திங்கள், 9 மே, 2016

மூடர் கூடமும்,... திமுகவின் நமக்கு நாமே 2 ம் பாகமும்


ஒரு வாரமாக தந்தை மகனையும், மகன் தந்தையையும் மாறி மாறி புகழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அய்யா நீங்கள் 5 முறை தமிழக முதல்வராக இருந்து உள்ளிர்கள், மகன் மேயர், துனை முதல்வர், அமைச்சர், பதவிகளை வகித்து உள்ளார்கள்.பற்றாகுறைக்கு குடும்ப உறுப்பினர்கள் மத்திய அமைச்சர். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து உள்ளார்.. இதை பயன் படுத்தி மக்களுக்கு ஏதாவது நன்மை செய்து இருந்தால் மக்கள் புகழ்ந்து இருப்பார்கள், இன்று உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ளும் நிலை வந்து இருக்காது..இது தான் நமக்கு நாமே பாகம் 2 போல.. -

இதை பார்த்தால்  நமக்கு மூடர் கூடம் படத்தின் வசனம் தான் ஞாபகம் வருகிறது

இதுக்கு வருத்தபடனும் சென்றாயன் ,, பெருமை படக் கூடாது

NDTV கருத்து கணிப்பு... யாருக்கு சாதகம்.. அலசல்

NDTV கருத்து கணிப்பு அல்லாமல் வெறும் வாக்கு சதவிதத்தை வைத்து ஒரு அலசல் வெளியுட்டுள்ளது.. கடந்த தேர்தல்களில் வாங்கிய வாக்குகளை வைத்து 42% வாக்குகள் அதிமுகவுக்கும் , 33 % வாக்கு கள் தி மு க கூட்டணிக்கும் உள்ளது  என்று கூறியுள்ளது

1.முதல் சாத்தியகூறு
.இதே நிலைமை நீடித்தால் அதிமுக அணி 195 இடங்களில் வெற்றி பெறும் திமுக 30க்கும் குறைவான இடங்களை யே பெறும்

2வது சாத்தியகூறு
இதில் அதிமுக அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் 3 %  திமுக அணிக்கு சென்றால், அதிமுக 165 க்கும் மேற்பட்ட இடங்களை பெறும், திமுக அணி 45 இடங்களை பெறக் கூடும்

3வது சாத்தியகூறு
இதில்  5 % அதிருப்தி வாக்குகள் தி மு க அணிக்கு சென்றால் அதிமுக' 135 இடங்களையும் , தி மு க அணி 85 முதல் 90 இடங்களை பெறும்.

4 வது சாத்தியகூறு
இதில் 7.5 % அதிருப்தி வாக்குகள் தி மு க அணிக்கு சென்றால் மட்டும் திமுக அணி 140 முதல் 160 இடங்களையும் பெறும்.. அதிமுக 70 முதல் 90 இடங்களைப் பெறும்

இந்த தேர்தலில்   5 எதிர்கட்சிகள் போட்டியிடுவதால் 2 வது மற்றும் 3வது நிலையே  பெரும்பாலும் சாத்தியம்.. அதுவும் கிராமப்புறங்களில் 5%  அதிருப்தி வாக்குகள் தி மு க அணிக்கு போவது என்பது மிகவும் கடினம்

4 வது சாத்திய கூறு கிடைக்கும் என்ற திமுக தொண்டர்களின் எண்ணம் சிறிது கடினமாகும்
 எனினும் நகர்புறங்களில் மக்கள் எளிதில் அதிருப்தி அடையும் சாத்தியம் இருப்பதால், நகர்புற வேட்பாளர் களுக்கு கடுமையாக இருக்கும்

ஞாயிறு, 8 மே, 2016

24 ... காலப் பயணம் வெற்றி யா?

24 திரைப்படம்

சூர்யாவும், தமிழில்  யாவரும் நலம், தெலுங் கில் மனம்  படங்களை இயக்கிய விக்ரம்குமார்   இனைந்த படம்
தமிழ் சினிமாவுக்கு புதிய களமான கால பயணம் (time travel) எடுத்து உள்ளார்

பலம்
 தமிழுக்கு புதுமையான கதை' களம், மூன்று கதாபாத்திரத்திற்கும் நடிப்பில் வேறுபாடு தரும் சூர்யா அதுவும் வில்லனாக வரும் சூர்யா, ரகுமான் பின்னனி இசை மற்றும் பாடல்கள்,
ஒளிப்பதிவு


பலவினம்
திரும்ப  திரும்ப வரும் காட்சிகள், மிகவும் மெதுவாக செல்லும் படத்தின் வேகம், விணடிக்கபட்ட ரேணுகா  மேனன், ஒரே வசனம் பல முறை வருவது

மெய் நிகரா பாடல் பலமுறை கேட்க தூண்டும் ரகுமான், கவிப்பேரரசுவின்   மாயாஜாலம்

 கிடைத்த கால பயண கடிகாரத்தை வைத்து விமான வேகத்தில்  செல்லாமல் டவுன் பஸ் வேகத்தில் செல்லலாமா ?

புதிய முயற்ச்சிக்காக பார்க்கலாம்.
பி கு
படத்தில் சூர்யா கால பயண கடிகாரத்தை வைத்து  பின்னோக்கி சென்று தனது அப்பாவின் மரணத்தை தடுப்பார் ... அது போல  திருவாருரார் திருட்டு  ரயில் ஏறியதை தடுத்தால்  50 வருடத்தில் நமது மாநிலமும் சிறப்பாக ஆகி  இருக்கும்


விலை இல்லா பொருட்கள் உண்மையில் அவசியமற்றதா?



நானும்  விலை  இல்லா பொருட்கள் மக்கள் வரி பணத்தை வீணடிகிறார்கள் என்று நினைத்தேன்.. எனது நண்பர்  ஒருவர் மிகவும் பொருளாதார பின்னடைந்த பகுதியில் ஆசிரியராக பணி புரிந்து கொண்டு இருக்கிறார்..அவர் எங்கள் பகுதியில் மாணவ,மாணவிகள் பெரும்பாலும் விலையில்லா சைக்கிள் மிகவும் பயனுள்ள தாக உள்ளதாகவும் , மாணவர்களுக்கு தரும் லேப் டாப் , தங்கள் பகுதி மாணவர்களும் நகரத்தின் மாணவர்களுக்கு இணையாக போட்டி  இட  முடிகிறது என்றும் கூறினார்..

GRINDER ,mixie  போன்றவை  மிகவும் வாங்க  இயலாத விட்டு பெண்கள் தங்களது வேலை பளுவை குறைக்க உதவு கிறது என்று  சொல்லு கிறார்கள்  ..இதை குறை கூறுபவர்கள் ஒரு  நாள்  தங்களுது மனைவியை  இவற்றை உபயோகிகாமல் இருந்து பார்க்க  சொல்லவும் ..

நாம்  லேப்டாப்  கேட்டால்  25,000 சொல்லும் கடைகள் , ஆனால்  அரசாங்கம்  மொத்தமாக  வாங்கும்  பொழுது  10,000 ரூபாய்க்கு  வாங்க  முடிகிறது ..இதனால்  பெரும்  பயன்  இல்லாதவர்கள் அடைகிறார்கள் .

மதிய தர மக்கள்  மன  நிலை நமக்கு மேல் உள்ளவர்கள் எவ்ளோ கொள்ளை யடித்து  சென்றாலும் கோபம் வருவதிலை ஆனால்  நமக்கு கீழ் உள்ளவர்கள் சிறிது இலவசமாக பெற்றால் கடும் கோபம் அடைகிறோம்... உதாரணமாக மொத்தமாக  இலவசமாக கொடுத்த பொருட்களின் மதிப்பு 10,000 கோடி ஆனால் பெரும் பணக்காரர்கள்  தள்ளுபடி செய்யபட்ட கடன் தொகை மட்டும் 2 லட்சம் கோடிக்கும் மேல்.. இலவசத்தில் பலன் பெற்றவர்கள் உண்மையில் வழியில்லாத பல லட்சம்  பேர் , ஆனால்  தள்ளுபடி செய்ய பட்ட கடனில் பயன்  பெற்றவர்கள் சில நூறு பேர் மட்டும்

அரசாங்கம் சிறிது முயற்சி செய்து உண்மையில் பயன் உள்ளவர்களுக்கு மட்டுமே  தர வேண்டும்,
சமுக பொறுப்புள்ள வசதி படைத்தவர்கள் தங்களுக்கு இலவசம் வேண்டாம் என்றும் சொல்லலாம் எனவே
 நியாயமானவர்க ளுக்கு சென்றடையும்..
 இன்று இலவசமே  வேண்டாம் என்று கூப்பாடு போடும் பத்திரிக்கைகள் தான் தங்களது பத்திரிக்கையோடு சோப்பு இலவசம், சாம்பு இலவசம் என்று ஆரம்பித்து வைத்தது என்பதையும் மறந்து விட வேண்டாம்



சனி, 7 மே, 2016

கருத்து கணிப்புகள் :- வெளி வராத அதிர்ச்சி பின்னணிகள்


கருத்து கணிப்புகள் :- வெளி வராத அதிர்ச்சி பின்னணிகள்
அ ண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை. அரசே  தாது மணல் விற்பனையை முறைப்படுத்தும்  ஏறத்தாழ முவாயிரம் கோடி ஆண்டுக்கு வருமாணம் வரும் முடிவு. 
இதனால் தொலைகாட்சி நிறுவனர் நேரிடையாக பாதிக்கபடுவார்.. இப்பொழுது தெரிகிறதா ஏன் கொந்தளித்து வருகிறது கருத்து கணிப்பு...
இதில் அந்த பத்திரிக்கை எப்படி சேர்ந்தது , அந்த பத்திரிக்கையின் தலைநகர பதிப்பின் வெற்றி பெயர் கொண்ட தலைமை நிருபர், தமிழக திமுக பெண் எம்பியின் உத்தரவின்படி இந்த கூட்டணியை அமைத்தார்...
இந்த புதிய அடிமைகளின் ஆட்டத்தை பார்த்த மாறன் சகோதரர்களின் நிரந்தர அடிமை பத்திரிக்கை  துள்ளி குதித்து மெகா கருத்து கணிப்பு என்று வந்து விட்டார்..
2011 ல் 90 இடங்களை மட்டுமே அதிமுக அணிக்கு கருத்து கணிப்பில் கொடுத்து கரி அள்ளி பூசி கொண்டு, 2014 கருத்து கணிப்பில் திமுக வுக்கு 14 இடங்களும் , பாஜகவுக்கு 11 இடமும் அள்ளி கொடுத்து அசிங்கபட்டு..
நாளையும் கருத்து கணிப்பில் திமுக கூட்டணிக்கு 140 முதல் 160 இடங்களும்,
அதிமுக அணிக்கு 50 முதல் 70 இடங்களும், மற்ற அனைவருக்கும் ஒற்றை படையில் சீட் தர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது
இந்த எண்கள் அனைத்தும் மக்களிடம் கேட்டு எடுப்பதல்ல... அவர் கள் அலுவலகத்தின் மேஜையில் குருமா நிருபரும், விஷ்ணு பெயர் கொண்ட நிருபரும் முடிவு செய்வது.
2014 அனைத்து பத்திரிக்கை கணிப்பையும் மீறியே ஜெயித்தது (புகைப்படத்தை பார்க்க)


தமிழக மீடியாவில் சிலர் தங்களால் ஆட்சியை மாற்ற முடியும் என்று நினைத்து கொண்டு முயற்ச்சி செய்து பார்கிறார்கள்
களத்தில் உள்ள தொண்டர்களும், பொது மக்களும் குழப்பம் அடைய மாட்டார்கள்.
முடிந்த அளவு ஷேர் செய்யவும்

வெள்ளி, 6 மே, 2016

கருத்து கணிப்பும், சதுரங்க வேட்டையும்


நியூஸ் 7 தினமலர் கருத்து கணிப்பு :-சென்னை மண்டலத்தில் அதிமுக 14 தொகுதியில் வெற்றி  பெறும்

சதுரங்க வேட்டை எந்த ஒரு பொய் சொன்னாலும் அதில் கொஞ்சம் உண்மை இருப்பது போல் பார்த்து கொள்ள வேண்டும்


தேர்தல் அறிக்கை . ஆட்சியில் இருந்த பொழுது ஏன் செய்யவில்லை

அ தி மு க வின் தேர்தல் அறிக்கை வெளியாகி விட்டது.. பல நீண்ட கால திட்டங்கள் Like மின்சார தன்னிறைவு, நதி நீர் மேம்பாடு போன்றவை கூறிப்பிட தக்கது மேலும் பல சிறப்புகள் உள்ளன. -
ஆளும் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடும் பொழது சிலர் இதை ஆட்சியில் இருக்கும் பொழுது ஏன் செய்யவில்லை என கேட்கிறார்கள் .

அரசாங்கங்கள் 5 ஆண்டு திட்டம் போன்று, ஆண்டு தோறும் வெளியிடும் நிதி நிலை அறிக்கை போன்று, அடுத்த 5 ஆண்டு காண திட்டம் தான் தேர்தல் அறிக்கையாக வெளியீடப் பட்டுள்ளது.

முதலில் நடந்து சென்றவன் , சைக்கிள் வாங்குவான், பிறகு சில வருடங்கள் கழித்து மோட்டார் சைக்கிள், மேலும் சில வருடங்கள் கழித்து கார் வாங்குவான் அவனிடம் முதல்ல ஏன் கார் வாங்கவில்லை என்று கேட்பது போல் உள்ளது .முன்னேற்றம் படி படியாக தான் அமையும