புதன், 3 மே, 2017

தெர்மக்கோல் அமைச்சரும், பணமதிப்பிழப்பு பிரதமரும்


சென்ற வாரத்தில் 60 ஏக்கர்  பரப்பளவில்  தண்ணீர்  தேங்கி  இருக்கும் வைகை அணையில் தண்ணீர்  நீராவி  ஆவதை  தடுக்க  தெர்மோகோல் அட்டையை  விட்டார்   தமிழக  அமைச்சர்  , அந்த  முயற்சி படு தோல்வி அடைந்ததால்   இது  மிக பெரிய  முட்டாள்தனம்  என்று  ஊடகங்களிலும் ,சமூக வலை  தளங்களிலும்  கழுவி ,கழுவி  ஊற்றப்பட்டார்.

இதை விட  பெரிய  முட்டாள்தனம்  ,
கடந்த  நவம்பரில்  நடந்த பணமதிப்பு இழப்பு  நடவடிக்கை ,
ஏறத்தாழ 85%  பணத்தை  ஒரே  அறிவிப்பின் மூலம்  மதிப்பிழக்க செய்தார்கள்.  3 லட்சம்  கோடி  கருப்பு  பணம் ஒழிந்து விடும் , கள்ள நோட்டு  ஒழிந்து  விடும் , ஜனவரிக்கு பிறகு  புதிய  இந்தியா பிறக்கும் என்ற நம்பிக்கையை  ஏற்படுத்தி கோடிக்கணக்கான  மக்களை  ATM  வாசலில்  நிறுத்தினர் .. ஆணால்  98%  பணம்  டிசம்பர்  இறுதியில் வங்கிக்கு  திரும்ப வந்து  விட்டது .கள்ள  நோட்டை  பற்றி பேச்சே  காணோம் . ..ஒரு  மாற்றமும்  இல்லை வரவில்லை   ,இப்போது டிஜிட்டல் இந்தியா  என்று ஜல்லியடிக்கிறார்கள் .

தெர்மோகோல் திட்டத்தை விட  இது  மிக பெரிய முட்டாள்தனமாக முடிவடைந்து விட்டது .
தெர்மோகோல் திட்டத்தில்  இழப்பு 10 ஆயிரமோ  அல்லது  10 லட்சமோ தான் , பணமதிப்பு இழப்பினால்  100க்கும் மேற்பட்ட உயிர்  சேதம் , வேலை  இழப்பு , ஆயிரக்கணக்கான கோடிகளில் பொருளாதார இழப்பு .

 தெர்மோகோல் அமைச்சராவுது  திட்டம்  தோல்வி  அடைந்தது  என்பதை  கவுரவமாக ஒப்பு கொண்டு விட்டார் . பிரதமரோ , நிதி  அமைச்சரோ  ஒப்பு கொள்ள கூடவில்லை .தெர்மோகோல்  அமைச்சரிடம்  காட்டிய   வீரத்தை  ஊடகங்கள்  யாரும் அவர்களிடம் காட்ட  முடியவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக