புதன், 4 மே, 2016

உலகின் சக்தி வாய்ந்த பதவியில் ஒரு விஜயகாந்த் .. திரு டொனால்ட் டிரம்ப்

உலகின் சக்தி வாய்ந்த பதவியில் ஒரு விஜயகாந்த் .. திரு டொனால்ட் டிரம்ப்
உள்ளுர் கவுன்சிலர் தேர்தல் பத்தியே கவலை  படாத நாம்  ஏன் அமெரிக்க அதிபர் தேர்தல் பத்தி கவலை பட வேனும் நினைச்சாலும்  நம்ம கவுன் சிலர் நல்லா இல்லாட்டி நம்ம தெரு தான் நாறும்.. அமெரிக்க அதிபர் சரியா இல் லாட்டி உலகமே நாறிடும்...
அது  இல்லாம இன்னைக்கு நாம பாக்குற வேலை   நாளைக்கு நிலைக்குமா இல்லையாங்குறதும் இந்த பதவியில் இருப்பவரின் செயல்பாடுகளும் முடிவு செய்யும்.

டொனல்ட் trump பெரும் பணக்காரர்.. அவரது  கட்சியின் சார்பில் அவரது வேட்பு மனு ஏறதாழ உறுதியாகி விட்டது .
இவரது பேச்சுகள் மிகவும் அதிரடியாக விஜயகாந்தை விட மோசமாக சீமான்  போல் உள்ளது .
ஒரு நாள் இந்திய மென்பொருள் நிறுவனங்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றி விட வேண்டும் என்றும், மறுநாள் முஸ்லிம்களை உள்ளே விட கூடாது என்றும், இன்னொரு நாள்  சீனாவின் வர்தகத்கத்தை அழிக்க வேண்டும் என்று கூறி பயம் ஏற்படுத்துகிறார் .

இவரு கடைசியில் ஜெயிப்பாரா?   ஜெயித்து அதிபர் பதவியில் அமர்ந்தால் பெரிதாக எதுவும் செய்யாமல் சும்மா விடுவாரா ?   எதாவது ஒரு நாட்டோட சண்டை போடுவாரா ? IT  ஆளுங்கள ஊருக்கு அனுப்பு வாரா?     எல்லாம் கடவுள் தான் அறிவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக