புதன், 24 பிப்ரவரி, 2016

முகநூலில் கண்டபடி LIKE வாங்குவது எப்படி

40-50 கோடி போட்டு படம் எடுத்த Producer கூட public response பத்தி அவ்ளோ கவலை பட்டிருக மாட்டார் ... FACEBOOK la 4 வரி status போட்டு நம்மாளுங்க public response பத்தி ரொம்ப கவலை பட்டு கொண்டிருகிறார்கள்
அவர்களுக்காக facebookla likes, comments வாங்க சில எளிய யோசனைகள்
For House wifes
1. சமைச்ச சாப்பாட்டை புருசனுக்கு போடறிங்களோ இல்லையோ போட்டோ எடுத்து facebookla போட்டு விடுங்கள்.
2. நாம சமைச்சு பாத்து வாயில் வைக்க முடியா விட்டாலும் , சமையல் குறிப்பை facebookla போட்டு விடுங்கள் ( அடுத்தவருக்கு workout ஆனாலும் ஆகும்.
3. வீட்டு சமையலுக்கு வைத்து இருக்கிற கடலைமாவு, முட்டை,வெள்ளரி பிஞ்சு, எல்லாத்தையும் முஞ்சில அப்புங்கனு அழகு குறிப்பு குடுங்க ...( நம்ப வீடு மளிகை சமாணா வீணாக போகுது).
4. காலைல புருஷனை கண்டபடி சண்டை போட்டு officeku தொரத்தி விட்டு இருந்தாலும் பரவா இல்லை , Facebookla " I miss him " he is my love nu" பீல் பண்ணி status போடுங்க.
For College girls
1. ரோட்ல போற நாய்குட்டி , பூனைக்குட்டி ,அணில் , இவைகளை எல்லாம் போட்டோ எடுத்து " I Love Animals" nu மேனகா காந்திய மிஞ்சிற மாதிரி பீல் பண்ணி upload பண்ணுங்க.
2. platform கடைல பத்து ரூபாக்கு Hair கிளிப் வாங்கிட்டு , ரோடு கடைல பானி பூரி சாப்பிட்டு விட்டு ," shopping at phoenix mall and dinner at pizza hut " ஒரு status போடுங்க.
3. அடிகடி "Feeling Unwell" Feeling sick" nu Status போடுங்க , மூனு மாசமா அம்மா முட்டு வலின்னு சொல்லி கொண்டு இருப்பதை காதில் வாங்காத பசங்க எல்லாம் "Take care""Get well soon" see the doctor" Pray God for recovery" nu கமெண்ட்ஸ் போட்டு தள்ளி விடுவார்கள்.
For Bachelor boys
1. அஜித் போல கோட் , வேஷ்டி,கண்ணாடி, வெள்ளை தாடி வச்சி, இதெல்லாம் அவுருக்கு நல்லாருக்கும் நமக்கு நல்லா இருகுமானு யோசிச்சு பார்காம அதே மாதிரி ஸ்டில் குடுத்து பீதிய கிளப்புங்க.
2. வெள்ளி கிழமை சாயங்காலம், எவ்ளோ மொக்கையான , புரியாத மொழி படமா இருந்தாலும் முழுசா உட்காந்து பாத்து facebookla கண்டபடி விமர்சனம் செய்யுங்க ( நாம காசு போட்டா படம் எடுத்தோம்).
For MENS
1. ரோட்ல பிச்சை எடுப்பவருக்கு 1 ரூபா போடதவரா இருந்தாலும் பரவா இல்லை , Facebookla ஏழைகளுக்கு இரக்க படுவதில் அன்னை தெரசாவை மிஞ்சி விடுங்கள்
2. corporate officela, private bankla உக்காந்து கல்லா கட்டி கொண்டு இருந்தாலும் பரவா இல்லை, Facebookla முதலாளித்துவம் , புரட்சி , போராட்டம்னு கண்டபடி கண்டனம் தெரிவியுங்க
3. சுதந்திர தினத்தன்று Qaurter அடித்து குப்புற படுத்து கிடப்பவராக இருந்தாலும் பரவா இல்லை, Facebookla பாரத தேசத்துக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிற மாதிரி பீல் பண்ணுங்க.
4. Duplicate Rent receipt, Fuel bill குடுத்து tax savings பண்றவரா இருந்தாலும் பரவா இல்லை, Facebookla லஞ்சம்,ஊழல் , கண்டால் அன்னா ஹசாரே வை தாண்டி பொங்கி வழியுங்கள்.
5. டூர் ku சென்று ஹோட்டல் சாப்பாடு ஒதுக்காம வாந்தி எடுத்து இருந்தாலும் , மொக்கை climate la மண்டை காஞ்சு போனாலும் ,Facebookla " Super trip"nu சொல்லி போட்டோ upload பண்ணிடுங்க.
6. சுதந்திர போராட்ட வீரர்கள் , ராணுவ வீரர்கள் , மாற்று திறனாளிகள், படத்தை போட்டு ,நடிகைக்கு லைக் போடுவிங்க இவருக்கு போடமாட்டிர்கள்ன்னு செண்டிமெண்ட் அட்டாக் பண்ணுங்க.
7. வீட்ல புள்ளைக்கு முதல் மொழியாக தமிழுக்கு பதில் சமஸ்க்ரிதம் அல்லது German எடுக்க சொன்னவராக இருந்தாலும் பரவா இல்லை .... Facebookla . தமிழ் என் மூச்சு..தமிழ் எங்கள் வாட்சுன்னு பீல் பண்ணுங்க..
இவற்றை எல்லா வற்றை விட முக்கியமானது..
1. ஊரார் status கு ஓடி போய் லைக் போட்டால் உன் status கு லைக் தேடி வரும்..
2. நம்மை விட வெட்டியாய் இருக்கும் 50 friends facebookla வைத்து கொள்ளுங்கள்
இது முழுவதும் நகைச்சுவை காக ...யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல.
பாதி படிச்சது.. கொஞ்சம் சொந்த சரக்கு..
புடிச்சிருந்தா லைக் போடுங்கள்

தமிழ் பிழைக்கு மன்னிக்கவும்

ரொம்ப யோசிச்சா இப்டிதான்

அன்பாக கவனித்து கொள்ளும் குடும்பமும், அக்கறையாக விசாரிக்கும் உறவுகளும், உதவிக்கு தயராக இருக்கும் நட்பும் கொண்ட மனிதனுக்கு, சிறு உடல் நல குறைவும் ஒரு சுகமே ?..

படித்ததில் புடித்தது ...மனைவி மற்றும் வாத்தியார் இருவர் மட்டுமே கேட்கும் கேள்விகள் .. நான் சொன்னது புரிஞ்சிதா?...எங்க நான் இப்போ என்ன சொன்னேன் சொல்லுங்க பார்க்கலாம்?.

மனிதன் பெரும்பாலான நேரங்களில் தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக வருந்துவதை விட அடுத்தவனுக்கு கிடைத்து விட்டதே என்பதற்காக வருந்துகிறான்....


ரொம்ப யோசிச்சா இப்டிதான்

என்னம்மா இப்படி பண்றிகளேமா


முதலில் ,
மொழிப் போரால் உருவாகிய இயக்கம் , இன்று ஆங்கில தினசரியில் தமிங்கிலிஸ் விளம்பரம்,
தாளமுத்து, நடராஜன் ஆவி உங்களை மன்னிக்கட்டும்.. வாழ்க தமிழ்


முதலமைச்சர் மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது எந்த மாதிரியான ஒரு எதிர்பார்ப்பு . ஏழு கோடி மக்களை கொண்ட மாநிலத்தின் முதல்வர் , நாளைக்கு ஆயிரம் பேரை சந்தித்தாலும் ஆட்சி காலம் முழுவதும் சில லட்சம் பேரை மட்டும் சந்திதிதிருக்க முடியும்.
வெற்றி கரமாக மிக பெரிய நிறுவனங்களை நடத்தும் முதலாளிகள் கூட தங்கள் வாழ்நாளில் தங்களது நிறுவன உழியர் அனைவரையும் அனைவரையும் சந்திததில் லை .
ஒரு முதலமைச்சர் ,அமைச்சர்கள் ,அரசு உயர் அதிகாரிகள் அவர்களை சந்தித்து , மக்களை பொது கூட்டதில் , பொது நிகழ்சிகளில் சந்தித்தால் பொது மானது .

நோக்கியா வீழ்ந்த கதை உலகமே அறியும்,, மேலும் நோக்கியாவின் வருமான வரி ஏய்ப்பு வழக்கும் அறிவார்கள், அதற்கும் அதிமுக அரசை குறை கூறி விளம்பரம் ... என்னப்பா இது கூட தெரியலேயப் பா

என்னம்மா இப்படி பண்றிகளேமா

வெள்ளி, 22 ஜனவரி, 2016

ரஜினி முருக னும் ,மக்கள் ரசனையும்

.ரஜனி முருகன் திரைப்படம் வெற்றி .இப்பொழுது பெரும்பாலும் நகைச்சுவை திரைப்படங்களே வெற்றியடைகின்றன. இது தற்போதைய தலைமுறை நிஜ வாழ்வின்  மனஅழத்தங்களையும், சோர்வையும் திரையிலே தொலைக்க விரும்புவதையே காட்டுகிறது. 
முந்தைய தலைமுறை நிஜ வாழவில் மகிழ்ச்சியில் இருந்ததால் தான் திரையிலே சோக காவியங்களை ரசிக்க முடிந்தது என நினைக்கிறேன்.
நாம் நமது தந்தையின் தலைமுறையை விட வசதி அதிகம் உடையவராக இருக்கலாம் ஆனால் அவர்கள் தான்  நம்மை விட மகிழ்ச்சியான வாழ்கையை வாழ்ந்து உள்ளனர்..
நம்மிடம் இல்லாத மிகப் பெரிய செல்வம் அவர்களிடம் இருந்தது அவை பொறுமை, போதும் என்ற மனம்..

பிட்ஸா

டேய் பிட்ஸால கூட toppings ஜாஸ்தியா தர்ரான்டா , ஆனியன் ஊத்தப்பத்துல ஆனியனே காணம் டா  - ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டு அழுதவர்கள் சங்கம்

நம்ம நாட்டோட பிரச்சனையே நல்ல கருத்து சொல்ல நிறைய பேர் இருக்கான்ங்க,  ஆனா அத follow பண்னதான் ஆளே இல்லை, (என்னையும் சேர்த்து தான் )

ஜல்லி கட்டும் , அதிகாரமும்

தனது அதிகாரத்தை பயன் படுத்தி காவிரி நடுவர்  நீதிமன்றகுழுவின் பரிந்துரை படி கர்நாடகத்திடம் இருந்து நீர் பெற்று தர வக்கில்லாத உச்ச நீதிமன்றம் ,
ஐல்லி கட்டு தடை, சென்னை உயர் நீதிமன்றதிற்கு மத்திய தொழில் படை பாதுகாப்பு, மதுரை வழக்கறிgர்கள் மீது நடவடிக்கை போன்றவற்றில் தனது அதிகாரத்தை  உறுதி செய்து கொள்கிறது

ராஜாவும் விகடனும்

இன்று விகடன் தாரை தப்பட்டை. திரைப்பட விமர்சனத்தில் இளையராஜாவின் இசையைபற்றி ஒரு வரி கூட எழத வில்லை,  விமர்சகர் வரலட்சமியை பார்த்து மறந்து விட்டாரா, அல்லது ராஜாவை புறக்கனிக்க வேண்டும் என்ற நிலைப்பாடா?   ஒரு மகா கலைஞனின் 1000 மவது படம்..

இதற்கு முன்பு விகடன்  80 & 90களில் பல முறை இது போன்று ராஜாவை புறக்கணித்ததாக நினைவு....