செவ்வாய், 4 அக்டோபர், 2016

காவிரி நீரும், கையாலாகாத மத்திய அரசும்

...

 கிராமத்தில் பரம்பரை சொத்தை  பங்கு பிரிக்கும் பொழுது வீம்பு பிடித்த  போக்கிரி சகோதரன் "உரிமைன்னு கேட்டின்னா ஒன்னும் தர முடியாது, வேனும்னா  என்னுட்ட வந்து கெஞ்சி கேளு நானா பாத்து போனா போகுதுன்னு எதாவது தருவேன்ன்னு " சொல்றான் .. பஞ்சாயத்துக்கு ஊர் பெரிய மனிதர்களிடம் சாதுவான மற்றொரு சகோதரன் போனா, ஊர் பெரியவர்கள் போக்கிரி சகோதரனுக்கு பயந்து " அவன் தான் நீ கெஞ்சி கேட்டா பரிதாபபட்டு எதாவது தருகிறேன்னு  சொல்றான்ல பேசாம நீ அவனிடமே போய் கெஞ்சு என்று அறிவுரை வழங்கினார்கள்... அதுதான் காவிரி பிரச்சனையில் தற்பொழது நடத்து கொண்டு இருக்கிறது கர்நாடக அரசியல்வாதிகளின் போக்கிரி தனத்திற்கு கையாலாகாத மத்திய அரசும் துணை போய் மீண்டும் தமிழகத்தை பேச்சு வார்த்தை பிச்சை எடுக்க சொல்கிறது  . . பேச்சுவார்த்தைக்கு  திரும்ப போனா மைசூர் பாக்கும்,மைசூர் போண்டாவும் வேணா கிடைக்கும் காவிரி நீர் கிடைக்காது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக