தமிழகத்தின் மக்கள் தொகை பெருக்கத்தின் (Fertility rate)அளவு ஒரு பெண்ணிற்கு 1.6 . தென் மாநிலங்கள் அனைத்தும் ஏறக்குறைய இதே அளவுதான் . மத்திய இந்தி மாநிலங்களின் இன பெருக்கத்தின் அளவு ஒரு பெண்ணிற்கு 2.8.
தமிழகத்தின் கல்வியறிவு அளவு ஏறக்குறைய 85%, இதே மத்திய இந்தி பேசும் மாநிலங்களின் அளவு ஏறக்குறைய 65% மட்டுமே.
உயர்கல்வி அடைபவர்கள் தமிழகத்தில் கிட்டத்தட்ட 43% , மத்திய இந்தி பேசும் மாநிலங்களில் இது கிட்டத்தட்ட 27% சதவீதம் மட்டுமே.
இதன் காரணமாகத்தான் பெரும்பாலும் தமிழகத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைகிறது, படித்த தமிழ் இழைஞர்கள் மாநிலத்தைவிட்டோ , தேசத்தை விட்டோ கடந்து பணி புரியும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.
மேலும் படிக்காத உடல் உழைப்பு பிற மாநில தொழிலாளர்கள் தமிழகம் நோக்கி வர காரணம் .
மிக அதிகமான உயர் கல்வியை தந்த நாம் , அந்த அளவு வேலை வாய்ப்பை உருவாக்க முடியுமா தெரிய வில்லை ?.. மேலும் இந்த நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் 80 களில் இருந்தது போன்று வேலை வாய்ப்பு இன்மை ஏற்படும் வாய்ப்பு உள்ளது . அடுத்த சில வருடங்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை இல்லாமலோ/ தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தமிழகத்தில் மட்டும் இருப்பார்கள். ஒரு சமுதாயத்தில் நான்கு அல்லது மூன்று இளைஞர்களில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது பற்ற வைக்க தயாராக வெடிகுண்டை கையில் வைப்பதற்கு சமம் . ( ராம்குமார் ,ஸ்வாதி கொலை எல்லாம் ஒரு சில துவக்கங்கள் தான் )
இதை எல்லாம் யோசித்து எதிர்காலத்தை நோக்கி செயல்பட இதுவே தருணம் . வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டு நாம் ஒபிஸ் vs TTV vs எடப்பாடி விளையாட்டு விளையாட கூடாது. உதவ வேண்டிய மத்திய அரசோ பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டி கொண்டு இருக்கிறது.
யார் ஆண்டாளும் மக்கள் நலத்தை நோக்கி சிந்தியுங்கள் .
யார் ஆண்டாளும் மக்கள் நலத்தை நோக்கி சிந்தியுங்கள் .
எதிர்காலத்தை நோக்கி சிந்தியுங்கள் ?
இந்த தலைப்பு வைத்தால் நிறைய பேர் படிப்பார்கள் என்பதை தவிர வேறு காரணம் இல்லை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக