சனி, 4 ஜூன், 2016

மலையாள படம் பார்த்த அனுபவங்கள்



 எனது மலையாள பட அனுபவங்கள்' என்றவுடன்  ஷகிலா படங்கள் என நினைத்து படிக்க வந்தால் நான் பொறுப்பல்ல.  கல்லூரி காலங்களில் தேவைக்கு அதிகமாக அந்த படங்களை பார்த்து விட்டதால்   பதிவு அதை  பற்றியதல்ல.
எனக்கு மலையாளம் ஒரளவு புரியும் என்றாலும் மலையாள திரைப்படங்கள் அதிகம் பார்பதில்லை... இணையத்தில் மலையாள படங்கள் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது முதல் 15 நிமிடங்கள் மிகவும் கடினமாக இருக்கும், மொழியும், அவர்களது மெதுவான கதை சொல்லும் பாணியும் சிறிது அயர்ச்சியை தந்து நிறுத்த தோன்றும்... பெரும்பாலும் நிறுத்தியும் விடுவேன்
 15 நிமிடங்களை தாண்டி விட்டால் கதையோடு ஒன்றி, மொழியும், கதை சொல்லும் பாணியும் பிடிபடும் பிறகு அது ஒரு சுவையான அனுபவமாக தோன்றும்... மிகவும் தாமதமாக நான் பார்த்தாலும் சார்லி படம் ஒரு அனுபவமாகவே இருந்தது.. வண்ணமயமான ஒளிப்பதிவு,   பின்னணி பாடல்கள்,அழகான பார்வதி, எப்பொழதும்  துடிப்பான துல்கர்.. சில பல மேஜிக்கல் மொமன்ட்ஸ்...try to watch it..
 தமிழில் ஆர்யாவோ, Sri திவ்யாவோ நடித்து ( கெடுத்து) வெளிவரும் முன் மலையாளத்தில் பார்த்து விடுங்கள்

செவ்வாய், 31 மே, 2016

எங்கே விழ்ந்தது முன்றாவது அணி ?

எங்கே விழ்ந்தது  முன்றாவது அணி ?



மிகவும் எதிர் பார்க்க பட்ட  மக்கள் நல  கூட்டணி +தேமுதிக +தாமா கா  அணி  6 % வாக்குகளை மட்டும் பெற்று ஒரு இடங்களை கூட வெல்ல முடியவில்லை ..
வெற்றி  பெற  மாட்டார்கள்  என்றாலும் , சில  தொகுதிகளும் , 10% மேற்பட்ட  வாக்கும்  பெறுவார்கள்  என்ற  நிலையில் , ஏன்  இப்படி  ஒரு  அவமானகரமான  தோல்வி  அடைய  நேர்ந்தது . 

காசு கொடுக்காததினால் தோல்வி அடைந்தோம்  என்று தங்களை  தாங்களே  தேற்றி  கொண்டாலும் ,  உண்மையான  காரணங்களை  ஆராய  வேண்டும் . 

காரணம் -1,

படித்த  வாக்களர்களை  இவர்களால்  தி மு கா  மற்றும்  அதிமுக வுக்கு மாற்று  என்று  நம்ப வைக்க  முடியவில்லை . தி மு கா தனது  ஊடக  பலத்தை  வைத்து  ஏறக்குறைய  அதிமுக  B  டீம்  என்ற  பிரச்சாரத்தை  நம்ப வைத்து  விட்டது 

காரணம்  2
விஜயகாந்த  மற்றும்  வாசன்  போன்றவர்களின்   சந்தர்பவாத  அரசியல் .கடைசி  நேரம்  வரை  அணைவரிடமும்  பேச்சு வார்த்தை  நடத்தி  விட்டு கடைசியில்  மக்கள்  நல கூட்டணி யில்  இணைந்தது  மக்களிடம்  எடுபட வில்லை .. தெரியாத  பிசாசை  விட  தெரிந்த  பேயே மேல்  என்று  மீண்டும் மக்கள்  தி மு கா  மற்றும்  ஆ தி மு  க விற்கே    வாக்களி தனர்.

 காரணம் -3
விஜயகாந்தின்  செயல் பாடுகள் .எதிர் கட்சி  தலைவராக கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு விட்டு  கடைசி நேரத்தில் மக்கள் மத்தியில் தோன்றி வாக்கு  கேட்டாலும் மக்கள்  பொருட்படுத்தவில்லை .

அரசியலில்  நீங்கள் வில்லனாக  இருக்கலாம் , ஹீரோ வாக இருக்கலாம்  ஆனால்  காமெடி யனாக  இருந்தால் மக்கள்  எளிதில்  புறக்கணிப்பார்கள் .

காரணம் -4 

வாக்கு சதவிதம்  குறைவு .நகர்ப்புறங்களில் இரண்டு  திராவிட கட்சிகளிடமும்  பிடிப்பு இல்லாத வாக்காளர்களை இவர்களும் ஈர்க்க தவறினர். 

காரணம் -5
மக்கள்  நல  கூட்டணி  என்ற  பெயரில்  இணைய மறுத்து அதில்  தேமுதிக , தா மா  கா  என்று  சேர்த்தவர்கள்  எப்படி  ஒற்றுமையாக ஆட்சி  செய்வார்கள் 

அடுத்த  முறை  மாற்று அரசியலை  முன்னெடுத்து  5 ஆண்டுகள் சென்றால் அடுத்த  முறை  ஓரளவு  அங்கிகாரம்  கிடைக்க  வாய்ப்பு உள்ளது ..







போன் மெமரியும், மனித மெமரியும்



இந்த நாட்டையே மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் இந்த நாட்டிலிருந்து மாறி வெளிநாட்டில் இருப்பவர்கள்  தான்

குழந்தைகளுடன் இருக்கும் பொழுது கார்டூன்    சேனல்களாய் பார்த்து பார்த்து பழகி, அவர்கள் வீட்டில் இல்லாத பொழுதும், நம்மையும் அறியாமல்  TV ரிமோட் கார்ட்டூன் சேனல்களுக்கே செல்கிறது

IPL முடிந்து விட்டது,, இனி சிக்கிரம் ஊர்லேந்து பொண்டாட்டி, பிள்ளைகளை அழைத்து வந்து விட வேன்டியது தான்... எனது நண்பர் ஒருவர்

சில வருடங்களுக்கு முன்பு 16 GB மெமரி லேப்டாப் எனக்கு போதுமானதாக இருந்தது.. இன்று 16GB மெமரி மொபைல் போதவில்லை.   போன் மெமரி அதிகமாக, அதிகமாக நமது மெமரி குறைந்து வருகிறது..
போன் Smart ஆயிடிச்சு, மனிதர்கள்  non sense   ஆகி வருகிறார்கள்

சனி, 21 மே, 2016

மருது _ தேவர் பெருமை பேசும் படமா?

தேவர் மகன் சிவாஜி சொல்லுவது போல நானும் அந்த கூட்டத்தில் ஒருவன் என்பதால் நியாயமாக கருத்து சொல்லலாம்
தேவர் பெருமையை கூறுவதாக நினைத்து கொண்டுள்ளனர் ..எனக்கு என்னவோ அவமானபடுத்துவது போல தான் தோன்றுகிறது
தேவர் சமுதாயதத்தில் கொலைகள் " நடந்தாலும் பெரும்பாலும் பங்காளிச் சண்டை, குடும்பப் பெருமை, ஊர்த் தகராறு போன்றவற்றிலே பெரும்பாலும் நிகழம்.. (இதையும் நான் ஆதரிக்கவில்லை ) தனி மனிதனின் அரசியல் வளர்ச்சிக்காக பெண்களை நடுரோட்டில் கொலை செயயும் கொடுரமான சமுகம் அல்ல.. அப்படி காட்டுவதால்  பெருமை கிடையாது அவமானம் மட்டுமே .. இப்படி  சிலர் இருந்தாலும் அது திரையில் காட்டுவதற்கான அவசியம் இல்லை
இந்த சமுதாயத்தில் லட்சகணக்கான பேர் தங்களது படிப்பினாலும், உழைப்பினாலும் நல்ல உயரங்களை அடைந்துள்ளனர் அந்த கதைகளை காட்சி படுத்தியிருக்கலாம்

பலம்
விஷால்  எத்தனை பேர் அடித்தாலும், நம்ப கூடிய அளவு  உடலை வைத்துள்ளார்,  Sriதிவ்யா, ஒரு சில நகைச்சுவை காட்சிகள்

பலவினம்
அருவருக்கதக்க கொலை காட்சிகள்,  எகனை மோகனை வசனங்கள்,   எரிச்சலூட்டும் விஷால் புகழ் பாடும் வசனங்கள்

படம்  முடிந்தவுடன்  என்னுடன் திரைப்பத்திற்கு வந்த  வேறு சமுதாயத்தை சேர்ந்த நண்பன் "மச்சான் நீயும் வீட்ல நீயும் அரிவாள்  வெச்சிருக் கியா " என்று கேட்டது தான் மிச்சம்


வியாழன், 19 மே, 2016

அதிமுக வெற்றி.. எதிர்பாராததா? காரணங்கள் சில

அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது.. இந்த முடிவு எனது மே 9 மற்றும் ஏப்ரல் 13 தேதி பதிவுகளை ஒட்டியே அமைந்துள்ளது...
வெற்றி
காரணம் 1  :,
அதிமுக தனது வாக்கு வங்கியான ஏழை மற்றும் கீழ் நடுத்தர வாக்கு வங்கியையும், கிராமப்புற மற்றும் மேற்கு மண்டல வாக்கு வங்கியையும் , பெண்கள் வாக்கையும் தக்க வைத்து கொண்டு உள்ளது..அதிருப்தி நகர்புறங்களிலும், உயர் நடுத்தர வகுப்பு பகுதியிலும் இருந்தாலும் அவை ஆட்சி மாற்றம் அளவுக்கு வலுவாக  இல்லை

காரணம் 2
 அதிமுக அதிருப்தி இருந்தாலும் , அது திமுக வாக்காக மாறவில்லை.. மக்கள் இன்னும்  திமுகவை முழுமையாக மன்னிக்க தயராகவில்லை

காரணம் 3
 திமுகவின்  மீடியா பலத்தினால் மந கூ வை பலவின படுத்த முடிந்ததே தவிர , அரசுக்கு  எதிரான  வாக்குகள் பா ம க, பிஜேபி, NTK,  போன்றவை சிறிதளவு பிரிக் க செய்துள்ளது..

காரணம்  4
கருணாநிதி தான் முதல்வர் வேட்பாளர் என்பது புதிய தலைமுறை வாக்காளர்களை கவரவில்லை... சமுக வலை தளங்கள்  வாக்கnளர்களை அடைய ஒரு வழியே அன்றி அது வெற்றியை தீர்மானிக்கும்  சக்தியாக இன்னும் மாறவில்லை... தேமுதிக வந்தால் வெற்றி என்ற பிம்பத்தை கட்டமைக்க முயன்ற திமுக ,  திரும்ப  அந்த பிம்பத்தில் தானே சிக்கியது

காரணம். 5
விலையில்லா பொருட் களுக்கு சமுக வலைதளத்தில் தான்  எதிர்ப்பு இருந்தது.. சாதரன மக்கள் இன்னும்  வரவேற்கத்தான் செய்கிறார்கள்
 இதையும் மீறி  காசு கொடுத்து ஒரு சில தொகுதியில்  வேண்டுமானால் ஜெயிக்கலாம் ..திமுகவிடம் மட்டும் காசு இல்லையா  என்ன?-

மக்கள் தீர்ப்பை மதிப்போம் ... நல் லாட்சியை எதிர் பார்போம்




வெள்ளி, 13 மே, 2016

சென்னை விமானநிலையத்தில் ஒரு இரவு... சில பல மனிதர்கள்

விமான நிலையத்தில் மற்றுமொறு தூங்கா இரவு

சென்னை சர்வதேச முனையத்தில் வழக்கம் போல் Air India விமானத்தின் தாமதத்தால் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது

விமான நிலையத்தின் வருகை பிரிவில் பெரும்பாலும் சந்தோஷமான முகங்களை  காண முடிந்தது, ஆனால் புறப்பாடு பிரிவில் அந்த மகிழ்ச்சி காணப்படவில்லை...நிறைய தாத்தா, பாட்டிக்கள் தங்களது மகன், மகளையும், பேரன், பேத்திகளையும் வெளிநாட்டுக்கு வழியனுப்ப வந்திருந்தனர்... அந்த பெரியவர்களை பார்க்கும் பொழுது இவர்கள் தங்களது பிள்ளைகள் அடுத்த முறை வரும்பொழுது இதே அளவு உடல் நலத்துடன்  இருப்பார்களா... இல்லை இவர்களுக்கு எதவாது ஆகி விட்டால் பார்த்து கொள்ள வீட்டில் வேறு பிள்ளை கள் இருப்பார்களோ என்ற சந்தேகம் என் மனதில் எழுந்தது
 வெளிநாடு செல்லும் எல்லா குடும்பத்தினரும் மிக வசதி படைத்தவராகவே தோன்றினர்... மிகப் பெரும்பான்மையினர் ஒரே ஒரு குழநதையுடன் தான் இருந்தனர்.. இந்த ஒரே ஒரு பிள்ளைக்கு தான் இப்படி ஒடி ஒடி சம்பாதிக்கின்றனர் போலும் .. இந்த பெரியவர்கள் தங்களை பிரிந்து சென்று பிள்ளை சம்பாரிக்க தான் படி, படி என்று கூறி படிக்க வைத்தார்களோ என்னவோ ?
தான் பெற்ற பிள்ளைகளை பற்றி அதிகமாக சந்திக்கும் மனிதர்கள் தன்னை பெற்றவர்களை பற்றி சிந்திப்பதில்ல யோ என்றும்  தோன்றியது
அப்பொது
 என்னை போன்று சர்வேதச முனையம் வழியாக திருச்சி செல்லும் தஞ்சை  மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவரை சந்தித்தேன்'
தன்னுடைய 5 வது படிக்கும் மகன் விமானத்தில் செல்லும் ஆசையை நிறைவேற்ற விமானம் மூலம் திருச்சி செல்வதாக கூறினார்
மனிதர் நன்கு பொது அறிவு உள்ளவரா கவும், இடையில் விவசாயத்தில் கஷ்ட பட்டாலும் இப்பொது நன்றாகவே உள்ளதாக கூறினார். மேலும் வருங்காலத்தில் விவசாயம் மேம்படும் என்ற நம்பிக்கையும் கொண்டு இருந்தார்
நவின தொலை பேசி இல்லை, ஆடம்பர உடைகள் அணியவில்லை ஆனாலும்
மனிதர் தனது  குடும்பத்தாருடன் சொந்த கிராமத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதாக கூறினார்,
இதில் யார் சாதித்த மனிதர்? யார் மகிழ்ச்சியான மனிதர்?
வாழ்க்கை புதிரானது

வியாழன், 12 மே, 2016

தளபதி பெர்பான்மஸ் பத்தாது போல

கடந்த தேர்தலில் நக்கிரனும் விகடனும் கருத்து கணிப்பில் அறுதி பெரும்பாண்மை குடுத்தாங்க அப்பவே திமுக 27 தொகுதி தான் ஜெயிச்சுச்சு.. இப்போ அவங்களே கம்மியா தான் கூடுத்துறுக்காங்க... அப்போ திமுக போன தடவை விட இன்னும் கம்மியா தான் ஜெயிக்குமா... நானும் கொஞ்சம் அதிகமா Expect பண்ணிட்டேன்
நக்கீரனும்,  விகடனுமே திமுகவுக்கு தனி மெஜாரிட்டி தராட்டி மக்கள் எப்டி பாஸ் தருவாங்க

தளபதி பெர்மான்ஸ் பத்தாது போல .... கலைஞரே ஐ வான்ட் மோர் எமோஷ்ன்ஸ்......