புதன், 3 ஆகஸ்ட், 2016

அத்தனைக்கும் ஆசைப்படு, அடுத்தவனுக்கு மொட்டையடி



2 பெண்  குழந்தைகள் , எத்தனை ஆசையாய் பெற்று , வளர்த்து , எத்தனை  கனவுகளோடு  இருந்து  இருப்பார்கள்  பெற்றோர்கள் ,  என்னதான்  சுய  விருப்பம்  என்று கூறினாலும் ,மொட்டையடித்து  சன்னியாசம்  பெற்று  விட்டதாய்  நிற்கும் பிள்ளைகளை பார்த்து   பெற்றவர்கள்  எத்தகைய  ஒரு  வலியை   அடைவார்கள் .

 இந்த  சாமியார்கள்  மிகவும் வறுமையில் வாடும்  சோற்றுக்கு  வழியில்லாத  வீட்டு   பிள்ளைகளையோ , மிக பெரும்  கோடீஸ்வர  வீட்டு   பிள்ளைகளையோ  சாமியாராக்காமல்  பெரும்பாலும்   உயர் நடுத்தர  வீட்டு பிள்ளைகளையே  கவர்கின்றனர் . ஏழைன்னா  பைசா  போறாது , பெரும்  பணக்காரர்கள் என்றால்  எதிர்ப்பு  பலமாக  இருக்கும்  என்பதால்  தானோ ?.

மிக  பிரபலங்கள் தொலைக்காட்சியில்   சாமியாரிடம்  கேள்வி  கேட்கும்  போதும், சில  பிரபலங்கள் like  நடிகைகள் , ஆசிரமத்தில்  தியானம்  செய்து புத்துணர்வு பெற்றதாக கூறும்  போது ஆச்சரியமாக இருந்தது . அப்புறம்  தான்  தெரிந்தது  இதுவும்  காசுக்காக  செய்யும்  ஒரு  நடிப்பு  என்று. அத்தகைய  பிரபலங்கள்  யாரும்  மொட்டையடித்  தாக வோ  அவர்களது  பிள்ளைகளை  ஆசிரமத்தில்  சேர்த்ததாகவோ  தெரியவில்லை.

பெரும்பாலும்  எல்லா  சாமியார்களிடமும்  ஒரு  சிறிய  சித்து வேலை /சக்தி     இருக்கும் , எங்கேயாவது  ஒரு  சாமியாரிடம்  இருந்து  கற்று  இருப்பார்கள் . அதை  வைத்து  பெரிய அளவில்  பணம்  சம்பாதித்து  விடுகின்றனர் .

கதவை  சாத்தாமல்  விட்ட  சாமியாரிலிருந்து , இவர்   வரை  எல்லாத்தையும் பிரபல  படுத்திய  மீடியா கள்  ,பொறுப்போடு  நடந்து  கொள்ளாமல் ,  சர்ச்சை  வரும்  பொழுது சிகரெட்  பெட்டியில்  உள்ள warning  போல் , எங்களுக்கு தெரியாது அது  அவர் கருத்து என்று  கூறி வெளியேறி  விடுகிறது.

சாமி , நீங்கள்  அத்தனைக்கும்  ஆசைப்படுங்கள் , ஆனால்  பாவம்  நடுத்தர  குடும்பத்து   மக்கள் அவர்கள் கனவுகளை  பலி யக்காதீர்கள்


5 கருத்துகள்:

  1. இந்த பாழாப் போன இந்து மதம் ஞானம் வேணும்னா ஒரு குரு வேணும்னு சொல்லுது. அத இவங்க பக்காவா யூஸ் பண்றாங்க. வேணும்னா அவரோட பொண்ணுக்கு மொட்ட அடிச்சு சந்நியாசி ஆக்க வேண்டியது தானே. ஊராம் பெத்த புள்ள தான் கெடச்சுதா. அதுசரி மொட்ட அடிச்சாதான் ஞானம் கெடைக்கும் எந்த களவாணிப் பய சொன்னது. ஞானம் வாழ்க்கையில் இருக்கிறது. மொட்டையிலோ சந்நியாசத்திலோ இல்லை என்று யார் சொல்வது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று மக்கள் இருக்கிறார்கள்.திருப்பதியில் கோடி ரூபாய் உண்டியலில் போடுறவன் இருக்கிற வரைக்கும், ரேட் வச்சு சாமிய கும்பிடரவன் இருக்கிறவரைக்கும், காசு குடுத்தா சாமி கிட்டயே கொண்டு போய் காமிக்கறவன் இருக்கிற வரைக்கும், சாமி கோயில்லதான் இருக்குன்னு நம்பறவன் இருக்கிற வரைக்கும் இது போன்ற சாமியார்களுக்கு குறைவில்லை. கஷ்டப்பட்டு சம்பாதிக்கறவன் எல்லாம் பொது தரிசனம் தான் பாக்குறான்யா. சாமிய பாக்குறதுக்கு எப்ப ரேட் பிக்ஸ் பண்ணாங்களோ அப்பவே சாமியார்களும் ரேட் பிக்ஸ் பண்ணி மொட்ட அடிக்க ஆரம்பிச்சுட்டானுக. விஜயன்.

    பதிலளிநீக்கு
  2. இது அவர் தவறல்ல! பேராசை பிடித்த நம் தவற!

    பதிலளிநீக்கு
  3. அந்த காலத்துலே, சாமியானுங்களையும், கூத்தாடிகளையும் ஊருக்குள் விட மாட்டார்கள். ஏன் ஏனெனில் வீட்டு பெண்கள் மிஸ் ஆயிடுவாங்க. இப்ப டீவீ பொட்டி வீட்டுக்குள்ளே இந்த கேடு கெட்டவங்கால கூட்டி வருவதால் வரும் வினை. விரைவில் இறை அருளால், அத்தனைக்கும் ஆசைப்படு கம்பி எண்ண chance உள்ளது.

    பதிலளிநீக்கு