வியாழன், 5 ஜனவரி, 2017

தகவல் தொழில் நுட்ப துறை - பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மண்ட் வீக்


சாப்ட்வேர், ஐடி ,90 களின் தொடக்கத்தில் இருந்து  கடந்த  25 ஆண்டுகாலமாக  தமிழகத்தின் மத்திய தர வர்க்கத்தின் மந்திர சொல்லாக  மாறி  விட்ட வார்த்தைகள்.பக்கத்து  வீட்டு மாமா   தனது  மகன்கள் சாப்ட்வேர்ல  செட்டில்  ஆகி விட்டார்கள்  என்று  சொல்லும் போதே  அவருக்கு  ஒரு பெருமிதம்.

சென்னையின்  LIC  கட்டிடத்தையே  பெரும்  ஆச்சரியமாக  பார்த்து  வளர்ந்த  தலைமுறைக்கு ,சென்னை  புறநகரங்களில்  திடீரென  ராட்சதனாக  முளைத்த  கண்ணாடி  கட்டிடங்களில்  தனது  மகன்/மகள்  அலுவலகம்  இருக்கிறது  என்பது  ஒரு பெருமிதமாக தானே இருக்கும்.

 ஊருக்கு  ஒரு  ஜாவா  சுந்தரசேன்கள் உருவானார்கள் .  வேலைக்கு  சேந்த  வருஷம்  பைக், 3 வது  வருஷம்  கார்  , 4 வது வருஷம்  புறநகரில் பிளாட் ,கல்யாணம் என்று  முன்னேற்றம் , ரிட்டையர் மென்ட்  ஆக  4 வருஷம்  முன்னாடி  வீடு  வாங்கிய அப்பாக்கள்  ,வேலைக்கு  சேர்ந்த  4 வருஷத்தில்  வீடு  வாங்கிய மகனை  பார்த்து  மிரண்டார்கள்.

ஜாவா  சுந்தரேசனை பார்த்து, வீட்டுக்கு  ஒரு மரம்  வளர்கிறோமோ  இல்லையோ  வீட்டுக்கு  ஒரு  சாப்ட்வேர்  என்ஜினீயர் வளர்ப்போம் ன்னு  தமிழரகள்  கிளம்பினர் .   நீங்க  வீட்டுக்கு  ஒரு  என்ஜினீயர்னா நாங்க  தெருவுக்கு  ஒரு  இன்ஜினியரிங்  காலேஜ்   திறப்போம் ன்னு  கல்வி  வள்ளல்களும்  தயாராகினர்.

பையனுக்கு  எந்த  எந்த  கெட்ட பழக்கமும்   கிடையாது ,  மெக்கானிக்கல்  படிச்சிருக்கான் ,நல்ல சம்பாதிக்கிறான்னு
பொண்ணு  கேட்டு போனா , பொண்ணோட  அப்பா  " இல்லைங்க பொண்ணு  CS புடிச்சிருக்கு ,  IT க்கும் IT  க்கும் தான்  செட்டாகும்னு சொல்லி  , IOS போன்ல ல  anderiod  இன்ஸ்டால்  பண்ண  சொன்ன  மாதிரி   பார்த்து ஆச்சரியபட்டார் .  பிறதுறை  பட்டதாரிகள்  பொண்ணு  கிடைக்கவே  கஷ்டப்பட ஆரம்பித்தார்கள்

மேட்டூர்  நீர்மட்டத்த  பத்தி  கவலைபடும்  நம்ம  ஊர்  பண்னையார்  திடிர்னு ஒருநாள்  அரிக்கன்ன்னு  கவலைப்பட  ஆரம்பித்தார்.   அரிக்கன்  இல்லாட்டி  என்ன  டார்ச்  லைட்  இருக்கு பண்னைன்னு  சொன்னவனை  பார்த்து ,  அமெரிக்கால  தம்பி வேலை செய்ற ஊரில் புயலாம்  அப்டினு  சொல்றார்.

IT  நண்பர்களை  தெருவில்  பார்த்தால், நாம  ஒரத்தநாடுலருந்து  தஞ்சாவூர்  போனத  சொல்ற மாதிரி  போன மாசம்தான் நியூ யார்க்  on site  போய்ட்டு வந்தேன்  சொல்லி  நமக்கு  ஒரு  US  மேட் ஜவ்வு  மிட்டாய்  கொடுத்து ஆச்சரியபடுத்தினர்.

டெல்ட்டாவில்  இருந்து  பெங்களூரு  ல்  IT  வேலையில்   செட்டில்  ஆகிய  நண்பன் ,  சென்ற  ஆண்டு காவிரி பிரச்சசனையின் போது   யாரு ஊர்ல  விவசாயம்  பாக்குறாங்கன்னு நம்ப  ஊர்ல பிரச்சனை  பன்றாங்கனு கேட்டு  அதிர வைத்தான் .அவர்களின்  உலகம்  மொபைல்  /லேப்டாப்  ஸ்க்ரீன்   அளவு  சுருங்கி  விட்டது .

நம்ப  தஞ்சாவூர்  பெரிய  கோவில், மணி மண்டபம் , கல்லணை ன்னு  பொண்டாட்டி  புள்ளைகளை   கூட்டிகிட்டு போனா , நம்ப  ஆளுங்க  ஈபில்  டவர், சுதந்திர  தேவி  சிலை  முன்னாடி  குடும்ப போட்டோ  எடுத்து  சமூக  வலைதளத்தில்  போட்டு நம்ம   பேமிலி   நம்மள  டம்மி  பீஸா  பார்க்க   வைத்தனர்.

 நண்பர்  வீட்டுக்கு  போனா, நண்பர் மற்றும் மனைவி  தங்கள் குழந்தைகளிடம்  ஆங்கிலத்தில்  தான் உரையாடினார்கள் . என்னடா  தமிழுக்கு  வந்த  சோதனைன்னு  கேட்டப்போ , இவருக்கு onsite கிடைச்சா USல  பிள்ளைகளுக்கு  எளிதாக  இருக்கும்னு  இங்கேயே ஒரு   USA   உருவாக்கி  கொண்டு  இருந்தார்கள் .  நல்ல  வேலை  நம்ப  ஜனாதிபதி   டொனால்ட்  டிரம்ப்ன்னு  சொல்லி கொடுக்காமல் விட்டு வைத்துள்ளனர். இவர்களுக்காகதான்   தெரு  முனையில்  MCDONALDS ,KFC  திறந்து  வைத்து  இருக்கிறான் போல.

கூட்டுறவு  வங்கி கடனுக்கு  நாலு  ஜாமின் காரர்களுடன்  நாலு முறை  நடந்த  குப்புசாமி மகன் இன்று  நாலு கிரெடிட் கார்டு வைத்து  கொண்டு  அலைகிறான்.இது  உண்மையான வளர்ச்சியா ன்னு  தெரியவில்லை

விலை வாசி  ஏறிடுச்சு , ரியல் எஸ்டேட்  ஏறிடுச்சு , கலாச்சாரம்  சீரழியுது ன்னு  ஆயிரம் குற்றம்  சொன்னாலும் .

இன்று  வறட்சியில் 100 கணக்கில் நடக்கும் தற்கொலைகள்  ஆயிர கணக்கில்   இருந்து  இருக்கும் தொழில் நுட்ப துறையின்  வளர்ச்சி இல்லாமல்,  புதிய  தலைமுறை  சம்பாதித்து  தந்தையின்  விவசாயத்தையும் ,பொருளாதாரத்தையும்  காப்பாற்றுகிறார்கள் . குடும்பத்தை வறுமையில்  இருந்து  வளர்ச்சிக்கு  மாற்றி  காட்டிய  ஆயிரம்  இளைஞர்கள்/  பெண்கள்  உள்ளனர்.

 நமது  மாநிலம்  மற்ற  மாநிலத்தை வளர்ச்சியில்  பின்  தங்காமல்  பார்த்து  கொண்டதிலும்  பங்கு  உள்ளது .

அரசு  அலுவலகங்களிலும், பள்ளிகளிலும்  கூட  ஒழிக்க  முடியாத  சாதி  ஓரளவு  இங்கு ஒழிந்துள்ளது.

ஆயிரம்  மேடைகளில்  பேசினாலும் வாங்கி  தர  முடியாத பெண்  சுதந்திரத்தை வாங்கி  தந்து உள்ளது .  சம  வேலைவாய்ப்பு , சம ஊதியம் , சம  பணி  உயர்வு  இங்கு  பெண்களுக்கு  சாத்திய பட்டுள்ளது.

கல்யாணம்   ஆகாத  பொண்ணும் , பையனும்  பேசினால்  காதல்  தவிர  வேற  இல்லை  என்கிற  தமிழ் சினிமா  பார்த்து  வளர்ந்த  தலைமுறைக்கு  ஆண் பெண்  தோழமை   சாதாரனம்   என்னும்  உண்மையை   உணர்த்தியது.

 எனினும் வெளிநாட்டை  விட  ஊதியம்  குறைவு  என  இந்தியா  வரும்  நிறுவனங்கள் நம்மை  விட  குறைவான  ஊதியத்திற்கு  ஆள்  கிடைத்தால்   அடுத்த  நாட்டுக்கு செல்லும்  வாய்ப்புகள்  உள்ளது . அரசுகள் ,மற்றும்  கல்லூரிகள்  கூலி  ஆட்களை  தயாரிக்கும்  நிறுவனமாக  இருக்காமல்  இந்திய தொழில்  முனைவர்களையும் , ஆராய்ச்சி  மற்றும்  மேம்பாடு முலமாக  இந்திய  தொழில் நுட்பங்களை  உருவாக்குவதன்  மூலம்  தான்  இந்த  வளர்ச்சியை  தக்க  வைக்க  முடியும்.

இல்லா விட்டால் தொழில் நுட்ப துறை - பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மண்ட் வீக் கதை யாகி விடும்

(நான்  ஒரு  தகவல் தொழில் நுட்ப  துறையை சேராத   ஆள்  என்பதால்  எனது புரிதலில்  குறைபாடு  இருந்தால்  வருந்துகிறேன் )









2 கருத்துகள்:

  1. Yes....U r right. You have touched the public perception about the IT field. But Does it contribute to any native evolution of a strong technology base for the country in core domains?.....

    It has eroded the quality of humanities and basic sciences as well...like Physics and Maths..

    Its another kind cooliesm..a sequel to colonial slavery

    பதிலளிநீக்கு