வியாழன், 21 செப்டம்பர், 2017

தரமான வழக்கறிஞர்கள் இல்லை தமிழ்நாட்டில்

தரமான வழக்கறிஞர்கள் இல்லை தமிழ்நாட்டில் , ஏன் தினகரன் ,ஸ்டாலின் போன்ற திராவிட இயக்க  தலைவர்கள் MLA  தகுதி  இழப்பு  வழக்குகளுக்கு வட இந்திய  வழக்கறிஞர்களை வைத்து வாதாடுகிறார்கள்.தமிழக  சட்ட கல்லூரிகள் சரியில்லை, தமிழகத்தில் கல்வி  தரம்  இல்லை. நவோதயா பள்ளி வேண்டும், etc ,etc  -  எதிர் தரப்பு

தமிழக வழக்கறிஞர்கள் இந்திய  அளவில் எந்த  மாநில வழக்கறிஞர்களுக்கும்  குறைவானவர்கள் அல்ல ..தகுதி இழப்பு , சபாநாயகரின் அதிகாரம் போன்றவை அரசியலமைப்பு சட்டங்களின்  அடிப்படையை  கேள்வி கேட்கும்  வழக்குகளில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிறப்பாக கையாள்வதால் அவர்களை அணுக வேண்டியுள்ளது. சுப்ரீம் கோர்டடில் தமிழக வழக்கறிஞர்கள் ஓரளவு  இருந்தாலும்,  மிக பெரிய அளவில் இல்லாதது , நமது வழக்கறிஞர்கள் டெல்லியில் வசித்து , அங்கு பணிபுரிவதை சௌகரிய குறைவாக நினைப்பது தானே ஒளிய , திறமை குறைவு காரணம் இல்லை  என்று நினைக்கிறேன் .

எல்லா  பிரச்சனைக்கும் இறுதி முடிவு எடுக்க டெல்லி வந்து உச்ச நீதி மன்றத்தை அணுக வேண்டும்  என்ப பெரிய அநீதி . உச்ச நீதி மன்ற தென்னிந்திய கிளை சென்னையில் அமைப்பது தான் சரியான தீர்வாக  இருக்குமோ ஒழிய , கல்வி தரம் காரணம் இல்லை என்பது  எனது வாதம் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக