பிரிந்தவர் கூடினால் கண்ணீர் தான் அங்கு மொழி என்று சொல்வது உண்டு ..
தமிழ் சினிமா ஆரம்ப காலத்தில் இருந்தே பிரிந்தவர் சேரும் காட்சிகள் நிறைய உண்டு . அதுவும் பாடலால் இணையும் காட்சி கள் பல, இது போன்ற காட்சிகளில் நடிப்பை விட , பாடல்வரிகள் மற்றும் பாடலின் பின்னணி இசைதான் காண்பவருக்கு ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் சக்தி உடையது .
எனக்கு மிகவும் பிடித்த அத்தகைய பாடல்களில் ஒன்று ,
நாளை நமதே படத்தில் வரும் அன்பு மலர்களே, நாளை நமதே தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே பாடல் ,
தம்பி பிரிந்து போன சகோதரர்களை பாடலை பாடி கண்டுபிடிப்பார், SPB தம்பி வேடத்தில் நடித்தவருக்கும் , TMS புரட்சி தலைவருக்கும் பின்னணி கொடுத்து இருப்பார்கள்.
வருட கணக்கில் பிரிந்த சகோதரர்கள் சேர்ந்தால் முதலில் நலம் விசாரித்து கொள்வார்களா இல்லை பாடலை முழுதாக பாடி முடிப்பார்களா என்ற கேள்வி எழாமல் உங்களை மயங்க வைப்பதுதான் திரைப்படத்தின் மேஜிக் ...
90 களில் சூப்பர் குட் பிலிம்ஸ் காலத்தில் இத்தகைய காட்சிகளும் பாடல்களும் அதிகம்.
உதாரணமாக
நான் பேச நினைப்பதெல்லாம் படத்தில் ஆனந்த் பாபு , மோகினி இணையும் ஏலேலம் கிளியே பாடல்....
(இதிலும் ஜேசுதாஸ் குரலில் முதலில் பாடிய பாடலை இறுதி காட்சியில் மனோ பாடி இருப்பார் , யாரும் அதை பொருட் படுத்தவில்லை..)
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய் , சிம்ரன் இணையும் இன்னிசை பாடி வரும் பாடல் .
புது வசந்தம் படத்தில் வரும் சித்தாரா நண்பர்களுடன் இணையும் பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா பாடல் இப்படி பல ...
கடைசியாக ...மாய நதியிலே பாடல் கபாலியில் ...அதுவும் பல வருடங்கள் பிரிந்து இணைந்தவர்கள் சேர்ந்த பிறகு வரும் ஒரு நல்ல பாடல்..
இப்போது எல்லாம் செல்போன் , இணையம் ,Facebook, வாட்ஸப் காலம் ஆகி விட்டதால் இது போன்ற பாடலுடன் இணையும் காட்சிகள் குறைந்து விட்டது தமிழ் சினிமாவில் ..
ஆனாலும் பிரிந்தவர்கள் இணையும் இசையோடு வரும் ஆனந்த கண்ணீர் பாடல்களை நாம் கொஞ்சம் தொலைத்து விட்டோம் என்றே தோன்றுகிறது.
(பிகு ):- இத்தைகைய பாடல்கள் சிலவற்றை நீங்கள் பின்னுட்டத்தில் (கமெண்ட்ஸ்) பகிர்ந்தால் மகிழ்ச்சி .
எனக்கு மிகவும் பிடித்த அத்தகைய பாடல்களில் ஒன்று ,
நாளை நமதே படத்தில் வரும் அன்பு மலர்களே, நாளை நமதே தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே பாடல் ,
தம்பி பிரிந்து போன சகோதரர்களை பாடலை பாடி கண்டுபிடிப்பார், SPB தம்பி வேடத்தில் நடித்தவருக்கும் , TMS புரட்சி தலைவருக்கும் பின்னணி கொடுத்து இருப்பார்கள்.
வருட கணக்கில் பிரிந்த சகோதரர்கள் சேர்ந்தால் முதலில் நலம் விசாரித்து கொள்வார்களா இல்லை பாடலை முழுதாக பாடி முடிப்பார்களா என்ற கேள்வி எழாமல் உங்களை மயங்க வைப்பதுதான் திரைப்படத்தின் மேஜிக் ...
90 களில் சூப்பர் குட் பிலிம்ஸ் காலத்தில் இத்தகைய காட்சிகளும் பாடல்களும் அதிகம்.
உதாரணமாக
நான் பேச நினைப்பதெல்லாம் படத்தில் ஆனந்த் பாபு , மோகினி இணையும் ஏலேலம் கிளியே பாடல்....
(இதிலும் ஜேசுதாஸ் குரலில் முதலில் பாடிய பாடலை இறுதி காட்சியில் மனோ பாடி இருப்பார் , யாரும் அதை பொருட் படுத்தவில்லை..)
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய் , சிம்ரன் இணையும் இன்னிசை பாடி வரும் பாடல் .
புது வசந்தம் படத்தில் வரும் சித்தாரா நண்பர்களுடன் இணையும் பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா பாடல் இப்படி பல ...
கடைசியாக ...மாய நதியிலே பாடல் கபாலியில் ...அதுவும் பல வருடங்கள் பிரிந்து இணைந்தவர்கள் சேர்ந்த பிறகு வரும் ஒரு நல்ல பாடல்..
இப்போது எல்லாம் செல்போன் , இணையம் ,Facebook, வாட்ஸப் காலம் ஆகி விட்டதால் இது போன்ற பாடலுடன் இணையும் காட்சிகள் குறைந்து விட்டது தமிழ் சினிமாவில் ..
ஆனாலும் பிரிந்தவர்கள் இணையும் இசையோடு வரும் ஆனந்த கண்ணீர் பாடல்களை நாம் கொஞ்சம் தொலைத்து விட்டோம் என்றே தோன்றுகிறது.
(பிகு ):- இத்தைகைய பாடல்கள் சிலவற்றை நீங்கள் பின்னுட்டத்தில் (கமெண்ட்ஸ்) பகிர்ந்தால் மகிழ்ச்சி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக