இதயத்தில் இடம் ஒதுக்கும் தலைவரும் , தப்பி ஓடும் தலைவர்களும் -கற்பனை பேச்சு வார்தை :-
ஸ்டாலின் :- அப்பா , நீ பாட்டுக்கு கொத்தனார் சங்கம், சித்தாள் சங்கம் , கட்சின்னு பேர் போட்டு லெட்டெர் pad அடிச்சி எடுத்து வர்றவனுக்கு எல்லாம் சீட் கொடுத்து கையெழுத்து போட்டு குடுக்குற....இப்டியே போனா நாம 30 தொகுதில கூட நிக்க மாட்டோம் போல ...
கருணாநிதி :- கவலை படாத ,எல்லா பயலும் உதய சூரியன் சின்னத்துல தான் நிப்பாங்க...அது இல்லாம நமக்கு வேனுமுனா உங்க எல்லாத்துக்கும் இதயத்துல இடம் கொடுபதற்கு தான் கை எழுத்து போட்டோம் , சட்ட மன்ற தேர்தல்க்கு இல்லைன்னு சொல்லிடலாம் ..
தமாகா வை நம்ம கூட்டணிக்கு அழைக்க சொன்னனே .என்ன ஆச்சு ..
ஸ்டாலின்:- வேண்டாம்பா , காங்கிரஸ் நிக்கிற தொகுதில தமாகா காரன் வேலை செய்ய மாட்டான் , தமாகா நிக்கிற தொகுதில காங்கிரஸ் காரன் வேலை செய்ய மாட்டான்.
கருணாநிதி :- அப்ப திமுகா நிக்கிற தொகுதில
ஸ்டாலின் :- ரெண்டு பேரும் வேலை செய்ய மாட்டான் ...அது இல்லாம வாசன் எனக்கு இதயத்துல இடம் வேணாம் ,காங்கிரஸ் விட ரெண்டு சீட் கூட வேணும்னு சொல்றார் ..
குலாம் நபி ஆசாத் என்ட்டர் :-
கலைஞர்ஜி , போன தடவை மாதிரி நம்பள்கி 60 தொகுதி குடுத்துடுங்க ...
கருணாநிதி:- நான் மேற்கு வங்காளத்தில் ,கேரளாவில் எல்லாம் உங்கள்ட சீட் கேட்டு தொந்தரவு பண்றனா ..நீங்க மட்டும் ஏன் இப்டி பண்றீங்க..போன தடவை நம்ப கூ ட்டணில சிபிஐ ( மத்திய புலானாய்வு துறை ) இருந்தது ...அதுக்கு பயந்து நான் அத்தனை சீட் குடுத்தேன் ..இப்போ சிபிஐ பிஜேபி கூட இருக்கு ...அதனால் 25 சீட்டே அதிகம் ..
குலாம் நபி :- நான் ராகுல் ட்ட பேசி முடிவ சொல்றேன் ..
பிஜேபி :-
பொன்னார் :- என் அலுவுலக மெயின் கேட் பூட்டி வச்சு இருக்கீங்க .
தமிழிசை :- கூ ட்டணிக்கு வந்த விஜயகாந்த் மநகூ க்கு போய்ட்டார் ..சரத் குமார் திரும்ப அதிமுக கிட்ட போய்ட்டார் ..இருக்குற காயத்ரி ரகுராம், விஜயகுமார் ,கங்கை அமரன் ,விசு எல்லாம் ஓடி போகாம இருக்க தான் கதவை சாத்தி இருகேன் ...