புதன், 16 மே, 2018

பாஜக ஆட்டம் முடியும் நாள் அதிக தொலைவில் இல்லை

பாஜக ஆட்டம் முடியும் நாள் அதிக தொலைவில் இல்லை.
வீழ்த்த படவே முடியாதவர் எவரும் இல்லை..
ஒரு மாநில வாரியான அலசல்
உபியில் மாயாவதி, அகிலேஸ், காங் இணைந்து சந்தித்தால் பாஜக 2014 ஆண்டை விட 50 தொகுதிகள் குறையும்...
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் , பீகார் , ஜார்கண்ட், குஜராத்தில் கடந்த முறை வென்றதில் குறைந்தது 30% இழுந்தால் இன்னும் 60 தொகுதிகள் குறையும்
மராத்தியத்தில் சிவசேனா தனித்து போட்டியிட்டால் 10 தொகுதி கூட பாஜகவுக்கு தேறாது.
ஆந்திராவில் நாயுடு டாட்டா காட்டி விட்டார், தெலுங்கானா ராவும் நெருங்க விடவில்லை.
கர்நாடகாவில் கவுடாவும் , காங்கிரசும் சேர்ந்தால் பாஜகவுக்கு 10 தொகுதி கூட தேறாது.
தமிழ்நாட்டில் நோட்டாவுடன் போட்டி, யார் கூட்டணி வைத்தாலும் அவர்களுக்கு அரசியல் தற்கொலை தான்
2014 ஆண்டை விட கிட்டதட்ட 200 தொகுதிகள் குறையும்..
வடகிழுக்கு, வங்காளம், ஒரிசா சிறிது அதிகரித்தாலும் 160 தொகுதிகள் குறையும்.
..
இப்போதைக்கு தேவை எதிர்கட்சிகளின் ஒற்றுமை.. அதை ஜனநாயக படுகொலைகள் மூலம் பாஜக செய்து விடும்
உங்களை அர்னப ் போன்ற பொறுக்கி தின்னும் ஊடகங்களால் காபாற்ற முடியாது..
ஆட்டம் போடுங்கள் , வீழும் நாள் வெகுத் தொலைவில் இல்லை.

வியாழன், 26 ஏப்ரல், 2018

உறவுகளில் சில அரசியல் தலைவர்கள்

அரசியவாதிகள்  எல்லா  இடங்களிலும்  இருக்கின்றனர் .
உங்கள் உறவுகளின்  திருமணங்களில்   சில  அரசியல்வாதிகள்  இருப்பார்கள் நீங்கள் கண்டுபிடித்து கொள்ளுங்கள்  யார் அவர்கள் என்பதை  ?

வைகோ :- திருமண வீட்டிற்கு  முதலில்  வருவார் , உரிமையோடு  எடுத்து  போட்டு  எல்லா  வேலையும்  செய்வார், ஆனால்  திருமணத்துக்கு  முன் னாடி  யாரிடமாவது  கோவித்து  கொண்டு  .
கோபமாக  கிளம்பி  விடுவார்.

டுமிலிசை :- எல்லா  கல்யாண  வீட்டிலும் டம்மி பீசா  ஒரு பொண்ணு  இருக்கும்  ,  ஆனால் திருமணமே  தன்னால்தான்  தான்  நடை பெறுவது   போல்  சீன்  போடும் அங்கும்  இங்கும்  வீடியோ  காமெரா  முன்னாடியே   சுத்தும்   ..

கருணாநிதி :- கல்யாண  வீட்டில்  நடக்கும்  பெரும் பிரச்சனைகளுக்கு  மூல காரணம்  அவராகத்தான்  இருப்பார்  .ஆனாலும்  அவரே  பிரச்சினையை  தீர்க்க  உதவுவது  போல்  நடிப்பார். எல்லாரது கவனமும் தன்  மேல்  இருக்க  வேண்டும்  என்பதை மட்டும்  உறுதி  செய்வார் .

ஜெயலலிதா :-  வெட்டு  ஒன்னு ,துண்டு ரெண்டாக  பேசும்  ஒரு பெண்மணி இருப்பார்    , சிறிது  முன் கோபக்காரர் . ஆனாலும் அவரது நியாயம்  இருப்பதால்    நிறைய    அவரை பிடிக்கும் .

தினகரன்  :- மனிதருக்கு   சொந்தக்காரன் , வழக்குனு  தலை போற ஆயிரம்  பிரச்சனை  இருக்கும் , ஆனால்  திருமண வீட்டில்   சந்தோசமா   முன்னாடி நின்னு   எல்லோரிடமும்  சிரித்து  சிரித்து  பேசி கொண்டு இருப்பார்.

எடப்பாடி :- உறவினர் வட்டாரத்தில் திடீரென  அதிர்ஷ்டம்  அடிச்சு  பணக்காரர் ஆகி  இருப்பார், தன்னுடைய  பெருமையை  தானே பேசி கொண்டு திரிவார்.

ராகுல்/ ஸ்டாலின் -  பெரிய  குடும்பத்து  பிள்ளைகள் , தான் பெரிசா  சாதிக்காட்டியும் குடும்ப  பெருமையை  வைத்து  கொண்டு  கல்யாண  வீட்டில்  மரியாதையை  பெறுவார்கள் ..











ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

சசிகலா செய்த தவறு?

சசிகலா
33 ஆண்டு முன்பு,
காலம் அவருக்கு இரு வாய்ப்புக்களை தந்தது.
1, அரசு அதிகாரியான கணவருடன் நிம்மதியான உயர் நடுத்தர குடும்ப வாழ்க்கை.
2, உயிர் தோழியின் அரசியல் களத்திற்கு துணையாக போராட்ட வாழ்க்கை
அவர் தேர்ந்தேடுத்தது 2வது வாய்ப்பை.

திமுக ஆட்சி காலத்தில் " ஒரே ஒரு வாக்குமூலம், உங்களுக்கு விடுதலை, ஜெயலலிதாவிற்கு தண்டனை " என்ற பேரத்திற்கு அவர் சம்மதித்து இருந்தால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வேறு மாதிரி முடிந்து இருக்கும்,

யாருக்காக வாழ்ந்தாரோ , யாரை மருத்துவமனையில் இமையாக காத்து நின்றாரோ அவரது கொலைப்பழியையும் தாங்கி ஒரு புகைப்படம் வெளியிட்டால் அக்காவின் புகழூக்கு இழுக்கு தயங்கியவர்.

காலில் விழுந்து வாழ்வில் வளம் பெற்ற அத்தனை பெறும் துரோகியாகி நின்றனர்.
கணவரின் இறுதி மூச்சின் போது கூட அருகில் நிற்க  அனுமதி வேண்டிய போது, இவரால் வாழ்வு பெற்றவர்களாலே முட்டு கட்டைகள் போடப்பட்டது.

தஞ்சையின் தலை மகளால் வாழ்வு அடைந்தனர் பலர்.
ஆனால் இவர் முதலாவது வாய்ப்பை தேர்ந்து எடுத்து இருந்தால் கணவருடன் நிம்மதியான குடும்ப தலைவியாக சென்னையிலோ , தஞ்சையிலோ வாழ்ந்து இருப்பாரோ என்னவோ?

வெள்ளி, 2 மார்ச், 2018

TTV யின் ராஜபாட்டை

தந்தி TV பான்டே நேர்காணல் TTV யின் Aggresive முகத்தை வெளிப்படுத்தியது என்றால்,
 தந்தி TV ராஜபாட்டை TTV யின் அமைதி. யதார்த்தமான முகத்தை வெளிப்படுத்தியது.
கருணாநிதி போன்று மிமிக்ரி செய்ய கேட்ட பொழுது " கூச்சமாக இருக்கு" என்று சிரித்தபடி கூறியது nice.
GK மூப்பனார், வாஜ்பாய் பற்றிய நினைவு கூறலும் ,
அம்மா விலக்கி வைத்த தருணத்தை பற்றி மழுப்பல் இல்லாமல் விளக்கியதும் அருமை.
நிகழ்ச்சியின் எந்த ஒரு நொடியிலும் தற்பெருமை வெளிபடவில்லை.
நிகழ்ச்சியை பார்த்த பிறகு அண்ணன் TTV யின் மீதான மரியாதை இன்னொரு படி உயர்ந்துள்ளது..

ஸ்ரீதேவி மரணமும், சசிகலா மீதான பழியும்

ஸ்ரீதேவி துபாயில் இறந்ததால் போனி கபூர் பழி சொல்லில் இருந்து தப்பித்தார்.. 3 நாளில் துபாய் போலிஸ் தீர ஆராய்ந்து விடுவித்து விட்டது..
இந்தியாவில் இறந்து இருந்தால், மீடியா டிரையல் நடந்து இருக்கும், அவரது இழப்பை பொருட் படுத்தாமல் அவருக்கு கொலைக்கார பட்டம் கிடைத்து இருக்கும். கொலை செய்ததை நேரில் பார்த்தது போல் யூடியுப் வீடியோக்கள்.
அப்புறம் ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன்.அவரும் வாட்ச்மேன், பால்காரன்  விசாரணை ஆரம்பிச்சு டைம்பாஸ் பண்ணுவார்
டிவி விவாதம் சம்பந்தமே இல்லாத ஆட்கள் வந்து கருத்து சொல்வார், நக்கீரன், விகடன் 6 மாதம் புலனாய்வு கட்டுரை ன்னு உடான்ஸ்.
தமிழச்சி ஸ்ரீதேவி, வடக்கிந்தியர் கபூர் தேசிய பிரிவினை குருப் கிளம்பிருக்கும்.
20 வருடம் மனைவியை நேசித்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்த மனிதருக்கு பிரிவு எப்படியான வலியை தரும் என்பதை  பழி சொல்பவர்கள் உணர வேண்டும்.

பிகு = அம்மாவிற்கு 33 ஆண்டு காலம் தோழியாய் , சகோதரியாய் வாழ்ந்து , 75 நாட்கள் மருத்துவமனையில் வைத்து பார்த்து கொண்டு, அவரின் மறைவின் வலியை தாங்கி கொண்டு, கொலை பழியையும் தாங்கி, இறந்தஅம்மாவின் இமேஜை காபாற்ற மருத்துவமனை புகைபடத்தை வெளியிடவும் மறுத்த எங்கள்  தாய் சின்னம்மாவின் தியாகமும் நினைவுக்கு வருகிறது...

புதன், 21 பிப்ரவரி, 2018

கண்ணடித்த நடிகையும், நீதிமன்ற வழக்குகளும்

முழு கற்பனை உரையாடல்

நீதிபதி:- இன்னிக்கு என்ன  கேஸ் ?
உதவியாளர் - காவிரி நீர் பிரச்சினை
நீதிபதி - அது பல வருச கேஸ், கர்நாடக வாய்தா கேட்கும், குடுத்துடலாம்.
உதவி - அடுத்து, MLA தகுதி நீக்கம் செய்து ஆட்சி செய்றாங்க அய்யா, அந்த கேஸ்
நீதிபதி - அதுல சபாநாயகருக்கு ஒரு 3 மாதம் டைம் குடுத்து பதில் சொல்ல சொல்லி நோட்டிஸ் அனுப்பலாம்..
உதவி - அடுத்து, விவசாய நிலத்துல எரிவாயு எடுக்க கூடாதுன்னு மனு அய்யா
நீதிபதி - அதுக்கு ஆய்வு கமிட்டி அமைச்சு 6 மாசத்துல அறிக்கை தாக்கல் செய்ய சொல்லலாம்
உதவி - நடிகர் குடிபோதையில் கார் ஏத்தி கொன்னுட்டார்.. கீழ் கோர்ட் தண்டனை தந்துருச்சு. கைது செய்யாம இருக்க ஜாமீன் மனு அய்யா,
நீதிபதி - அருமையான நடிகர் ப்பா அவர், இதுக்கு எல்லாம ஜெயில்ல போடறது, முதல் கேஸா எடுத்து  ஜாமீன் குடுத்துறலாம்.
உதவி -  கண்ணடிச்ச பாட்டு  நடிகை மீது எதோ ஒரு சங்கம் கேஸ் போட்ருக்கு, அதுக்கு அவங்க அப்பீல்,
 அப்புறம் ஒரு நடிகை ராணியா நடிச்ச படத்த தடைய நீக்க சொல்லி கேஸ்.
நீதிபதி - இது தனி மனித சுதந்திரம், கலை மீதான தாக்குதல்.. இன்னைக் கே விசாரிச்சு தீர்ப்பு கொடுப்போம்.
வாழ்க ஜனநாயக தூன்கள்..
|

வெள்ளி, 29 டிசம்பர், 2017

தமிழ் படம் காட்சியும் , இந்திய பிரதமரும்

தமிழ் படம் திரைப்படத்தில்  ஒரு  நகைச்சுவை  கட்சி வரும் ...

சிவா ஒரு பாடலில் முன்னேறும் காட்சியில் , சிவா  ஏர்போர்ட் , சிவா  ரயில் நிலையம் , சிவா  மருத்துவமனை  என்று  கிண்டலடத்திருப்பார்கள்.

ஆனால் இன்று நடக்கும் காட்சிகளை  பார்க்கும்  போது , அந்த  காட்சியை  விட  உண்மை  மோசமாக  இருக்கிறது .

மோதி தேர்தல் ஆணையம் ,
மோடி  நீதிமன்றம் ,
மோடி வருவாய்த்துறை ,
மோடி  அமலாக்க  பிரிவு ,
மோடி  காவல்துறை ,
மோடி  ஊடகங்கள் ,
என்று  ஒரு  மனிதரின்  அதிகாரத்தில்  அத்தனை  துறைகளும் அடிபணிகிறது ..

தமிழ் படம் காட்சியும் , இந்திய பிரதமரும்