கடன் மதிப்பை விட சொத்து மதிப்பு கூடுதலாக இருந்தாலும்...கடனை வசூலிப்பதற்காக முதலில் அவனது தன்மானம் குறி வைக்கப்படும் அவனது பெயர் புகைப்படம் வங்கி வாசலில் ஒடடபடும்.அவனது வீட்டில் notice ஓட்டபடும்..பிறகு தண்டொரா நாளிதழ் விளம்பரம்...மற்றும் வங்கியில் கூப்பிட்டு வைத்து மிரட்டல், ஆள் வைத்து மிரட்டல் அனைத்து ம் உண்டு... அதுவே ;500 கோடிக்கு அதிகமாக நிறுவனத்தின் பெயரில் கடன் வாங்கி நல்ல auditors மற்றும் advocAtes களுக்கு லட்சங்களை சம்பளமாக அளித்து அவர்களின் முதலிடுகளை திசை திருப்பி நிறுவனத்தை நஷ்டமடய வைத்து விட்டால் ;வங்கிகள் முதலில் அவர்களிடமம வங்கி கெஞ்சும்...பிறகு வட்டி அனைத்தையும் தள்ளுபடி செய்யும்...பிறகு திரும்பி தரும் காலத்தை அதிகப்படுத்தும்...பிறகு மேலும் கடன் வழங்கி பார்க்கும்..கடைசியில் எல்லாத்தையும் சாப்பிட்டு ஏப்பம் விட்ட பின ...வராக்கடன் என்று அறிவித்து மிச்சம் மீதி உள்ள நிறுவனத்தின் பொருட்களை பேரிச்சம் பழத்திற்கு விற்று சில கோடிகள் பெறும்..