வியாழன், 17 நவம்பர், 2016

தஞ்சாவூர் வாக்காளர்கள் கவனத்திற்கு


தஞ்சாவூர் வாக்காளர்கள்  கவனத்திற்கு

 புரட்சி  தலைவர் MGR  அவர்கள் காலத்தில்தான்  தமிழ்  பல்கலைக்கழகம்  ஆரம்பிக்கப்பட்டது . நகரத்தின்  வளர்ச்சி புற  நகருக்கு தொடங்கியது  அப்பொழுது தான் ,

பிறகு, 1991-1996 ல்  அதிமுக  ஆட்சி  காலத்தில் , மறைந்த முன்னாள்  அமைச்சர்   SDS  அவர்கள்  சட்ட  மன்ற  உறுப்பினராக  இருந்த  காலத்தில் , மாண்புமிகு புரட்சி தலைவி  அம்மா அவர்கள்  முதல்வராக  இருந்த உலக  தமிழ்  மாநாட்டின் பொழுது புதிய பேருந்து நிலையம், புற நகர்  சாலை போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் வந்தது .

1992 உலக  தமிழ்  மாநாடு , திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக  உலக தமிழாய்வு நிறுவன அனுமதி  இல்லாமல் நடத்திய குடும்ப மாநாடாக இல்லாமல் கற்றறிந்த தமிழறிஞர் நெபுரு கோரோஷிமா தலைமையில் தமிழ் வளர்ச்சி  மாநாடாக இருந்தது . தமிழுடன் சேர்ந்து தஞ்சையும் வளர்ந்தது.

1996 க்கு  பிறகு , வெற்றி பெற்ற  திமுக  தஞ்சாவூர் எங்கள்  கோட்டை
என்று  பெருமை  பட்டு கொண்டது , கோட்டை என்று  சொன்னவர்கள்  கோட்டையையை  வளபடுத்தினார்களா இல்லை ,
மத்திய , மற்றும் மாநில  அமைச்சர்கள் ஆக  இருந்தவர்கள் தங்களை சிற்றசர்களாகவும் , பேரரசர்கள் ஆகவும் எண்ணி கொண்டு  தங்களை வளபடுத்தி  கொண்டார்களே தவிர தஞ்சை நகரம் புறக்கணிக்கபட்டது   .

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு  பிறகு , புரட்சி  தலைவியின் ஆசியிடன் தஞ்சை  சட்டமன்ற தொகுதியை கைபற்றிய அதிமுக , பிறகு  தஞ்சை நாடளுமன்ற தொகுதி , நகர சபை அனைத்தையும் கைப்பற்றியது.  பிறகு மீண்டும்  வளர்ச்சி  பாதையில் தஞ்சை நகரம் திரும்பியது .  புரட்சி  தலைவி  அம்மாவின் ஆசியுடன் , சட்ட மன்ற உறுப்பினர்  திரு ரெங்கசாமி  உழைப்பினால் எண்ணற்ற  திட்டங்கள்  தஞ்சை  தொகுதிக்கு வர தொடங்கியது.

 1. தஞ்சை  நகரம் மாநகராட்சி  ஆகியது .
 2. பல் வேறு மேம்பாலங்கள்  கட்ட பட்டன .
  3. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , புதிய காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் , ஒன்றுபட்ட நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டன .
 4.(RING ROAD ) சுற்று  சாலை திட்டம்
 5. அரசு மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை பிரிவு
 6. உயர் தர  மருத்துவமனை  (AIMS  )தஞ்சைக்கு அருகில் அனுமதி
 7. தரமான சாலைகள்
 8. பல்வேறு  கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்

இன்னும் பல நல்ல திட்டங்கள் ...

திமுக :-
முன்னாள் மத்திய மாநில அமைச்சர்கள் போன்ற பழைய முகங்களை கட்டினால் தஞ்சை மக்கள் வெறுப்படைந்து புறக்கணிப்பார்கள் என்று தெரிந்த திமுக விற்கு  கிடைத்த முகமூடிதான் இப்போதைய திமுக வேட்பாளர் .. வெற்றி பெற்றால்  இந்த வேட்பாளர்  திமுக மாவட்ட செயலாளர் , முன்னாள் மத்திய  அமைச்சர் , முன்னாள் மாநில அமைச்சர் போன்ற  திமுக  அதிகார மையங்களுக்கு  எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பாரே ஒழிய தஞ்சை மக்களுக்கு நல்ல சட்ட மன்ற  உறுப்பினராக இருக்க முடியாது.

தஞ்சை மக்களின்  வாழ்வாதாரம் காவிரி நதி .. 1970களில் சர்காரியா கமிஷன் க்கு  பயந்து காவிரியின் தமிழக  உரிமையை கை விட்டார். மீத்தேன்  திட்டத்திற்கு அனுமதி  அளித்து  டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக முயற்சித்தார் . அதிகாரம்  கையில் இருந்த  பொழுது , மகன் ,மருமகனுக்கு பதவி வாங்கினார்களே ஒழிய காவிரி  நடுவர் மன்ற  தீர்ப்பை அரசிதழில் வெளியிட முயற்சி செய்ய வில்லை.

திமுக  வேட்பாளருக்கு  வாக்களித்தால்  தஞ்சை மக்களுக்கு பாம்பே ஸ்வீட்ஸ்  மைசூர் பாக்கு வேண்டுமானால் கிடைக்கும் , மைசூரில்  இருந்து காவிரி  தண்ணீர்  கிடைக்காது.

புரட்சி  தலைவி  அம்மாவின் சட்ட  போராட்டத்தினால் காவிரி  நடுவர்மன்ற  இறுதி  தீர்ப்பு   அரசிதழில் வெளியிட பட்டது.  மேலும் பூரண நலம் பெற்று  வரும் புரட்சி  தலைவியின்  அம்மாவின் முயற்சியினால் காவேரி மேலாண்மை வாரியம்  அமையும் .



சிந்திப்பீர் , வாக்களிப்பீர்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக