நானும் விலை இல்லா பொருட்கள் மக்கள் வரி பணத்தை வீணடிகிறார்கள் என்று நினைத்தேன்.. எனது நண்பர் ஒருவர் மிகவும் பொருளாதார பின்னடைந்த பகுதியில் ஆசிரியராக பணி புரிந்து கொண்டு இருக்கிறார்..அவர் எங்கள் பகுதியில் மாணவ,மாணவிகள் பெரும்பாலும் விலையில்லா சைக்கிள் மிகவும் பயனுள்ள தாக உள்ளதாகவும் , மாணவர்களுக்கு தரும் லேப் டாப் , தங்கள் பகுதி மாணவர்களும் நகரத்தின் மாணவர்களுக்கு இணையாக போட்டி இட முடிகிறது என்றும் கூறினார்..
GRINDER ,mixie போன்றவை மிகவும் வாங்க இயலாத விட்டு பெண்கள் தங்களது வேலை பளுவை குறைக்க உதவு கிறது என்று சொல்லு கிறார்கள் ..இதை குறை கூறுபவர்கள் ஒரு நாள் தங்களுது மனைவியை இவற்றை உபயோகிகாமல் இருந்து பார்க்க சொல்லவும் ..
நாம் லேப்டாப் கேட்டால் 25,000 சொல்லும் கடைகள் , ஆனால் அரசாங்கம் மொத்தமாக வாங்கும் பொழுது 10,000 ரூபாய்க்கு வாங்க முடிகிறது ..இதனால் பெரும் பயன் இல்லாதவர்கள் அடைகிறார்கள் .
மதிய தர மக்கள் மன நிலை நமக்கு மேல் உள்ளவர்கள் எவ்ளோ கொள்ளை யடித்து சென்றாலும் கோபம் வருவதிலை ஆனால் நமக்கு கீழ் உள்ளவர்கள் சிறிது இலவசமாக பெற்றால் கடும் கோபம் அடைகிறோம்... உதாரணமாக மொத்தமாக இலவசமாக கொடுத்த பொருட்களின் மதிப்பு 10,000 கோடி ஆனால் பெரும் பணக்காரர்கள் தள்ளுபடி செய்யபட்ட கடன் தொகை மட்டும் 2 லட்சம் கோடிக்கும் மேல்.. இலவசத்தில் பலன் பெற்றவர்கள் உண்மையில் வழியில்லாத பல லட்சம் பேர் , ஆனால் தள்ளுபடி செய்ய பட்ட கடனில் பயன் பெற்றவர்கள் சில நூறு பேர் மட்டும்
அரசாங்கம் சிறிது முயற்சி செய்து உண்மையில் பயன் உள்ளவர்களுக்கு மட்டுமே தர வேண்டும்,
சமுக பொறுப்புள்ள வசதி படைத்தவர்கள் தங்களுக்கு இலவசம் வேண்டாம் என்றும் சொல்லலாம் எனவே
நியாயமானவர்க ளுக்கு சென்றடையும்..
இன்று இலவசமே வேண்டாம் என்று கூப்பாடு போடும் பத்திரிக்கைகள் தான் தங்களது பத்திரிக்கையோடு சோப்பு இலவசம், சாம்பு இலவசம் என்று ஆரம்பித்து வைத்தது என்பதையும் மறந்து விட வேண்டாம்