செவ்வாய், 31 மே, 2016

எங்கே விழ்ந்தது முன்றாவது அணி ?

எங்கே விழ்ந்தது  முன்றாவது அணி ?



மிகவும் எதிர் பார்க்க பட்ட  மக்கள் நல  கூட்டணி +தேமுதிக +தாமா கா  அணி  6 % வாக்குகளை மட்டும் பெற்று ஒரு இடங்களை கூட வெல்ல முடியவில்லை ..
வெற்றி  பெற  மாட்டார்கள்  என்றாலும் , சில  தொகுதிகளும் , 10% மேற்பட்ட  வாக்கும்  பெறுவார்கள்  என்ற  நிலையில் , ஏன்  இப்படி  ஒரு  அவமானகரமான  தோல்வி  அடைய  நேர்ந்தது . 

காசு கொடுக்காததினால் தோல்வி அடைந்தோம்  என்று தங்களை  தாங்களே  தேற்றி  கொண்டாலும் ,  உண்மையான  காரணங்களை  ஆராய  வேண்டும் . 

காரணம் -1,

படித்த  வாக்களர்களை  இவர்களால்  தி மு கா  மற்றும்  அதிமுக வுக்கு மாற்று  என்று  நம்ப வைக்க  முடியவில்லை . தி மு கா தனது  ஊடக  பலத்தை  வைத்து  ஏறக்குறைய  அதிமுக  B  டீம்  என்ற  பிரச்சாரத்தை  நம்ப வைத்து  விட்டது 

காரணம்  2
விஜயகாந்த  மற்றும்  வாசன்  போன்றவர்களின்   சந்தர்பவாத  அரசியல் .கடைசி  நேரம்  வரை  அணைவரிடமும்  பேச்சு வார்த்தை  நடத்தி  விட்டு கடைசியில்  மக்கள்  நல கூட்டணி யில்  இணைந்தது  மக்களிடம்  எடுபட வில்லை .. தெரியாத  பிசாசை  விட  தெரிந்த  பேயே மேல்  என்று  மீண்டும் மக்கள்  தி மு கா  மற்றும்  ஆ தி மு  க விற்கே    வாக்களி தனர்.

 காரணம் -3
விஜயகாந்தின்  செயல் பாடுகள் .எதிர் கட்சி  தலைவராக கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு விட்டு  கடைசி நேரத்தில் மக்கள் மத்தியில் தோன்றி வாக்கு  கேட்டாலும் மக்கள்  பொருட்படுத்தவில்லை .

அரசியலில்  நீங்கள் வில்லனாக  இருக்கலாம் , ஹீரோ வாக இருக்கலாம்  ஆனால்  காமெடி யனாக  இருந்தால் மக்கள்  எளிதில்  புறக்கணிப்பார்கள் .

காரணம் -4 

வாக்கு சதவிதம்  குறைவு .நகர்ப்புறங்களில் இரண்டு  திராவிட கட்சிகளிடமும்  பிடிப்பு இல்லாத வாக்காளர்களை இவர்களும் ஈர்க்க தவறினர். 

காரணம் -5
மக்கள்  நல  கூட்டணி  என்ற  பெயரில்  இணைய மறுத்து அதில்  தேமுதிக , தா மா  கா  என்று  சேர்த்தவர்கள்  எப்படி  ஒற்றுமையாக ஆட்சி  செய்வார்கள் 

அடுத்த  முறை  மாற்று அரசியலை  முன்னெடுத்து  5 ஆண்டுகள் சென்றால் அடுத்த  முறை  ஓரளவு  அங்கிகாரம்  கிடைக்க  வாய்ப்பு உள்ளது ..







போன் மெமரியும், மனித மெமரியும்



இந்த நாட்டையே மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் இந்த நாட்டிலிருந்து மாறி வெளிநாட்டில் இருப்பவர்கள்  தான்

குழந்தைகளுடன் இருக்கும் பொழுது கார்டூன்    சேனல்களாய் பார்த்து பார்த்து பழகி, அவர்கள் வீட்டில் இல்லாத பொழுதும், நம்மையும் அறியாமல்  TV ரிமோட் கார்ட்டூன் சேனல்களுக்கே செல்கிறது

IPL முடிந்து விட்டது,, இனி சிக்கிரம் ஊர்லேந்து பொண்டாட்டி, பிள்ளைகளை அழைத்து வந்து விட வேன்டியது தான்... எனது நண்பர் ஒருவர்

சில வருடங்களுக்கு முன்பு 16 GB மெமரி லேப்டாப் எனக்கு போதுமானதாக இருந்தது.. இன்று 16GB மெமரி மொபைல் போதவில்லை.   போன் மெமரி அதிகமாக, அதிகமாக நமது மெமரி குறைந்து வருகிறது..
போன் Smart ஆயிடிச்சு, மனிதர்கள்  non sense   ஆகி வருகிறார்கள்

சனி, 21 மே, 2016

மருது _ தேவர் பெருமை பேசும் படமா?

தேவர் மகன் சிவாஜி சொல்லுவது போல நானும் அந்த கூட்டத்தில் ஒருவன் என்பதால் நியாயமாக கருத்து சொல்லலாம்
தேவர் பெருமையை கூறுவதாக நினைத்து கொண்டுள்ளனர் ..எனக்கு என்னவோ அவமானபடுத்துவது போல தான் தோன்றுகிறது
தேவர் சமுதாயதத்தில் கொலைகள் " நடந்தாலும் பெரும்பாலும் பங்காளிச் சண்டை, குடும்பப் பெருமை, ஊர்த் தகராறு போன்றவற்றிலே பெரும்பாலும் நிகழம்.. (இதையும் நான் ஆதரிக்கவில்லை ) தனி மனிதனின் அரசியல் வளர்ச்சிக்காக பெண்களை நடுரோட்டில் கொலை செயயும் கொடுரமான சமுகம் அல்ல.. அப்படி காட்டுவதால்  பெருமை கிடையாது அவமானம் மட்டுமே .. இப்படி  சிலர் இருந்தாலும் அது திரையில் காட்டுவதற்கான அவசியம் இல்லை
இந்த சமுதாயத்தில் லட்சகணக்கான பேர் தங்களது படிப்பினாலும், உழைப்பினாலும் நல்ல உயரங்களை அடைந்துள்ளனர் அந்த கதைகளை காட்சி படுத்தியிருக்கலாம்

பலம்
விஷால்  எத்தனை பேர் அடித்தாலும், நம்ப கூடிய அளவு  உடலை வைத்துள்ளார்,  Sriதிவ்யா, ஒரு சில நகைச்சுவை காட்சிகள்

பலவினம்
அருவருக்கதக்க கொலை காட்சிகள்,  எகனை மோகனை வசனங்கள்,   எரிச்சலூட்டும் விஷால் புகழ் பாடும் வசனங்கள்

படம்  முடிந்தவுடன்  என்னுடன் திரைப்பத்திற்கு வந்த  வேறு சமுதாயத்தை சேர்ந்த நண்பன் "மச்சான் நீயும் வீட்ல நீயும் அரிவாள்  வெச்சிருக் கியா " என்று கேட்டது தான் மிச்சம்


வியாழன், 19 மே, 2016

அதிமுக வெற்றி.. எதிர்பாராததா? காரணங்கள் சில

அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது.. இந்த முடிவு எனது மே 9 மற்றும் ஏப்ரல் 13 தேதி பதிவுகளை ஒட்டியே அமைந்துள்ளது...
வெற்றி
காரணம் 1  :,
அதிமுக தனது வாக்கு வங்கியான ஏழை மற்றும் கீழ் நடுத்தர வாக்கு வங்கியையும், கிராமப்புற மற்றும் மேற்கு மண்டல வாக்கு வங்கியையும் , பெண்கள் வாக்கையும் தக்க வைத்து கொண்டு உள்ளது..அதிருப்தி நகர்புறங்களிலும், உயர் நடுத்தர வகுப்பு பகுதியிலும் இருந்தாலும் அவை ஆட்சி மாற்றம் அளவுக்கு வலுவாக  இல்லை

காரணம் 2
 அதிமுக அதிருப்தி இருந்தாலும் , அது திமுக வாக்காக மாறவில்லை.. மக்கள் இன்னும்  திமுகவை முழுமையாக மன்னிக்க தயராகவில்லை

காரணம் 3
 திமுகவின்  மீடியா பலத்தினால் மந கூ வை பலவின படுத்த முடிந்ததே தவிர , அரசுக்கு  எதிரான  வாக்குகள் பா ம க, பிஜேபி, NTK,  போன்றவை சிறிதளவு பிரிக் க செய்துள்ளது..

காரணம்  4
கருணாநிதி தான் முதல்வர் வேட்பாளர் என்பது புதிய தலைமுறை வாக்காளர்களை கவரவில்லை... சமுக வலை தளங்கள்  வாக்கnளர்களை அடைய ஒரு வழியே அன்றி அது வெற்றியை தீர்மானிக்கும்  சக்தியாக இன்னும் மாறவில்லை... தேமுதிக வந்தால் வெற்றி என்ற பிம்பத்தை கட்டமைக்க முயன்ற திமுக ,  திரும்ப  அந்த பிம்பத்தில் தானே சிக்கியது

காரணம். 5
விலையில்லா பொருட் களுக்கு சமுக வலைதளத்தில் தான்  எதிர்ப்பு இருந்தது.. சாதரன மக்கள் இன்னும்  வரவேற்கத்தான் செய்கிறார்கள்
 இதையும் மீறி  காசு கொடுத்து ஒரு சில தொகுதியில்  வேண்டுமானால் ஜெயிக்கலாம் ..திமுகவிடம் மட்டும் காசு இல்லையா  என்ன?-

மக்கள் தீர்ப்பை மதிப்போம் ... நல் லாட்சியை எதிர் பார்போம்




வெள்ளி, 13 மே, 2016

சென்னை விமானநிலையத்தில் ஒரு இரவு... சில பல மனிதர்கள்

விமான நிலையத்தில் மற்றுமொறு தூங்கா இரவு

சென்னை சர்வதேச முனையத்தில் வழக்கம் போல் Air India விமானத்தின் தாமதத்தால் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது

விமான நிலையத்தின் வருகை பிரிவில் பெரும்பாலும் சந்தோஷமான முகங்களை  காண முடிந்தது, ஆனால் புறப்பாடு பிரிவில் அந்த மகிழ்ச்சி காணப்படவில்லை...நிறைய தாத்தா, பாட்டிக்கள் தங்களது மகன், மகளையும், பேரன், பேத்திகளையும் வெளிநாட்டுக்கு வழியனுப்ப வந்திருந்தனர்... அந்த பெரியவர்களை பார்க்கும் பொழுது இவர்கள் தங்களது பிள்ளைகள் அடுத்த முறை வரும்பொழுது இதே அளவு உடல் நலத்துடன்  இருப்பார்களா... இல்லை இவர்களுக்கு எதவாது ஆகி விட்டால் பார்த்து கொள்ள வீட்டில் வேறு பிள்ளை கள் இருப்பார்களோ என்ற சந்தேகம் என் மனதில் எழுந்தது
 வெளிநாடு செல்லும் எல்லா குடும்பத்தினரும் மிக வசதி படைத்தவராகவே தோன்றினர்... மிகப் பெரும்பான்மையினர் ஒரே ஒரு குழநதையுடன் தான் இருந்தனர்.. இந்த ஒரே ஒரு பிள்ளைக்கு தான் இப்படி ஒடி ஒடி சம்பாதிக்கின்றனர் போலும் .. இந்த பெரியவர்கள் தங்களை பிரிந்து சென்று பிள்ளை சம்பாரிக்க தான் படி, படி என்று கூறி படிக்க வைத்தார்களோ என்னவோ ?
தான் பெற்ற பிள்ளைகளை பற்றி அதிகமாக சந்திக்கும் மனிதர்கள் தன்னை பெற்றவர்களை பற்றி சிந்திப்பதில்ல யோ என்றும்  தோன்றியது
அப்பொது
 என்னை போன்று சர்வேதச முனையம் வழியாக திருச்சி செல்லும் தஞ்சை  மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவரை சந்தித்தேன்'
தன்னுடைய 5 வது படிக்கும் மகன் விமானத்தில் செல்லும் ஆசையை நிறைவேற்ற விமானம் மூலம் திருச்சி செல்வதாக கூறினார்
மனிதர் நன்கு பொது அறிவு உள்ளவரா கவும், இடையில் விவசாயத்தில் கஷ்ட பட்டாலும் இப்பொது நன்றாகவே உள்ளதாக கூறினார். மேலும் வருங்காலத்தில் விவசாயம் மேம்படும் என்ற நம்பிக்கையும் கொண்டு இருந்தார்
நவின தொலை பேசி இல்லை, ஆடம்பர உடைகள் அணியவில்லை ஆனாலும்
மனிதர் தனது  குடும்பத்தாருடன் சொந்த கிராமத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதாக கூறினார்,
இதில் யார் சாதித்த மனிதர்? யார் மகிழ்ச்சியான மனிதர்?
வாழ்க்கை புதிரானது

வியாழன், 12 மே, 2016

தளபதி பெர்பான்மஸ் பத்தாது போல

கடந்த தேர்தலில் நக்கிரனும் விகடனும் கருத்து கணிப்பில் அறுதி பெரும்பாண்மை குடுத்தாங்க அப்பவே திமுக 27 தொகுதி தான் ஜெயிச்சுச்சு.. இப்போ அவங்களே கம்மியா தான் கூடுத்துறுக்காங்க... அப்போ திமுக போன தடவை விட இன்னும் கம்மியா தான் ஜெயிக்குமா... நானும் கொஞ்சம் அதிகமா Expect பண்ணிட்டேன்
நக்கீரனும்,  விகடனுமே திமுகவுக்கு தனி மெஜாரிட்டி தராட்டி மக்கள் எப்டி பாஸ் தருவாங்க

தளபதி பெர்மான்ஸ் பத்தாது போல .... கலைஞரே ஐ வான்ட் மோர் எமோஷ்ன்ஸ்......

புதன், 11 மே, 2016

திருந்தி விட்டதா தி மு க? பாவமன்னிப்பு தந்த ஊடகங்கள்

திருந்தி விட்டதா திமுக?

சில நாட்கள் முன்பு ஒரு நகைச்சுவை படித்தேன்
ஒரு குடிகாரன் ஒருவனை திருத்த நினைத்த பாதிரியார் அவனுக்கு பாவ மன்னிப்பு அளித்து தண்ணீர் தெளித்து " இன்று முதல் நீ புதிய மனிதன், பழைய பெயர் கந்தசாமி கிடையாது, உன் புதிய பெயர் சைமன், இனிமேல் சாராயம் குடிக்க கூடாது என்று சத்தியம் வாங்கினார். டீ குடிக்கலாமா பாதர் என்று கேட்ட குடிகாரனுக்கு பாதர் தாராளமாக குடிக்கலாம் என்று பாதிரியார் கூறினார்.
கடவுள் முன்பு சத்தியம் செய்து விட்டு
சென்ற குடிகாரன் மறுநாள் பாதிரியாரிடம் சாராய பாட்டிலுடன் வந்து சாராய பாட்டிலை எடுத்து தண்ணீர் தெளித்து இன்று முதல் நீ சாராயம் கிடையாது உன் பெயர் டீ என்று குடிக்க தொடங்கினான்

திமுகவும் அந்த குடிகாரனை போலத்தான் ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போது நாங்கள் திருந்தி விட்டோம், எங்கள் பாவத்தை மன்னித்து விடுங்கள் இனிமேல் ஊழல், அராஜகம், சட்ட ஒழுங்கு சீர்கேடு  என்று எதுவும் செய்ய மாட்டோம் என்று கூறுவார்கள், ஆட்சிக்கு வந்தவுடன் முன்னை விட அதிகமாக ஊழல், அராஜகம் , சட்ட ஒழுங்கு சீர்கேடு. செய்து விடுவார்கள்
89,96, 2006 இதையே சொல்லி ஏமாற்றினர்.. சில ஊடகங்களும் வாங்கிய பணத்திற்கு விசுவசமாக கருணாநிதி பரிசுத்தம் அடைந்து hவிட்டார் என்று சத்தியம் செய்கின்றனர் .உங்கள் வேட்பாளர் பட்டியலை பார்த்தால் திருந்திய மாதிரி தெரியவில்லை.. அதே முகங்கள் ,மற்றும் குடும்ப வேட்பாளர்கள்.. இவிகள எல்லாம் பார்த்தா திருத்துன மாதிரியா தெரியுது மக்களே?
இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்
(சிறுபாண்மையிைனர் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் )

திங்கள், 9 மே, 2016

மூடர் கூடமும்,... திமுகவின் நமக்கு நாமே 2 ம் பாகமும்


ஒரு வாரமாக தந்தை மகனையும், மகன் தந்தையையும் மாறி மாறி புகழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அய்யா நீங்கள் 5 முறை தமிழக முதல்வராக இருந்து உள்ளிர்கள், மகன் மேயர், துனை முதல்வர், அமைச்சர், பதவிகளை வகித்து உள்ளார்கள்.பற்றாகுறைக்கு குடும்ப உறுப்பினர்கள் மத்திய அமைச்சர். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து உள்ளார்.. இதை பயன் படுத்தி மக்களுக்கு ஏதாவது நன்மை செய்து இருந்தால் மக்கள் புகழ்ந்து இருப்பார்கள், இன்று உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ளும் நிலை வந்து இருக்காது..இது தான் நமக்கு நாமே பாகம் 2 போல.. -

இதை பார்த்தால்  நமக்கு மூடர் கூடம் படத்தின் வசனம் தான் ஞாபகம் வருகிறது

இதுக்கு வருத்தபடனும் சென்றாயன் ,, பெருமை படக் கூடாது

NDTV கருத்து கணிப்பு... யாருக்கு சாதகம்.. அலசல்

NDTV கருத்து கணிப்பு அல்லாமல் வெறும் வாக்கு சதவிதத்தை வைத்து ஒரு அலசல் வெளியுட்டுள்ளது.. கடந்த தேர்தல்களில் வாங்கிய வாக்குகளை வைத்து 42% வாக்குகள் அதிமுகவுக்கும் , 33 % வாக்கு கள் தி மு க கூட்டணிக்கும் உள்ளது  என்று கூறியுள்ளது

1.முதல் சாத்தியகூறு
.இதே நிலைமை நீடித்தால் அதிமுக அணி 195 இடங்களில் வெற்றி பெறும் திமுக 30க்கும் குறைவான இடங்களை யே பெறும்

2வது சாத்தியகூறு
இதில் அதிமுக அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் 3 %  திமுக அணிக்கு சென்றால், அதிமுக 165 க்கும் மேற்பட்ட இடங்களை பெறும், திமுக அணி 45 இடங்களை பெறக் கூடும்

3வது சாத்தியகூறு
இதில்  5 % அதிருப்தி வாக்குகள் தி மு க அணிக்கு சென்றால் அதிமுக' 135 இடங்களையும் , தி மு க அணி 85 முதல் 90 இடங்களை பெறும்.

4 வது சாத்தியகூறு
இதில் 7.5 % அதிருப்தி வாக்குகள் தி மு க அணிக்கு சென்றால் மட்டும் திமுக அணி 140 முதல் 160 இடங்களையும் பெறும்.. அதிமுக 70 முதல் 90 இடங்களைப் பெறும்

இந்த தேர்தலில்   5 எதிர்கட்சிகள் போட்டியிடுவதால் 2 வது மற்றும் 3வது நிலையே  பெரும்பாலும் சாத்தியம்.. அதுவும் கிராமப்புறங்களில் 5%  அதிருப்தி வாக்குகள் தி மு க அணிக்கு போவது என்பது மிகவும் கடினம்

4 வது சாத்திய கூறு கிடைக்கும் என்ற திமுக தொண்டர்களின் எண்ணம் சிறிது கடினமாகும்
 எனினும் நகர்புறங்களில் மக்கள் எளிதில் அதிருப்தி அடையும் சாத்தியம் இருப்பதால், நகர்புற வேட்பாளர் களுக்கு கடுமையாக இருக்கும்

ஞாயிறு, 8 மே, 2016

24 ... காலப் பயணம் வெற்றி யா?

24 திரைப்படம்

சூர்யாவும், தமிழில்  யாவரும் நலம், தெலுங் கில் மனம்  படங்களை இயக்கிய விக்ரம்குமார்   இனைந்த படம்
தமிழ் சினிமாவுக்கு புதிய களமான கால பயணம் (time travel) எடுத்து உள்ளார்

பலம்
 தமிழுக்கு புதுமையான கதை' களம், மூன்று கதாபாத்திரத்திற்கும் நடிப்பில் வேறுபாடு தரும் சூர்யா அதுவும் வில்லனாக வரும் சூர்யா, ரகுமான் பின்னனி இசை மற்றும் பாடல்கள்,
ஒளிப்பதிவு


பலவினம்
திரும்ப  திரும்ப வரும் காட்சிகள், மிகவும் மெதுவாக செல்லும் படத்தின் வேகம், விணடிக்கபட்ட ரேணுகா  மேனன், ஒரே வசனம் பல முறை வருவது

மெய் நிகரா பாடல் பலமுறை கேட்க தூண்டும் ரகுமான், கவிப்பேரரசுவின்   மாயாஜாலம்

 கிடைத்த கால பயண கடிகாரத்தை வைத்து விமான வேகத்தில்  செல்லாமல் டவுன் பஸ் வேகத்தில் செல்லலாமா ?

புதிய முயற்ச்சிக்காக பார்க்கலாம்.
பி கு
படத்தில் சூர்யா கால பயண கடிகாரத்தை வைத்து  பின்னோக்கி சென்று தனது அப்பாவின் மரணத்தை தடுப்பார் ... அது போல  திருவாருரார் திருட்டு  ரயில் ஏறியதை தடுத்தால்  50 வருடத்தில் நமது மாநிலமும் சிறப்பாக ஆகி  இருக்கும்


விலை இல்லா பொருட்கள் உண்மையில் அவசியமற்றதா?



நானும்  விலை  இல்லா பொருட்கள் மக்கள் வரி பணத்தை வீணடிகிறார்கள் என்று நினைத்தேன்.. எனது நண்பர்  ஒருவர் மிகவும் பொருளாதார பின்னடைந்த பகுதியில் ஆசிரியராக பணி புரிந்து கொண்டு இருக்கிறார்..அவர் எங்கள் பகுதியில் மாணவ,மாணவிகள் பெரும்பாலும் விலையில்லா சைக்கிள் மிகவும் பயனுள்ள தாக உள்ளதாகவும் , மாணவர்களுக்கு தரும் லேப் டாப் , தங்கள் பகுதி மாணவர்களும் நகரத்தின் மாணவர்களுக்கு இணையாக போட்டி  இட  முடிகிறது என்றும் கூறினார்..

GRINDER ,mixie  போன்றவை  மிகவும் வாங்க  இயலாத விட்டு பெண்கள் தங்களது வேலை பளுவை குறைக்க உதவு கிறது என்று  சொல்லு கிறார்கள்  ..இதை குறை கூறுபவர்கள் ஒரு  நாள்  தங்களுது மனைவியை  இவற்றை உபயோகிகாமல் இருந்து பார்க்க  சொல்லவும் ..

நாம்  லேப்டாப்  கேட்டால்  25,000 சொல்லும் கடைகள் , ஆனால்  அரசாங்கம்  மொத்தமாக  வாங்கும்  பொழுது  10,000 ரூபாய்க்கு  வாங்க  முடிகிறது ..இதனால்  பெரும்  பயன்  இல்லாதவர்கள் அடைகிறார்கள் .

மதிய தர மக்கள்  மன  நிலை நமக்கு மேல் உள்ளவர்கள் எவ்ளோ கொள்ளை யடித்து  சென்றாலும் கோபம் வருவதிலை ஆனால்  நமக்கு கீழ் உள்ளவர்கள் சிறிது இலவசமாக பெற்றால் கடும் கோபம் அடைகிறோம்... உதாரணமாக மொத்தமாக  இலவசமாக கொடுத்த பொருட்களின் மதிப்பு 10,000 கோடி ஆனால் பெரும் பணக்காரர்கள்  தள்ளுபடி செய்யபட்ட கடன் தொகை மட்டும் 2 லட்சம் கோடிக்கும் மேல்.. இலவசத்தில் பலன் பெற்றவர்கள் உண்மையில் வழியில்லாத பல லட்சம்  பேர் , ஆனால்  தள்ளுபடி செய்ய பட்ட கடனில் பயன்  பெற்றவர்கள் சில நூறு பேர் மட்டும்

அரசாங்கம் சிறிது முயற்சி செய்து உண்மையில் பயன் உள்ளவர்களுக்கு மட்டுமே  தர வேண்டும்,
சமுக பொறுப்புள்ள வசதி படைத்தவர்கள் தங்களுக்கு இலவசம் வேண்டாம் என்றும் சொல்லலாம் எனவே
 நியாயமானவர்க ளுக்கு சென்றடையும்..
 இன்று இலவசமே  வேண்டாம் என்று கூப்பாடு போடும் பத்திரிக்கைகள் தான் தங்களது பத்திரிக்கையோடு சோப்பு இலவசம், சாம்பு இலவசம் என்று ஆரம்பித்து வைத்தது என்பதையும் மறந்து விட வேண்டாம்



சனி, 7 மே, 2016

கருத்து கணிப்புகள் :- வெளி வராத அதிர்ச்சி பின்னணிகள்


கருத்து கணிப்புகள் :- வெளி வராத அதிர்ச்சி பின்னணிகள்
அ ண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை. அரசே  தாது மணல் விற்பனையை முறைப்படுத்தும்  ஏறத்தாழ முவாயிரம் கோடி ஆண்டுக்கு வருமாணம் வரும் முடிவு. 
இதனால் தொலைகாட்சி நிறுவனர் நேரிடையாக பாதிக்கபடுவார்.. இப்பொழுது தெரிகிறதா ஏன் கொந்தளித்து வருகிறது கருத்து கணிப்பு...
இதில் அந்த பத்திரிக்கை எப்படி சேர்ந்தது , அந்த பத்திரிக்கையின் தலைநகர பதிப்பின் வெற்றி பெயர் கொண்ட தலைமை நிருபர், தமிழக திமுக பெண் எம்பியின் உத்தரவின்படி இந்த கூட்டணியை அமைத்தார்...
இந்த புதிய அடிமைகளின் ஆட்டத்தை பார்த்த மாறன் சகோதரர்களின் நிரந்தர அடிமை பத்திரிக்கை  துள்ளி குதித்து மெகா கருத்து கணிப்பு என்று வந்து விட்டார்..
2011 ல் 90 இடங்களை மட்டுமே அதிமுக அணிக்கு கருத்து கணிப்பில் கொடுத்து கரி அள்ளி பூசி கொண்டு, 2014 கருத்து கணிப்பில் திமுக வுக்கு 14 இடங்களும் , பாஜகவுக்கு 11 இடமும் அள்ளி கொடுத்து அசிங்கபட்டு..
நாளையும் கருத்து கணிப்பில் திமுக கூட்டணிக்கு 140 முதல் 160 இடங்களும்,
அதிமுக அணிக்கு 50 முதல் 70 இடங்களும், மற்ற அனைவருக்கும் ஒற்றை படையில் சீட் தர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது
இந்த எண்கள் அனைத்தும் மக்களிடம் கேட்டு எடுப்பதல்ல... அவர் கள் அலுவலகத்தின் மேஜையில் குருமா நிருபரும், விஷ்ணு பெயர் கொண்ட நிருபரும் முடிவு செய்வது.
2014 அனைத்து பத்திரிக்கை கணிப்பையும் மீறியே ஜெயித்தது (புகைப்படத்தை பார்க்க)


தமிழக மீடியாவில் சிலர் தங்களால் ஆட்சியை மாற்ற முடியும் என்று நினைத்து கொண்டு முயற்ச்சி செய்து பார்கிறார்கள்
களத்தில் உள்ள தொண்டர்களும், பொது மக்களும் குழப்பம் அடைய மாட்டார்கள்.
முடிந்த அளவு ஷேர் செய்யவும்

வெள்ளி, 6 மே, 2016

கருத்து கணிப்பும், சதுரங்க வேட்டையும்


நியூஸ் 7 தினமலர் கருத்து கணிப்பு :-சென்னை மண்டலத்தில் அதிமுக 14 தொகுதியில் வெற்றி  பெறும்

சதுரங்க வேட்டை எந்த ஒரு பொய் சொன்னாலும் அதில் கொஞ்சம் உண்மை இருப்பது போல் பார்த்து கொள்ள வேண்டும்


தேர்தல் அறிக்கை . ஆட்சியில் இருந்த பொழுது ஏன் செய்யவில்லை

அ தி மு க வின் தேர்தல் அறிக்கை வெளியாகி விட்டது.. பல நீண்ட கால திட்டங்கள் Like மின்சார தன்னிறைவு, நதி நீர் மேம்பாடு போன்றவை கூறிப்பிட தக்கது மேலும் பல சிறப்புகள் உள்ளன. -
ஆளும் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடும் பொழது சிலர் இதை ஆட்சியில் இருக்கும் பொழுது ஏன் செய்யவில்லை என கேட்கிறார்கள் .

அரசாங்கங்கள் 5 ஆண்டு திட்டம் போன்று, ஆண்டு தோறும் வெளியிடும் நிதி நிலை அறிக்கை போன்று, அடுத்த 5 ஆண்டு காண திட்டம் தான் தேர்தல் அறிக்கையாக வெளியீடப் பட்டுள்ளது.

முதலில் நடந்து சென்றவன் , சைக்கிள் வாங்குவான், பிறகு சில வருடங்கள் கழித்து மோட்டார் சைக்கிள், மேலும் சில வருடங்கள் கழித்து கார் வாங்குவான் அவனிடம் முதல்ல ஏன் கார் வாங்கவில்லை என்று கேட்பது போல் உள்ளது .முன்னேற்றம் படி படியாக தான் அமையும

வியாழன், 5 மே, 2016

தனி ஒருவன் வசனமும், தமிழக அரசியல் உதாரணமும்

ஜெயம் ரவி தனி ஒருவன் ல ஒரு வசனம் பேசுவார்.. திடீர்ன்னு முதல் பக்கத்துல உள்ள செய்திக்கும் மூணாம் பக்கத்துல உள்ள செய்திக்கும் உள்ள சம்பந்தம் புரிய ஆரம்பித்து விட்டது என்பார்
அது போல நீயூஸ் 7 கருத்து கணிப்புக்கும் அது நடுவுல வர்ற மனிதன் பட விளம்பரத்துக்கும்,
சன் டீவில விகடன் வழங்கும் தெய்வமகள் பாத்துக்கிட்டு ஜுனியர் விகடன் வர்ர செய்திக்கும்,
தமிழ் Oneindia Editor 1 வருடம் முன்பு கலைஞரை நேரில் பார்த்ததுக்கும் அதற்கு பிறகு வர்ர செய்திக்கும்
உள்ள சம்பந்தம் புரிய ஆரம்பிக்குது

புதன், 4 மே, 2016

உலகின் சக்தி வாய்ந்த பதவியில் ஒரு விஜயகாந்த் .. திரு டொனால்ட் டிரம்ப்

உலகின் சக்தி வாய்ந்த பதவியில் ஒரு விஜயகாந்த் .. திரு டொனால்ட் டிரம்ப்
உள்ளுர் கவுன்சிலர் தேர்தல் பத்தியே கவலை  படாத நாம்  ஏன் அமெரிக்க அதிபர் தேர்தல் பத்தி கவலை பட வேனும் நினைச்சாலும்  நம்ம கவுன் சிலர் நல்லா இல்லாட்டி நம்ம தெரு தான் நாறும்.. அமெரிக்க அதிபர் சரியா இல் லாட்டி உலகமே நாறிடும்...
அது  இல்லாம இன்னைக்கு நாம பாக்குற வேலை   நாளைக்கு நிலைக்குமா இல்லையாங்குறதும் இந்த பதவியில் இருப்பவரின் செயல்பாடுகளும் முடிவு செய்யும்.

டொனல்ட் trump பெரும் பணக்காரர்.. அவரது  கட்சியின் சார்பில் அவரது வேட்பு மனு ஏறதாழ உறுதியாகி விட்டது .
இவரது பேச்சுகள் மிகவும் அதிரடியாக விஜயகாந்தை விட மோசமாக சீமான்  போல் உள்ளது .
ஒரு நாள் இந்திய மென்பொருள் நிறுவனங்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றி விட வேண்டும் என்றும், மறுநாள் முஸ்லிம்களை உள்ளே விட கூடாது என்றும், இன்னொரு நாள்  சீனாவின் வர்தகத்கத்தை அழிக்க வேண்டும் என்று கூறி பயம் ஏற்படுத்துகிறார் .

இவரு கடைசியில் ஜெயிப்பாரா?   ஜெயித்து அதிபர் பதவியில் அமர்ந்தால் பெரிதாக எதுவும் செய்யாமல் சும்மா விடுவாரா ?   எதாவது ஒரு நாட்டோட சண்டை போடுவாரா ? IT  ஆளுங்கள ஊருக்கு அனுப்பு வாரா?     எல்லாம் கடவுள் தான் அறிவார்

திங்கள், 2 மே, 2016

வளர்ச்சி கதையின் முடிவு சோகமா? இல்லை சந்தோஷமா

வளர்ச்சி

நண்பர் ஒருவர் கூறியது

எனது தாத்தா கிராமத்தில் நிலம் வைத்து மிராசுதாராக இருந்தார்... என் தந்தை அரசு வேலை தேடி கொண்டு தனது சம்பாத்தியத்தை கொண்டு தஞ்சை நகரில் வீடு கட்டி குடியேறினார்.. என்னை படிக்க வைத்தார்.. நான் தகவல் தொழில் நுட்பத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டு சென்னையில் வீடு கட்டி குடியேறி விட்டேன்.. எனது மகன் நாளை வெளிநாட்டில் வேலை தேடி கொண்டு வெளிநாட்டில் குடியேறுவான்.. வளர்ச்சி என்ற பெயரில் ஒவ்வொரு கட்டமாக கிராமத்தில் இருந்து சிறு நகரம், பிறகு பெருநகரம், வெளிநாடு என்று குடியேறுகிறோம்....
நமது வருமானத்தில் பெரும் பகுதியை நாம் வாழும் இடத்தில் வீடு வாங்குவதற்கே செலவிடுகிறோம்.
இந்த  பொருளதார வளர்ச்சி என்னும் சக்கரத்தில் சிக்கி என் தந்தை என் தாத்தாவையும், நான் என் தந்தையையும் பிரிந்து தனியாக வாழ்ந்தார்கள், நாளை எனது மகன் என்னையும் விட்டு பிரிவான். ..
இத்தனைக்கும் காரணம் வேலை, சூழல் என்று சொன்னாலும் விவசாயம் லாபம் இல்லாத தொழிலாக மாறியது தான்.

கடைசியாக சாப்பிடுவதற்கு மனிதன் இருக்கும் வரை, விவசாயம் அழியாது ஆனால் விவசாயி அழிந்து விடுவான்..
லாபம் வரும் எந்த தொழிலையும் செய்ய தயாராக இருக்கும் நிறுவனங்கள் கையில் விவசாயம் செல்லும்...
மிராசுதார்  என்று சொந்தமாக விவசாயம் செய்த இடத்தில் நாமே பெரிய நிறுவனத்தின் கூலி பணியாளராக வேலை செய்வோம்.. இது தான் இந்த வளர்ச்சி கதையின் முடிவு


இந்த வளர்ச்சி  கதையின் முடிவு சோகமா? இல்லை  சந்தோஷமா? குழப்பத்துடன் நான்