ஞாயிறு, 29 ஜனவரி, 2017

கருணாநிதி வழியில் சசிகலா , ஜெயலலிதா வழியில் ஸ்டாலின்

கடந்த 25 ஆண்டுகளாக தமிழக அரசியலின் 2 ஆளுமைகள் கலைஞர் கருணாநிதி மற்றும்  புரட்சி தலைவி  ஜெயலலிதா ..

கலைஞர் அரசியல் அதிக  ஜனநாயகமானது ,
 குடும்பத்தில்  ஒருவருக்குத்தான்  சட்ட மன்ற  தேர்தலில்  போட்டியிட  வாய்ப்பு  என்று  என்று  கலைஞர்  கூறிய போது  அப்போ   ஸ்டாலினுக்கு   போட்டிஇட  வாய்ப்பு  அளிக்க  மாட்டிர்களா என்று  கேட்க்கும்  இரண்டாம்  நிலை  தலைவர்கள்  இருந்தனர் .
எதிர்த்து  கேள்வி  கேட்பவர் களையும்   அனுசரித்து  செல்லவே  முயற்சி  செய்வார்.  தேர்தலில்  போட்டியிட  வாய்ப்பு  கொடுத்து  போட்டியிட  மறுத்தவர்களையும் கட்சியை  விட்டு  நீக்க  மாட்டார்.

அம்மா அவர்கள்  கட்சி  ராணுவ  கட்டுப்பாட்டில்  இருக்க  வேண்டும் என்பதை  விரும்புபவர்.  கட்சியில்  இருந்து  கொண்டு  எதிர்த்து  பேசுவது என்பதை  நினைத்து  பார்க்க  கூட முடியாது. அம்மா அவர்களை தவிர  இரண்டாம்  நிலை  தலைவர்கள்  யாரும்  முன்னிலை  படுத்த  பட  மாட்டார்கள் .
 கலைஞரிடம்  அரசியல்  பயின்ற ஸ்டாலின்  இப்போது  விரும்புவது  ஜெயலலிதா  பாணி  அரசியலையே , பெரும்பாலும்  அவரே  முன்னிலை  படுத்தபடுகிறார்  , தலைமையின்  முடிவை   யாரும் கேள்வி   கேட்க கூடாது . கட்சி  முழுவதும்  தனது  ராணுவ  கட்டுப்பாட்டில் இயங்க  வேண்டும்  என்று  விரும்புகிறார்.

அம்மாவிடம்  அரசியல்  பயின்ற  சசிகலா  இப்போது  கடைபிடிப்பது  கருணாநிதி  பாணி  அரசியலை . எதிர்த்து அறிக்கை  விட்ட கே பி முனுசாமி  இன்னும்  கட்சியில்  இருக்கிறார் . நாஞ்சில்  சம்பத்  கூட  சமாதான  படுத்தபட்டார் . இரண்டாம்  கட்ட  தலைவர்கள்  முன்னிலை படுத்த  படுகிறார்கள்.

இன்னொரு  விசயம் , கலைஞர்  அடிக்கடி  மாநில  உரிமை , திராவிடம் அப்டின்னு  கத்தி  சுத்துவார்.  ஸ்டாலின்  அது எதுவும் செய்வதில்லை . ஆனால்  நடராஜன்  கலைஞர்  வழியில் மாநில  உரிமை , திராவிடர்  என்று  எல்லாம்  பேசுகிறார் .


ஆக , கலைஞர்  வழியில்  சசிகலாவும் , அம்மா  வழியில்  ஸ்டாலின் நடை  போடுகிறார்கள்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக