செவ்வாய், 19 ஜூலை, 2016

நாம் சிறப்பாக வளர்கிறோமா நமது குழந்தைகளை ?

Big indian family on bike



முந்தைய தலைமுறையை  விட  நாம்  நமது  குழந்தைகளை  சிறப்பாக  வளர்ப்பதாக   நினைக்கிறோம்

முன்பு எல்லாம்  பெரும்பாலும் குடும்பத்தில்  யாராவுது ஒருவர் மட்டும்தான் தான்   படித்து நகரத்தில்  வேலை  செய்து  கொண்டு  இருந்தார்கள் ,  குழந்தைகளும்  அதிகம் . அதனால் நகரம் , மற்றும்  சிறு  நகரங்களில்  வசிக்கும்  பெரியப்பா ,சித்தப்பா , மாமா  குடும்பத்தில்  உறவினர்கள்  வீட்டில்  தங்க வைத்து     பிள்ளைகளை  படிக்க  வைக்கும்  வழக்கம் இருந்தது. இது  கூட்டு குடும்பத்தை  விட  மிகவும்  சிக்கலானது ஆனாலும்  பெரியவர்கள் மிக  திறம்பட நிர்வாகம்  செய்தனர் .
பெரியவர்கள்பெரும்பாலும்  தங்களது குழந்தைகளுக்கும்  உடன்  பிறந்தவர்களது  குழந்தைக்கும்    வேறுபாடு காட்ட  மாட்டார்கள் . அனைவரும்  ஒன்றுதான் . 
குழந்தைகள்  இடையே  விட்டு  கொடுக்கும்  வழக்கமும் , எந்த  பிரச்சனையையும்  தங்களுக்குள்  தீர்த்து  கொள்ளும்   மனப்பான்மையும்  இருந்தது. இன்று  கார்பொரேட்  நிறுவனங்கள்  நடத்தும்  குழு கட்டமைப்பு மற்றும்  மேம்பாடு  (team  Building )  போன்றவற்றை இயற்கையாகாவே  கற்று  கொண்டனர்.

மற்ற குழுந்தைகள் பெரியப்பா /சித்தப்பா  என்று  கூப்பிடுவதை  பார்த்து  சொந்த  குழந்தையும் அப்படியே  கூப்பிடுவதும்  நிகழும் .பெரும்பாலான  குழுந்தைகளுக்கு  சற்று விவரம்  தெரிந்த  பின் தான்  யார்  சொந்த சகோதரன்/ சகோதரி  , யார்  உடன் பிறவா சகோதரன் /சகோதரி  என்பதையே  தெரிந்து  கொள்வார்கள் .

அப்போது  இந்த அளவு  பொருளாதார  வசதி  இல்லாவிட்டாலும்  பகிர்ந்து  கொள்ளும்  பழக்கம் இருந்தது.  இவளவு அதிகமான  கல்வி கட்டணம் கிடையாது  என்பதும் உண்மை,

இப்போது அத்தகைய  பழக்கம்  முழுக்க  ஒழிந்து  விட்டது , பெரும்பாலும்  ஒன்று  அல்லது  இரண்டு குழந்தைகள் , யாரும்  யாரையும்  நம்பி தங்களது  குழந்தைகளை  விட தயாராக  இல்லை , அப்படியே  விட்டாலும்  யாருக்கும்  அடுத்தவர்  குழுந்தையை  பார்த்து  வளர்க்கும்  அளவுக்கு பொறுமை  இல்லை .
மிக  அதிகமான  கல்வி  கட்டணம் ஒரு காரணம்  கூட , 
குழுந்தைகளும் எந்த  ஒரு  பிரச்சினைக்கும்  பெற்றோர் களிடம் தான்  செல்கிறது . பகிர்ந்து  கொள்ளும்  பழக்கும்  அறவே  குறைந்து  உள்ளது, தோல்வியை  தாங்கும்  மனப்பாண்மை யும் குறைந்து விட்டது.

இத்தகைய  சூழலில்  படித்து    வளர்ந்தவர் கள்  தங்களது  அனுபவங்களை  சொல்லுங்கள் .. அது சிறந்ததா  , இது  சிறந்ததா என்று..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக