செவ்வாய், 19 செப்டம்பர், 2017

அடிமைத்தனம் சுகமானது ,

அடிமைத்தனம் சுகமானது ,
முடிவெடுக்க  வேண்டிய  பிரச்சினை  இல்லை ..
முடிவுகளின் விளைவுகளை  பற்றி  சிந்திக்க  வேண்டியதில்லை .
யாருக்கும்   வழிகாட்ட  வேண்டியது  இல்லை .
எதிர்காலத்தை  பற்றி  பற்றி  பெரிதாக யோசிக்க  வேண்டியது  இல்லை.எல்லாவற்றையும் மேலே இருப்பவர் பார்த்து கொள்வார் என்று விட்டு விடலாம்
கட்டளைக்கு  அடிபணிவதே  ஒரே பணி .
பொருளாதார வளர்ச்சிக்கு  வாய்ப்பு இல்லை  என்று தெரிந்தால் ,   வாய்ப்புள்ள தலைமைக்கு விசுவாசத்தை   மாற்றி விடலாம்.
பிறர் நலம் பற்றி சிந்திக்க வேண்டாம் ..
வெற்றி ,தோல்வியின் பெரிய  பாதிப்பு இல்லை ..

தலைவனாக  இருப்பதுதான்   தலைவலி.

இந்த  கட்டுரை இன்றைய  ஆட்சியாளர்களை பற்றியது  அல்ல .. சுய  தொழில் செய்ய  பயந்து பெரும் நிறுவனர்களில் கடை நிலை  வேலையில் பொழுதை கழிப்பவருக்கானது மட்டும் என்று சொன்னால்  நம்ப வேண்டும் .

இப்போது இன்னொரு முறை படியுங்கள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக