புதன், 15 நவம்பர், 2017

மாநில உரிமை - மிரட்டி பணிய வைக்க முடியுமா ?

18ம் நூற்றாண்டு,  வெள்ளையர்களின்  ஆட்சிக்கு  எதிராக முதன் முதலாக வாள் உயர்த்திய  இனம்,

19 ம் நூற்றாண்டு,  குற்ற பரம்பரை சட்டத்தை கொண்டு அடக்கிய போது எதிர்த்து போராடிய இனம்,

20 ம் நூற்றாண்டு,  நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்துக்கு அழைத்த போது, "வெற்றி வேல், வீர வேல்  என்று முதலில் களத்தில்  நின்ற இனம்...

அவர்கள் ஒரு சாதிக்காக நிற்கவில்லை , தமிழுருக்காகவும் , ஒட்டு மொத்த இந்தியாவுக்காகவும  நின்றனர்.

அதே இன்றும்
 மாநில உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ,  அந்த  மண்ணில்    தோன்றிய   மாவீரர்கள் தோள் உயர்த்தினால்,  பொய் வழக்கு, வருமான வரித்துறை, சிறைச்சாலையை  காட்டி  பணிய வைக்க முடியுமா என்ன ?


அன்றும் , எட்டப்பர்கள்  அதிகாரத்திற்காகவும் , பணத்திற்காகவும்  காட்டி கொடுத்தனர் , வெள்ளையருக்கு  துணை நின்றனர் .

ஆனால் வரலாறு  அவர்களை  எல்லாம்  மறந்து  விட்டது. போராடியவரையே  நினைவில்  வைத்து  கொண்டது

அதே  போல்  நாளைய  வரலாறும்... எட்டப்பர்களை  புறம் தள்ளி , மாவீரர்களை  நினைவில்  கொள்ளும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக