புதன், 1 ஆகஸ்ட், 2018

முல்லா கதையும் , விசாரணை ஆணையமும்

முல்லா கதையும்  ,  விசாரணை ஆணையமும் 

ஒருநாள்  முல்லா  தெரு  விளக்கு  வெளிச்சத்தில்  எதையோ  தேடி  கொண்டு  இருந்தார் . அப்போது  வந்த முல்லாவின்  நண்பர்  "என்ன  தேடுகிறீர்கள்  முல்லா  என்று   கேட்டார். எனது  மோதிரம்  தொலைந்து  விட்டது , அதை  தான்  தேடுகிறேன்  என்றார் . மோதிரம்  இங்குதான்  தொலைந்ததா  என்று   நண்பர் கேட்டதற்கு முல்லா  பக்கத்தில்  உள்ள  இருளில்  தொலைந்தது  ஆனால்  இருளில்  தேட  முடியாது  என்பதால்  பக்கத்தில்  உள்ள  வெளிச்சத்தில்  தேடுகிறேன்  என்றார்.

அதுபோல்  ஜெயலலிதா  மறைவிற்கு  அமைக்கப்பட்ட  விசாரணை  ஆணையம் , போயஸ்  தோட்ட  வேலையாள் , அப்போலோ  ஹாஸ்பிடல் செக்யூரிட்டி என்று  பலரையும் கூப்பிட்டு சசிகலாவிற்கு  எதிராக  வாக்குமூலம்  கிடைக்குமா  என்று முயற்சிக்கிறது.
ஆனால்  அதிகாரங்களை வைத்திருந்த   அப்போதைய  பொறுப்பு  முதல்வர் , மாநில  சுகாதார   துறை  அமைச்சர், AIIMS டாக்டர்கள் , அவர்களை  அனுப்பிய மத்திய  சுகாதார துறை அமைச்சர் , மருத்துவமனையில் வந்து சந்தித்த  அப்போதைய  கவர்னர் , அப்போதைய மத்திய அமைச்சர் தற்போதைய  துணை  குடியரசு  தலைவர்  இவர்களை  விசாரிக்க  வேண்டியதுதானே ?

அதை  விட்டு  வாட்ச்மன்  வேலையாள்  விசாரிப்பது , வெளிச்சத்தில்  தேடிய  முல்லாவின்  கதை போல்  அல்லவா  இருக்கிறது.

அது  என்ன ஜெயலலிதாவிற்கு  ஸ்வீட்  கொடுக்கப்பட்டதா ? என்று ஒரு  கேள்வி.அவர் என்ன  கை  குழந்தையா ? ஜெயலலிதா  ஸ்வீட்  சாப்பிட்டாரா ? என்பது தானே  சரியான   கேள்வியாக இருக்க முடியும்.

ஒவ்வரு  முறையும் ஆணையத்தில்  இருந்து ஊடகத்துக்கு  கசிய  விடப்படும் தகவல் சசிகலா விற்கு  எதிராக  இருக்கிறது ?

முடிவுரை  எழுதி விட்டு  , கதையை  எழுதுகிறதா  ஆணையம் 

வியாழன், 21 ஜூன், 2018

அரசியல் பற்றிய ஒரு புரிதல் (தொடக்க நிலை )


அரசியல்  பற்றிய  ஒரு  புரிதல் (தொடக்க நிலை  )

தற்போதைய  நிலையில் ஒரு அரசியல்  இயக்கம்  வெற்றி  பெற  முதன்மையானவைகள்  .

   முதல் வகை (idealogist  ) :- கொள்கை /.சித்தாந்தம்  விளக்க  கூடியவர்கள், புள்ளி  விவரங்களை  விரல் நுனியில் வைத்து  இருப்பவர்கள் , கொள்கை  விமர்சனக்களுக்கு பதிலடி கொடுப்பவர்கள் ,தேர்தல் அறிக்கை  தயாரிக்க  உதவுவார்கள். தொலைக்காட்சி  விவாதங்களில்  தாக்கத்தை ஏற்படுத்த  கூடியவர்கள் .  மக்கள்  என்னதான்  காசு  குடுத்தாலும் , வாக்களிக்க  ஒரு லாஜிக் எதிர்பார்ப்பார்கள்  அந்த லாஜிக்கை தர  கூடியவர்கள்

 இரண்டாம்  வகை  (Muscle Man ) :- எனப்படும்  பலம் வாய்ந்தவர்கள் ,  ஜாதி  ரீதியாகவோ , பிராந்திய ரீதியாகவோ தொண்டர்   பலம்  உடையவர்கள். கட்சி கூட்டங்கள் , மாநாடுகள், போராட்டம்   போன்றவற்றிக்கு  தொண்டர்களை  திரட்ட  கூடியவர்கள். அமைப்பு  ரீதியாக ஒன்றியம்,முதல்  கிளை கழகம் வரை  தொடர்பு வைத்து  இருப்பவர்கள். ஆட்சிக்கு  வரும்  போது  அவர்களது பிராந்தியத்தில்  கிளை கழகம் வரை  பயனடைவதை  உறுதி  செய்ப்பவர்கள் . இயக்க  கட்டமைப்பை  உறுதி  செய்பவர்கள்.


மூன்றாம் வகை (Pockets ):-  ,கட்சி அதரவு  நிலையில் இருக்கும் மிக  பெரும்  தொழில்  அதிபர்கள் , ஆட்சி  நடக்கும்  போது  பொருளீட்டி  கொண்டு தேவைகளின்  போது  நிதி  தருபவர்கள். அதரவு  ஊடகங்களையும்  நடத்த  கூடியவர்கள்

இதில்  ஒருவரே  இரண்டு அல்லது  மூன்று  வகையில்  இருந்தால்  இன்னும்  சிறப்பு.

தலைவர் :-  மக்களை  ஈர்க்க  கூடியவர் , மேல சொன்ன 3 வகையிலும்  பலம்/அறிவு   வாய்ந்து இருக்க  வேண்டும்  , 3  வகையினரையும் கட்டுப்பாட்டில்  வைத்து  இருக்க  வேண்டும் . இவர்களுக்கான  balance maintain செய்ய வேண்டும் , எந்த  நிலையிலும் மனம்  தளராதவராகவும் ,நம்பி வந்தவர்களை  காப்பாற்ற கூடியவராகவும் இருக்க வேண்டும் ,இதையும்  தாண்டி மக்கள்/தொண்டர்   நலத்தில் இயற்கையாகவே கொஞ்சம்    அக்கறை உள்ளவராகவும்  இருக்க  வேண்டும்.

கள  பணியாளர்கள் :- இயக்கத்தின்  கடைசி  நிலை தொண்டர்கள், தலைவர் மற்றும்  பிராந்திய  தலைவர்கள்  மீது அதீத அன்பு  உடையவர்கள்.  தனது  வாக்கு  மட்டும் இல்லாமல் தன்  பகுதி வாக்காளரை  அழைத்து  வந்து தனது கட்சிக்கு வாக்களிக்க வைக்க கூடியவர்கள்

இன்றைய நிலையில்  இது    எல்லாம்  balanced இருந்தா  இயக்கம்  மக்களை  சென்றடையும் .

மத்தபடி  தகவல்  தொழில்  நுட்ப  பிரிவு  எல்லாம்  தேவைதான் , ஆனா களப் பணியில் இல்லாமல் வெறும்  ஸ்டேட்டஸ் போட்டு  கட்சி  வளரும்னு  நினைச்சா டேட்டா  வேணா  தீரும் , கட்சியெல்லாம்  வளராது.

இது  என்னுடைய  அரசியல்  பற்றிய புரிதல். சரியா? தவறா ? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்





புதன், 16 மே, 2018

பாஜக ஆட்டம் முடியும் நாள் அதிக தொலைவில் இல்லை

பாஜக ஆட்டம் முடியும் நாள் அதிக தொலைவில் இல்லை.
வீழ்த்த படவே முடியாதவர் எவரும் இல்லை..
ஒரு மாநில வாரியான அலசல்
உபியில் மாயாவதி, அகிலேஸ், காங் இணைந்து சந்தித்தால் பாஜக 2014 ஆண்டை விட 50 தொகுதிகள் குறையும்...
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் , பீகார் , ஜார்கண்ட், குஜராத்தில் கடந்த முறை வென்றதில் குறைந்தது 30% இழுந்தால் இன்னும் 60 தொகுதிகள் குறையும்
மராத்தியத்தில் சிவசேனா தனித்து போட்டியிட்டால் 10 தொகுதி கூட பாஜகவுக்கு தேறாது.
ஆந்திராவில் நாயுடு டாட்டா காட்டி விட்டார், தெலுங்கானா ராவும் நெருங்க விடவில்லை.
கர்நாடகாவில் கவுடாவும் , காங்கிரசும் சேர்ந்தால் பாஜகவுக்கு 10 தொகுதி கூட தேறாது.
தமிழ்நாட்டில் நோட்டாவுடன் போட்டி, யார் கூட்டணி வைத்தாலும் அவர்களுக்கு அரசியல் தற்கொலை தான்
2014 ஆண்டை விட கிட்டதட்ட 200 தொகுதிகள் குறையும்..
வடகிழுக்கு, வங்காளம், ஒரிசா சிறிது அதிகரித்தாலும் 160 தொகுதிகள் குறையும்.
..
இப்போதைக்கு தேவை எதிர்கட்சிகளின் ஒற்றுமை.. அதை ஜனநாயக படுகொலைகள் மூலம் பாஜக செய்து விடும்
உங்களை அர்னப ் போன்ற பொறுக்கி தின்னும் ஊடகங்களால் காபாற்ற முடியாது..
ஆட்டம் போடுங்கள் , வீழும் நாள் வெகுத் தொலைவில் இல்லை.

வியாழன், 26 ஏப்ரல், 2018

உறவுகளில் சில அரசியல் தலைவர்கள்

அரசியவாதிகள்  எல்லா  இடங்களிலும்  இருக்கின்றனர் .
உங்கள் உறவுகளின்  திருமணங்களில்   சில  அரசியல்வாதிகள்  இருப்பார்கள் நீங்கள் கண்டுபிடித்து கொள்ளுங்கள்  யார் அவர்கள் என்பதை  ?

வைகோ :- திருமண வீட்டிற்கு  முதலில்  வருவார் , உரிமையோடு  எடுத்து  போட்டு  எல்லா  வேலையும்  செய்வார், ஆனால்  திருமணத்துக்கு  முன் னாடி  யாரிடமாவது  கோவித்து  கொண்டு  .
கோபமாக  கிளம்பி  விடுவார்.

டுமிலிசை :- எல்லா  கல்யாண  வீட்டிலும் டம்மி பீசா  ஒரு பொண்ணு  இருக்கும்  ,  ஆனால் திருமணமே  தன்னால்தான்  தான்  நடை பெறுவது   போல்  சீன்  போடும் அங்கும்  இங்கும்  வீடியோ  காமெரா  முன்னாடியே   சுத்தும்   ..

கருணாநிதி :- கல்யாண  வீட்டில்  நடக்கும்  பெரும் பிரச்சனைகளுக்கு  மூல காரணம்  அவராகத்தான்  இருப்பார்  .ஆனாலும்  அவரே  பிரச்சினையை  தீர்க்க  உதவுவது  போல்  நடிப்பார். எல்லாரது கவனமும் தன்  மேல்  இருக்க  வேண்டும்  என்பதை மட்டும்  உறுதி  செய்வார் .

ஜெயலலிதா :-  வெட்டு  ஒன்னு ,துண்டு ரெண்டாக  பேசும்  ஒரு பெண்மணி இருப்பார்    , சிறிது  முன் கோபக்காரர் . ஆனாலும் அவரது நியாயம்  இருப்பதால்    நிறைய    அவரை பிடிக்கும் .

தினகரன்  :- மனிதருக்கு   சொந்தக்காரன் , வழக்குனு  தலை போற ஆயிரம்  பிரச்சனை  இருக்கும் , ஆனால்  திருமண வீட்டில்   சந்தோசமா   முன்னாடி நின்னு   எல்லோரிடமும்  சிரித்து  சிரித்து  பேசி கொண்டு இருப்பார்.

எடப்பாடி :- உறவினர் வட்டாரத்தில் திடீரென  அதிர்ஷ்டம்  அடிச்சு  பணக்காரர் ஆகி  இருப்பார், தன்னுடைய  பெருமையை  தானே பேசி கொண்டு திரிவார்.

ராகுல்/ ஸ்டாலின் -  பெரிய  குடும்பத்து  பிள்ளைகள் , தான் பெரிசா  சாதிக்காட்டியும் குடும்ப  பெருமையை  வைத்து  கொண்டு  கல்யாண  வீட்டில்  மரியாதையை  பெறுவார்கள் ..











ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

சசிகலா செய்த தவறு?

சசிகலா
33 ஆண்டு முன்பு,
காலம் அவருக்கு இரு வாய்ப்புக்களை தந்தது.
1, அரசு அதிகாரியான கணவருடன் நிம்மதியான உயர் நடுத்தர குடும்ப வாழ்க்கை.
2, உயிர் தோழியின் அரசியல் களத்திற்கு துணையாக போராட்ட வாழ்க்கை
அவர் தேர்ந்தேடுத்தது 2வது வாய்ப்பை.

திமுக ஆட்சி காலத்தில் " ஒரே ஒரு வாக்குமூலம், உங்களுக்கு விடுதலை, ஜெயலலிதாவிற்கு தண்டனை " என்ற பேரத்திற்கு அவர் சம்மதித்து இருந்தால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வேறு மாதிரி முடிந்து இருக்கும்,

யாருக்காக வாழ்ந்தாரோ , யாரை மருத்துவமனையில் இமையாக காத்து நின்றாரோ அவரது கொலைப்பழியையும் தாங்கி ஒரு புகைப்படம் வெளியிட்டால் அக்காவின் புகழூக்கு இழுக்கு தயங்கியவர்.

காலில் விழுந்து வாழ்வில் வளம் பெற்ற அத்தனை பெறும் துரோகியாகி நின்றனர்.
கணவரின் இறுதி மூச்சின் போது கூட அருகில் நிற்க  அனுமதி வேண்டிய போது, இவரால் வாழ்வு பெற்றவர்களாலே முட்டு கட்டைகள் போடப்பட்டது.

தஞ்சையின் தலை மகளால் வாழ்வு அடைந்தனர் பலர்.
ஆனால் இவர் முதலாவது வாய்ப்பை தேர்ந்து எடுத்து இருந்தால் கணவருடன் நிம்மதியான குடும்ப தலைவியாக சென்னையிலோ , தஞ்சையிலோ வாழ்ந்து இருப்பாரோ என்னவோ?

வெள்ளி, 2 மார்ச், 2018

TTV யின் ராஜபாட்டை

தந்தி TV பான்டே நேர்காணல் TTV யின் Aggresive முகத்தை வெளிப்படுத்தியது என்றால்,
 தந்தி TV ராஜபாட்டை TTV யின் அமைதி. யதார்த்தமான முகத்தை வெளிப்படுத்தியது.
கருணாநிதி போன்று மிமிக்ரி செய்ய கேட்ட பொழுது " கூச்சமாக இருக்கு" என்று சிரித்தபடி கூறியது nice.
GK மூப்பனார், வாஜ்பாய் பற்றிய நினைவு கூறலும் ,
அம்மா விலக்கி வைத்த தருணத்தை பற்றி மழுப்பல் இல்லாமல் விளக்கியதும் அருமை.
நிகழ்ச்சியின் எந்த ஒரு நொடியிலும் தற்பெருமை வெளிபடவில்லை.
நிகழ்ச்சியை பார்த்த பிறகு அண்ணன் TTV யின் மீதான மரியாதை இன்னொரு படி உயர்ந்துள்ளது..

ஸ்ரீதேவி மரணமும், சசிகலா மீதான பழியும்

ஸ்ரீதேவி துபாயில் இறந்ததால் போனி கபூர் பழி சொல்லில் இருந்து தப்பித்தார்.. 3 நாளில் துபாய் போலிஸ் தீர ஆராய்ந்து விடுவித்து விட்டது..
இந்தியாவில் இறந்து இருந்தால், மீடியா டிரையல் நடந்து இருக்கும், அவரது இழப்பை பொருட் படுத்தாமல் அவருக்கு கொலைக்கார பட்டம் கிடைத்து இருக்கும். கொலை செய்ததை நேரில் பார்த்தது போல் யூடியுப் வீடியோக்கள்.
அப்புறம் ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன்.அவரும் வாட்ச்மேன், பால்காரன்  விசாரணை ஆரம்பிச்சு டைம்பாஸ் பண்ணுவார்
டிவி விவாதம் சம்பந்தமே இல்லாத ஆட்கள் வந்து கருத்து சொல்வார், நக்கீரன், விகடன் 6 மாதம் புலனாய்வு கட்டுரை ன்னு உடான்ஸ்.
தமிழச்சி ஸ்ரீதேவி, வடக்கிந்தியர் கபூர் தேசிய பிரிவினை குருப் கிளம்பிருக்கும்.
20 வருடம் மனைவியை நேசித்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்த மனிதருக்கு பிரிவு எப்படியான வலியை தரும் என்பதை  பழி சொல்பவர்கள் உணர வேண்டும்.

பிகு = அம்மாவிற்கு 33 ஆண்டு காலம் தோழியாய் , சகோதரியாய் வாழ்ந்து , 75 நாட்கள் மருத்துவமனையில் வைத்து பார்த்து கொண்டு, அவரின் மறைவின் வலியை தாங்கி கொண்டு, கொலை பழியையும் தாங்கி, இறந்தஅம்மாவின் இமேஜை காபாற்ற மருத்துவமனை புகைபடத்தை வெளியிடவும் மறுத்த எங்கள்  தாய் சின்னம்மாவின் தியாகமும் நினைவுக்கு வருகிறது...