TTV தினகரனும் YSR ஜெகன் மோகன் ரெட்டியும் ...வழிகாட்டும் ஆந்திர வரலாறு.
சிரஞ்சீவி போன்ற நடிகர்கள் வந்து காங்கிரஸில் சேர்ந்து மாநிலத்தை இரண்டாக பிரித்து குட்டையை குழப்பினாலும், காங்கிரஸ ஒரு நாடாளுமன்ற தொகுதியிலோ , ஒரு சட்டமன்ற தொகுதியிலோ கூட வெற்றிபெற முடியாமல் படுதோல்வியை சந்திக்கிறது . கை சின்னத்துடன் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் மாநில அரசியலில் தொலைந்து போகிறது
2009 YS ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு , ஒட்டுமொத்த ஆந்திர காங்கிரசும் ஜெகன் மோகன் ரெட்டியின் பின் அணிவகுக்க தயாராகிறது. ஆனாலும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு மாநிலத்தில் இன்னொரு வலிமையான தலைவரை உருவாக்க மனம் இல்லை . ஜெகன் மோகன் ரெட்டியை ஒதுக்கி விட்டு , மக்கள் செல்வாக்கு இல்லாத ரோசையா , கிரண் குமார் ரெட்டி போன்றவர்கள் முதல்வர் ஆக்கபடுகிறார்கள் .
மத்திய மாநில அரசுகளின் அதிகாரத்தை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக YSR ஆதரவாளர்களை இழுக்க ஆரம்பித்தனர்.
மத்திய மாநில அரசுகளின் அதிகாரத்தை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக YSR ஆதரவாளர்களை இழுக்க ஆரம்பித்தனர்.
சுதாரித்து கொண்ட ஜெகன் மோகன் , தன்னுடைய ஆதரவாளர்களான 18 MLA களுடன் பிரிகிறார். அவரின் மீது வருமான வரி துறை , அமலாக்க பிரிவின் மூலமாக வழக்கு போடபடுகிறது . 16 மாதம் சிறையில் அடைக்கபடுகிறார். மத்தியில் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியை தொடர்கிறது . இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லோரும் அதிகாரத்தை விட மனமில்லை காங்கிரஸில் தொடர்கிறார்கள்
தேசிய கட்சியாதலால் சின்னம் கேட்க கூட முடியவில்லை . வேறு சின்னம் தான் . 55 ஆண்டுகால ஆந்திர அரசியலில் கை சின்னம் இல்லாமல் நிற்க முடியுமா என்றார்கள். ஆனாலும் ஜெகன் செல்வாக்கு உயருகிறது . 2014 பிஜேபி கூட்டணியுடன் போட்டியிட்டு , மோடி அலையில் மயிரிழையில் நாயுடு வெற்றிபெறுகிறார் ..ஜெகன் மோகன்புதிய சின்னமான மின்விசிறி சின்னத்தில் (FAN) போட்டியிட்டு 67 சட்டமன்ற தொகுதிகளிலும் , 9 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் .
சிரஞ்சீவி போன்ற நடிகர்கள் வந்து காங்கிரஸில் சேர்ந்து மாநிலத்தை இரண்டாக பிரித்து குட்டையை குழப்பினாலும், காங்கிரஸ ஒரு நாடாளுமன்ற தொகுதியிலோ , ஒரு சட்டமன்ற தொகுதியிலோ கூட வெற்றிபெற முடியாமல் படுதோல்வியை சந்திக்கிறது . கை சின்னத்துடன் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் மாநில அரசியலில் தொலைந்து போகிறது
கிட்டத்தட்ட ஜெகன் மோகன் போன்றுதான் TTV அவர்களின் நிலையும் , ஆயிரம் வழக்குகள் இருந்தாலும் , தலைமை பண்பு , மத்திய அரசுக்கு அடிபணியாமை , மாநில நலனில் அக்கறையும் , மாநில உரிமையை விட்டு கொடுக்க மாட்டார் என்ற நம்பிக்கையும் சேர்ந்து அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வலுவான தலைவராக உருவாக்கும் என்று நம்புகிறோம் . .
மேலும் அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களால் பலம் அடைந்த இயக்கம் இல்லை . இது ஒற்றை தலைமையையும் , தொண்டர்களையும் பலமாக கொண்ட இயக்கம் . இரண்டாம் கட்ட தலைவர்கள் என்று சொல்லபடும் பலரும் மக்களை சந்தித்து வந்தவர்கள் அல்ல . சசிகலா உறவினர்கள் வீட்டையும் , போயஸ் தோட்டத்து கேட்டையும் சுற்றி பதவி பெற்றவர்கள் .
இப்போது நிர்வாக குளறுபடிகளால் ஆள்பவர்கள் மேலும் வலிமை இழப்பார்கள் . தேர்தல் வரும்போது இன்று ஆட்சியில் இருக்கும் EPS ,OPS போன்றவர்கள் ரோசையா , கிரண்குமார் ரெட்டி போன்று காணாமல் போய் விடுவார்கள். மாநில நலன் சார்ந்த போராட்டங்களால் TTV வலுவடைவார். TTV தினகரன்
திமுக விற்கு வலுவான சவாலாக விளங்குவார். அவரிடமே அதிமுக இயக்கமும் வந்து சேரும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக