வியாழன், 24 நவம்பர், 2016

பொருளாதார நெருக்கடி நிலை, முடங்கிய தேசம் - 2

கதை - 1
ஊரில் ஒரு கொலை நடந்து  விடுகிறது...  குற்றவாளியை புலனாய்வு செய்து கண்டு பிடிக்காமல் ஒரு போலிஸ் அதிகாரி ஊரில் உள்ள அனைவரையும் கட்டி வைத்து உதைத்து உண்மையை வரை வைக்க முடிவு செய்கிறார்.. அவரை  நாம் திறமையான அதிகாரி என்று பாராட்டுவோமா?
கதை-2
         நகரில் உள்ள வங்கியில்10 ரூபாய் கட்டாக ஆயிரம் ருபாய் திருட்டு போய் விட்டது. . திருடியவன் வெளியூர் சென்று அந்த ஆயிரம் ருபாயை நூறு ருபாயாக மாற்றி  விட்டான். காவல்துறை வந்தது திருட்டு  போனது 10 ரூபாய் நோட்டுகள் ,,அந்த நகரத்தில் உள்ள 1 லட்சம் பேரும் தங்களிடம் உள்ள 10 ருபாய் நோட்டை கொண்டு வந்து வங்கியில் காண்பித்து தாங்கள் திருடவில்லை என்று நிருபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.... இவரை நாம் பாராட்ட வேண்டுமா?      
இரண்டு  கதைக்கும் நீங்கள் வங்கி வரிசையில் நிற்பதற்குமோ, இரன்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லரை இல்லாமல் அலைவதற்கும்  சம்பந்தம் இருப்பதாக தோன்றினால் நான் பொறுப்பல்ல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக