செவ்வாய், 18 அக்டோபர், 2016

நகைச்சுவை:- மனைவியை சமாளிக்க முயன்றவரின் கதை?

பழங்காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த, புகழ் பெற்ற  முனிவர் ஒருவர் இருந்தார். அவரிடம் மிகப் பெரிய மன்னர்களும் அறிவுரை கேட்டு செல்வார்கள். அப்பேர்பட்ட முனிவருக்கு ஒரு சிறிய கவலை இருந்தது. என்ன தான் செயற்கரிய செயலை செய்தாலும் அவரது மனைவி சிறு சிறு குறைகளை கண்டு பிடித்து விடுவார். சின்ன சின்ன சண்டைகளும் அதனால் வந்து கொண்டு இருந்தது. அவரது சக்திகள் அனைத்தும் மனைவி 2 சொட்டு கண்ணீர் முன்பு செயல் இழந்து விடும்.
ஒரு நாள் சரி கடவுளிடமே கேட்டு விடலாம் என்று முடிவெடுத்து கடவுளிடம் சென்று அவரிடம் ஆலோசனை கேட்பதற்கு வந்ததாக கூறினார்.  கடவுளும் இவரை வரவேற்று வரவேற்பரையில் அமர செய்து விட்டு அடுப்படி சென்று மனைவியிடம் உணவுக்கு ஏற்பாடு செய்ய சொல்ல சென்றார்.
முனிவருக்கு கடவுளும், கடவுளின் மனைவியும் என்ன தான் பேசுகிறார்கள் என்று ஆர்வம் கொண்டு தன் சக்தியை பயன் படுத்தி கேட்க ஆரம்பித்தார்
கடவுளின் மனைவி " நீங்க இப்ப என்ன சாதிச்சுடிங்கன்னு உங்கள் ட இந்த முனிவர் ஆலோசனை கேட்க வந்து இருக்கிறார்"
இதை கேட்ட முனிவர் கடவுளுக்கே இப்படின்னா நாம எம்மாத்திரம்?  என்று முற்றும் தெளிந்தவராக நடையை கட்டினார்.

பின் குறிப்பு:-
இந்த கதை முழுவதும் கற்பனையே.. இது என்னுடைய, மற்றும் நமது நண்பர்கள் யாருடைய  வாழ்க்கை சம்பவங்களுக்கும் தொடர்பு கிடையாது.அப்படி எதுவும் உங்களுக்கு தோன்றினால் அதுக்கு யாரும் பொறுப்பல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக