ஜெயலலிதாவுக்கு சசிகலாவுடன் சில சமயம் கருத்து வேறுபாடு வந்தது , பன்னீர்செல்வதுடன் ஜெயலலிதாவுக்கு கருத்து வேறுபாடு வந்தது இல்லை என்று கூறுபவர்களுக்கு, ஜெயலலிதா சசிகலாவின் கருத்தை கேட்பவராக இருந்தார் அதனால் அவரோடு கருத்து வேறுபாடு வந்தது. பன்னீர்செல்வம் கருத்து சொல்லும் நிலையில் எங்கு இருந்தார்?
அமரேந்திர பாகுபலி சிவகாமியுடன் கருத்து வேறுபாடு வந்தது , ஆனால் கடைசி வரை சிவகாமி தேவிகாக உயிரை விடுபவராகத்தான் இருந்தார் அது போன்றுதான் சசிகலா.
கடடப்பா தனது விசுவாசத்தை மாற்றமால் கடைசி வரை இருந்தார்.. ஆனால் இந்த கட்டப்பா தனது பதவிக்கு ஆபத்து வந்தவுடன் தனது விசுவாசத்தை டெல்லி சுல்தானுக்கு மாற்றி விட்டார்.விசுவாசம் என்றால் உண்மையில் தனது எஜமானரின் உயிருக்கு ஆபத்து என்றவுடன் தனது பதவியை தூக்கி எறிந்து விட்டு கேள்விகேட்டு இருக்க வேண்டும் ஆனால் தனது பதவிக்கு ஆபத்து வரும் வரை அமைதி காத்தவர்தான் நமது கட்டப்பா..
டெல்லி சுல்தான் ஏன் சசிகலாவை விரும்பவில்லை, சசிகலா எந்த கணத்திலும் தனது புத்தி கூர்மையால், பிடியில் இருந்து விலகி தன்னை நிறுவி கொண்டு விடுவார் என்ற பயம் இருந்தது,ஆனால் கேள்வி கேட்க முடியாத , பதவியை காப்பாற்றி கொள்ள துடிக்கும் அடிமை தான் சிறந்தவர் என தான் டெல்லி நினைத்து விரும்புகிறது ..