புதன், 17 மே, 2017

இறப்பு தேதி , கடவுளின் அப்டேட்

 கடவுளின் நண்பர் : மனிதர்கள்   ரொம்ப  அதிகம் ஆட்டம்  போட  ஆரம்பித்து  விட்டனர் . சாவே  இல்லை  என்பது  போல் வாழ்ந்து  தங்களது  தேவைக்கு  அதிகமாக   சொத்து குவித்து  வருகிறார்கள், இதனை  சரி  செய்ய  வேண்டும், கடவுளே ?

கடவுள் :-  என்ன  செய்யலாம் ?

நண்பர் :_  எல்லா  மனிதர்களையும்   (expiry  date ) இறக்கும்  தேதியை தலையில் தெரிவது  போல்  எழுதி  update செய்து   விடலாம் . அதற்கு  பிறகு  மனிதர்கள்  ஓரளவு  கட்டுப்பாடுடன்  நடந்து  கொள்வார்கள் .

கடவுள்  அப்படியே  ஆகட்டும்  அப்டேட்  செய்தார்.

அன்று  முதல்  அணைத்து  மனிதர்கள் தலையிலும் (expiry date) இறப்பு தேதி  தெரிய  ஆரம்பித்தது .

ஆனால்  நடந்தது வேறு ...

குறைந்த  ஆயுள்  மனிதர்கள்  உழைக்க  மறுத்தனர் . இருக்கும்  வரை  சந்தோசமாக  வாழ  வேண்டும்  என நினைக்க  ஆரம்பித்தனர். நிறுவனங்களும்  ,குறைந்த  ஆயுள்  உள்ளவருக்கு  வேலை  தர  மறுத்தது . நீ  பாதில  போய்டா  ரிப்ளஸ்ட்மென்ட் கிடைக்காது  என்று.

பெற்றவர்கள்  குறைந்த  ஆயுள்  கொண்ட  குழந்தைகளை வளர்க்காமல் அனாதை  இல்லத்தில்  தர  ஆரம்பித்தனர்.                    குறைந்த  ஆயுள்  கொண்ட  பெற்றோர்  நீண்ட  ஆயுள்  உள்ள  பிள்ளையை  தங்களுக்கு  பிறகு யார்  பார்த்து கொள்வார்கள்  என்று  யோசிக்க  ஆரம்பித்தனர்..

திருமண விளம்பரங்கள்   60 வயசு  வரை  வாழும்  பெண்ணுக்கு  60 வயசு  வரை  வாழ கூடிய  மணமகன்  தேவை  என்று வர  ஆரம்பித்தது  . இறப்பு  தேதி  பொருத்தம்  தான்  முதல் பொருத்தமாக  பார்க்க  ஆரம்பித்தனர். காதலிப்பவர்களும்  இறப்பு  தேதி   பார்த்து  காதலிக்க  ஆரம்பித்தனர்.

உயிர்  காக்கும்  மருத்துவம்  என்று  ஒன்று  இல்லாமல்  போய் விட்டது .. எப்டியா  இருந்தாலும் நான் உயிரோடு  இருக்க  போறேன் . கை , கால் , உடம்பு  நல்லா  வச்சிருந்தா  போதும்  என்று அதை  மட்டும்  சரி  செஞ்சுடுங்க  என்று  டாக்டர்களை  மெக்கானிக்  ஆக  மாற்றினார்கள் .

நிறைய  பேர் எங்கள்  மதத்தில்  தான்  அதிக ஆயுள் கொண்ட  குழந்தைகள்  கிடைக்கிறது  எனவே இங்கு  வந்து  விடுங்கள் என்று கூற ஆரம்பித்தனர். நிறைய  சாமியார்கள்  இறப்பு தேதியை  மாற்றும் வல்லமை எங்களுக்கு  இருக்கிறது என்று  புருடா  விட்டு கல்லா  கட்ட  ஆரம்பித்தனர் .

இறப்பு  தேதி  நெருங்க  நெருங்க  மனிதர்கள்  எல்லோரையும் மகிழ்ச்சியாக  வைத்திருந்து மனிதர்கள்  இறப்பார்கள்  என்ற  கடவுளின்  எதிர்பார்ப்புக்கு   மாறாக மனிதர்கள் நீண்ட  ஆயுளை  உடைய தனது   குடும்பத்தாராக இருந்தாலும்  நண்பராக  இருந்தாலும்    பொறாமை  அடைந்து , வெறுப்பையும், கோபத்தையுமே  உமிழ  ஆரம்பித்தனர்.

நீண்ட ஆயுள் உள்ளவர்களுக்கோ , தங்களது உற்ற  நண்பர்கள் ,உறவினர்கள் ,குடும்பத்தினர் குறைந்த  ஆயுளுடன்  இருப்பதை  காணும் போது குற்ற  உணர்ச்சியில் புழுங்க  ஆரம்பித்தனர் ..

குறைந்த  ஆயுள்  கொண்ட  மனிதர்கள் கொண்ட குழுக்கள் அமைக்க  ஆரம்பித்து , நமக்கு  இல்லாத  உலகம் வேறு  யாருக்கும் இருக்க கூடாது என்று  நாச  வேலைகளில்  ஈடுபட  ஆரம்பித்தனர்

மொத்தத்தில்  நிலைமை இன்னும்  மோசமானது

ஒரு  சின்ன  நம்பர்  அப்டேட்  இவ்ளோ பிரச்சனை  ஆயிடுச்சே என்று கடவுள் பழைய   இறப்பு  தேதி  இல்லாத  வெர்ஸனை  தொடர  ஆரம்பித்தார் .

சாகுற  நாள்  தெரிஞ்சா வாழற  நாள்  சந்தோசமாக இருக்காது  என்ற ரஜினி பட  வசனம் போல் . நமக்கு  சாகுற   நாள்  தெரியாது ஆனால் வாழும் வரை நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவரையும் மகிழ்ச்சியாக வைத்து  இருப்போம் ..


(concept  inspired by the   story  some where  I  read )














2 கருத்துகள்: