முந்தைய தலைமுறையை விட நாம் நமது குழந்தைகளை சிறப்பாக வளர்ப்பதாக நினைக்கிறோம்
முன்பு எல்லாம் பெரும்பாலும் குடும்பத்தில் யாராவுது ஒருவர் மட்டும்தான் தான் படித்து நகரத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார்கள் , குழந்தைகளும் அதிகம் . அதனால் நகரம் , மற்றும் சிறு நகரங்களில் வசிக்கும் பெரியப்பா ,சித்தப்பா , மாமா குடும்பத்தில் உறவினர்கள் வீட்டில் தங்க வைத்து பிள்ளைகளை படிக்க வைக்கும் வழக்கம் இருந்தது. இது கூட்டு குடும்பத்தை விட மிகவும் சிக்கலானது ஆனாலும் பெரியவர்கள் மிக திறம்பட நிர்வாகம் செய்தனர் .
பெரியவர்கள்பெரும்பாலும் தங்களது குழந்தைகளுக்கும் உடன் பிறந்தவர்களது குழந்தைக்கும் வேறுபாடு காட்ட மாட்டார்கள் . அனைவரும் ஒன்றுதான் .
குழந்தைகள் இடையே விட்டு கொடுக்கும் வழக்கமும் , எந்த பிரச்சனையையும் தங்களுக்குள் தீர்த்து கொள்ளும் மனப்பான்மையும் இருந்தது. இன்று கார்பொரேட் நிறுவனங்கள் நடத்தும் குழு கட்டமைப்பு மற்றும் மேம்பாடு (team Building ) போன்றவற்றை இயற்கையாகாவே கற்று கொண்டனர்.
மற்ற குழுந்தைகள் பெரியப்பா /சித்தப்பா என்று கூப்பிடுவதை பார்த்து சொந்த குழந்தையும் அப்படியே கூப்பிடுவதும் நிகழும் .பெரும்பாலான குழுந்தைகளுக்கு சற்று விவரம் தெரிந்த பின் தான் யார் சொந்த சகோதரன்/ சகோதரி , யார் உடன் பிறவா சகோதரன் /சகோதரி என்பதையே தெரிந்து கொள்வார்கள் .
அப்போது இந்த அளவு பொருளாதார வசதி இல்லாவிட்டாலும் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இருந்தது. இவளவு அதிகமான கல்வி கட்டணம் கிடையாது என்பதும் உண்மை,
இப்போது அத்தகைய பழக்கம் முழுக்க ஒழிந்து விட்டது , பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் , யாரும் யாரையும் நம்பி தங்களது குழந்தைகளை விட தயாராக இல்லை , அப்படியே விட்டாலும் யாருக்கும் அடுத்தவர் குழுந்தையை பார்த்து வளர்க்கும் அளவுக்கு பொறுமை இல்லை .
மிக அதிகமான கல்வி கட்டணம் ஒரு காரணம் கூட ,
குழுந்தைகளும் எந்த ஒரு பிரச்சினைக்கும் பெற்றோர் களிடம் தான் செல்கிறது . பகிர்ந்து கொள்ளும் பழக்கும் அறவே குறைந்து உள்ளது, தோல்வியை தாங்கும் மனப்பாண்மை யும் குறைந்து விட்டது.
இத்தகைய சூழலில் படித்து வளர்ந்தவர் கள் தங்களது அனுபவங்களை சொல்லுங்கள் .. அது சிறந்ததா , இது சிறந்ததா என்று..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக