வெள்ளி, 2 மார்ச், 2018

ஸ்ரீதேவி மரணமும், சசிகலா மீதான பழியும்

ஸ்ரீதேவி துபாயில் இறந்ததால் போனி கபூர் பழி சொல்லில் இருந்து தப்பித்தார்.. 3 நாளில் துபாய் போலிஸ் தீர ஆராய்ந்து விடுவித்து விட்டது..
இந்தியாவில் இறந்து இருந்தால், மீடியா டிரையல் நடந்து இருக்கும், அவரது இழப்பை பொருட் படுத்தாமல் அவருக்கு கொலைக்கார பட்டம் கிடைத்து இருக்கும். கொலை செய்ததை நேரில் பார்த்தது போல் யூடியுப் வீடியோக்கள்.
அப்புறம் ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன்.அவரும் வாட்ச்மேன், பால்காரன்  விசாரணை ஆரம்பிச்சு டைம்பாஸ் பண்ணுவார்
டிவி விவாதம் சம்பந்தமே இல்லாத ஆட்கள் வந்து கருத்து சொல்வார், நக்கீரன், விகடன் 6 மாதம் புலனாய்வு கட்டுரை ன்னு உடான்ஸ்.
தமிழச்சி ஸ்ரீதேவி, வடக்கிந்தியர் கபூர் தேசிய பிரிவினை குருப் கிளம்பிருக்கும்.
20 வருடம் மனைவியை நேசித்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்த மனிதருக்கு பிரிவு எப்படியான வலியை தரும் என்பதை  பழி சொல்பவர்கள் உணர வேண்டும்.

பிகு = அம்மாவிற்கு 33 ஆண்டு காலம் தோழியாய் , சகோதரியாய் வாழ்ந்து , 75 நாட்கள் மருத்துவமனையில் வைத்து பார்த்து கொண்டு, அவரின் மறைவின் வலியை தாங்கி கொண்டு, கொலை பழியையும் தாங்கி, இறந்தஅம்மாவின் இமேஜை காபாற்ற மருத்துவமனை புகைபடத்தை வெளியிடவும் மறுத்த எங்கள்  தாய் சின்னம்மாவின் தியாகமும் நினைவுக்கு வருகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக