தி மு கா வேட்பாளர் பட்டியல் வெளியாகி விட்டது.பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்க பட்டது .பல மாவட்ட செயலாளர் களுக்கு சீட் கிடையாது என்று எழுதி வாங்க பட்டதாக கூறினார்கள் ,ஆனால் வேட்பாளர் பட்டியலில் மீண்டும் குறுநில மன்னர்களான நேரு,பொன் முடி, எ வா வேலு ,துரை முருகன் , இ பெரிய சாமி மற்றும் மகன், சுரேஷ் ராஜன், வீரபாண்டி ராஜா ..அனைவருக்கும் சீட் வழங்க பட்டு உள்ளது ..
தான் மட்டும் வாரிசு அரசியலில் ஈடுபடுவதாக குறை கூறி விட கூடாது என்பதற்காக கருணாநிதி அனைத்து வாரிசுகளுக்கும் சீட் தந்து உள்ளார்.
89,91,96,2001,2006,2011 வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்களில் 30% தொடர்ந்து இடம் பெறுகின்றனர் , மேலும் 20% அந்த வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் வாரிசுகளாக இருகின்றனர்.தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஒருவரோ அவரது குடும்பத்தினரோ வேட்பாளராக இருந்தால் மீதி தொண்டர்கள் எதுக்கு கட்சியில் இருக்கிறார்கள் என்று தெரிய வில்லை ...
மாற்றத்தை தர போகிறோம் , சென்ற முறை செய்த தவறுக்கு வருந்துகிறோம் என்று நமக்கு நாமே பயணத்தில் ஸ்டாலின் கூறினார் .. வேட்பாளர் பட்டியலை பார்த்தால் தவறுக்கு வருந்திய மாதிரி தெரியவில்லை ..
30 வருடமாக ஒரு வேட்பாளர் பட்டியலில் கூட மாற்றத்தை தர முடியாதவர்கள் ..எத்தகைய மாற்றத்தை தர போகிறார்கள் ..
மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறுவார்கள் , தி மு கா வை பொருத்தவரை மக்களின் ஏமாற்றம் ஒன்றே மாறாதது
மாற்றமா ? ஏமாற்றமா
மாற்றமா ? ஏமாற்றமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக