சென்ற வாரத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் தேங்கி இருக்கும் வைகை அணையில் தண்ணீர் நீராவி ஆவதை தடுக்க தெர்மோகோல் அட்டையை விட்டார் தமிழக அமைச்சர் , அந்த முயற்சி படு தோல்வி அடைந்ததால் இது மிக பெரிய முட்டாள்தனம் என்று ஊடகங்களிலும் ,சமூக வலை தளங்களிலும் கழுவி ,கழுவி ஊற்றப்பட்டார்.
இதை விட பெரிய முட்டாள்தனம் ,
கடந்த நவம்பரில் நடந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கை ,
ஏறத்தாழ 85% பணத்தை ஒரே அறிவிப்பின் மூலம் மதிப்பிழக்க செய்தார்கள். 3 லட்சம் கோடி கருப்பு பணம் ஒழிந்து விடும் , கள்ள நோட்டு ஒழிந்து விடும் , ஜனவரிக்கு பிறகு புதிய இந்தியா பிறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கோடிக்கணக்கான மக்களை ATM வாசலில் நிறுத்தினர் .. ஆணால் 98% பணம் டிசம்பர் இறுதியில் வங்கிக்கு திரும்ப வந்து விட்டது .கள்ள நோட்டை பற்றி பேச்சே காணோம் . ..ஒரு மாற்றமும் இல்லை வரவில்லை ,இப்போது டிஜிட்டல் இந்தியா என்று ஜல்லியடிக்கிறார்கள் .
தெர்மோகோல் திட்டத்தை விட இது மிக பெரிய முட்டாள்தனமாக முடிவடைந்து விட்டது .
தெர்மோகோல் திட்டத்தில் இழப்பு 10 ஆயிரமோ அல்லது 10 லட்சமோ தான் , பணமதிப்பு இழப்பினால் 100க்கும் மேற்பட்ட உயிர் சேதம் , வேலை இழப்பு , ஆயிரக்கணக்கான கோடிகளில் பொருளாதார இழப்பு .
தெர்மோகோல் அமைச்சராவுது திட்டம் தோல்வி அடைந்தது என்பதை கவுரவமாக ஒப்பு கொண்டு விட்டார் . பிரதமரோ , நிதி அமைச்சரோ ஒப்பு கொள்ள கூடவில்லை .தெர்மோகோல் அமைச்சரிடம் காட்டிய வீரத்தை ஊடகங்கள் யாரும் அவர்களிடம் காட்ட முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக