வியாழன், 12 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு தடையும் , தமிழ் பொருளாதாரமும்

ஜெயம் ரவி தனி  ஒருவன் படத்தில்  கூறுவது போல , 6 ம் பக்கத்து பொருளாதார செய்திகள்  தான்  மற்ற  பக்க செய்திகளை  தீர்மானிக்கிறது . பொருளாதாரத்தில்  சிறந்து  இருக்கும்   ஜப்பான்  போன்ற நாடு அணு  ஆயுதம்  இல்லாமலே  வலிமையான  நாடாக  இருக்கிறது.

இந்திய  நிறுவனங்களை  ஏன்  ஊக்குவிக்க  வேண்டும் ?, வெளிநாட்டு  நிறுவனங்கள்  ஒரு சந்தையாக   மட்டும்  பார்க்கும்  பொழுது , இந்திய  தொழில்  நிறுவனர்கள்  சந்தையாக  மட்டும்  பார்க்காமல்  ஒரு நாடு என்று  ஒரு  உணர்வுடன்  பார்ப்பார்கள்  என்ற  நம்பிக்கை  தான் . மேலும்  வரும்  வருமானத்தை  இந்தியாவிலேயே  முதலீடு  செய்வார்கள்  என்ற  நம்பிக்கையும்தான் . போர், இயற்கை பேரிடர்   போன்ற தருணங்களில்  சந்தை  கண்ணோட்டம்  இல்லாமல்  உதவுவார்கள்  என்ற  நம்பிக்கையும்தான் .

இதே காரணத்திற்காக  நாம்   நமது  மாநிலத்தில்  தமிழ்  நிறுவனங்களையும் , தமிழ் தொழில் அதிபர்களையும்  ஆதரிக்க  வேண்டும். உதாரணமாக  தமிழ்  திரைப்படங்களை  பார்த்து  தமிழ்  திரையுலகத்தை  உயிர்ப்பாக  வைத்து  இருப்பதால் , தமிழ்  திரை உலகம்  உரிமையோடும் , உணர்வோடும்   ஜல்லிக்கட்டு , காவேரி  நீர்  பிரச்சனை  போன்றவற்றிற்க்கு குரல்  கொடுக்கின்றனர்.
இத்தகைய  குரலை  நம் அனைவரும் இந்தி  திரைப்படத்தை மட்டும் பார்த்து  இருந்தால் ஷாருக் கானிடமோ ,சல்மான்கானிடமோ  எதிர் பார்த்து  இருக்க  முடியாது .


 உள்ளூர்  அண்ணாச்சியை அழித்து  விட்டு , பன்னாட்டு  மளிகை கடையில்  வாங்க  ஆரம்பித்தால்  என்ன ஆகும்?, அண்ணாச்சி  கடையில்  நடப்பது வெறும் வியாபாரம்  மட்டும் அல்ல  அங்கு  ஒரு  நட்பு,  உறவு, அன்பு   எல்லாமே நடக்கிறது ,  வார்தா  புயலின்  போது  கார்டு  வேலை  செய்யா  விட்டாலும்  , ATM ல் இருந்து  காசு  எடுக்க முடியாவிட்டாலும் உரிமையுடன் அடுத்த  வாரம்  தருகிறேன் என்று  பொருள்  வாங்கினோம் மற்ற  இடங்களில் முடியுமா ?

இன்னொன்று , போட்டியார்களை  வைத்து  இருக்கும்  பொழுது  மட்டுமே வாடிக்கையாளர்  சந்தையாக  இருக்கும் , போட்டியாளர்களை  ஒழித்து  விட்டு  ஒரே  ஆளிடம்  இருந்தால் சந்தையில்  அவன் சொல்வதே  விலையாக  இருக்கும்?

இதற்க்காக  தர  குறைவான  பொருளையோ /.சேவையோ   வாங்குங்கள்  என்று  சொல்லவில்லை , இரண்டு பேரிடமும்  ஓரே  தரமான சேவையோ / பொருளோ  தரும்  போது , சிறு விலை  குறைப்பை  பொருட்படுத்தாமல் உள்ளூர்  வியாபாரத்தை  ஊக்குவிக்க வேண்டும் .

உதாரணங்கள் :-
   சென்னையில்  பல  ஆண்டுகளாக  ஒரு தமிழ் நிறுவனமான பாஸ்ட் ட்ராக்  வாடகை  கார்  சேவையை வழங்கி  வருகிறது . ஆனால்  சர்வதேச  நிறுவனமான  உபேர் , ஓலா  ( பெரும் சர்வதேச  முதலீடு) போன்றவை  மிக  பெரிய  விளம்பரத்துடன் , பெரும் முதலீட்டுடன்  களம்  இறங்கியுள்ளன.   இவர்களை  போன்றவர்களை  கண்முடித்தனமாக  ஆதரித்தால்  இங்கு  உள்ள  பாஸ்ட்  ட்ராக்  போன்ற  உள்ளூர்  நிறுவனங்களையும் ,  சிறு ட்ராவல்  ஏஜென்சிகளையும்  அழித்து  விடுவார்கள் .  இன்று  இவர்களது   சிறு  இலவசத்திற்கு   ஆசைப்பட்டால்  நாளை  சந்தையில்  அவர்கள்  சொல்வதே  விலையாக  இருக்கும் .
இதே போல் பெப்சி , கோக்  க்கு  போட்டியளிக்கும்  காளி மார்க். சீன  பட்டாசுக்கு  எதிர்த்து  நிற்கும்  சிவகாசி  பட்டாசுகள் , ஆச்சி மசாலா , போன்று  பல   தமிழ் நிறுவனங்கள்

தமிழ்நாடு  தொழில்  அதிபர்களை  ஆதரிப்பதன்  மூலம் நமது  மாநில  பொருளாதாரம்  வலுவடையும் , இங்கு  மேலும்  முதலீடுகள்  நடக்கும் .  மாநில  வாழ்வாதார  பிரச்சனைகள் , இயற்கை  பேரிடர்  போன்றவற்றின்  போது  தமிழராய் ஆதரிப்பார்கள் .

ஜல்லிக்கட்டு தடை  , காவிரி  நீர் கேட்டு  போராடுவது மட்டும் போராட்டம்   அல்ல ,  இதே போன்று தமிழ்  நிறுவனங்களை , தமிழர்  தயாரிக்கும் பொருள்களையும் ,சேவைகளையும்  பயன்  படுத்துவதும்  ஒரு  போராட்டம் தான் . வலுவான  தமிழக  பொருளாதாரத்தை  உருவாக்குவோம் . நாம்  வலுவான  பொருளாதார  சக்தியாக  உருவெடுக்கும் போது , இந்த  தேசம் நம்மை  நிமிர்ந்து  பார்க்கும்  ,நாம்  வைத்ததும்  சட்டம் ஆகும் . இது  பிரிவினை  வாதம்  இல்லை  , தேசத்தை  நம்மை  நோக்கி  திருப்ப  ஒரு  முயற்சி .


நாளைய  போராட்டத்திற்கு  வீதிக்கு  வர வேண்டியதில்லை , வாங்கும்  பொருளிலும் /சேவையிலும் ஒரு  கவனம் இருந்தால்  போதும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக