நான் படிக்கும் காலத்தில் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களை சந்திப்பது ஒரு அரிதான நிகழ்வு. யாருடைய பெற்றோராவது வந்து ஆசிரியரை சந்தித்தால் அந்த மாணவன் , சரியாக படிக்காத காரணத்திற்காகவும், ஒழுக்க சீர்கேடுகள் தான் காரணமாக இருக்கும். பெற்றோரை பள்ளிக்கு வரவழைப்பதை ஒவ்வரு மாணவரும் பெரிய அவமானமாக கருதினோம். பெற்றோருக்கு வருடம் ஒரு முறை சீருடை , புத்தகங்கள் வாங்கி தருவதை தவிர கல்வி சம்பந்தமான வேலைகள் கிடையாது. ரேங்க் சீட் மட்டும் தான் ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் உள்ள ஒரே தகவல் தொடர்பு மற்றும் மாணவரின் கல்வி முன்னேற்றத்தை கண்காணிக்கும் வழி.
ஆனால் இப்போது அதுவும் ஆரம்ப பள்ளிகள் (ஐந்தாம் வகுப்பு வரை) அடிக்கிற லூட்டி தாங்க முடியவில்லை.
எந்த அளவு பள்ளி மாணவர்களது பெற்றோர்களை பிஸியாக வைத்து கொண்டு உள்ளதோ அந்த அளவு நல்ல பள்ளியாக கருத படுகிறது. நமது அரசு பள்ளிகள் வழுக்கி விழும் ஏரியாவும் அதுதான் .
Induction Day , Fathers Day,Mothers Day , Grand Parents Day , Cousins Day ,Graduation day , SPORTS day , school annual day ன்னு பல தடவை , அது இல்லாமல் டேர்ம் சீட் (Rank சீட்) தருகிறோம் னு நாலு தடவை பள்ளிக்கு கூப்பிட்டு விடுகிறார்கள். அது இல்லாமல் சில சமயம் சிறப்பு விருந்தினர் கல்வி பத்தி lecture தற்றார்னு கூப்பிடுகிறார்கள்.
எனது அப்பா வாழ்நாள்முழுவதும் எனக்காக பள்ளிக்கு வந்ததை நான் புள்ளைங்க play ஸ்கூல் படிக்கும்போதே தாண்டி விட்டேன் . இப்போது சனிக்கிழமை பொழுது போக்கே ஸ்கூலுக்கு போறது என்றாகி விடுகிறது.
அதை விட அதிகமாக activities , Project work , cultural participation னு சொல்லி வாரம் மூணு நாள் ஸ்டேஷனரி கடை கடையா அலைய விட்டு விடுகிறார்கள் .சில பெற்றோர் சம்பளம் வாங்கற நிறுவனத்தை விட அதிகமா புள்ளைங்க ஸ்கூலுக்குத்தான் வேலை பாக்ராங்க
ஸ்கூள் டைரி , ஸ்கூல் app , ஸ்கூல் வாட்ஸப் குரூப் , Tuition வாட்சப் , ஸ்கூல் பஸ் டிரெக்கிங்,னு சொல்லி நம்பள அலெர்ட் ஆறுமுகமாவே வச்சிருக்காங்க .
ஒழுங்கா இது எல்லாத்திலும் ஆக்ட்டிவா இருந்தா நல்ல பெற்றோர் இல்லாவிட்டால் நீங்க புள்ளைங்க மேல அக்கறை இல்லாதவர் ன்னு சொல்லி விடுவார்கள் .
ஒரு புள்ளைக்கே அலைய முடியவில்லைனு ரெண்டாவது வேணுமான்னு யோசிக்க வைத்து மக்கள் தொகை பெருக்கத்தை கன்ட்ரோல் செய்ததில் இந்த பள்ளிகளுக்கு பெரும் பங்கு உள்ளது
ரொம்ப எழுதி விட்டேன் .அதுக்குள்ள எதாவது புள்ளைக்கு ஆக்ட்டிவிட்டி ஏதாவுது குடுத்து இருக்காங்களா ன்னு செக் பண்ணனும் பை ....
ஆனால் இப்போது அதுவும் ஆரம்ப பள்ளிகள் (ஐந்தாம் வகுப்பு வரை) அடிக்கிற லூட்டி தாங்க முடியவில்லை.
எந்த அளவு பள்ளி மாணவர்களது பெற்றோர்களை பிஸியாக வைத்து கொண்டு உள்ளதோ அந்த அளவு நல்ல பள்ளியாக கருத படுகிறது. நமது அரசு பள்ளிகள் வழுக்கி விழும் ஏரியாவும் அதுதான் .
Induction Day , Fathers Day,Mothers Day , Grand Parents Day , Cousins Day ,Graduation day , SPORTS day , school annual day ன்னு பல தடவை , அது இல்லாமல் டேர்ம் சீட் (Rank சீட்) தருகிறோம் னு நாலு தடவை பள்ளிக்கு கூப்பிட்டு விடுகிறார்கள். அது இல்லாமல் சில சமயம் சிறப்பு விருந்தினர் கல்வி பத்தி lecture தற்றார்னு கூப்பிடுகிறார்கள்.
எனது அப்பா வாழ்நாள்முழுவதும் எனக்காக பள்ளிக்கு வந்ததை நான் புள்ளைங்க play ஸ்கூல் படிக்கும்போதே தாண்டி விட்டேன் . இப்போது சனிக்கிழமை பொழுது போக்கே ஸ்கூலுக்கு போறது என்றாகி விடுகிறது.
அதை விட அதிகமாக activities , Project work , cultural participation னு சொல்லி வாரம் மூணு நாள் ஸ்டேஷனரி கடை கடையா அலைய விட்டு விடுகிறார்கள் .சில பெற்றோர் சம்பளம் வாங்கற நிறுவனத்தை விட அதிகமா புள்ளைங்க ஸ்கூலுக்குத்தான் வேலை பாக்ராங்க
ஸ்கூள் டைரி , ஸ்கூல் app , ஸ்கூல் வாட்ஸப் குரூப் , Tuition வாட்சப் , ஸ்கூல் பஸ் டிரெக்கிங்,னு சொல்லி நம்பள அலெர்ட் ஆறுமுகமாவே வச்சிருக்காங்க .
ஒழுங்கா இது எல்லாத்திலும் ஆக்ட்டிவா இருந்தா நல்ல பெற்றோர் இல்லாவிட்டால் நீங்க புள்ளைங்க மேல அக்கறை இல்லாதவர் ன்னு சொல்லி விடுவார்கள் .
ஒரு புள்ளைக்கே அலைய முடியவில்லைனு ரெண்டாவது வேணுமான்னு யோசிக்க வைத்து மக்கள் தொகை பெருக்கத்தை கன்ட்ரோல் செய்ததில் இந்த பள்ளிகளுக்கு பெரும் பங்கு உள்ளது
ரொம்ப எழுதி விட்டேன் .அதுக்குள்ள எதாவது புள்ளைக்கு ஆக்ட்டிவிட்டி ஏதாவுது குடுத்து இருக்காங்களா ன்னு செக் பண்ணனும் பை ....