கவிஞர் முத்துக்குமார் மறைவு தமிழுக்கு பேரிழப்பு ,கமலஹாசன் ஸ்ரீ ராமுனுஜரை பற்றி சொல்லும் பொது மிக நீண்ட காலம் (120 ஆண்டுகள்) வாழ்ந்ததன் முலமாகவே எதிரிகளை வென்றவர் என்று குறிப்பிடுவார் ..
பல ஆண்டுகள் தொடர்ந்து தமிழில் மிக அதிகமான பாடல்கள் எழுதிய சாதனைக்கு சொந்தக்காரர் முத்து குமார். 1500 க்கும் மேற்பட்ட பாடல்கள் , பல புத்தகங்கள் ,இரண்டு தேசிய விருதுகள் . அவர் 60 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் கூட இன்னும் எத்தனை விருதுகள் , எத்தனை சாதனைகள் செய்திருப்பார் ..பெரும் காப்பியமாக வாழ வேண்டிய வாழ்க்கையை சிறு ஹைக்கூ கவிதையாக முடித்து கொண்டார் .
நண்பர்களே , பணம் சம்பாதிப்பதற்கோ , சாதனை செய்வதற்கோ , உழையுங்கள் , ஆனல் உங்கள் உடல் நலத்தில் கவனம் வையுங்கள் ..மரணம் இயற்கைதான் , ஆனால் நீங்கள் உங்கள் உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல் செய்யும் உழைப்பு உங்கள் உடலுக்கு செய்யும் துரோகம் மட்டும் அல்ல , உங்கள் திறமைக்கு செய்யும் துரோகம் கூட ..
இறந்தாலும் உ ங்கள் சாதனைகளை உலகம் பேசி கொண்டு தான் இருக்கும் , ஆனால் உங்கள் குடும்பத்திக்கான இழப்பு உங்கள் சாதனையை விட மிக பெரியது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக